search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவிகள் கின்னஸ் சாதனை
    X

    பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவிகள் கின்னஸ் சாதனை

    • பெரம்பலுார் தனலட்சுமி சீனிவாசன் கல்லுாரி மாணவிகள் கின்னஸ் சாதனை படைத்தனர்
    • மாவட்ட போலீஸ் எஸ்.பி.ஷ்யாம்ளாதேவி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டினை அமைக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்று வரும் விழிப்புணர்வு வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். கல்லீரல் புற்று நோய்க்கான எமரால்டு பச்சை நிறமும் நுரையீரல் புற்றுநோய்க்கு வெள்ளை நிறமும் மார்பகப் புற்றுநோய்க்கு இளஞ்சிவப்பு நிறமும் எலும்பு புற்றுநோய்க்கு மஞ்சள் நிறமும் என பல்வேறு வகையான புற்றுநோய்களை குறிக்கும் வகையில் 12 வகையான நிறங்களில் டி-சர்ட்களை மாணவிகள் அணிந்துகொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு வாசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பேரணியைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்டமான சிவப்பு ரிப்பன் குறியீட்டின் மூலம் புதிய கின்னஸ் சாதனைப் படைத்தனர். டாக்டர்.ஜெட்லியின் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிக்கான பதக்கங்கள் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டியது. இந்நிறுவனம் இந்நிகழ்வினை உலக சாதனை புத்தகத்திற்கு பரிந்துரைத்துள்ளது. இந்த கேடயம் மற்றும் விருது, சான்றிதழ் ஆகியவற்றை எஸ்பி ஷ்யாம்ளாதேவி வழங்கி பாராட்டினார். விழிப்புணர்வு பேரணியில்தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×