search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் அணி"

    • நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.
    • இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

      நாமக்கல்:

    சேலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு நடக்கிறது.

    பிரமாண்ட பந்தல்

    இதையொட்டி நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர்அணி செயல்வீரர்கள் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது.

    இதையொட்டி அங்கு பிரம்மாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பந்தலின் முகப்பு தோற்றம் அன்பகம் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    பந்தலில் 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இளைஞர் அணியினர் பங்கேற்கும் வகையில் தனித்தனியாக இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பந்தல் முன்பு வாழை மரங்கள், மலர்கள் உள்ளிட்டவற்றால் அலங்கார தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    உற்சாக வரவேற்பு

    இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் வெள்ளை சீருடையில் பங்கேற்க உள்ளனர். ஈரோட்டில் இருந்து கார் மூலம் வரும் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    கூட்டத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணி அளவில் அவர் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்நோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்கி மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதேபோல் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள போதமலைக்கு, சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை சாலை வசதி செய்யப்படவில்லை. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது ரூ.140 கோடி மதிப்பில் சாலை அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்து, நிதி ஒதுக்கீடும் செய்து உள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் செல்லும் வழியில், வெண்ணந்தூர் அருகே தேங்கல்பாளையம் பிரிவு சாலையில் மலைவாழ் மக்களின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பலத்த பாதுகாப்பு

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி பொம்மைக்குட்டை மேடு மற்றும் அவர் செல்லும் வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இப்பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக பிற்பகல் 3 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    பின்னர் அங்கு நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ள பந்தலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜேஸ்குமார் எம்.பி. நாமக்கல்லுக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
    • நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்–போது அவர் கூறியதாவது:-

    வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில், இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்கும் இளைஞரணி பட்டியல் இறுதி செய்யப்பட்டதில், தமிழகத்திலேயே அதிக அளவில் பெயர் கொடுத்த முதல் 2 மாவட்டங்களில் ஒன்று நாமக்கல், மற்றொன்று சேலம்.

    இதையொட்டி வருகிற 18-ந் தேதி காலையில் சேலத்தில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டம் வருகை தருகிறார். அன்று மாலை 4 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார். இதில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது. இந்த திட்டங்களுக்கு விதித்திட்டவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.

    மேலும் எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், கபிலர்மலை, நாமக்கல் ஒன்றியங்களை இணைத்து ரூ.750 கோடி மதிப்–பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். நாமக்கல் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது என்றும், செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இளைஞர்களை பங்கேற்க செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார்

    திருவட்டார், 

    பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட வேர்கிளம்பியில் கன்னியா குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலக திறப்பு விழா இன்று நடந்தது.

    விழாவிற்கு இளைஞர் அணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் லிஜீஸ்ஜீவன் ஜெயச்சந்திரபூபதி, ஷிஜூ , ஆல்வின்வினோ, ஜெபர்சன், பைஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த கணினி வாயிலாக நூலக செயல்பாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ், மாநில துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலாஆல்பன், மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன், குழித்துறை நகராட்சி தலைவர் பொன், ஆசைதம்பி, திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் ஜாண்சன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் டி.பி.ராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோன்மணி, நல்லூர் பேரூராட்சி தலைவர் வளர்மதி கிறிஸ்டோபர், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள்சோபன், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் அங்குதிரண்டு இருந்த தொண்டர்களிடம் பூச்செண்டுகளை பெற்றுக்கொண்டார். தொண்டர்கள் ஏராள மானோர் அவருக்கு புத்த கங்களை வழங்கினார்கள்.அப்போது தொண்டர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்தனர்.

    • முகாமிற்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் பனவடலிசத்திரத்தில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், துணை அமைப்பாளர்கள் சரவணன், ராயல்கார்த்தி, ராஜ், ராஜராஜன், மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து ஆலோசனைகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் பரமையா, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், தங்கதுரை

    ஒன்றிய பொருளாளர் முத்துப்பாண்டியன், விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், ஆதி திராவிடர் அணி ராஜ் என்ற கருப்பசாமி, தொண்டரணி கிருஷ்ணசாமி, கிளை செயலாளர்கள் காசிப்பாண்டியன், முருகன், மூக்கையாப்பாண்டியன், பரமையா, முத்துராமலிங்கம், துரை, நவமணி பாபு, அந்தோணி, பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அழகியநம்பி, ராஜதுரை, சிவா, கோட்டப்பாண்டி, சிங்கத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் 12-ந் தேதி வெளியிட்டோம்.
    • விண்ணப்பித்த 4,158 பேர்களில் 609 பேர் தேர்வாகி இளைஞர் அணியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணிக்கு மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நேற்று புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.

    இந்த நேரத்தில் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த டிசம்பர் 12-ந் தேதி வெளியிட்டோம்.

