search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷவாயு தாக்கி 3 பேர் பலி"

    • சட்டவிரோதமாக மது விற்ற 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.
    • மது பாட்டில்கள், பணத்தை பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா இலுப்பூர் பகுதியில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வனம் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்த

    அதே பகுதியை சேர்ந்த மருதமுத்து ( வயது 72), வெண்ணாவல்குடியை சேர்ந்த குமார் (58), மேலகரும்பிரா ன்கோட்டையைச் சேர்ந்த குழந்தை மகன் விஜய் (42) ஆகியோரை பிடித்து, அவர்களிடமிருந்த மதுபாட்டில் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார்சைக்கிள்கள் மோதல்.
    • விபத்தில் 3 பேர் பலியான பரிதாபம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகேயுள்ள மெடுகம்பள்ளியைச் சேர்ந்தவர் நாகோஜி (வயது40). அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாச்சி (40). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு சென்றனர்.

    குருவிநாயனபள்ளியை சேர்ந்தவர் சையத் (30). லாரி ஓட்டுனர். அதே பகுதியைச் சேர்ந்த சபீர்வுல்லா (32), நூர் முகமது (30). இவர்கள், மூன்று பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் மேடுகம்பள்ளி பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில், இரு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த ஐந்து பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    பலத்த காயமடைந்த வர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகோஜி, அம்மாச்சி, சையத் காசிம் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு தாயை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
    • ரூ. 20 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கோவை,

    கோவை சொக்கம்புதூர் அருகே உள்ள மகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பூபதி (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது தாயார் உடல் நலக்குறைவு காரணமாக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று பூபதி தனது வீட்டை பூட்டி விட்டு தனது தாயை பார்ப்பதற்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 20 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து பூபதி செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் பணத்தை கொள்ளையடித்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31), ஜீவபதியை சேர்ந்த சதீஷ்குமார் (38), கார்த்திக் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றபோது விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர் சுபாஷ் சந்திரபோஸ் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன்(வயது 60). இவரது வீட்டில் உள்ள கிணறு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது.

    தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் பாழடைந்த அந்த கிணற்றை தூர்வார முடிவு செய்தார். அதன்படி கண்ணப்பனின் மகன் சந்தோஷ்(30), அவரது நண்பர்கள் அன்பழகன் (32), காளிதாஸ்(34) ஆகியோர் பாழடைந்த கிணற்றை தூர்வார முயன்றனர்.

    இதற்காக சந்தோஷ், முதலில் கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கிணற்றில் இருந்த விஷவாயு தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். இதைகண்ட அன்பழகன், காளிதாஸ் ஆகியோர் சந்தோசை மீட்க கிணற்றில் இறங்கினர். அவர்களையும் விஷவாயு தாக்கியதால் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தம்கேட்டு அங்கிருந்த சேகர்(34), ராஜு(35), கோவிந்தசாமி(34) ஆகியோர் ஓடிவந்து கிணற்றில் விழுந்த 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் துரைப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, கிணற்றில் விஷவாயுவை போக்க ‘ஸ்பிரே’ அடித்தனர். பின்னர் உயிர்பாதுகாப்பு கவசம் அணிந்தபடி கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், அங்கு மயங்கி கிடந்த 6 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கியதில் சந்தோஷ், அன்பழகன், காளிதாஸ் ஆகிய 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். சேகர், ராஜு, கோவிந்தசாமி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தோல்வி பயத்தால் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க சபாநாயகர் முயற்சி செய்வதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். #ThangaTamilSelvan
    சென்னை:

    நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை ரிபோர்ட் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்ல வருகிற 19-ந்தேதி நடைபெறும் 4 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பணம் பாதாளம் வரை பாய்ந்தாலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைப்பது சிரமம்தான்.

    அதனால்தான் ஆட்சியை தக்க வைப்பதற்காக குறுக்கு வழியில் முயல்கின்றனர். அதற்கு சபாநாயகர் துணை போகிறார்.



