search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
    X

    மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

    • கிருஷ்ணகிரியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்கண்ட வாய்ப்பை பயன்படுதுதி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 31-ந் தேதி மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்கள், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்டு மனுக்கள் பெறப்படுகிறது. மேலும் உடனடியாக அவற்றின் மீது தீர்வு கண்டு உரிய ஆலோசனைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மின் வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்ல் நடைபெற உள்ளது.

    எனவே மின் வாரியத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள், பணியாளர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் மேற்கண்ட வாய்ப்பை பயன்படுதுதி தங்களின் குறைகளை தீர்த்து கொள்ளலாம். ஓய்வூதியர் மற்றும குடும்ப ஓய்வூதியர்களின் புதிய மருத்துவ காப்பீட்டு அட்டை கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது. இதுவரை புதிய மருத்துவ காப்பீடு அட்டை பெறாதவர்கள், ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் 31&ந் தேதி தங்களின் பி.பி.ஓ. நகலை காட்டி புதிய மருத்துவ அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×