search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கின்னஸ்"

    • பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவிகள் கின்னஸ் சாதனை படைத்தனர்
    • மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டினை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். கல்லீரல் புற்று நோய்க்கான எமரால்டு பச்சை நிறமும் நுரையீரல் புற்றுநோய்க்கு வெள்ளை நிறமும் மார்பகப் புற்றுநோய்க்கு இளஞ்சிவப்பு நிறமும் எலும்பு புற்றுநோய்க்கு மஞ்சள் நிறமும் என பல்வேறு வகையான புற்றுநோய்களை குறிக்கும் வகையில் 12 வகையான நிறங்களில் டி-சர்ட்களை மாணவிகள் அணிந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு வாசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரணியைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டின் மூலம் புதிய கின்னஸ் சாதனைப் படைத்தனர். டாக்டர்.ஜெட்லியின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கான பதக்கங்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டியது. இந்நிறுவனம் இந்நிகழ்வினை உலக சாதனை புத்தகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்த கேடயம் மற்றும் விருது, சான்றிதழ் ஆகியவற்றை எஸ்பி ஷ்யாம்ளாதேவி வழங்கி பாராட்டினார். விழிப்புணர்வு பேரணியில்தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.


    பன்னா புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வரும் 100 வயதாகும் பெண் யானைக்கு கின்னஸ் அங்கீகாரம் பெறும் முயற்சியில் சரணாலய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
    போபால் :

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பன்னா புலிகள் சரணாலயத்தில் கிட்டத்தட்ட 100 வயதாகும் வட்சலா எனும் பெயரிடப்பட்ட பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    பொதுவாக யானைகளின் சராசரி ஆயுட்காலம் 85 முதல் 90 ஆண்டுகள் ஆகும், ஆனால் வட்சலா 100 வயதுடன் வாழ்ந்து வருவதால் பூமியில் வாழ்ந்து  வரும் யானைகளிலேயே மிகவும் வயதான யானை என வட்சலாவுக்கு கின்னஸ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என சரணாலய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆனால், யானையின் உண்மையான வயதை கண்டறிய உரிய ஆவணங்கள் தேவை என்பதால், வட்சலா பிறந்த இடமான கேரளவில் உள்ள நீலாம்பூர் வன சரகத்தில் அதற்குறிய ஆவணங்களை கோரியுள்ளனர்.

    நீலாம்பூர் வன சரகத்தில் இருந்து ஹோசாங்காபாத் சராணாலயத்திற்கு கடந்த 1972-ம் ஆண்டு மாற்றப்பட்ட வட்சலா, பன்னா புலிகள் சரணாலயத்திற்கு கடந்த 1992-ம் ஆண்டு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் , வட்சலாவை பராமரித்து வரும் கால்நடை மருத்துவர் எஸ்.கே.குப்தா கூறுகையில், கடந்த 2003 மற்றும்  2008 ஆண்டுகளில் வட்சலா இருவேறு யானைகளால் தாக்கப்பட்டதால்,  அதன் வயிற்று பகுதியில் படுகாயம் ஏற்பட்டது, இருப்பினும் தகுந்த சிகிச்சைக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரது கவனத்தையும் வட்சலா ஈர்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.
    ×