    நோட்டீசு அனுப்பப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச் செல்வன், இருவரும் இதற்கு முன்பு அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்தனர். சசிகலா தலைமையில் ஒரு அணியாக செயல்படுவதற்கு 20 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் கையெழுத்து போட்டு கொடுத்ததில் இவர்கள் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் இரு எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர். இப்போது இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் அ.ம.மு.க.வில் உறுப்பினராக இல்லை. அ.தி.மு.க.வில் தான் உள்ளனர். எனவே இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து இப்போது சபாநாயகர் சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய முடியாது.அதையும் மீறி தகுதிநீக்கம் செய்தால் 6 மாதத்தில் தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilSelvan
    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Realme



    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை ரியல்மி பிராண்டு கடந்த வாரம் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    அறிமுகத்தின் போது ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரியல்மி 3 ப்ரோ 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. ரேம், டூயல் பிரைமரி கேமராக்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. #Realme3Pro



    ரியல்மி பிராண்டு இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய டாப் எண்ட் ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டியூ-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் உள்ளிட்டை வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் ஹைப்பர்பூஸ்ட் 2.0, டர்போபூஸ்ட் மற்றும் ஃபிரேம்பூஸ்ட், மேம்பட்ட டச் கண்ட்ரோல் மற்றும் ஃபிரேம் ரேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.7, ஏ.ஐ. வசசதி, 64 எம்.பி. அல்ட்ரா ஹெச்.டி. மோட், 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 4-இன்-1 சூப்பர் பிக்சல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

    கிரேடியண்ட் பேக் கொண்டிருக்கும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், ரியல்மி லோகோ மற்றும் பின்புற கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி 3 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 616 GPU
    - 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓ.எஸ். 6.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 (பை)
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.6″ சோனி IMX519 1.22μm சென்சார், f/1.7, EIS
    - 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    - 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1/2.8″
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4045 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் கார்பன் கிரே, நைட்ரோ புளு மற்றும் லைட்னிங் பர்ப்பிள் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி 3 ப்ரோ 4 ஜி.பி. ரேம் விலை ரூ.13,999 என்றும் 6 ஜி.பி. ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.



    அறிமுக சலுகைகள்:

    - முதல் விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்துவோருக்கு ரூ.1000 தள்ளுபடி
    - அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி
    - ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,300 மதிப்புள்ள பலன்கள்
    - மைஜியோ செயலி மூலம் ரூ.299 ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.1800 வரை உடனடி கேஷ்பேக்
    - முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி பட்ஸ் இலவசம்
    - மொபிகுவிக் மூலம் பணம் செலுத்துவோருக்கு 15 சதவிகிதம் சூப்பர்கேஷ் கேஷ்பேக்
    ராகவா லாரன்ஸ் இயக்கி, அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி நடிப்பில் வெளியாகி இருக்கும் `காஞ்சனா 3' படத்தின் விமர்சனம். #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸின் அண்ணன் ஸ்ரீமன், தாத்தா - பாட்டியின் 60-ஆம் கல்யாணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். லாரன்ஸ், கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, இவர்களது மகள் என அனைவரும் கோயம்புத்தூரில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்கிறார்கள்.

    போகும் வழியில் மரம் ஒன்றில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றை லாரன்ஸ் பிடுங்கி விடுகிறார். அதன்பின்னர் அதில் இருக்கும் பேய், அவர்களுடன் சேர்ந்து வருகிறது.



    தாத்தா வீட்டிற்கு ராகவா லாரன்சின் மாமா பெண்களான வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகியோரும் வருகிறார்கள். இவர்கள் மூவரும் லாரன்ஸ் மீது காதலலுடன் அவரையே சுற்றி வருகிறார்கள். அவரும் மூன்று பேரிடமும் நெருக்கமாக பழகி வருகிறார்.

    பேய் அந்த வீட்டிற்கு வந்த பிறகு சில விரும்பத் தகாத விஷயங்கள் அங்கு நடக்க ஆரம்பிக்கிறது. மேலும் வீட்டில் இருக்கும் அனைவரும் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை உணர்கிறார்கள். இதையடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில் பூஜை போட செல்ல அங்குள்ள அகோரி ஒருவர், அவர்கள் வீட்டில் பிரச்சனை இருப்பதாக கூறி, சில சோதனைகளை செய்யச் சொல்கிறார். அவர்களும் அதனை செய்ய, வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பது உறுதியாகிறது.



