search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மா.சுப்பிரமணியன்"

    • ஆலங்குளம் வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • ஆலங்குளம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் விழா ஒன்றில் பங்கேற்றுவிட்டு, ஆலங்குளம் வந்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியம், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவரிடம், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், தரம் உயர்த்தப்பட்ட ஆலங்குளம் அரசு வட்டார தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் அமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் வில்லியம் தாமஸ், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது.
    • ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும்.

    ஆலங்குளம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக 15-வது நிதி குழு சுகாதார மானியத் திட்டம் 2021-22 மற்றும் தேசிய நகர சுகாதார மையம் 2021-22 நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மக்களவை உறுப்பினர் தனுஷ்குமார், தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலர் ஜெயபாலன், மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் வாழ்த்தி பேசினார்.

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார கட்டிடம், கரிவல ம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 50 லட்சம் செலவில் வட்டார பொது சுகாதார கட்டிடம், மடத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலக் கடையநல்லூரில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் செலவில் புதிய கட்டிடம், மேலப்பாவூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம், பொட்டல்புதூர் துணை சுகாதார நிலையத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கட்டிடம் உள்ளிட்ட மொத்தம் ரூ.3.70 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைத்துப் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடி, நாய்க்கடி மற்றும் நெஞ்சுவலி ஆகியவற்றிற்கான மருந்துகளை எப்போதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் அரசு மருத்துவ மனையை மேம்படுத்தும் பணி 30 நாட்களுக்குள் தொடங்கும் என்றார்.

    தொடர்ந்து பெண்க ளுக்கு சஞ்சீவி பெட்டகம், பேறுகால ஊட்டசத்து பொருள்கள் வழங்கினார். முன்னதாக ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் மருதபுரத்தில் சிறப்பாக அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, பின்பு பஸ் நிலையத்தில் கழக கொடி யினை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வாணன், ஒப்பந்த தாரர் கணேஷ் பாண்டியன், மருத்துவர்கள் தண்டாயு தபாணி, குத்தால ராஜ், தேவி உத்தமி, சற்குணம், மோஹினா, அர்ச்சனா, சித்ரா, மாவட்ட நலக்கல்வி யாளர் ஆறுமுகம், மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் ராமநாதன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, சித்த மருத்துவர்கள் ஜெபநேசம், சரஸ்வதி, தமிழ் முதல்வி, கமர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கங்காதரன் மற்றும் செவிலி யர்கள், மருத்துவ பணியா ளர்கள், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, அன்பழகன், சீனிதுரை , சிவன் பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், தி.மு.க. நிர்வாகிகள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    சுகாதார பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் வரவேற்றார். வட்டரா மருத்துவ அலுவலர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெங்கு பாதிப்பு இல்லாத தமிழகமாக மாற்றும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கள்ளச்சாராய விவகாரத்தில் புதுவை, முண்டியம்பாக்கம், திண்டிவனம் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 66 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு பாதிப்பு இல்லாத தமிழகமாக மாற்றும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 350 பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 426 பேருக்கு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது.

    தினசரி பாதுகாப்பு இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. டெங்கு ஒழிப்பு பணியில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 480 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 14 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டது.

    கள்ளச்சாராய விவகாரத்தில் புதுவை, முண்டியம்பாக்கம், திண்டிவனம் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 66 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முண்டியம் பாக்கத்தில் மட்டும் 55 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சையை தீவிரப்படுத்தவும், தேவையான ஏற்பாடுகள் செய்யவும் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கள்ளச்சாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்கி முற்றுப் புள்ளி வைக்க தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் முண்டியம் பாக்கம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டார்கள். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பது பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    • பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
    • உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

    இந்த இணையதளத்தில், உணவு பாதுகாப்புத்துறையைப் பற்றிய அனைத்து தகவல்கள் குறிப்பாக அனைத்து அமலாக்க அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள், உணவு ஆய்வகங்களின் முகவரிகள், அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் உணவு மாதிரி பகுப்பாய்வுக்கான கட்டண விவரம், சுகாதார கேடு விளைவிக்கும் உணவு பொருட்களின் தடை உத்தரவு, துறை ரீதியான உத்தரவுகள், கோர்ட்டு வழக்குகளின் உத்தரவு ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். உணவு வணிகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் அதன் விதிகள், விதிமுறைகள் 2011 பற்றிய இணையதள இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

    உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய 9444042322 என்ற வாட்ஸ்-அப் புகார் எண் கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்புத்துறை மூலம் நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி' (TN Food safety Consumer App) என்ற பெயரில் பொதுமக்கள் எளிதாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால் அனைத்து வயதினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 122 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.2 லட்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் ச.உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் மற்றும் கூடுதல் ஆணையர் டாக்டர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் வ.கிருஷ்ணகுமார், சென்னை நியமன அதிகாரி டாக்டர் சதீஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மீனவ சமுதாய அமைப்பினர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு முறையிட்டனர்.
    • மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான லூப் சாலையின் இருபுறமும் மீன் கடை இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக கருதி சென்னை உயர்நீதி மன்றம் தாமாகவே முன் வந்து வழக்கை எடுத்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த மீன் கடைகளை அகற்றுமாறு கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அகற்றினார்கள். இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

    மீனவ சமுதாய அமைப்பினர் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு முறையிட்டனர். மீனவர்களுக்கு ஆதரவாக சட்டசபையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி.உதயகுமார் (அ.தி.மு.க.), ஏ.வ.வேலு (தி.மு.க.), ஜி.கே.மணி (பா.ம.க.), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள்), நாகை மாலி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) உள்ளிட்ட பல்வேறு எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    மீனவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்று அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.

    இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இறுதியாக பதில் அளித்து பேசினார். அவர் பேசியதாவது:-

    நொச்சிகுப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மீனவ மக்கள் அதிகமாக கடலை நம்பியே தொழில் செய்து வருகிறார்கள்.

    சென்னை வாசிகளுக்கும் பிரஷ்ஷான மீன் வேண்டும் என்றால் நொச்சிக்குப்பம் போகலாம் என்ற எண்ணம் உள்ளது.

    அங்கு மக்கள் போக்குவரத்துக்கு இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்க கூடாது என்பத்றகாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

    நேற்று மீனவர் பிரதிநிதிகளுடன் பேசி தீர்வு காணப்பட்டதால் தான் நேற்று வரை போக்குவரத்தை தடை செய்து வைத்திருந்தவர்கள், இன்று காலை முதல் நொச்சிக்குப்பம் சாலையில் போக்குவரத்தை அவர்களே முறைப்படுத்தி தற்போது சீராக நடந்து கொண்டிருக்கிறது.

    அதையும் கடந்து முதலமைச்சரின் மிக தீவிரமான நடவடிக்கையால் மூத்த வழக்கறிஞர்களை இந்த வழக்கில் வழக்காட செய்து மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்.

    அவர்கள் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இன்று காலை நீதிமன்றத்தில் வழக்கு வந்திருக்கிறது. வலுவான வாதங்களை முன் வைத்துள்ளது.

    மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் கிழக்கிலும் மேற்கிலும் கடை வைத்து கொள்ள மூத்த வழக்கறிஞர்கள் வாதத்தை பதிவு செய்திருக்கிறார்கள். எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் தங்கு தடையின்றி வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.போக்குவரத்திற்கு எந்த வித இடையூறும் இருக்காது எனவும் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

    சென்னை மாநகராட்சியின் ஆணையரும் உயர்நீதி மன்றத்தில் அதற்கான உத்தரவாதத்தையும் எழுதி தந்துள்ளார். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரு பக்கமும் மீனவர்கள் வியாபாரம் செய்யவதை உறுதிப்படுத்துவோம் என மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் வழக்கு 19.6.2023-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.எனவே இந்த பிரச்சினை காலையோடு முடிவுக்கு வந்துவிட்டது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    • சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்களை இங்கு நடத்தி வருகின்றன.
    • கொரோனா பாதித்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், கண்ணகி நகர் 8-வது பிரதான சாலை அருகில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பதிவு செய்யும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு மருத்துவ முகாம்களை இங்கு நடத்தி வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவுதான்.

    கொரோனா பாதித்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் போட வேண்டிய அவசியம் தற்போது இல்லை. தேவைப்பட்டால் கட்டாயமாக்கப்படும்.

    இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 1-ந்தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

    பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
    • கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கோவை:

    கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள அரங்கத்தில் நடந்தது.

    இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ-மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்தார். பின்னர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஆஸ்பத்திரிகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி ஆஸ்பத்திரியை பார்வையிட்டார். அந்த ஆஸ்பத்திரியின் கட்டமைப்பை பார்த்து தமிழகத்திலும் ஏழை எளிய மக்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்தார்.

    இதையடுத்து தமிழக முழுவதும் 708 ஆஸ்பத்திரிகளை கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார். தமிழகத்திலேயே கோவை மாவட்டத்திற்கு 72 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 ஆஸ்பத்திரிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த 708 ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில ஆஸ்பத்திரிகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது. மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளை முதல்-அமைச்சர் பிப்ரவரி 6-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியக் காரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு ரூ.56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 ஆஸ்பத்திரியில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்ட வரை ஆஸ்பத்திரியில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது.

    அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 2-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். தமிழகம் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும்.

    குட்கா மீதான தடையை கோர்ட்டு நீக்கி உள்ளது ஆனால் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட மாணவிக்கு பெங்களூருவில் இருந்த செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும்.
    • தவறான சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன் தினமும் பயிற்சியில் ஈடுபட்ட வந்த அவர், கடந்த மாதம் 20-ந்தேதி வலது காலில் சுளுக்கு ஏற்பட்டது போல் வலியால் அவதிப்பட்டுள்ளார்.

    இதையடுத்து பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடந்த தவறான ஆப்ரேசன் காரணமாக மறுநாளே கால் பெரிய அளவு வீங்கி இருக்கிறது. இதையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என்ற மருத்துவர்கள் கூறியதை அடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரியாவுக்கு வலதுகால் துண்டித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்போது மாணவிக்கு உள்ள காயம் சரியான உடன், பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும் என்றும், அந்த மாணவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    மருத்துவக்குழு அளித்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    • சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் பெய்து வரும் கனமழையையொட்டி அமைச்சர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு வெள்ள தடுப்பு பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புக்குள்ளான இடங்களுக்கு நேரில் சென்று தீவிரமாக ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் பகுதியில் இன்று காலை மழை பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் 220 கி.மீ. தூர அளவுக்கு ரூ.710 கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகள் முக்கிய இடங்களில் நடைபெற்று வருகிறது. 157 கி.மீ. தூர அளவுக்கு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன.

    இதுபோன்று பணிகள் முடிவடைந்த பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதற்கு முன்னர் 700 இடங்கள் வரையில் தண்ணீர் தேங்கி காணப்படும். தற்போது 40 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் 9 இடத்தில் மட்டுமே மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு வருகிறது.

    குறிப்பாக செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் தண்ணீரால் செம்மஞ்சேரி பகுதிகளும் பாதிப்பை சந்தித்து வந்தது. இந்த பாதிப்புகளை சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக செம்மஞ்சேரி பகுதியில் தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. கல்லுக்குட்டை, புழுதிவாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.

    ஓரிரு இடங்களில் தேங்கும் மழைநீரும் ½ மணி நேரத்தில் வடிந்து விடுகிறது. கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலை பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு பணிகள் நடைபெற்றதால் அங்கு இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இங்கு தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஒரு வாரம் வரை ஆகும். ஆனால் தற்போது 2 இஞ்ச் அளவுக்கு அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

    விருகம்பாக்கம் ராஜமன்னார் சாலை மற்றும் பி.டி.ராஜன் சாலை பகுதியில் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டார். இதனால் கால்வாய் ஆக்கிரமிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.

    சென்னை மாநகர் முழுவதும் மழைக்கால சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை 155 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தற்போது நடத்தப்பட உள்ள மருத்துவ முகாம்களின் போது மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.

    கடந்த முறை மழை பெய்ய தொடங்கிய உடனேயே சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. இதனால் பல சுரங்க பாதைகள் மூடியே கிடந்தன. ஆனால் தற்போது கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டுமே வாகன போக்கு வரத்து தடைபட்டுள்ளது. மற்ற 15 சுரங்க பாதைகளும் எப்போதும் போல செயல்படுகின்றன. மழை பாதிப்புகளை சரி செய்யும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
    • கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

    ஈரோடு:

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து குறைகளையும் கேட்டறிந்து வருகிறார்.

    அதன்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். மாலை 4 மணிக்கு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அவருக்கு தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.அதனைத்தொடர்ந்து பர்கூர் ஊராட்சி தாமரை க்கரை வந்தடைகிறார்.

    பின்னர் ஓசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து கொங்காடை காலனி மற்றும் பழங்குடியினர் காலனிக்கு சென்று மலைவாழ் மக்களை சந்தித்து கலந்துரை யாடுகிறார்.

    பின்னர் இன்று இரவு தாமரைக்கரை வனத்துறை பயணியர் விடுதியில் வந்து தங்குகிறார். இதைத் தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேவர்மலை துணை சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.அதைத் தொடர்ந்து காலை 11:30 மணியளவில் தாமரை கரை துணை சுகாதார நிலையம் உட்பட பர்கூர் மலை கிராமத்திற்கு என்று தனியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    இதேப்போல் 102 இலவச தாய் சேய் ஊர்தி சேவை, நடமாடும் மருத்துவக் குழு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு இலவச அமரர் உறுதி சேவை மற்றும் மருத்துவ நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் மாலை 3:30 மணியளவில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். 

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
    • தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

    அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×