search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்
    X

    பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம்

    • பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.
    • தேன்கனிக்கோட்டை - அருளாலம் (சாலிவாரம்), அஞ்செட்டி- தாம்ச னப்பள்ளி ஆகிய கிராம ங்களில் நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) 8 இடங்களில் பொது விநியோகத்திட்டம் சம்பந்தமாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவ ட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது வினியோகத் திட்டம் சம்பந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படுகிறது.

    அதன்படி, கிருஷ்ணகிரி தாலுகாவில் கோதிகுட்லப்பள்ளி, ஊத்தங்கரை - வீரணகு ப்பம், போச்சம்பள்ளி - தாமோதரஅள்ளி, பர்கூர்- தொகரப்பள்ளி கூட் ரோடு (புலிகுண்டா), சூளகிரி - உலகம், ஓசூர் -எலுவப்பள்ளி (பாகலூர்), தேன்கனிக்கோட்டை - அருளாலம் (சாலிவாரம்), அஞ்செட்டி- தாம்ச னப்பள்ளி ஆகிய கிராம ங்களில் நடைபெறுகிறது.

    எனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×