search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 3 தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க 6 அதிகாரிகள்
    X

    சென்னையில் 3 தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க 6 அதிகாரிகள்

    சென்னையில் 3 தொகுதிகளின் வேட்பாளர்களின் தேர்தல் செலவை கண்காணிக்க 6 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். #Parliamentelection #LSPolls

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு அதிகாரி வீதம் மொத்தம் 6 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

    வடசென்னை தொகுதியில் உள்ள திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு சஞ்ஜீவ் குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது செல்போன் எண்:94999-56202. பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் தொகுதிக்கு விவேகானந்த் பவுரியர் செல் எண்:94999-56203.

    தென்சென்னை தொகுதியில் உள்ள சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளை அதிகாரி எம்.நவீன் (9499956205) கண்காணிக்கிறார்.

    விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர் தொகுதிக்கு அதிகாரி குருபிரசாத் (9499956206) நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்திய சென்னை தொகுதியில் உள்ள வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி ஆர்.எம்.முஜும்தர் (94999-56209) செயல்படுகிறார்.

    துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு அதிகாரி வி.என்.மங்கராஜு (94999-56208) நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த 6 அதிகாரிகளும் 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் செலவின பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை சென்னையில் தங்கி இருந்து அனைத்து தேர்தல் பணிகளையும் கண்காணித்து வருவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். #Parliamentelection #LSPolls

    Next Story
    ×