என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர்- மு.க.ஸ்டாலின்
    X

    நெல்லையில் அமையவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர்- மு.க.ஸ்டாலின்

    • இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
    • சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும்.

    திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அப்போது, நெல்லை நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், " சிறுபான்மையினருக்கு உரிமைகள் தருவதில் திமுக முதலிடம். நானும், திமுகவும் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படுகிறோம்.

    சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமின்றி, உரிமைகளை வழங்குவதிலும் முதலிடம் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை காப்போம் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக" என்றார்.

    Next Story
    ×