search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுதம் அதானி"

    • முந்த்ரா நகரில் 1.2 பில்லியன் மதிப்பீட்டில் காப்பர் ஆலை உருவாகி வருகிறது
    • மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு காப்பர் ஒர் இன்றியமையாத தேவை

    இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி (61). இவரது நிறுவனம், அதானி குழுமம் (Adani Group).

    பல்வேறு உலக நாடுகளில் பல துறைகளில் பல்லாயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம், துறைமுக கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தில் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது.

    இவை தவிர, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் நிர்வாகம், மின்சக்தி உற்பத்தி மற்றும் பகிர்மானம், சுரங்கம், இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பல உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் அதானி குழுமம் கால் பதித்து வெற்றி கொடி நாட்டி வருகிறது.

    இந்நிலையில், குஜராத் மாநில கட்ச் மாவட்டத்தின் முந்த்ரா (Mundra) நகரில் அதானி குழுமம், உலகின் மிக பெரிய "காப்பர்" (செம்பு) உற்பத்தி ஆலையை உருவாக்கி வருகிறது.

    இது முழு செயல்பாட்டிற்கு வந்ததும் காப்பர் தேவைக்காக அயல்நாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலை பெருமளவு குறைந்து விடும்.

    சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்த ஆலை உருவாக்கப்பட்டு வருகிறது.


    2029 வருட காலகட்டத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி இலக்கை எட்டவுள்ளது.

    ஒவ்வொரு நாட்டிற்கும் படிம எரிபொருள் (fossil fuel) சார்பு நிலையில் இருந்து பசுமை எரிபொருள் பயன்பாட்டிற்கு மாற தேவைப்படும் கட்டமைப்பிற்கும், மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள், சோலார் செல்கள், பேட்டரிகள், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்தின் உருவாக்கத்திற்கும் காப்பர் தேவைப்படுகிறது.

    இதற்கிடையே, பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட, 4 லட்சம் டன்கள் உற்பத்தி திறன் படைத்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர அதன் உரிமையாளரான வேதாந்தா லிமிடெட் நிறுவனம் தீவிரமாக முயன்று வருகிறது.

    எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கு அடுத்த நிலையில் தொழில்துறைக்கு மிகவும் தேவைப்படும் உலோகமாக காப்பர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தற்போது, உலகின் பெருமளவு காப்பர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள சிலி (Chile) மற்றும் பெரு (Peru) ஆகிய இரு நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றன.

    • ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
    • அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், 7.6 பில்லியன் அதிகரித்தது.

    புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவில் பல மாதங்களாக முதல் இடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத்தள்ளி கவதம் அதானி முதல் இடத்தை பெற்றுள்ளார்.

    அதானியின் நிகர மதிப்பு நேற்று ஒரே நாளில், 7.6 பில்லியன் அதிகரித்து, தற்போது 97.6 பில்லியனாக உள்ளது.

    ஹிண்டர்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் அதானி குழுமத்துக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, நேற்று ஒரே நாளில் அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் அதிகரித்தது.

    • ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது
    • அறிக்கைகளை ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியது

    இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்று, அதானி குழுமம். இதன் நிறுவனர், இந்தியாவின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை சேர்ந்த கவுதம் அதானி (Gautam Adani).

    கடந்த 2023 ஜனவரி மாதம், அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் (Hindenburg), அதானி குழுமம் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி நீண்ட அறிக்கையை வெளியிட்டது. இதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது.

    இதனை தொடர்ந்து, செபி (SEBI) எனப்படும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் இந்த முறைகேடுகள் குறித்த விசாரிக்க தொடங்கியது.

    உச்ச நீதிமன்றத்திலும் அதானி குழுமத்திற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

    கடந்த மார்ச் மாதம், இது குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

    இரு மாதங்கள் கழித்து "குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படவில்லை" என இந்த குழு அறிக்கை சமர்ப்பித்தது.

