என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Amman temples"

    • ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அம்மன் கோவில்களுக்கு அழைத்து சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

    இந்த சுற்றுலா ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் காளிகாம்பாள் கோவில், ராயபுரம்-அங்காள பரமேஸ்வரி, திருவொற்றியூர் - வடிவுடையம்மன், பெரிய பாளையம்- பவானி அம்மன், புட்லூர்- அங்காள பரமேஸ்வரி, திருமுல்லைவாயில்- திருவுடையம்மன் கோவில், பச்சையம்மன் கோவில், வில்லிவாக்கம்- பாலியம்மன் கோவில்களில் தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த சுற்றுலாவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.1000. மற்றொரு சுற்றுலா திட்டமான மைலாப்பூர் -கற்பகாம்பாள் கோவில், முண்டகண்ணி அம்மன் கோவில், கோலவிழியம்மன் கோவில், தேனாம்பேட்டை -ஆலயம்மன் கோவில், தி.நகர்- முப்பாத்தம்மன் கோவில், சைதாப்பேட்டை -பிடாரி இளங்காளி அம்மன் கோவில், பெசன்ட் நகர் - அஷ்டலட்சுமி கோவில், மாங்காடு - காமாட்சி அம்மன் கோவில்.

    திருவேற்காடு - தேவி கருமாரியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம்- பாதாள பொன்னியம்மன் கோவில் ஆகிய கோவில்களை கண்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.800.

    இதே போல மதுரையில் உள்ள அம்மன் கோவில்கள் ஒருநாள் சுற்றுலாவிற்கு ரூ.1,400, திருச்சியில் கோவில்களை தரிசிக்க ரூ.1100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில் சுற்றுலாவிற்கு ரூ.1,400 கட்டணமாகும். இந்த சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இது தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலா பயணிகள் தரிசிக்கும் வகையில் 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடி மாத அமாவாசை தினத்தையொட்டி 3 நாட்கள் ராமேஸ்வரம் சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    ஆன்மீக சுற்றுலாக்களுக்கு https://ttdconline.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு 18004253111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்க ளால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    அதேபோல் நன்செய் இடையாறு மகா மாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டி யம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×