search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு கேமரா"

    • ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
    • இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

    இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு
    • கடைவீதிகளில் போலீசார் கண்காணிக்க ஏற்பாடு

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.க்கள் சுப்பையா, மதியழகன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் இன்ஸ்பெக்டர்கள் அரசு வழக்கறிஞர்கள், டாக்டர்கள் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. மேலும் போக்சோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திறம்பட பணியாற்றிய குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் மற்றும் தலை மறைவு குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண்பிரசாத் பேசியதா வது:-

    விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற நடவடிக்கை மேற்கொண்ட அனைத்து அதிகாரிகள், போலீசாருக்கு பாராட்டுகள் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த கட்டமாக தீபாவளி, சரஸ்வதி பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. இனிவரும் காலம், பண்டிகை காலம் என்பதால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் .

    குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்களில் பெண்களிடம் நகை பணம் பறிக்கும் சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இது தொடர்பான குற்ற வாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருட்டு சம்ப வங்களை தடுக்கும் வகை யில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். வடசேரி, அண்ணா பஸ் நிலை யங்களில் பெண் போலீசார் மப்டி உடையில் கண் காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். பண்டிகை காலம் வருவதை யடுத்து கடைவீதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    எனவே கடை வீதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து ஜவுளிக் கடைகள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்களில் கண் காணிப்பு கேமரா முழுமை யாக இயங்க வேண்டும். இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார். நாகர்கோவில் ஆயுதப் படை மைதானத்தில் போலீ சாருக்கான இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு செய்தார்.

    • மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.
    • கண்காணிப்புக் கேமராக்கள் முறையாக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

    பல்லடம்:

    பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா கூறியதாவது:- பல்லடம் உட்கோட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில்,கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதன் மூலம்,குற்றங்களை தடுக்க முடியும். முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில், கண்காணிப்புக் கேமராக்கள், பொருத்தப்படுகின்றன.

    இதன் மூலம், குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன. மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு, இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.வீடுகளில், ஆட்கள் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து, வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும், இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில், அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.

    வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம், வீடுகளில், திருட்டு, உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.

    சமீபத்தில் நடந்த சில, கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை,வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு, குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல், அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    • வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், திருட்டு, உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில் புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க பல்லடம் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தில் ரூ.12 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நிதி உதவுமாறு பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கத்திடம், நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வியாபாரிகள் சங்கத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் நன்கொடை திரட்டி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் கண்காணிப்பு கேமராக்களுடன் அமைக்கப்பட்டது. அதனை கடந்த 20- ந்தேதி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாமிநாதன் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களுக்கு நன்கொடை வழங்கிய வியாபாரிகளை கவுரவிக்கும் விழா பல்லடம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    சங்கத் தலைவர் ஆனந்தா செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கப் பொருளாளர் கானியப்பா பரமசிவம், துணைத் தலைவர் பானு பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் விமல் பழனிச்சாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கண்காணிப்பு கேமரா அமைக்க உதவிய நன்கொடைகையாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்தப்பட்டது. 

    • 6½ சவரன் தங்க நகை கொள்ளை
    • சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பி மோட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயம்மாள் (வயது 80).

    மொபட்டில் வந்த அடையாளம் தெரியாத மர்ம பெண் ஒருவர் மூதாட்டி ஜெயம்மா ளிடம் அரசு முதியவர்க ளுக்கு நல திட்ட உதவிகள் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    அதற்கான விண்ணப்பம் ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியில் வழங்குவதாகவும் கூறினார்.

    நகை அணிந்து வந்தால் உதவி தொகை தரமாட்டார்கள். அதனால் நகையை வீட்டில் வைத்து விட்டு வந்துவிடலாம் என கூறி மூதாட்டியை பைக்கில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மூதாட்டி தான் அணிந்திருந்த 6½ சவரன் தங்க நகையை வீட்டில் கழட்டி வைத்துள்ளார். அதனை அடையாளம் தெரியாத பெண் ஜன்னல் வழியாக நகைகளை எங்கு வைக்கிறார் என நோட்டமிட்டார்.

    பின்னர் மர்ம பெண் மூதாட்டியை தனது மொபட்டில் உட்கார வைத்து கொண்டு ஜோலார்பேட்டை நோக்கி சென்றார்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற பிறகு அந்த பெண் தன்னுடைய மணி பர்சை மூதாட்டியின் வீட்டிலேயே மறந்து விட்டு விட்டதாக கூறினார்.

    அதனை நம்பி மூதாட்டி அவரிடம் வீட்டு சாவியை கொடுத்தார். அதனை பயன்படுத்தி அந்த பெண் வீட்டை திறந்து 6½ சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் பெண் மூதாட்டியை பைக்கில் அழைத்து செல்வது வீட்டின் கதவை திறக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் திருட்டில் ஈடுபட்ட பெண் சேலம் பகுதியை சேர்ந்தவர் என சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடிக்க சேலத்தில் தனிப்படை போலீசார் முகாமிட்டுள்ளனர்.