    ஒரு கட்டத்தில் அந்த பேய் லாரன்சின் உடலை பயன்படுத்திக் கொள்ள, வீட்டில் உள்ள அனைவருக்கும் இது தெரிய வருகிறது. 
    கடைசியில், லாரன்ஸ் உடலில் பேயாய் வந்தவரின் முன்கதை என்ன? எதற்காக லாரன்ஸ் உடலில் புகுந்தது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே காமெடி கலந்த திகிலான மீதிக்கதை.

    இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ராகவா லாரன்ஸ் தனது வழக்கமான காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ஆக்‌ஷன், நடனம், மாஸ் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். காஞ்சனா முதல் பாகத்திற்கு பிறகு கோவை சரளா - தேவதர்ஷினி கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறது. கோவை சரளா தனது பாதி ஆங்கிலம் கலந்த பேச்சால் அனைவரையும் கவர்கிறார். அதேபோல் கணவன், மனைவியாக வரும் ஸ்ரீமன் - தேவதர்ஷினி கூட்டணியின் வழக்கமான காமெடியால் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.



    வேதிகா, ஓவியா, நிக்கி தம்போலி ஆகிய மூன்று நாயகிகளுக்கும் லாரன்சை காதலிப்பது மட்டுமே வேலை. கவர்ச்சியுடன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டெல்லி கணேஷ், அனுபமா குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்த, சூரி தான் வரும் காட்சிகளில் ஓரளவுக்கு சிரிக்க வைக்கிறார். சாய் தீனா, கபீர் துஹான் சிங் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ஒரு இயக்குநராக மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். காஞ்சனா முதல் பாகத்தை போலவே இந்த பாகத்தையும் இயக்கியிருப்பது பெரிய பலம். படத்தில் எந்த அளவுக்கு திகில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு காமெடியையும் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறார். காஞ்சனா 2-க்கு ஓரளவுக்கு மட்டுமே வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த படம் காஞ்சனா முதல் பாகத்தை நியாபகப்படுத்தும்படி உருவாகி இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனலாம்.



    திரைக்கதையின் வேகத்திற்கு படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் சென்டிமெண்ட் காட்சிகளும் போரடிக்க வைக்கிறது. மற்றபடி படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும்படியாக உருவாகி இருக்கிறது. படத்தின் முடிவில் காஞ்சனா 4-ஆம் வரும் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

    தமனின் பின்னணி இசையும், வெற்றியின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

    மொத்தத்தில் `காஞ்சனா 3' கலகல பேய் கதை. #Kanchana3 #Kanchana3Review #RaghavaLawrence #Vedhika #Oviya #NikkiTamboli #KovaiSarala

    ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Realme3Pro



    ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனினை ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 22 ஆம் தேதி ரியல்மி 3 ப்ரோ அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.

    இத்துடன் ஸ்மார்ட்போனிற்கான டீசர் ஒன்றையும் ரியல்மி வெளியிட்டுள்ளது. ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதேவ் சேத் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி 3 ப்ரோ இருக்கும் என தெரிவித்திருக்கிறார். 

    புதிய ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 25 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 



    முன்னதாக ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிய மூன்றே வாரங்களில் சுமார் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையானதாக ரியல்மி அறிவித்தது. 

    ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புகைப்படங்களை அழகாக்க க்ரோமா பூஸ்ட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன் 13 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டிஃபை அ்மசம் வழங்கப்பட்டுள்ளது.
    சென்னையில் 3 தொகுதிகளின் வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க 6 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். #Parliamentelection #LSPolls

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு அதிகாரி வீதம் மொத்தம் 6 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    வடசென்னை தொகுதியில் உள்ள திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சஞ்ஜீவ் குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் எண்:94999-56202. பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிக்கு விவேகானந்த் பவுரியர் செல் எண்:94999-56203.

    தென்சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளை அதிகாரி எம்.நவீன் (9499956205) கண்காணிக்கிறார்.

    விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிக்கு அதிகாரி குருபிரசாத் (9499956206) நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்திய சென்னை தொகுதியில் உள்ள வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி ஆர்.எம்.முஜும்தர் (94999-56209) செயல்படுகிறார்.

    துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி வி.என்.மங்கராஜு (94999-56208) நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த 6 அதிகாரிகளும் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை சென்னையில் தங்கி இருந்து அனைத்து தேர்தல் பணிகளையும் கண்காணித்து வருவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். #Parliamentelection #LSPolls

    புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ தொடர்ந்து ஹுவாய் நிறுவனம் இரண்டு புதிய ஃபிட்னஸ் சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Huawei



    ஹுவாய் நிறுவனம் வாட்ச் ஜி.டி. ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இரண்டு புதிய ஃபிட்னஸ் டிராக்கிங் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் பேண்ட் 3 மற்றும் ஹூவாய் பேண்ட் 3இ என இவை அழைக்கப்படுகின்றன. 

    ஹூவாய் பேண்ட் 3 மாடலில் 0.95 இன்ச் AMOLED தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மெட்டல் ஃபிரேம் ஒன்று டிஸ்ப்ளேவை சுற்றி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சிலிகான் ஸ்டிராப் கொண்டு அணிந்து கொள்ளளலாம்.

    இந்த பேண்ட் அப்லோ 3 சிப் மூலம் இயங்குகிறது. இதில் ட்ரூஸ்லீப் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது உறக்கத்தை கண்கானிப்பதோடு, இதனுடன் வழங்கப்பட்டிருக்கும் ஐ.ஆர். எனும் சென்சார் இதயதுடிப்பை டிராக் செய்யும். இந்த பேண்ட் அழைப்புகளுக்கான நோட்டிஃபிகேஷன்களை வழங்குகிறது.

    25 கிராம் எடை கொண்டிருக்கும் ஹூவாய் பேண்ட் 3 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இது 50 மீட்டர் வரையிலான தண்ணீரிலும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 



    ஹூவாய் பேண்ட் 3இ அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைக்கிறது. இதில் புதிதாக ஃபுட்வியர் மோட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒட்டப்பயிற்சியின் போது 97 சதவிகிதம் வரை சரியான விவரங்களை வழங்குகிறது. இதற்கென 6-ஆக்சிஸ் கைரோஸ்கோப் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 50 மீட்டர் வரையிலான வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ஹூவாய் பேண்ட் 3இ ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கும், ஸ்டான்ட்பை மோடில் 21 நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதன் பின் வெளியான இயங்குதளங்களிலும், ஐ.ஓ.எஸ். 9.0 மற்றும் அதன்பின் வெளியான பதிப்புகளை கொண்ட சாதனங்களில் சப்போர்ட் செய்யும்.

    இந்தியாவில் ஹூவாய் பேண்ட் 3 விலை ரூ.4,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி முதல் அமேசான் தளத்தில் ஹூவாய் பேண்ட் 3 கிடைக்கிறது. இது அப்சிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. ஹூவாய் பேண்ட் 3இ மாடலின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பின்க் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது.
    ஆத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது இலுப்ப நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 60), இவருடைய தாயார் மூக்காயி (80).

    ராமுவிற்கு சங்கீதா என்ற மகளும் சபாபதி, மாரிமுத்து என்ற 2 மகன்களும் இருந்தனர். இதில் சங்கீதா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். சபாபதி ராணுவ வீரராக உள்ளார். மாரிமுத்து சேலம் பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 5-ந் தேதி ராமுவின் தாய் மூக்காயி வயது மூப்பின் காரணமாக இறந்தார். அவர் இறந்த மறுநாளே ராமும் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதனால் குடும்பமே சோகத்தில் வாடியது. போலீஸ்காரராக பணியாற்றி வந்த மாரிமுத்து தனது பாட்டி இறப்பிற்கு வந்தநிலையில் மறுநாளே தந்தையும் இறந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடந்த ஒரு வார காலமாக பணி விடுப்பு பெற்று சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் மாரிமுத்து நேற்றிரவு தனது நண்பர்களை பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் தெடாவூர் அருகே சென்றபோது நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்ததால் மாரிமுத்து சாலையோரம் விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது தொடர்பாக கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கெங்கவல்லி போலீசார் மாரிமுத்துவின் உடலை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×