    இதை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது:

    ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற ஒரு அறிக்கையை மட்டுமே அடிப்படையாக கொண்டு எந்த விசாரணைக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி இது குறித்து விசாரணை செய்வதுதான் சரியானது. இதில் தற்போது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், தனியாக "சிட்" (SIT) எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட முடியாது. நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைகளின்படி அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசும், செபியும்தான் எடுக்க வேண்டும். தகுந்த ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பொது வெளியில் வரும் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனு தாக்கல் செய்வதும், அவற்றின் அடிப்படையில் உத்தரவிடுவதும் நீதி பரிபாலனத்திற்கே இழுக்காக அமையும்.

    இவ்வாறு அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்துடன், மொத்தம் உள்ள 22 புகார்களில் 20 குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை செபி முடித்து விட்டது. மீதமுள்ள 2 வழக்குகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் செபி விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இத்தீர்ப்பு குறித்து கவுதம் அதானி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் கூறியிருப்பதாவது:

    மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உண்மை எப்பொதும் நிலைத்திருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தியமே வெல்லும். எங்களுடன் உறுதுணையாக இருந்தவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களின் சிறு பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்.

    இவ்வாறு அதானி தெரிவித்துள்ளார்.



    • கடந்த 2023-ம் ஆண்டு புதிதாக 26 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
    • 2023-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அம்பானி, இந்தியாவின் கோடீஸ்வரர் அட்டவணையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

    மும்பை:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறை முக்கிய பங்காற்றி வரும் நிலையில் தனியார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி காரணமாக நாட்டின் வர்த்தகம் அதிகரித்து வருகிறது. இதே நேரத்தில் நாட்டில் உள்ள பணக்காரர்கள் பட்டியலிலும் புதிதாக பலர் இடம்பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு புதிதாக 26 பேர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 2022-ம் ஆண்டு முதலிடத்தில் இருந்த கவுதம் அதானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மீண்டும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் பணக்காரர் என்ற பெருமையை மீண்டும் தக்க வைத்துள்ளார்.

    இதன் காரணமாக இந்திய பணக்காரர்களின் தரவரிசை 2023-ல் 152 ஆக உயர்ந்துள்ளது அவர்களின் மொத்த நிகர பண மதிப்பு இந்த ஆண்டின் இறுதிக்குள் முன்னோடியில்லாத வகையில் 858.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டிலிருந்து (126) பில்லியனர் ஊக்குவிப்பாளர்களின் எண்ணிக்கையில் 21 சதவிகிதம் அதிகரிப்பையும், முந்தைய ஆண்டை விட (சுமார் 739 பில்லியன் டாலர்) அவர்களின் மொத்த நிகர மதிப்பில் 16 சதவிகித உயர்வையும் குறிக்கிறது.

    இந்த கோடீஸ்வரர்களின் நிறுவனங்களில் தங்கள் குடும்பத்தின் பங்குகளின் சந்தை மதிப்பின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதால், 2023-ல் 16.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர மதிப்பில் 15.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 26 பேர் இடம் பெற்றுள்ளது 2023-ம் ஆண்டின் பில்லியனர் கிளப்பின் ஜனநாயக மயமாக்கலை வெளிப்படுத்துகிறது. புதிய உறுப்பினர்கள் இடம் பிடித்ததின் காரணமாக ஒட்டுமொத்த நிகர மதிப்பில் முதல் 3 இடங்களை பிடித்த கோடீஸ்வர நிறுவனங்களின் பங்கு குறைந்து வருகிறது.

    நாட்டின் 2 முதன்மையான பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி ஆகியோர் மற்ற அனைத்து கோடீஸ்வரர்களின் மொத்த நிகர மதிப்பில் 25.5 சதவிகிதம் ஆகும்.