    • மேற்பார்வை குழுவுக்கு கலெக்டர் உத்தரவு
    • அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு எந் தவித இடையூறும் ஏற்படுத் தாத வகையில் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, போலீஸ் நிலையங்களிலுள்ள நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், பத்மநாபபுரம் சப்-கலெக் டர், மாவட்ட ஊராட்சித்தலைவர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி உதவி இயக்குநர், தேசிய தகவல் மைய மேலாளர் (நிக்) கொண்ட மாவட்ட அள விலான மேற்பார்வை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம், கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், பத்மநாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட தக்கலை, குளச்சல், மணவாளக்குறிச்சி, இரணியல், கருங்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத் தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வின் செயல்பாடுகள் குறித்து பத்மநாபபுரம் சார் ஆட்சியரும், நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார், வடசேரி, ஆசாரிபள்ளம், நேசமணி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியரும் ஆய்வு மேற்கொண்டதில் அதிக திறன் கொண்ட கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், பதிவான காட்சிகள் தெளிவாக இருக்க வேண்டுமென கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேசிய கலெக்டர், அனைத்து போலீஸ் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத் தப்பட்டுள்ளது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க மேற்பார்வை குழு வினருக்கு உத்தரவிட் டார்.

    இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 33 சட்ட ஒழுங்கு பராமரிக்கும் போலீஸ் நிலையங்களும்,4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், வெளிப்ப டைத்தன்மையாக போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வரு கிறது என்றும் எஸ்.பி. தெரி வித்தார்.

    இக்கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட் சியர் சேதுராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, உதவி இயக்குநர் (பேரூராட்சி கள்) விஜயலெட்சுமி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, நகராட்சி ஆணையாளர்கள், நாகர் கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் நவீன்குமார், உசூர் மேலாளர் (குற்றவியல் ) சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டாக 42 வது வார்டு உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக கே.வி.ஆர்.நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக கேவிஆர் நகர் பகுதியில் .வி.ஆர் நகர் மைதானம், அன்னமார் கோவில், கேவிஆர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    இதனை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும் 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் 42 வது வார்டு முழுவதும் இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சிசிடிவி கேமராக்களை பார்வையிடும் போது பெயரளவில் மட்டும் இயங்கி வருகிறது.
    • பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து பொருத்தி பரா மரிக்க வேண்டும்.

    தாராபுரம் :

    தாராபுரம் நகராட்சி பகுதியில் நகராட்சி போலீசார், மக்கள் பங்களிப்போடு 252 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு கட்டுப்பாட்டு அறையை போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பல்லடம் தாலுகா செம்மியம்பாளையம் ஊராட்சியில் கிராமத்தில் உள்ள பிரதான வீதிகள் நுழைவாயில், வளைவு என முக்கிய இடங்களில் நவீனமான 31 சிசிடிவி. கேமராக்கள் பயன்பாடுக்கு வந்தது. மாவட்டத்தில் இரு இடங்களும் பிற இடங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட போலீசார் கூறியதாவது:-  இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகவும், குற்றங்களை தடுப்பதில், பேருதவியாகவும் சிசிடிவி. கேமராக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஒவ்வொரு வழக்குகளில் குற்றங்கள் நடக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளப்படுத்தி காட்டி கொடுக்கிறது. சிசிடிவி.கேமராக்கள் குறித்து கிராமங்களில் கூட விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் நகரங்களில் மக்கள் இதன் பயன்குறித்து இன்னும் அறிவதில்லை.

    நகை பறிப்பு, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் இடத்தில் விசாரணை நடத்தி அங்குள்ள சிசிடிவி கேமராக்களை பார்வையிடும் போது பெயரளவில் மட்டும் இயங்கி வருகிறது. ஏதோ பெயருக்கு வைக்காமல் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் காவலாளியாக நினைத்து இவற்றை பொருத்தி பராமரிக்க வேண்டும்.

    ஒரு முறை செலவு செய்து நவீனமான கேமராக்களை பொருத்தினால் காலத்துக்கும் அவை இருக்கும். குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்களை பொருத்தலாம்.

    கடந்த ஆண்டு மாநகரில் நடந்த நகை கொள்ளை சம்பவம், வாலிபரை தலையை துண்டித்து கொலை செய்த வழக்கு, அசாம் மாநில பெண்ணை கொன்று சூட்கேசில்அடைத்து சாக்கடை கால்வாயில் வீசி சென்ற வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து பிடிக்க போலீசாருக்கு பெரும் உதவியாக சிசிடிவி. கேமரா இருந்தது. திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 12 கோடி ரூபாய் செலவில் 442 இடங்களில் ஆயிரத்து 200 சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    அதுபோக மாநகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் சிசிடிவி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எனவே உள்ளாட்சி அமைப்பு, போலீசார், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து தங்கள் பகுதியில் சிசிடிவி.கேமராக்கள் பொருத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • வங்கி ஊழியர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்
    • பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இயங்கி வரும் ஏடிஎம் மையங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் டவுன் போலீஸ் நிலையத்தில் உதவி ஆய்வாளர் கோபால் தலை மையில் நடைபெற்றது.

