search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமாவாசை வழிபாடு"

    • மானாமதுரை-திருப்புவனம் பகுதியில் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் காசியில் இருந்து பிரதிஷ்டை செய்ய பட்ட சிவலிங்கம் சன்னதிஉள்ளது. இங்கு தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை தினத்தில் காசியில் நடைபெறுவது போல் முன்னோர்கள் தர்பண பூஜை நடைபெறும்.

    இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு யாகபூஜையுடன் தர்பண பூஜை தொடங்கியது. அதைதொடர்ந்து மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முன்னோர்கள் தர்பண பூஜை செய்து காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். இதேபோல திருப்புவனம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்கள் திதி பூஜை செய்து புஸ்பவனேஸ்வரை வழிபாடு செய்தனர். குறிச்சி காசிசிவன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

    • எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி எமனேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் குளத்தில் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹரமங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவில், நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×