search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை ஆயுள் தண்டனை"

    • கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2015-ம் ஆண்டு முருகன் என்பவர் பணிபுரிந்தார். தற்போது அவருக்கு 62 வயதாகிறது.

    அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு படித்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் பாட்டி சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் அப்போது சிவகங்கையில் இருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே (தற்போதைய புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு) விசாரணை நடத்தி, தலைமையாசிரியர் முருகன் மீது போக்சோ சட்டம், தீண்டாமை ஒழிப்புச்சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார்.

    இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது, தீண்டாமை ஆகிய குற்றங்களுக்கு என தனியாக 47 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.69 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட 6 மாணவிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடாக ரூ.29 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    • வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
    • அரசு தரப்பில் 28 முக்கிய ஆவணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரிங்கோட்டுக்கரை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷ்(வயது25). இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பின் நிர்வாகி யான இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் குட்டிக்காடு பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

    காரில் பயங்கர ஆயதங்களுடன் வந்த கும்பல் ஆதர்சை படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிஜில்(வயது27), பிரஜில்(28), மனு(27), ஷனில்(27), ஷிஹாப்(30), பிரஷ்னோவ்(32) ஆகிய 6பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை திருச்சூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் மொத்தம் 46 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அரசு தரப்பில் 28 முக்கிய ஆவ ணங்கள் உள்பட 109 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

    இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட நிஜில், பிரஜில், மனு, ஷனில், ஷிஹாப், பிரஷ்னோவ் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். அவர்கள் 6 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சாலிஹ் தீர்ப்பு கூறினார்.

    அபராத தொகையை கட்டத்தவறும் பட்சத்தில் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுப விக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

    • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா மோட்டூர் கிராமம் நயம்பாடி பகுதியை சேர்ந்தவர் மனுநீதி (வயது 55), தொழிலாளி.

    இவர், கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் வாய்பேச முடியாத 13 வயது சிறுமியை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சிறுமியின் உறவினர்கள் வந்தனர். இதை கண்ட மனுநீதி அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் உறவினர் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மனுநீதியை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இரட்டை ஆயுள் தண்டனை

    இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மனுநீதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    இந்த இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து மனுநீதியை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

    • கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த 7-4-2018 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
    • கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிவசக்தி நகர் வேப்பங்காடு தோட்டம் அருகில் உள்ள முள்காட்டில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன் (வயது 22) என்பவர் கடந்த 7-4-2018 அன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த முருகன் (33), அவரது உறவினர் பெருமாள் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், பெருமாள் ஆகிய 2 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த கே.வி.ஆர்.நகர் உதவி கமிஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் பத்ரா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் பாராட்டினார். 

    ×