search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா சிறப்பு அந்தஸ்து"

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #RamnathKovind
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
     
    டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.



    தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

    இந்நிலையில், ஏற்கனவே அறிவித்திருந்தவாறு இன்று பிற்பகல் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.  #ChandrababuNaidu #Andhraspecialstatus #President #RamnathKovind
     
    ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று டெல்லியில் நடத்திய 12 மணிநேர உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். 
     
    டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரெயென், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், கடந்த 12 மணி நேரமாக கடைபிடித்து வந்த தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus
    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் டெல்லி ஆந்திரா பவன் அருகே ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Differentlyabledman #AndhraPradeshBhawan
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 
     
    டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    முன்னதாக, இன்று காலை 7 மணியளவில் ஆந்திர பவனில் இருந்து டெல்லி போலீசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. ஆந்திர பவன் அருகே நடைபாதையில் அடையாளம் தெரியாத ஒருவர் இறந்துக்கிடப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    நடைபாதையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு இறந்து கிடந்தவரின் பிரேதத்தை கைப்பற்றிய போலீசார், பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தெலுங்கில் எழுதி வைத்திருந்த தற்கொலை குறித்த கடிதத்தை கைப்பற்ற்றி, வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கின்தலி கிராமத்தை சேர்ந்த டவலா அர்ஜுன் ராவ் என்னும் அந்த மாற்றுத்திறனாளி, டெல்லி ஆந்திரா பவனில் சந்திரபாபு நாயுடு இன்று மத்திய அரசை கண்டித்து நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளதாக தெரிகிறது.

    பண நெருக்கடி தொடர்பாக ஏற்பட்ட மனக்குழப்பத்தால் டவலா அர்ஜுன் ராவ் விஷம் குடித்து, இந்த தற்கொலை விபரீத முடிவை தேர்ந்தெடுத்ததாக அவரது தற்கொலை கடிதம் மூலம் தெரியவந்துள்ளது. #Differentlyabledman #AndhraPradeshBhawan
    ஆந்திர மக்களுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை தொழிலதிபர் அம்பானிக்கு பிரதமர் மோடி கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #ChandrababuNaidu #AnilAmbani #RahulGandhi
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

    டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் நடைபெற்றுவரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அவ்வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரெயென், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவரது கோரிக்கை  வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.



    அப்போது உண்ணாவிரதப் பந்தலில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்படுவதற்காக பாராளுமன்றத்தில் முன்னர் விவாதம் நடைபெற்றபோதே ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    எனவே, எங்கள் அரசு அளித்த வாக்குறுதியை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தும் சந்திரபாபு நாயுடுவுக்கு எங்களது முழுமையான ஆதரவு உண்டு’ என்று தெரிவித்தார்.

    பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் ஒரு பொய்யைப்பேசி வருகிறார். ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறிமாறி செல்லும் அவர் பொய்களை மாற்றி மாற்றிப் பேசுகிறார். ஆந்திராவுக்கு போகும்போது சிறப்பு அந்தஸ்து பற்றி பொய் பேசுகிறார். அவரது நம்பகத்தன்மை முற்றிலுமாக அழிந்துப்போய் விட்டது.

    ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை தொழிலதிபர் அம்பானிக்கு பிரதமர் மோடி கொடுத்து விட்டார்’ என குறிப்பிட்டுள்ளார். #ChandrababuNaidu #Modistole #AnilAmbani #RahulGandhi

    காங்கிரஸ் முன்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதல் வேலையாக ஆந்திராவுக்கு நிச்சயமாக சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rahulassures #SCStoAP
    ஐதராபாத்:

    ஆந்திராவில் இருந்து சில பகுதிகளை பிரித்து தெலுங்கானா என்னும் தனி மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு தீர்மானித்தது. இந்த நடவடிக்கையால் ஆந்திர மாநிலத்துக்கு ஏற்படும் பொருளாதார  இழப்புகளை சமாளிக்கும் வகையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்குறுதி அளித்திருந்தது.

    தெலுங்கானா பிரிவினைக்கு பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வி அடைந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

    முந்தைய அரசு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என அம்மாநில முதல் மந்திரி முன்வைத்த பல கோரிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நிராகரித்து விட்டது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆந்திர மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது போராட்டத்தில் குதித்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். எனினும், மத்திய அரசு இந்த கோரிக்கைக்கு இன்னும் செவி சாய்க்கவில்லை.

    இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஆந்திராவுக்கு நிச்சயமாக சிறப்பு அந்தஸ்து வழங்குவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.



    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் இன்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    சீனாவில் தினந்தோறும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ராகுல், இந்தியாவில் 450 பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாக தெரிவித்தார்.

    ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்பது இம்மாநில மக்களின் அடிப்படை உரிமை என குறிப்பிட்டார். ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தை பிரிக்கும்போது,பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தான் எங்கள் முதல் வேலையாக இருக்கும் என அவர் உறுதி அளித்தார். #Rahulassures #SCStoAP 
    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்குதேசம் கட்சி எம்பி சிவப்பிரசாத் ஹிட்லர் வேடமணிந்து பாராளுமன்ற வளாகத்தில் போராடினார். #TDPProtest #NaramalliSivaprasad #AndhraSpecialStatus
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றாத நிலையில், ஆந்திராவின் ஆளுங்கட்சியான தெலுங்குதேசம் கட்சி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது. அத்துடன் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம் கட்சி எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

    மேலும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக நாரமள்ளி சிவப்பிரசாத் எம்பி, பல்வேறு வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாரதமுனி, பள்ளி மாணவன் உள்ளிட்ட பல்வேறு கெட்அப்களில் வந்து போராடிய சிவப்பிரசாத் இன்று ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் போன்று வேடமணிந்து பாராளுமன்றத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.


    மத்திய அரசு சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டும் வகையில் அவர் இன்று ஹிட்லர் வேடம் அணிந்து வந்துள்ளார்.

    சிவப்பிரசாத் எம்பி, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் 20-க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #TDPProtest #NaramalliSivaprasad #AndhraSpecialStatus
    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆந்திராவில் இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. #APSpecialStatus #YSRCongressbandh #JaganMohanReddy
    விஜயவாடா:

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி ஆளும் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. இதையடுத்து தெலுங்குதேசம் கட்சி சார்பில் மத்திய அரசு மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லாததால் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

    இந்நிலையில், ஆந்திராவுக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், இந்த விஷயத்தில் மக்களை ஏமாற்றிய கட்சிகளைக் கண்டித்தும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



    விஜயவாடாவில் நேரு பஸ் நிலையத்திற்கு வெளியே ஏராளமான தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சனம் செய்தனர். சிறப்பு அந்தஸ்து பெறுவதற்காக முதல்வர் நாயுடு எப்படி பணியாற்றுகிறார்? என்பதை இந்த கைது நடவடிக்கை காட்டுகிறது என்று அவர்கள் கூறினர். பிரகாசம் மாவட்டத்தின் ஓங்கோல் நகரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



    ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  #APSpecialStatus  #YSRCongressbandh #JaganMohanReddy
    ×