search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனவடலிசத்திரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம்- ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    உறுப்பினர் சேர்க்கை முகாமை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியபோது எடுத்த படம்.

    பனவடலிசத்திரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம்- ராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • முகாமிற்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் பனவடலிசத்திரத்தில் இல்லம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் முகாம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பெரியதுரை தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ், துணை அமைப்பாளர்கள் சரவணன், ராயல்கார்த்தி, ராஜ், ராஜராஜன், மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து ஆலோசனைகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் பரமையா, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகப்பாண்டியன், செந்தூர்பாண்டியன், தங்கதுரை

    ஒன்றிய பொருளாளர் முத்துப்பாண்டியன், விளையாட்டு மேம்பாட்டு அணி மகாராஜன், மாவட்ட சிறுபான்மையினர் நலக்குழு தலைவர் மரியலூயிஸ் பாண்டியன், ஆதி திராவிடர் அணி ராஜ் என்ற கருப்பசாமி, தொண்டரணி கிருஷ்ணசாமி, கிளை செயலாளர்கள் காசிப்பாண்டியன், முருகன், மூக்கையாப்பாண்டியன், பரமையா, முத்துராமலிங்கம், துரை, நவமணி பாபு, அந்தோணி, பொன்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அழகியநம்பி, ராஜதுரை, சிவா, கோட்டப்பாண்டி, சிங்கத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×