search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் மாவட்டம்"

    • கடலூர் மாவட்டத்தில் 10 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடந்தது.
    • கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    கடலூர்:

    தமிழக அரசு துறை–களில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவி–யாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 7,301 பணி–யிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி அறிவிப்பு வெளியி–டப்பட்டது. இதையொட்டி இந்த பணிக்காக தமிழகம் முழு–வதும் தேர்வு எழுத 22 லட்சத்து 2,942 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்வு இன்று (24-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழகம் முழு–வதும் 316 தாலுகாகளில் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை 99,437 பேர் எழுத விண்ணப்பித்தி–ருந்தனர். இதற்காக கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட 10 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு இன்று காலை தொடங்கியது. தேர்வினை கண்காணிக்க 54 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது. 331 பறக்கும் படையினர் தீவிரமாக தேர்வினை கண்காணித்தனர். அதோடு 333 தேர்வு அறைகளுக்கு 342 வீடியோ கிராபர்கள் இந்த தேர்வினை பதிவு செய்தனர். இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு மையத்தில் பலத்த சோத–னைக்கு பின்னறே தேர்வு எழுதுவோர் அனு–மதிக்கப்பட்டனர். மஞ்சக்குப்பம் புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு ஒருவர் கால–தாமதமாக வந்தார். அவரை தேர்வு அலுவலர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. ஆத்திரம் அடைந்த அவர் ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்தார். இதேபோன்று பலர் தாம–தமாக வந்தனர். அவர்களை அதிகாரிகளை–யும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை. அனுமதிக்கவில்லை.

    • கடலூர் மாவட்டத்தில் இன்று 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழு வதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ கம் முழுவதும் இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்க–ப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்ப–ட்டன.

    இதில் கடலூர் மாவட்ட–த்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் இன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங் கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பள்ளிகளில் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை சரியான முறையில் உள்ளதா? என்பதனை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவமாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.

    அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாண வர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்ப றைக்கு அழைத்துச் சென்ற தையும் காணமுடிந்தது. இன்று முதல் நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் அரைநாள் மட்டும் நடந்தது.

    ×