    2023-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அம்பானி, இந்தியாவின் கோடீஸ்வரர் அட்டவணையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் அதானி, 2022-ல் முதல்முறையாக பட்டியலில் முதலிடத்தை பிடித்த நிலையில் அம்பானியின் நிகர மதிப்பு 4.7 சதவீதம் உயர்ந்து 112.4 பில்லியன் டாலரை எட்டியிருந்தது.

    இந்த நிலையில் 2023-ம் ஆண்டில் அதானி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதுபோல கடந்த 2022-ல் நாடார் அவென்யூ சூப்பர்மார்ட்சின் ராதாகிஷன் தமானியை விஞ்சி இந்தியாவின் 3-வது பணக்கார தொழிலதிபர் ஆனார், நிகர மதிப்பு 29.3 பில்லியன் டாலர். இது 2022 இறுதியில் (21.75 பில்லியன்) 34.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

    எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ராதாகிஷன் தமானி 2023-ல் பிசினஸ் ஸ்டாண்டர்ட் கோடீஸ்வரர் பட்டியலில் 4-வது இடத்திற்கு சரிந்தார். அவரை தொடர்ந்து விப்ரோவின் அசிம் பிரேம்ஜி இப்போது இந்தியாவின் 5-வது பணக்காரராக உள்ளார். அவரது நிகர மதிப்பு 21.8 பில்லியன் டாலராக உள்ளது.

    மேலும் இந்திய பணக்காரர்கள் தரவரிசையில் முதல் 10 பேர் பட்டியலில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் ஏசியன் பெயிண்ட்சின் மாலவ் டானி, அம்ரிதா வக்கீல் மற்றும் மனிஷ் சோக்ஸி (ஒருங்கிணைந்த நிகரம்) மதிப்பு 20.8 பில்லியன் டாலர்), சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் எஸ்.ஷங்வி (20.7 பில்லியன் டாலர்), பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல் ((20.2 பில்லியன் டாலர்), ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் சஜ்ஜன் ஜிண்டால் (18.9 பில்லியன் டாலர்) மற்றும் ராஜீவ் மற்றும் சஞ்சீவ் பஜாஜ், ராகுல் பஜாஜ் குழுமத்தின் (16.7 பில்லியன் டாலர்).

    2023-ல் ஐ.பி.ஓ. ஏற்றம் காரணமாக புதிய கோடீஸ்வரர்களும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். மேன்கைண்ட் பார்மாவைச் சேர்ந்த ரமேஷ் சந்த் ஜுனேஜா இந்தியாவின் 25-வது பணக்கார தொழி லதிபர் ஆனார். கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பிடித்தவர்கள் செலோ வேர்ல்டின் பிரதீப் ஜி ரத்தோட் (1.6 பில்லியன் டாலர்), ஆர்.ஆர்.கேபலின் திரிபுவன்பிரசாத் கப்ரா (1.3 பில்லியன் டாலர்), மற்றும் சிக்னேச்சர் குளோபலின் பிரதீப் குமார் அகர்வால் (1 பில்லியன் டாலர்) ஆகியோரும் அடங்குவர்.

    கடந்த 2023-ம் ஆண்டு தனியார் துறையில் பல்வேறு வளர்ச்சிகள் எட்டப்பட்டுள்ள நிலையில் பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக 26 பேர் இடம் பிடித்துள்ளது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • உலக அளவில் 15-வது இடத்தில் உள்ளார்.
    • அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.5.99 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் இந்திய பணக்காரர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்டீரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 7 லட்சத்து 82 ஆயிரம் கோடி ஆகும். உலக அளவில் 15-வது இடத்தில் உள்ளார்.

