search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyalur market"

    • ஆடி மாதத்தில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
    • அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன.

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் அய்யலூர் பகுதியில் வார ந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மட்டு மல்லாது திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு, கோழி கள் வாங்க வருகின்றனர். தற்போது கிராமங்களில் ஆடித்திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. இன்று ஆடி 18 என்பதால் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடை பெற்று வருகிறது. மேலும் வண்டிகரு ப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கிடாவெட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    7 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.10ஆயிரத்திற்கு விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. அதிகாலை 4 மணிக்கே ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர். அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன. அதன்பின்னர் கிடாவெட்டுக்கு ஆடுகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    வருங்காலங்களில் ஆடு, கோழிகளின் விலை உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
    • பெரும்பாலானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், மோர்பட்டி, தீத்தாகிளவனூர், நடுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். அய்யலூரில் தக்காளிக்கென 5 மார்க்கெட்டுகள் இயங்கி வருகின்றன.

    திருச்சி, கரூர், சேலம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலங்களில் பெய்த மழையால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. ஆனால் விவசாயிகளிடம் இருந்து ரூ.40 முதல் ரூ.50 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அவர்கள் வேதனையில் இருந்தனர். இந்த நிலையில் கொடி தக்காளி பயிரிட ஆர்வம் காட்டினர். மேலும் பருவமழை கைகொடுத்த நிலையில் ஆர்வமாக தக்காளி சாகுபடியில் ஈடுபட்டனர்.

    இதனால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. தற்போது 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.5 ஆக சரிந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனால் பெரும்பா லானோர் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பகுதியில் தக்காளி பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்கும் பணி நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இந்த கிட்டங்கியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டுச்சந்தை இந்த வாரம் களையிழந்து காணப்பட்டது.
    • ஆடுகள் விலை குறைந்து விற்பனையான போதிலும் இறைச்சி கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விலை குறையாமல் அதேபோல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு, கோழி சந்தை நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இங்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் வரை விறுவிறுப்பாக நடந்து வந்த ஆட்டுச்சந்தை இந்த வாரம் களையிழந்து காணப்பட்டது. பெரும்பாலான மக்கள் விவசாயிகளிடம் நேரடியாகவே ஆட்டுக்குட்டிகளை வாங்கிச்சென்றனர். தற்போது ஆடுகள் குட்டி ஈன்றுவரும் காலமாகும். இதனால் 3 ஆட்டுக்குட்டிகள் ரூ.10ஆயிரம் வரை விலைபோனது.

    சாதாரணமாக 3 குட்டிகள் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகும். ஆனால் தற்போது கார்த்திகை மாதம் என்பதால் இறைச்சி விற்பனை குறைந்துள்ளது. இதனால் ஆடுகளின் விலையும் பாதிக்கு பாதியாக குறைந்து விற்பனையானது. இதேபோல பிராய்லர் கோழிகள் ரூ.170முதல் விற்பனையானது. நாட்டுக்கோழிகள் ரூ.220 முதல் ரூ.300 வரை விற்கப்பட்டது.

    பனிக்காலங்களில் பிராய்லர்கோழிகளுக்கு நோய்கள் ஏற்பட்டு வருவதால் நாட்டுக்கோழிகளை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச்சென்றனர். ஆடுகள் விலை குறைந்து விற்பனையான போதிலும் இறைச்சி கடைகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சி விலை குறையாமல் அதேபோல் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு மாதத்திற்கு இதேநிலையில் தான் விற்பனை இருக்கும் என்பதால் பெரும்பாலான வெளியூர் வியாபாரிகள் சந்தைக்கு வருவதை நிறுத்திவிட்டனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு அய்யலூர் சந்தையில் தக்காளி விலை ஓரளவு உயர்ந்ததால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தக்காளிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.

    திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே தக்காளி விலை கடுமையாக வீழ்ந்து காணப்பட்டது. 16 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரையே விற்பனையானது. மேலும் வியாபாரிகளும் குறைந்தஅளவே வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    தற்போது தேவை அதிகரித்துள்ளதால் விலை ஓரளவு உயர்ந்துள்ளது.

