search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிறப்பு அதிகாரி நியமனம்- அமைச்சர் பேட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிறப்பு அதிகாரி நியமனம்- அமைச்சர் பேட்டி

    • டெங்கு பாதிப்பு இல்லாத தமிழகமாக மாற்றும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கள்ளச்சாராய விவகாரத்தில் புதுவை, முண்டியம்பாக்கம், திண்டிவனம் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 66 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனரகத்தில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு பாதிப்பு இல்லாத தமிழகமாக மாற்றும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1 லட்சத்து 7 ஆயிரத்து 350 பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 2 ஆயிரத்து 426 பேருக்கு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டுள்ளது.

    தினசரி பாதுகாப்பு இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது. உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. டெங்கு ஒழிப்பு பணியில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்து 480 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    கொரோனாவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 14 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டது.

    கள்ளச்சாராய விவகாரத்தில் புதுவை, முண்டியம்பாக்கம், திண்டிவனம் ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 66 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முண்டியம் பாக்கத்தில் மட்டும் 55 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சையை தீவிரப்படுத்தவும், தேவையான ஏற்பாடுகள் செய்யவும் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கள்ளச்சாராய விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்கி முற்றுப் புள்ளி வைக்க தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் முண்டியம் பாக்கம் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டார்கள். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுப்பது பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    Next Story
    ×