search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயிதே மில்லத் கருத்தரங்கம்
    X

    கருத்தரங்கம் நடைபெற்றது.

    காயிதே மில்லத் கருத்தரங்கம்

    • காயிதே மில்லத் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • இதற்கான ஏற்பாடுகளை நவாஸ் கனி எம்.பி. செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பச்சைத் தமிழர் காயிதே மில்லத் என்ற தலைப்பில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.

    கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வருசை முகம்மது, கல்லூரி நிர்வாக இயக்குநர் ஹாமீது இப்ராகிம், நகர தலைவர் சேகு ஜமாலுதீன், செயலாளர் ஹபீப் தம்பி முன்னிலை வகித்தனர்.

    கட்சியின் மாநில துணைத்தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி வரவேற்றார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர் ஆகியோர் பேசினர்.

    மாநில பொருளாளர் ஷாஜகான், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நவாஸ் கனி எம்.பி. செய்தார்.

    Next Story
    ×