search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி விவகாரம்"

    வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் வலியுறுத்தியுள்ளார். #RamTemple #RamTempledemand #BhaiyyajiJoshi
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் இன்று மாபெரும்  பேரணியும், ராம்லீலா மைதானத்தில் தர்மசபை மாநாடும் நடைபெற்று வருகிறது. 

    இந்த பேரணியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் தலைவர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி பாராளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

    மத்தியிலும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக இந்த கோரிக்கையை சுரேஷ் பய்யா ஜோஷி இன்று முன்வைத்துள்ளார்.

    நாங்கள் இதை யாரிடமும் யாசகமாக கேட்கவில்லை. இந்த நாட்டுக்கு ராமராஜ்ஜியம் தேவை என்ற மக்களின் உணர்வுகளைதான் நாங்கள் எதிரொலிக்கிறோம். 

    இன்று ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், கருத்தை உணர்ந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர்கள் முன்வர வேண்டும்.
    நாங்கள் எந்த சமுதாயத்தினருடனும் மோதலில் ஈடுபடவில்லை. சட்டத்தின் மூலமாக ராமர் கோவிலை சாத்தியப்படுத்துவதுதான் ஒரேவழி. இதை நிறைவேற்றும் வரை ராமர் கோவில் தொடர்பான இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். #RamTemple #RamTempledemand #BhaiyyajiJoshi
    அயோத்தி வழக்கு விசாரணையில், இந்து பயங்கரவாதம் என வக்கீல் ராஜீவ் தவான் வாதிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ஒருவர் தவானை நோக்கி முன்னேறியதால் சுப்ரீம் கோர்ட் அறையில் பரபரப்பு ஏற்பட்டது. #Ayodhya
    புதுடெல்லி:

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.நஜீப் அமர்வு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல கட்டமாக நடந்து வரும் விசாரணையில் இடைக்கால தீர்ப்புகளை வழங்கக்கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    ஆனால், மூல வழக்கின் விசாரணை முடியாமல் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 

    இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “டிசம்பர் 6 அன்று நடந்தது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது. அன்றைய தினம் இந்துக்கள் தாலிபான்களை போல நடந்து கொண்டனர்” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.

    இதனை அடுத்து, ராஜீவ் தவானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி மற்றொரு வக்கீல், ராகுல் தவானை நோக்கி முன் நகர்ந்து வந்தார். இதனால், கோர்ட் அறையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. உடனே, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வக்கீலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.  
    ×