search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "production affected"

    • இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது.
    • தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புனே:

    பலரும் விரும்பி பருகும் பானங்களில் காபி முதன்மையானது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் காபி பயிரிட்டாலும் பிரேசில், வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து காபி இறக்குமதியும் செய்யப்படுகிறது. இந்திய காபி வெளிநாடுகளுக்கு செல்கிறது.

    இந்நிலையில் உலக அளவில் பிரேசில், வியட்நாமில் காபி உற்பத்தி குறைந்துள்ளது. இந்தியாவிலும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரிந்துள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் காபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கர்நாடகாவின் சிக்கமளூருவில் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து தரமான காபி கொட்டைகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அதன் விலையை கணிசமாக உயர்த்தி உள்ளனர். ரோபஸ்டா மற்றும் பீப்ரி ரக காபி கொட்டைகள் கிலோவுக்கு ரூ.580 ஆக இருந்தது. தற்போது இது ரூ.64 முதல் ரூ.650 வரை விற்கப்படுகிறது.

    ரொபஸ்டா விலை 50 சதவீதமும், அரபிகா ரக விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், ஆண்டுக்கு ஒருமுறை ஜனவரி மாதம் காபி விலை உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சில சிறிய காபி விற்பனையாளர்கள் கடையை மூடிவிட்டனர்.

    காபி விளையும் சிக்கமகளூரு பகுதிகளில் காலநிலை மாற்றமும் உற்பத்தியை பாதித்துள்ளது. பூக்கும் நாட்களில் பருவமழை பெய்ததால் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் விளைச்சல் குறைந்துள்ளதாக காபி எஸ்டேட் ஊழியர்கள் கூறுகின்றனர்.

    இந்தியாவில் 70 சதவீத காபி கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. தமிழகம், கேரளாவிலும் காபி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    காபி உற்பத்தியாகும் பகுதிகளில் பழங்கள் சரியாக பழுக்காததால் வழக்கமான 2 அறுவடைகளுக்குப் பதிலாக 4 சுற்றுகள் தேர்ந்தெடுத்து அறுவடை செய்துள்ளனர். பிரேசிலின் அராபிகா காபி விலைகள் சர்வதேச சந்தைகளில் குறைய தொடங்கியுள்ளன. இருப்பினும், உள்நாட்டு சந்தையில் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சில நிறுவனங்கள் கடந்த ஆண்டு 200 கிராம் ஜாடியின் விலை 280 ரூபாயில் இருந்து அதே ஜாடியின் விலையை 360 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த காலாண்டில் மேலும் 10 சதவீதம் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அரேபிகாவிற்கும் ரொபஸ்டாவிற்கும் இடையேயான விலை வேறுபாடு குறைந்துள்ளதால், அராபிகா ரக காபியை மக்கள் விரும்புவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

    காபி பயிரிடுதற்கு தொழிலாளர் செலவில் இருந்து உரம் மற்றும் பூச்சிக்கொல்லி செலவுகள் வரை அதிகரித்து உள்ளது. ஆனால் அரபிகா காபி விலை கடந்த ஆண்டை விட இப்போது கொஞ்சம் குறைவாக உள்ளது. வணிகர்கள் அதை பொதுவாக மொத்தமாக வாங்குகிறார்கள், எனவே விலை உயரும் சூழல் உள்ளது என்று என்று கர்நாடக காபி தோட்டக்காரர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதிய அளவில் இருந்தும் அந்த மாநில அரசு திறந்து விட மறுப்பதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறுவை பயிர்கள் கருகி வருவதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்து விட மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொடர் மழையால் தென்னந்தோப்புகளில் நீர் தேங்கியுள்ளதால் தேங்காய் பறிப்பு பணிகளும் பாதித்துள்ளன.
    • வரத்து குறைவு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது.

    குடிமங்கலம் : 

    உடுமலை பகுதிகளில் 1.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியாகும் தேங்காய் நேரடி விற்பனைக்கும் தேங்காய்கள் உடைந்து கொப்பரை உற்பத்தி செய்து கொப்பரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் 300க்கும் மேற்பட்ட கொப்பரை களங்களில் நாள் ஒன்றுக்கு 100 டன் வரை உற்பத்தி செய்யப்பட்டு காங்கயத்திலுள்ள எண்ணை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.கடந்த ஒரு ஆண்டாக கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காததால் கொப்பரை உற்பத்தி குறைந்து கொப்பரை களங்கள் மூடப்பட்டு வருகின்றன.

    தற்போது செயல்பட்டு வரும் குறைந்த அளவு கொப்பரை களங்களிலும் தொடர் மழை காரணமாக உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது.தென்னந்தோப்புகளில் பிப்ரவரி முதல் ஆகஸ்டு வரை காய்வரத்து அதிகரிக்கும் சீசன் காலமாகும். இக்காலத்தில் ஏக்கருக்கு 1,400 தேங்காய் வரை வரத்து காணப்படும்.

    தற்போது சீசன் குறைந்துள்ளதால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. மேலும் தொடர் மழையால் தென்னந்தோப்புகளில் நீர் தேங்கியுள்ளதால் தேங்காய் பறிப்பு பணிகளும் பாதித்துள்ளன.

    தேங்காய் வரத்து குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கொப்பரை களங்களில் 70 சதவீதம் வரை உற்பத்தி பாதித்துள்ளது.இதனால் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ கொப்பரை, 78 முதல் 79 வரை விற்று வந்தது 86 முதல் 90 ரூபாய் வரை விற்று வருகிறது.

    அதே போல் வரத்து குறைவு காரணமாக தேங்காய் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு டன் பச்சை தேங்காய் 25 ஆயிரம் ரூபாயாகவும், கருப்பு காய், டன் 26 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மட்டை விலை 20 காசு என்ற அளவிலேயே உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- தென்னை காய்ப்பு சீசன் இல்லாததால் தேங்காய் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. தொடர் மழை காரணமாக தென்னந்தோப்புகளில் தேங்காய் பறிக்க முடிவதில்லை.கொப்பரை களங்களிலும் தேங்காய்கள் உடைப்பதில்லை. களத்திலுள்ள கொப்பரைகளிலும் பூஞ்சானம் தாக்குதல் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் கொப்பரை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது.

    வரத்து குறைவு காரணமாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை சற்று உயர்ந்துள்ளது. மகசூல் குறைவு காரணமாக விவசாயிகளுக்கு பயனில்லை. அடுத்து ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் மீண்டும் தேங்காய் மகசூல் சீசன் துவங்கும்.எனவே மத்திய, மாநில அரசுகள் கொப்பரைக்கு ஆதார விலையை உயர்த்தி அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை துவக்கி கட்டுப்பாடுகள் இல்லாமல் முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×