    அதானி குழும தலைவர் கவுதம் அதானி ரூ.5.99 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் எச்.சி.எல். நிறுவன தலைவர் ஷிவ் நாடார் ரூ.2.58 லட்சம் கோடி சொத்துடன் உள்ளார். 4-வது இடத்தில் சாவித்திரி ஜிண்டால் (ரூ.2.40 லட்சம் கோடி), 5-வது இடத்தில் சைரஸ் பூனாவாலா (ரூ.1.83 லட்சம் கோடி), 6-வது இடத்தில் திலிப் ஷாங்வி (ரூ.1.66 லட்சம் கோடி), 7-வது இடத்தில் குமார் பிர்லா (ரூ.1.55 லட்சம் கோடி) 8-வது இடத்தில் ராதாகிருஷ்ணன் தாமணி (ரூ.1.49 லட்சம் கோடி), 9-வது இடத்தில் லட்சுமி மிட்டல் (ரூ.1.36 லட்சம் கோடி), 10-வது இடத்தில் குஷல் பால்சிங் (ரூ.1.25 லட்சம் கோடி) உள்ளனர்.

    • புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.
    • ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    புதுடெல்லி:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 7 நாட்களில் மட்டும் 10 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.83 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதையடுத்து அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது 70.3 பில்லியன் டாலரை (ரூ.5.83 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

    சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளதையடுத்து உலக பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தைபிடித்துள்ளார். புளும்பெர்க் பணக்காரர் பட்டியலில் 90.4 பில்லியன் டாலர் (ரூ.7.50 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13-வது இடத்தில் உள்ளார்.

    இவருக்கு அடுத்தபடியாக டாப் 20 பட்டியலில் இரண்டாவது இந்தியராக கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார்.

    அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களும் இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. இதையடுத்து அவற்றின் ஒட்டு மொத்த சந்தை மூலதனம் ரூ.13 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

    குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி 20 சதவீதம் அதிகரித்து ரூ.1.348-க்கும், அதானி எனர்ஜி 16.38 சதவீதம் உயர்ந்து ரூ.1,050-க்கும், அதானி டோட்டல் கேஸ் 15.81 சதவீதம் அதிகரித்து ரூ.847.90-க்கும், அதானி என்டர்பிரைசஸ் 10.90 சதவீதம் உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 805-க்கும் வர்த்தகமாகின.

    இவ்வாறு புளும்பெர்க் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ஃபார்சூன் பிராண்ட் சமையல் எண்ணெய் இந்தியா முழுவதும் பிரபலமானது
    • அதானி-வில்மர் நிறுவனத்தில் அதானி குழுமத்திற்கு சுமார் 44 சதவீத பங்கு உள்ளது

    இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரை மையமாக கொண்டு முன்னணி தொழிலதிபரும், கோடீசுவரருமான கவுதம் அதானி என்பவரால் 1988ல் தொடங்கப்பட்டது அதானி குழுமம் (Adani Group).

    இக்குழுமம் துறைமுக கட்டுமானம், மின்சார உற்பத்தி/பகிர்மானம், எரிசக்தி, சுரங்கம், விமான நிலைய செயல்பாடு/நிர்வாகம், இயற்கை எரிவாயு, உணவுப்பொருள் தயாரிப்பு, நாட்டின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் பல நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும்.

    அதானி குழுமத்தை சேர்ந்த அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises) மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மர் இன்டர்நேஷனல் (Wilmar International) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானது, அதானி வில்மர் (Adani Wilmar). சமையல் எண்ணெய் மற்றும் உணவு பொருட்களில் நாடு முழுவதும் பிரபலமான "ஃபார்சூன்" (Fortune) எனும் பெயரில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

    இந்நிறுவனத்தில், அதானி குழுமத்திற்கு 43.97 சதவீதம் பங்கு உள்ளது.

