search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato price hike"

    • வடமதுரை, அய்யலூர் மற்றும் அ தனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் அதிக அளவு தக்காளி பயிரிடப்படுகிறது.
    • அய்யலூர் தக்காளிக்கு தனி வரவேற்பு இருப்பதால் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் மற்றும் அ தனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் அதிக அளவு தக்காளி பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் அய்யலூரில் செயல்பட்டு வரும் தக்காளிகளுக்கான பிரத்யேக சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    சென்னை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்ட ங்களில் இருந்து வரும் விவசாயிகள் தக்காளிகளை மொத்தமாக கொள்முதல் ெசய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளிக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை யடைந்தனர்.

    தற்போது வெளியூர்க ளுக்கு அதிக அளவு ஏற்றுமதியாவதால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.450 முதல் ரூ.520 வரை விலை ேகட்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் அய்யலூர் தக்காளிக்கு தனி வரவேற்பு இருப்பதால் பேக்கிங் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். தக்காளி விவசாயிகளுக்கு மானியம் அளிக்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். எனவே அதனை நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
    சென்னை:

    பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ 85 முதல் 100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலம் என்பதால் வரத்து இல்லாத நிலையில் தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு சில்லறை விலையில் ரூ 130 முதல் 150 வரையும் மொத்த விலையில் ரூ 100 முதல் ரூ 130 வரையும் விற்கப்படுகிறது.

    இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். தக்காளி இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி, தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி என்பதை கூகுளில் தேடி வருகிறார்கள். 

    இந்த நிலையில் தக்காளி விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    தக்காளி

    இதனிடையே தக்காளியை அதிக விலைக்கு விற்க யாராவது பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் எச்சரிக்கை விடுத்திருந்தார்

    இந்தநிலையில்,  வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    கோயம்பேடு சந்தைக்கு 620 டன் தக்காளி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனமழையால் தக்காளி அதிகம் விலையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  அறுவடை செய்யப்பட்ட தக்காளியை தமிழகம் கொண்டு வருவதில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு தற்காலிகமானது தான். விரைவில் விலை குறையும், நடமாடும் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றார்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு அய்யலூர் சந்தையில் தக்காளி விலை ஓரளவு உயர்ந்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தக்காளிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கடுமையாக வீழ்ந்து காணப்பட்டது. 16 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரையே விற்பனையானது. மேலும் வியாபாரிகளும் குறைந்தஅளவே வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    தற்போது தேவை அதிகரித்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது.

    16 கிலோ கொண்ட பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரை விலைகேட்கப்படுகிறது. மேலும் வெளியூர்களிலும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். ஓரளவு விலை உயர்ந்து தக்காளிகளும் விரைவில் விற்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். கோடை காலத்தில் தக்காளி தேவை அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை, மூலச்சத்திரம், அம்பிளிக்கை, விருப்பாச்சி, கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தூத்துக்குடி, நெல்லை, மதுரை, பட்டுக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஏப்ரல், மே காலங்களில் பாச்சலூர், வடகாடு, பெத்தேல்புரம், பால்கடை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து நாட்டுத்தக்காளி அதிகளவில் வரத்து இருக்கும். இந்த தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50க்கே விற்பனையானது. விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    வழக்கமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 10ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக 1000 பெட்டிகள் மட்டுமே வருகின்றன. இதனால் விலை உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஜூன் மாதத்தில் பெங்களூர் பகுதியில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த தக்காளிகள் நாட்டுத்தக்காளி போல் சுவை இருப்பதில்லை. இருந்தபோதும் விலை 14 கிலோ பெட்டிக்கு ரூ.400 வரை விற்பனையானது.

    எனவே வரும் காலங்களில் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்தால் நல்ல விளைச்சல் பார்க்கலாம் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    தென் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. இங்கு கள்ளிமந்தையம், விருப்பாட்சி, புதுசத்திரம், கேதையறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    இப்பகுதி நாட்டு தக்காளிகள் சுவை மிகுந்து காணப்படுவதால் வெளி மாவட்ட வியாபாரிகள் ஆர்வமுடன் தக்காளிகளை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக வரத்து அதிகரித்து காணப்பட்டதால் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரையே விற்பனையானது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையடைந்து வருகின்றனர்.

    பறிப்பு கூலிக்கு கூட விலை கிடைக்காததால் விரக்தியடைந்த அவர்கள் தக்காளிகளை செடிகளிலேயே விட்டு விட்டனர்.

    தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்து காணப்படுகிறது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.140 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் ஓரளவு நிம்மதி அடைந்து தக்காளிகளை கொண்டு வர தொடங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி உள்பட அனைத்து காய்கறிகளுக்கும் விலை கூடினாலும் குறைந்தாலும் எங்களுக்கு லாபம் சரியாக கிடைப்பதில்லை. பெரிய வியாபாரிகள் குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    எனவே அரசே எங்களிடம் இருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்ய வேண்டும். பெங்களூரு, மைசூருவில் இருந்து தக்காளிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஒட்டன்சத்திரம் பகுதி நாட்டு தக்காளிகளை போல் சுவை கிடையாது. மேலும் உடம்புக்கும் நல்லது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு காலத்துக்கு ஏற்ப பயிரிடுவது குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்றனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தயம், கொசவபட்டி, தேவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50-க்கும் கீழ் சென்றதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். இதனால் விரக்தியில் இருந்த அவர்கள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுச்சென்றனர்.

    இந்த வாரம் தக்காளி விலை ஓரளவு உயர்ந்து 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். வருங்காலங்களில் தக்காளி தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் விலை கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    வரத்து குறைந்ததால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் சந்தையில் கொம்பேறிபட்டி, அய்யலூர், மம்மானியூர், வளவிசெட்டிபட்டி, புத்தூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு சந்தைகளுக்கும் வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு பெட்டி ரூ.250-க்கு விற்பனையானது. பொங்கல்பண்டிகைக்கு பிறகு தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த 2 நாட்களாக ஒரு டன்னுக்கும் குறைவாகவே தக்காளி வந்தது. இதனால் உள்ளூர் தேவைக்கே பற்றாக் குறையாக காணப்பட்டது.

    வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி ரூ.400 வரை விற்பனையானது. அடுத்த சில வாரங்களுக்கு இதேநிலை தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். திடீர் விலை உயர்வு விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

    ×