search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் 21-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்
    X

    பந்தல் அமைக்கும் பணியை ராஜேஸ்குமார் எம்.பி. பார்வையிட்டார்.

    நாமக்கல்லில் 21-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்

    • நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 21-ந் தேதி நாமக்கல் பொம்மைக்குட்டை மேடு பகுதியில் நடக்கிறது. இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இப்பணிகளை நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    வருகிற 21-ந் தேதி நாமக்கல் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். முன்னதாக பிற்பகல் 3 மணி அளவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

    பின்னர் அங்கு நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ள பந்தலில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜேஸ்குமார் எம்.பி. நாமக்கல்லுக்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், சங்கர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×