என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழையால் உற்பத்தி பாதிப்பு: தக்காளி கிலோ ரூ.70 ஆக அதிகரிப்பு
- வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை உயர்வு.
- இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
போரூர்:
கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இன்று 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தது.
பரவலாக பெய்து வரும் மழை மற்றும் வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வெளிமாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படுகிறது வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 வரை விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த பீன்ஸ் விலை குறைந்து மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.50-க்கும், அதேபோல் ஊட்டி கேரட், அவரைக்காய், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகள் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனை விலை (கிலோவில்) வருமாறு:-
நாசிக் வெங்காயம்-ரூ.38
சின்ன வெங்காயம்-ரூ.60
உருளைக்கிழங்கு-ரூ.34
உஜாலா கத்தரிக்காய்-ரூ.50
வரி கத்தரிக்காய்-ரூ.40
பீன்ஸ்-ரூ.50
அவரை க்காய்-ரூ.60
வெண்டைக்காய்-ரூ.15
முருங்கைக்காய்-ரூ.60
ஊட்டி கேரட்-ரூ.60
பீட்ரூ.ட்-ரூ.25
முள்ளங்கி-ரூ.30
சவ்சவ்-ரூ.30
கோவக்காய்-ரூ.30
வெள்ளரிக்காய்-ரூ.30
குடை மிளகாய்-ரூ.50
பன்னீர் பாகற்காய்-ரூ.50
நைஸ் கொத்தவரங்காய்-ரூ.50
புடலங்காய்-ரூ.25
முட்டை கோஸ்-ரூ.20
பீர்க்கங்காய்-ரூ.20
சுரக்காய்-ரூ.8






