search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர் சஸ்பெண்டு"

    • அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று விடுதி அறையில் தங்க வைத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் சிறுமிகள் என்பதால் வழக்கு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருவக்கரை பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருவக்கரை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 350 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை மீட்டு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தார்.

    அப்போது அந்த மாணவி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகத்துக்குள் செல்போனை மறைத்து வைத்து ஆபாச வீடியோவை பார்க்குமாறு திருவக்கரை பள்ளி தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் (வயது 38) வலியுறுத்தியதாகவும், தொடர்ந்து இதுபோல் தொல்லை அளித்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மேலும் சில மாணவிகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய், அவரது கணவர் மற்றும் உறவினரிடம் தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நேற்று பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இந்த தகவல் பள்ளியில் பரவியதையடுத்து தமிழ் ஆசிரியரின் லீலைகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மேலும் சிலர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

    இதை கேட்டு ஆவேசமடைந்த மாணவிகளின் உறவினர்கள், பள்ளியில் இருந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ஆசிரியர் மகேஸ்வரன், விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த ஆண்டுதான் திருவக்கரை பள்ளியில் பணிக்கு சேர்ந்ததும் தெரியவந்தது. இவரது மனைவியும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.

    பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச்சென்று, மாணவிகளுக்கு மகேஸ்வரன் பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மகேஸ்வரன் மீது 7 மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் சிறுமிகள் என்பதால் இந்த வழக்கு கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. கோட்டக்குப்பம் துணை போலீஸ்சூப்பிரண்டு சுனில் தலைமையிலான போலீசார் ஆசிரியர் மகேஸ்வரனை போக்சோவில் கைது செய்தனர்.

    இந்த நிலையில் போக்சோவில் கைது செய்யப்பட்ட தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவிட்டுள்ளார். மாணவிகளுக்கு தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருவக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
    • குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், குழந்தைகள் அரசர உதவி அலகின் பணியாளர் ஸ்டேல்லா மேரி ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போதும் 3, 4-ம் வகுப்புகளில் பயிலும் 2 மாணவிகள் தங்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் கருணாகரன் தங்களிடம் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள்.

    அவர்களை தனியாக அழைத்து சம்பவம் குறித்து கேட்டுக்கொண்டிருந்த போது, 3-ம் வகுப்பில் பயிலும் மேலும் 7 மாணவிகளும், 4-ம் வகுப்பில் பயிலும் மேலும் 4 மாணவிகளும் தங்களிடமும் ஆசிரியர் கருணாகரன் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கருணாகரனிடம் விசாரணை நடத்தியபோது பள்ளி மாணவிகளுக்கு 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவிராமன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கருணாகரன் (வயது 32) என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான ஆசிரியர் கருணாகரனை, விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.
    • கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நெல்லை மாவட்டம் கூடங்குளம் மாடித்தோட்டம் பகுதியை சேர்ந்த பச்சப்பூராஜா (41) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர். இது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. புகாரில் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

    ஆசிரியர் பச்சப்பூராஜா மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் ஆசிரியர் பச்சப்பூராஜாவை ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பச்சப்பூராஜாவை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி என்பவர் வேலை பார்த்து வந்தார்.
    • காயம் அடைந்த 3 மாணவர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    நேற்று அந்த பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் 3 மாணவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் காயங்களுடன் சிகிச்சையில் சேர்ந்தனர். அவர்கள் தங்களை பள்ளி ஆசிரியர் தாக்கியதாக புகார் கூறினர். அந்த மாணவர்களுக்கு கண் உள்ளிட்ட பாகங்களில் காயங்கள் இருந்தன.

    இதுதொடர்பாக பாளை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் மாணவர் ஒருவரை கம்பால் அடிக்கும் காட்சிகள் வெளியாகின. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தியதில், பாளை அரசு உதவி பெறும் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்தது.

    அந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக தற்காலிகமாக பாளை கோரிப்பள்ளத்தை சேர்ந்த கிங்ஸ்லி(வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் நடந்த மதிப்பீட்டு தேர்வில் பர்கிட் மாநகரை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் மதிப்பெண் குறைவாக எடுத்துள்ளார். அதனால் ஆங்கில ஆசிரியர் அந்த மாணவரை அடித்துள்ளார்.

    இந்த காட்சிகளை அதே வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து பரவ விட்டனர். இந்த தகவல் ஆசிரியர் கிங்ஸ்லிக்கு தெரியவரவே, வீடியோ எடுத்த 2 மாணவர்களை தனியாக அழைத்து சென்று அடித்துள்ளார். இதனால் காயம் அடைந்த 3 மாண வர்களும் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பாளை போலீசார், ஆசிரியர் கிங்ஸ்லி மீது இந்திய தண்டனை சட்டம் 294(பி), 323 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர் கிங்ஸ்லியை 'சஸ்பெண்டு' செய்து பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் உத்தரவிட்டார்.

    • ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
    • மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தேர்வுக்காக 116 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது.

    தேர்வினை கண்காணிக்க தேர்வு மையத்திற்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தக்கலை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் வேலவன் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர் வேலவன் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் வேலவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
    • குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வை எழுதி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தேர்வுக்காக 116 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடக்கிறது.

    தேர்வினை கண் காணிக்க தேர்வு மையத் திற்கு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தக்கலை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியிர் வேலவன் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தொட்டு பேசி சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர் வேலவன் கைது செய்யப்பட்டார். ஆசிரியர் வேலவன் மீதான புகார் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆசிரியர் வேலவன் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார். மாணவியிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • ஆசிரியரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வர தயங்குகின்றனர்.

    கோவை:

    கோவை அடுத்த மத்தவராயபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பால்குழந்தை ராஜ்(வயது54) என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மாணவிகளிடம் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் காருண்யா போலீஸ் நிலையம், கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், காருண்யா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் பால்குழந்தைராஜ் என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் பள்ளி மாணவிகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர் ஏற்கனவே இதுபோன்ற ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதன் காரணமாக இங்கிருந்து வால்பாறையில் உள்ள பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    இதனை தொடர்ந்து தண்டனை காலம் முடிந்து இதே பள்ளிக்கு மாறுதலாகி, கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இருப்பினும் பலமுறை மாணவிகளிடம் தொடர்ந்து தவறாக நடக்கிறார். இவரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வர தயங்குகின்றனர். எனவே அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு, இயற்பியல் ஆசிரியர் பால்குழந்தை ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • பள்ளியில் நடராஜன் என்பவர் முதுநிலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
    • இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டியில் அரசு ஆண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் நடராஜன் என்பவர் முதுநிலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்று மாணவர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது நடராஜன் சேலத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. உள்பட போட்டி தேர்வுகளுக்கான அகாடமி நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனால் சரியாக பள்ளிக்கு அவர் வராத நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

    ஆனாலும் அவர் முறையாக பதில் சொல்லவில்லை. மேலும் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததுடன், மாணவர்களுக்கு முறையாக பாடம் நடத்தாததால் நேற்று நடராஜனை சஸ்பெண்டு செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உத்தரவிட்டார்.

    ×