search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயிதே மில்லத்"

    • காயிதே மில்லத் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை நவாஸ் கனி எம்.பி. செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பச்சைத் தமிழர் காயிதே மில்லத் என்ற தலைப்பில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.

    கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வருசை முகம்மது, கல்லூரி நிர்வாக இயக்குநர் ஹாமீது இப்ராகிம், நகர தலைவர் சேகு ஜமாலுதீன், செயலாளர் ஹபீப் தம்பி முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில துணைத்தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி வரவேற்றார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர் ஆகியோர் பேசினர்.

    மாநில பொருளாளர் ஷாஜகான், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நவாஸ் கனி எம்.பி. செய்தார்.

    அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    காயிதே மில்லத்தின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    ×