    72 கழக மாவட்டங்களில் இருந்தும் 4,158 விண்ணப்பங்கள் குவிந்தன. விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் அன்பகத்தில் இருந்து அழைத்து பேசி தகவல்களை பெற்று விண்ணப்பங்களை ஆவணமாக மாற்றினோம். இதைத் தொடர்ந்து பல நாட்களாக நேர்காணல் நடத்தினோம்.

    யாரைத் தேர்வு செய்வது யாரை விடுவது என எண்ணும் வகையில் நேர்காணல் அமைந்தது. தகுதியும், கழக உணர்வும் நிறைந்த பல இளைஞர்களை நேர்காணலில் காண முடிந்தது.

    தங்களின் பணிகளை எல்லாம் தொகுத்து அளித்த ஆல்பங்களையும், நிர்வாகிகளின் மினிட் புத்தகங்களையும் பார்க்கும் போது எனக்கு பெரும் பொறுப்பு இருப்பதை உணர்த்தியது.

    அமைப்பு ரீதியாக இளைஞர் அணியை நம்முடைய தலைவர் எந்த அளவுக்கு வலுப்படுத்தி இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

    அந்த பணிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நேர் காணலை தொடர்ந்தோம்.

    நேர்காணலை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், அவர்களின் களப்பணிகளையும் துணைச் செயலாளர்களின் உதவியுடன் கேட்டறிந்து விவாதித்து ஒவ்வொரு முடிவையும் எடுத்து உள்ளோம்.

    இதில் அனுபவம் வாய்ந்த சில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அதே பொறுப்புகளில் தொடர்ந்து பணியாற்ற தலைவர் வாய்ப்பு வழங்கி உள்ளார்.

    விண்ணப்பித்த 4,158 பேர்களில் 609 பேர் தேர்வாகி இளைஞர் அணியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம். உங்களின் கழகப்பணி உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படும்.

    நாம் அனைவரும் இணைந்து கழக பணியை மேற்கொள்வோம். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

    இளைஞர் அணியை இயக்கத்தின் 'புது ரத்தம்' என்று கலைஞர் சொல்வார்.

    இன்று புத்துணர்ச்சியோடு இயக்கப் பணியை தொடங்கி உள்ள நீங்கள் அது சற்றும் குறைந்திடாமல் பணிகளை தொடர்ந்திட வேண்டும்.

    இந்திய ஒன்றியம் மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசிஸ்டுகளை விரட்டுவதற்கு பெரும் முன்னெடுப்பாக நம் தலைவர் இந்திய ஒன்றியம் முழுவதிலும் உள்ள தோழமை சக்திகளை ஒருங்கிணைக்கிறார்.

    அதற்கு தலைவரின் கரங்களை வலுப்படுத்தும் பெரும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. நாற்பதையும் வென்று கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பல்லடம் நகராட்சி 2வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான செ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
    • தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், பல்லடம் நகராட்சி 2வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான செ.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெற்கு பாளையம், நாரணாபுரம், சேடபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ராஜேந்திர குமார், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன், மார்க்கெட் தங்கவேல், கவுஸ் பாஷா, தினேஷ் குமார், சிலம்பரசன், கதிரேஷ்குமார், தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    சென்னை:

    இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    • பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கி பேசினார். இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியம், பொருளாளர் நட்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதன் பின்னர் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநில இளைஞரணி சார்பில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளோம். பா.ஜ நிர்வாகிகள் வீடுகள், நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகமான வங்கி கடன் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் பெருகும். ஆர்.எஸ்.எஸ். பேரணி என்பது எப்போதும் நடந்து வரக்கூடிய ஒரு நிகழ்வாகும். இதற்கு முன்பெல்லாம் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்க தேவையில்லை. ஆனால் தற்போது சிறிய போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாததால், நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கும் நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பாக, இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோச னைக் கூட்டம் தி.மு.க. தலைவரும்,  முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தி. மு. க. இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில், ராமநாதபுரம் தனியார் கூட்ட அரங்கில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துரா மலிங்கம் தலைமையில் நடந்தது. 

    ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு வரவேற்றார். ராமநாதபுரம் தெற்குநகர் பொறுப்பாளர் பிரவீன் தங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சம்பத் ராஜா, கார்த்திகேயன், குமரகுரு, தனுஷ்கோடி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    ஆலோசனை கூட்டத்தில் கீழக்கரை நகர் இளைஞரணி அமைப்பாளர் ஹமீது சுல்தான் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    நாளை (3-ந்தேதி) கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்தும், தி.மு.க. இளைஞரணியில் அதிகமான  உறுப்பினர்களை சோ்ப்பது குறித்தும் ஆலோசி க்கப்பட்டது. 

    திராவிட மாடல், கருத்தரங்கு பயிற்சி பாசறை யை இளைஞரணியினர் தொகுதி தோறும் சிறப்பாக நடத்துவது, ஜூன் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் வருகையை ஒட்டி இளைஞரணி சார்பில் திரளாக கலந்து கொண்டு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

    கூட்டத்திற்கான ஏற்பாடு களை ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு செய்திருந்தார்.
    ×