    அப்போது 15 நாட்களுக்குள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அது செயல்பாட்டில் இருக்க வேண்டும், ஒவ்வொரு ஏடிஎம் மையங்களில் கண்டிப்பாக காவலாளிகள் அமர்த்தப்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை 15 நாட்களுக்குள் அமல் படுத்தப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.

    இதனால் ஏடிஎம் மையங்களில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதோடு வங்கிகளில் ஏற்படும் கொள்ளை சம்பவங்க ளிலும் தடுக்க இது பெரும் உதவியாக இருக்கும் எனவும் கொள்ளை நடைபெறும் சம்பவங்கள் எளிதில் போலீசார் பிடிப்பதற்கும் இது உதவியாக இருக்கும்.

    வங்கிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • குற்ற செயலை தடுக்க நடவடிக்கை
    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துடன் கேமராக்கள் இணைப்பு

    திருப்பத்தூர்:

    கந்திலி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடமான கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரி, கெஜல்நா யக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, ஆம்பள்ளி ரோடு, தோக்கியம் கூட்ரோடு, கந்திலி சந்தை போன்ற முக்கிய இடங்களில் குற்றங்களை தடுக்கவும் விபத்துக்களை குறைக்கவும் பொதுமக்கள் உதவியுடன் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கண்காணிப்பு கேமரா க்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று கேமராக்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விபத்துக்களை குறைக்கவும் 3-வது கண் கண்காணிப்பு கேமரா பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்பட்டு வருகிறது. கந்திலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 10 இடங்களில் தற்போது கேமராக்கள் அமைக்க ப்பட்டுள்ளன.

    இந்த கேமராக்கள் நேரடியாக கந்திலி போலீஸ் நிலையம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம் இதன் மூலம் மாவட்ட முழுவதும் குற்ற செயல் மற்றும் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.
    • கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரத்தில் உள்ள வீடுகளில், திருட்டு உள்பட குற்றச்சம்பவங்களைத் தடுக்க போலீசார் தீவிரம் காட்டுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:- முக்கிய சாலைகள், பொது இடங்கள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கப்படுகின்றன.

    மேலும் குற்றவாளிகள் எளிதில் போலீசாரிடம் சிக்குவதற்கு இவைகள் உதவிகரமாக இருக்கின்றன. வீடுகளில் ஆட்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி குற்றவாளிகள் கைவரிசை காட்டுகின்றனர். போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்து வெளியூர் செல்லுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டாலும் இதை, பொதுமக்கள் பெரும்பாலான நேரங்களில் அலட்சியப்படுத்திவிடுகின்றனர்.

    வீடுகளின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை எளிதாகத் தடுக்க முடியும்.

    திருப்பூரில் நடந்த சில கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை வீடுகளின் வெளிப்புறங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவைக் கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருந்தது.

    எனவே வீடுகளில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்துவதோடு நில்லாமல் அவை முறையாக இயங்குகிறதா என்பதையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    • தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.
    • கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் 9 கோபுரங்கள், ஏராளமான மண்டபங்கள் இருக்கின்றன. இங்கு பழமையான தெற்கு கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

    இதற்கு அடுத்து 5-வது பிரகாரத்தில் தெற்கு கட்டை கோபுரம் அமைந்துள்ளது. 5 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தின் உயரம் 70 அடியாகும். தீப விழாவை முன்னிட்டு, கோவில் பாதுகாப்புக்காக கட்டை கோபுரத்தில் சிசிடிவி கேமராக்கள் நேற்று காலை பொருத்தப்பட்டன.

    அப்போது கோபுரத்தில் இடம்பெற்றிருந்த காவல் தெய்வங்களான சண்டன், பிரசண்டன் உட்பட தெய்வங்களின் சிற்பங்கள் சேதமடைந்தன. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    மாலிக் காபூர் படையெடுப்பில் கோவில் சிலைகள் சிதைக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், கோவிலை கையகப்படுத்தியபோது கோவில் நிர்வாகம், சிற்பங்கள் மற்றும் கோவில் பாரம்பரியம் காக்கப்படும் என தொல்லியல் துறையினர் கூறினர்.

    ஆனால் கோபுர சிற்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன என்று அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

    கோவில் பராமரிப்பு பொறுப்பை தொல்லியல் துறை ஏற்றதால், பக்தர்களிடம் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், காலமாற்றத்தில் கோபுர நுழைவாயில் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு கொடிசிற்பங்கள் சிதைந்து விட்டன.

    கோவில் அதிகாரிகள் தங்குவதற்கு விடுதிகள் கட்டப்பட்டதில், ஆங்காங்கே துளைகள் போடப்பட்டு கல் மதில்சுவர்கள் சேதமடைந்தன. இப்போது கோபுர சிற்பங்கள் சேதமடைந்துள்ளன என்றனர்.

    ×