search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறை தீர்க்கும் கூட்டம்"

    • தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் தெற்கு கோட்டம் மின் செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மின் பகிர்மான தெற்கு வட்டம் செயற்பொறியாளர் தலைமையில் நாளை 25-ந் தேதி (புதன்கிழமை) வள்ளுவர் நகர், ஸ்டேட் பாங்க் எதிரில், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
    • காங்கயம் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கணேஷ்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். இதுபோல் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை காங்கயத்தில் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை, குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவ லகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள லாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்குகிறார்.

    கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்.
    • கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் வரும் 4-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் வரும் 4-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்தம் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு.

    ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    • குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.
    • 10 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது.

    இதில் 10 பயனாளிகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி வழங்கினார்.

    இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 23 பேர் தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

    இந்த கூட்டத்தில் துணை இயக்குனர் ஆர்.பி.வேலு, பிரிகேடியர் ரவி முனிசாமி, நல அமைப்பாளர் ரமேஷ்குமார் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
    • மாவட்டத்தை சார்ந்தவர்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயனடையலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7-ந் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சரயு தலைமை வகிக்கிறார். எனவே, மாவட்டத்தை சார்ந்தவர்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்தும், மனுக்களாக சமர்ப்பித்தும் பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • மேலூர் அருகே விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது
    • புதிய தென்னை கன்றுகளை நடவு செய்திடவும், மானிய விலையில் ஊக்கத்தொகை வழங்கிடவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம் பட்டியில் ஒன்றியத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட கலெக் டர் சங்கீதாவிடம் தெரிவித்தனர்.

    முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கலெக்டருக்கு, தமிழகத்தின் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள தனி சிறப்பான அரிசி வகைகள் அடங்கிய பரிசு பெட்டகத்தை விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கினர்.கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் 21 ஊராட்சி மற்றும் 75 கிராமங்கள் உள்ளடக்கியது.

    கொட்டாம்பட்டி சுற்று வட்டார விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் விளை பொருட்கள் நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்து கொள்வதற்கும் அதன் மூலம் நல்ல விலை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக கொட்டாம்பட்டியில் உழவர் சந்தை அரசின் சார்பில் அமைத்து தருமாறும், சொக்கலிங்க புரம் ஊராட்சி உட்பட்ட உதினிப்பட்டி, மணல் மேட்டுப்பட்டி, சொக்கலிங்கபுரம், திரௌபதி அம்மன் கோவில் ஆகிய ஊரணி களை தூர்வாரி செய்து சீரமைத்து தரவும், கொட்டாம்பட்டி வட்டாரத்தில் வயது முதிர்வால் காய்ப்பு திறன் குறைந்த தென்னை மரங்களை அகற்றிவிட்டு புதிய தென்னை கன்றுகளை நடவு செய்திட விவசாயிகளுக்கு மானிய விலையில் ஊக்கத்தொகை வழங்கிடவும்,கொட்டாம்பட்டியை மையமாக வைத்து காயர் கிளஸ்டர் குழுமத்தினை ஏற்படுத்திதரவும், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    மேலூர் உட்பட மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி தாலுகாவில் இருந்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டன.
    • 12 பேர் இருசக்கர, 3 சக்கர வண்டிகள் கேட்டும் என மொத்தம் 48 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் கோரிக்கை மனுக்களை கொடுதுதனர். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டன.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் 30 பேர் உதவி தொகை கேட்டும், 6 பேர் இலவச வீட்டு மனை கேட்டும், 12 பேர் இருசக்கர, 3 சக்கர வண்டிகள் கேட்டும் என மொத்தம் 48 பேர் மனுக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் தாசில்தார்கள் சம்பத், விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 8 இடங்களில் நாளை பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 8 இடங்களில் பொது வினியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, குறிப்பிட்ட கிராமங்களி பொது விநியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, கிருஷ்ணகிரி வட்டத்தில் கம்மம்பள்ளி தரப்பு எம்.கொல்லப்பள்ளி கிராமத்திலும், பர்கூர் தாலுகாவில் சின்னமட்டாரப்பள்ளி தரப்பு பசவண்ணகோயிலிலும், போச்சம்பள்ளி தாலுகா மகாதேவகொல்லஅள்ளி தரப்பு சாமல்பட்டியிலும், ஊத்தங்கரை தாலுகா காட்டேரி, ஓசூர் தாலுகா ஒன்னல்வாடி, சூளகிரி தாலுகா காமன்தொட்டி, தேன்கனிக்கோட்டை தாலுகா ரத்தினகிரி தரப்பு சாத்தனக்கல், அஞ்செட்டி தாலுகா அஞ்செட்டி மேற்கு தரப்பு எருமத்தனப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

    எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொண்டி பேரூராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலை பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகவும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு அனைத்து மதத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் பொது மக்களின் தேவைகளும், கோரிக்கை களும் அதிகம் உள்ளது.

    இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற மக்கள் குறை தீர்க்கும் வகையில் மாதத் தின் முதல் வாரம் செவ்வாய் கிழமையும், மாதத்தின் இறுதிவாரம் செவ்வாய் கிழமையும் காலை 11 மணி முதல் மாலை 2 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாளாக அறிவிக்கப்படுகிறது. அப்போது மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 26-ந் தேதி நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான இரண்டாம் காலாண்டிற்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் அவரது குடும்பத்தைச் சார்ந்தோர்கள் படைவிலகல் சான்று, அடையாள அட்டை மற்றும் மனுக்கள் ஆகியவற்றின் இரண்டு நகல்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.

    இந்த குறைதீர்க்கும் முகாமில் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
    • தேன்கனிக்கோட்டை - அருளாலம் (சாலிவாரம்), அஞ்செட்டி- தாம்ச னப்பள்ளி ஆகிய கிராம ங்களில் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 8 இடங்களில் பொது விநியோகத்திட்டம் சம்பந்தமாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது வினியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.

    அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் கோதிகுட்லப்பள்ளி, ஊத்தங்கரை - வீரணகு ப்பம், போச்சம்பள்ளி - தாமோதரஅள்ளி, பர்கூர்- தொகரப்பள்ளி கூட் ரோடு (புலிகுண்டா), சூளகிரி - உலகம், ஓசூர் -எலுவப்பள்ளி (பாகலூர்), தேன்கனிக்கோட்டை - அருளாலம் (சாலிவாரம்), அஞ்செட்டி- தாம்ச னப்பள்ளி ஆகிய கிராம ங்களில் நடைபெறுகிறது.

    எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×