search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு
    X

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    தென்தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான அம்பிளிக்கை, கரியாம்பட்டி, கள்ளிமந்தயம், கொசவபட்டி, தேவத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50-க்கும் கீழ் சென்றதால் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். இதனால் விரக்தியில் இருந்த அவர்கள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுச்சென்றனர்.

    இந்த வாரம் தக்காளி விலை ஓரளவு உயர்ந்து 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.80-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். வருங்காலங்களில் தக்காளி தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால் விலை கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×