search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்பருமன்"

    • கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
    • சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.

    இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

    மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.

    கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.

    ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

     கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

     நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.

    இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

    • உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது.
    • உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கிறோம்.

    தற்போதைய தொழில்நுட்ப மயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உலகம் முழுவதிலுமே தற்போது தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். இது உடல் பருமனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடற் கொழுப்பு என்று கூறுகிறோம்.

    உயிரை பறிக்கும் உடல்பருமன்

    2016-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கைல் 1980-ம் ஆண்டுக்கு பின்னர் உடல் பருமன் உள்ளோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் உடல் நிறை குறைவினால் ஏற்படும் மரணங்களை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

    உடல் பருமன் என்பது தடுக்கப்பட வேண்டிய நிலை எனவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் 30 சதவீதமான மக்கள் குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் சிறுகுழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

    முந்தைய காலங்களில் குழந்தைகள், இளைஞர்கள் மாலை நேரங்களில் வீதிகளில் விளையாடுவதை காணமுடிந்தது. ஆனால் இன்று அத்தகைய நிலை மாறி விளையாடுவதும் கூட செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் என்ற அவல நிலை ஏற்பட்டுவிட்டது.

    மேலும் அதிக உடல் எடையானது மனிதர்களில் பல்வேறு மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டுவலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பக புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடல் இறக்கம், மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் உடல் பருமன் அதிகரிப்பால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் என்பது நம்மில் பலரும் அறியாத விசயம்.

    மிகவும் சிலருக்குதான் அது மரபு வழியாகவும் சில மருத்துவ காரணங்களினாலும் சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

    மேலும் போதிய தூக்கம் இன்மை, நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள், அதிக புகைப்பழக்கம், தாமதமான குழந்தை பேறு போன்ற காரணங்களும் உடல் பருமனுக்கு வழிவங்குகின்றது.

    உலகளாவிய அளவில் தடுக்கக் கூடிய நோயினால் மனிதர்கள் இறப்பதில் உடல் பருமன் முதன்மை வகிப்பது மிகவும் வருந்தத்தக்கது. உடல் பருமன் என்பது உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் மனிதர்களை பாதிப்படைய செய்கின்றது.

    தெருவுக்கு மூன்று ஜிம்கள் முளைப்பதற்கும் உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. உடல் பருமனை காட்டுப்படுத்த அனைவரும் ஜிம்மின் உதவியை நாட ஆரம்பித்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் நாம் உடல் பருமன் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான்.

    அழகும் ஆரோக்கியமும் எப்போதும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஆரோக்கியம் இல்லாத அழகு அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போன்றது. உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எப்போதும் ஆரோக்கியமான முறைகளையும், உணவுகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இப்போதெல்லாம் மனிதர்களுக்கு எதிலும் பொறுமை என்பதே இருப்பதில்லை. உடல் பருமனை குறைக்கவும் உடனடி தீர்வையே நாடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. உடனடியாக கிடைக்கும் தீர்வு நிலையானதாக இருக்காது.

    உடல் பருமனை குறைக்க நாள் முழுவதும் ஜிம்மில் கிடப்பதும், மெடிக்களில் ஆலோசனை இன்றி உடலை குறைக்க மருந்துக்களையும், பானங்களையும் உபயோகித்து குறைப்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இதன் விளைவுகள் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் என்பது குறித்து பலரும் அக்கறை செலுத்துவதில்லை. உடல் பருமன் உடனடியாக தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம் ஆகும்.

    பெண்களுக்கு 20 முதல் 25 சதவீதமும், ஆண்களுக்கு 12 முதல் 15 சதவீதமும் உடலில் கொழுப்பு காணப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் மகப்பேறுக்காக மார்பகம், கூபகம், தொடை பகுதிகளில் 12 சதவீதம் கூடுதலாக அத்தியாவசிய கொழுப்பு காணப்படுகின்றது. ஆண்களுக்கு இது 3 சதவீதம் தான் காணப்படும். உடல் பருமன் தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பத்தால் மட்டுமே உருவாகின்றது. கூடுதல் உணவு, குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பரம்பரை காரணங்கள் போன்ற காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கிறது.

    குறைவான கலோரியில் நிறைவான நார்சத்து கொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் ஜங்க்புட் வகைகளை நாடுவதை உடல் பருமன் உடையவர்கள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

    மேலும் தொடர் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உடல் பருமனை எளிதாக விரட்டியடிக்க முடியும்.

    ×