search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ap cm"

    ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி இன்று டெல்லியில் நடத்திய 12 மணிநேர உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். 
     
    டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரெயென், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவரது கோரிக்கை வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், கடந்த 12 மணி நேரமாக கடைபிடித்து வந்த தனது உண்ணாவிரதத்தை இரவு 8 மணியளவில் சந்திரபாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அவருக்கு பழச்சாறு அளித்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார். #APCM #ChandrababuNaidufast #Andhraspecialstatus
    குஜராத் முதல் மந்திரியாக தனது சொந்த மாநிலத்துக்கே எதுவுமே செய்யாத வெற்று மனிதர் பிரதமர் மோடி என்று ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #hollowman #APCM
    அமராவதி:

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் நரேந்திர மோடி மீது இன்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

    ‘தெலுங்கானா மாநில பிரிவினைக்கு பின்னர் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மோடி நிறைவேற்ற தவறி விட்டார். குஜராத் முதல் மந்திரியாக 12 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது தனது சொந்த மாநிலத்துக்கே அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால், பல பெரிய காரியங்களை செய்துவிட்டதாக எல்லோரையும் நம்ப வைத்தார்.

    நாங்கள் அனைவரும்கூட இதை நம்பினோம். இந்த ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நம்பினார்கள், ஆனால், கடைசியில் அது மோசடி என்று தெரியவந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் குஜராத்தை நாங்கள் பின்னுக்குத்தள்ளி முன்னேறி சென்று விடுவோம் என்பதால் மோடி எங்களை வஞ்சித்து விட்டார்.

    அன்று தன்னைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை என்று அவர் பிரசாரம் செய்து வந்தார். இதையும் நாங்கள் நம்பினோம். ஆனால், அவர் எதற்கும் தகுதி இல்லாதவர், வெற்று மனிதர் என்பது இன்று தெரிந்து விட்டது.

    பணபலம், ஆள்பலத்தை பயன்படுத்தி அனைவரையும் பயமுறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அவர் நினைக்கிறார்’ என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார். #PMModi #hollowman #APCM
    ×