    இந்நிலையில், தனது பிற முக்கிய தொழில்களில் கவனம் செலுத்துவதற்காக அதானி வில்மர் குழுமத்தில் உள்ள தனது முழு பங்கையும் விற்று விட பல பன்னாட்டு நிறுவனங்களுடன் அதானி குழுமம் முயற்சிப்பதாகவும், ஒரு மாத காலத்தில் இந்த விற்பனை முடிவாகி விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த பங்கு விற்பனை உறுதியானால், இதன் மூலம் அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கு ($3 பில்லியன்) மேல் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

    கடந்த இரு காலாண்டுகளாக அதானி வில்மர் நிறுவனத்தின் சமையல் எண்ணெய் விற்பனை மந்தமானதால், நிகர லாபம் பெரிதும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

    இன்றைய மும்பை பங்கு சந்தை குறியீட்டில் அதானி வில்மார் நிறுவனத்தின் பங்குகள் ரூ.317 எனும் அளவில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.

    சில மாதங்களுக்கு முன் ஹிண்டன்பர்க் எனும் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ பொருளாதார புலனாய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் மீது பல்வேறு ஊழல் புகார்களை குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சரத்பவார், கவுதம் அதானி சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
    • இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    மும்பை :

    அமெரிக்காவை சேர்ந்த பங்கு சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' சமீபத்தில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானியின் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை வெளியிட்டது. அதாவது, அதானி குழும நிறுவனங்கள் தங்களின் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெற்றதாகவும், பங்கு சந்தை மோசடியில் ஈடுபட்டதாகவும், அதானி குடும்பத்தினர் போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு, பண மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தது.

    இந்த சர்ச்சையை தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து கவுதம் அதானி பின்தங்க தொடங்கினார்.

    அதானி நிறுவன குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுகுழு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான விவகாரத்தில் பாராளுமன்றத்தின் 2-வது அமர்வும் முடங்கியது.

    இந்தநிலையில் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கவுதம் அதானிக்கு ஆதரவாக பேசியது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை விட சுப்ரீம் கோர்ட்டு கமிட்டி விசாரணையே பயன் அளிக்கும் என்றார். அரசியல் காரணங்களுக்காக கவுதம் அதானி குறிவைக்கப்படுகிறார் என்றும் கூறினார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று சரத்பவார் பல்டி அடித்தார்.

    இந்த பரபரப்புக்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று தொழில் அதிபர் கவுதம் அதானி சந்தித்து பேசினார். தென்மும்பையில் உள்ள சரத்பவாரின் 'சில்வர் ஓக்' இல்லத்தில் இந்த சந்திப்பு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இந்த சந்திப்பின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    சரத்பவாரை கவுதம் அதானி சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தபோது, இது மகாராஷ்டிரா எதிர்க்கட்சி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சரத்பவார் கூறியிருந்தார். இதனால் இனி சாவர்க்கர் பற்றி விமர்சிக்க போவதில்லை என்று காங்கிரசும் தெரிவித்து இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் கவுதம் அதானியுடன் தற்போது சரத்பவார் சந்திப்பு நடத்தி இருப்பது எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.
    • நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    அகமதாபாத்:

    அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் இளைய மகன் ஜீத்அதானி.

    இவருக்கும் பிரபல வைர வியாபாரியான ஜெய்மின் ஷாவின் மகள் திவா ஜெய்மின்ஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த 12-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று உள்ளது.

    இதில் இரு குடும்பத்தினரின் உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர்.

    நிச்சயதார்த்தத்தின் போது ஜீத்அதானி-திவா ஜெய்மின்ஷாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில் திவா ஜெய்மின்ஷா எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா அணிந்திருந்தார். ஜீத்அதானி வெள்ளை நிற குர்தாவில் அசத்தலாக காட்சி அளித்தார்.

    ஜீத் அதானி பென்சில் வேனியா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மற்றும் அப்ளைய்டு சயின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தவர் ஆவார்.

    இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதானி குழும பணியில் சேர்ந்து தற்போது அதானி குழுமத்தில் நிதி பிரிவின் துணைத்தலைவராக உள்ளார்.

    அதானி ஏர்போர்ட்ஸ் வணிகத்தையும், அதானி டிஜிட்டல் லேப் இணைந்து அதானி குழும வணிகங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் ஒரு செயலி உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்திற்கு ஜீத் அதானி தலைமை தாங்குகிறார்.

    • மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை.
    • அதானி பங்கு சந்தையின் பெரிய எருது.

    மும்பை :

    இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டது. அதில் காதலர் தினத்தை 'பசு தழுவுதல் தினம்' ஆக கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்து இருந்தது. நேர்மறை சக்தியை பரப்பவும், மகிழ்ச்சிக்காவும் இந்த முயற்சியை முன்எடுத்து இருப்பதாக விலங்குகள் நலவாரியம் தெரிவித்தது.

    இதற்கு சில பா.ஜனதா தலைவர்களும் ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் முன்எடுப்பை கேலி செய்தும் சமூகவலைதளத்தில் மீம்ஸ்கள் பரவின.

    இந்தநிலையில் விலங்குகள் நல வாரிய முடிவுடன், தொழில் அதிபர் கவுதம் அதானி விவகாரத்தை ஒப்பிட்டு உத்தவ் தாக்கரே சிவசேனா விமர்சித்து உள்ளது.

    இதுதொடர்பாக அந்த கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் கூறியிருப்பதாவது:-

    அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் அதானி மோசடி பற்றி பிரதமர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. அதானி மோசடி பற்றி மக்கள் பிரதமரிடம் இருந்து விளக்கத்தை கேட்டனர். ஆனால் மோடி அரசு மீண்டும் மக்களை அமைதியாக்க மதத்தை ஒரு டோஸ் கொடுத்து உள்ளது.

    மோடி அதானி பற்றி பாராளுமன்றத்தில் பேசவில்லை. ஆனால் அவர்களின் அரசு பசு மாடு பற்றி பேசுகிறது. அதானி பங்கு சந்தையின் பெரிய எருது. ஆனால் மோடிக்கு அவர் புனிதமான பசு. பிரதமர் அதனை தழுவிக் கொண்டுள்ளார். அதன் பிடியை தளர்த்த அவர் தயாராகயில்லை. பல மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அவர்கள் ராமர் கோவில், பசு மாடுகளை கூறி ஓட்டு கேட்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தொழில் அதிபர் கவுதம் அதானி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    • உண்மை வெளிவர வேண்டும்.
    • கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும்.

    புதுடெல்லி :

    அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி புகார் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

    அந்த அமளி காரணமாக பாராளுமன்றம் முடங்கி வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    நான் பல ஆண்டுகளாக மத்திய அரசு பற்றியும், தொழில் அதிபர்களுடனான அதன் நெருக்கம் பற்றியும் பேசி வருகிறேன். அதானி விவகாரம் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஆனால், மத்திய அரசு விவாதம் நடத்த விரும்பவில்லை. அதைக்கண்டு பயப்படுகிறது.

    பிரதமர் மோடி அந்த விவாதம் நடப்பதை தவிர்க்க தன்னால் இயன்றதை எல்லாம் செய்வார். அதற்கு காரணம் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும்.

    ஆனால் உண்மை வெளிவர வேண்டும். கோடிக்கணக்கான ருபாய் ஊழல் வெளிவர வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.
    • கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    நியூயார்க்:

    அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பெர்க் ஆய்வு புகாரை அடுத்து அதானி குழும பங்குகள் வேகமாக குறைந்து வந்த காரணத்தால், அதானி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.

    இந்நிலையில், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப்-20 பட்டியலில் இருந்து கவுதம் அதானி வெளியேறியுள்ளார்.

    கவுதம் அதானி 57 பில்லியன் டாலர் மதிப்புடன் 22-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2-வது இடத்தில் இருந்து 22-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் குடும்பம் முதலிடத்திலும், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும், முகேஷ் அம்பானி 12-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் 10 பேரில் ஒருவராக இருந்த அதானியை இந்தியாவின் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பணக்கார இந்தியர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×