    16 கிலோ கொண்ட பெட்டி ரூ.200 முதல் ரூ.250 வரை விலைகேட்கப்படுகிறது. மேலும் வெளியூர்களிலும் தக்காளி வரத்து குறைந்துள்ளதால் கொள்முதல் செய்வதற்காக அதிகளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். ஓரளவு விலை உயர்ந்து தக்காளிகளும் விரைவில் விற்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். கோடை காலத்தில் தக்காளி தேவை அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அய்யலூரில் உள்ள தக்காளி சந்தையில் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனிச்சந்தை உள்ளது. வடமதுரை, அய்யலூர் சுற்று வட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்படும் தக்காளிகள் சந்தைக்கு விற்பனக்கு கொண்டு வரப்படுகிறது. இதுதவிர வெளிமாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

    இதனால் மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் சந்தையாக அய்யலூர் திகழ்கிறது. இங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 4 டன் வரை தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆனால் கடந்த சில நாட்களாக அய்யலூர் சந்தையில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை தொடர்ந்து இறங்கு முகமாக உள்ளது. கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.150 முதல் ரூ.170 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதனால் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்தது. செடிக்கு தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு பாதுகாத்து வளர்த்து, சந்தைக்கு கொண்டு வரும் கூலி கூட மிஞ்சுவதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். இதனால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விலை கிடைக்காத காலங்களில் தக்காளி வீணாவதை தடுக்க அய்யலூரில் குளிர்பதன கிட்டங்கி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வரத்து குறைந்ததால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் சந்தையில் கொம்பேறிபட்டி, அய்யலூர், மம்மானியூர், வளவிசெட்டிபட்டி, புத்தூர், எரியோடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விளைவிக்கப்படும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கிருந்து வாங்கி செல்லும் வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் உள்பட பல்வேறு சந்தைகளுக்கும் வெளியூர்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த சில வாரங்களாக வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒரு பெட்டி ரூ.250-க்கு விற்பனையானது. பொங்கல்பண்டிகைக்கு பிறகு தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது.

    சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால் கடந்த 2 நாட்களாக ஒரு டன்னுக்கும் குறைவாகவே தக்காளி வந்தது. இதனால் உள்ளூர் தேவைக்கே பற்றாக் குறையாக காணப்பட்டது.

    வரத்து குறைந்ததால் ஒரு பெட்டி ரூ.400 வரை விற்பனையானது. அடுத்த சில வாரங்களுக்கு இதேநிலை தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். திடீர் விலை உயர்வு விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

    அய்யலூர் சந்தையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை, கொம்பேரிபட்டி, புத்தூர், பஞ்சந்தாங்கி, சுக்காம்பட்டி, சீலக்காத்திநாயக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஹைபிரிட் வகை தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.

    எப்போதும் ஆடி மாதம் முடிந்தபிறகு முகூர்த்த நாட்கள் அதிகரிக்கும் என்பதால் அதிக விலை கிடைக்கும். அதனை நம்பி ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர்.

    ஆனால் அய்யலூர் சந்தையில் ஒரு கிலோ ரூ.10 விலைக்கே வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி வந்துள்ளதால் உள்ளூர் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளிக்கு விலை கிடைக்காத நிலை ஏற்பட்டது.

    கடந்த வருடத்தில் தக்காளி பற்றாக்குறை ஏற்பட்டு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் விவசாயிகள் தாங்கள் செலவு செய்த பணம், பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டு வரும் செலவு போன்ற தொகை கூட கிடைக்க விலை என வேதனையுடன் தெரிவித்தனர்.

    அய்யலூர் சந்தையில் தக்காளி வரத்து குறைந்த நிலையிலும் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரில் தக்காளி சந்தை நடத்தப்பட்டு வருகிறது. வடமதுரை, அய்யலூர், பூசாரிநாயக்கன்பட்டி, மணியக்காரன்பட்டி, எரியோடு, கோம்பை, காக்கையன்குளத்துப்பட்டி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தக்காளி விளைவிக்கப்பட்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர் வியாபாரிகளும் அதிக அளவில் வந்து இதனை வாங்கிச் செல்கின்றனர். கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து குறைவாகவே உள்ளது. பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து அதிக அளவு தக்காளி வரவழைக்கப்பட்டு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    சராசரியாக தினசரி 10 டன் மற்றும் அதற்கும் கூடுதலாகவே தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் தற்போது ஒரு டன்னுக்கும் குறைவான அளவிலேயே விவசாயிகள் கொண்டு வருகின்னர். 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.140 முதல் ரூ.170 வரை விற்கப்படுகிறது.

    கடும் வறட்சியான சூழலிலும் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    ×