search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Moon Worship"

    • மானாமதுரை-திருப்புவனம் பகுதியில் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது.
    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சியில் பிரசித்தி பெற்ற வழிவிடு பெரிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் காசியில் இருந்து பிரதிஷ்டை செய்ய பட்ட சிவலிங்கம் சன்னதிஉள்ளது. இங்கு தை, ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசை தினத்தில் காசியில் நடைபெறுவது போல் முன்னோர்கள் தர்பண பூஜை நடைபெறும்.

    இன்று மகாளய அமாவாசை முன்னிட்டு காலை 6 மணிக்கு சிறப்பு யாகபூஜையுடன் தர்பண பூஜை தொடங்கியது. அதைதொடர்ந்து மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இளையான்குடி, சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முன்னோர்கள் தர்பண பூஜை செய்து காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்ததால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். இதேபோல திருப்புவனம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்கள் திதி பூஜை செய்து புஸ்பவனேஸ்வரை வழிபாடு செய்தனர். குறிச்சி காசிசிவன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு அன்னதானமும் நடைபெற்றது.

    ×