search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nilgiri district"

    • ஊட்டியில் இன்று 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு
    • தொடர்ந்து உறைபனி கொட்டுவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

     ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும்.


    தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன.

    புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மை யாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கி ன்றனா்.

    கடும் உறைபனி பொழிவு காரணமாக ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவி வருகிறது. குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் இந்த தட்பவெப்ப நிலையைக் அனுபவித்து செல்கிறார்கள்.

    இன்று 3-வது நாளாக நீலகிரியில் உறைபனி காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட நகர் பகுதியில் இன்று காலை 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி போன்ற பகுதிகளிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து உறைபனி கொட்டுவதால் நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.  

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. சமவெளிப்பகுதியில் தகிக்கும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க ஊட்டியில் தஞ்சமடைந்த சுற்றுலா பயணிகளுக்கு போதிய சீதோஷ்ண நிலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர். பசுமை நிறைந்த புல்வெளிகள் காய்ந்து பரிதாபமாக காட்சியளித்தன.

    காட்டுத்தீ ஏற்பட்டு வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாகி வந்தன. தேயிலைச்செடிகள் காய்ந்து மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது. போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் காய்கறிகளை பயிரிடவில்லை. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று கருமேகமூட்டம் நிலவியது. காலை 11.30 மணியில் இருந்து திடீரென லேசான மழை பெய்தது.

    பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை மதியம் 12.30 மணியில் இருந்து 2 மணி வரை பெய்தது.

    ஊட்டியில் பெய்த மழையால் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, மத்திய பஸ் நிலையம், கூட்ஷெட் சாலை, பிங்கர்போஸ்ட், ஊட்டிகுன்னூர் சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் அதிகளவில் சென்றது.

    ஊட்டி படகு இல்ல சாலை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தேங்கி கிடந்த மழைநீரில், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த பயணிகள் மழையில் நினைந்தபடி மகிழ்ந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 2 மணி நேரம் படகு சவாரி நிறுத்தப்பட்டது. ஊட்டி, நஞ்சநாடு, பாலாடா, கேத்தி, தலைகுந்தா, கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நேற்று பெய்த மழையால் காட்டு தீ ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. வனவிலங்குகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதால் ஊருக்குள் நுழையும் அச்சமும் நீக்கியது. மழையால் நீலகிரியில் மீண்டும் இதமான சீதோஷ்ண நிலை திரும்பியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதேபோன்று கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், மருதமலை பகுதியில் சூறாவளியுடன் கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கோடை வெயிலில் சிக்கித்தவித்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாநகரை பொருத்தவரை மாலை 4 மணி முதலே கார்மேகம் திரண்டிருந்தன. இதனால் திடீர் குளிர்ச்சி ஏற்பட்டது. மாலை 5 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது. அனல் காற்று நீங்கி குளிர்ந்த காற்று வீசியது.

    இதேபோன்று கோவை மாவட்டம் வால்பாறையில் பகுதியில் கடந்த 3 நாட்களாக பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கனமழையும் நகர் பகுதியில் லேசான மழையும் பெய்து வந்தது.

    நேற்று மதியம் 2 மணிமுதல் 3 மணிவரை வால்பாறை நகர் பகுதி உட்பட அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் பலத்த இடி-மின்னலுடன் பலத்த சூறாவளியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    நீலகிரி மாவடத்தில் தொடர் பனிப்பொழிவும் கடுங்குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கும். ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் படிப்படியாக பனிப்பொழிவு குறைந்து மாத இறுதிக்குள் குளிர்காலம் முடிந்து விடும்.

    ஆனால் தற்போது ஜனவரி மாதம் இறுதி ஆகியும் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் குறையவில்லை. தினசரி மாலையில் 6 மணிக்கு தொடங்கும் பனிப்பொழிவு மறுநாள் காலை 11 மணி வரை நீடிக்கிறது.

    இதன் காரணமாக ஊட்டி, தலைக்குந்தா, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் ஜிம்கானா போன்ற பகுதிகளில் புல்வெளிகள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து வெண்ணிறமாக காட்சியளிக்கிறது.

    இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து 4,5,6 டிகிரி செல்சியசாக குறைந்து காணப்படுகிறது. இன்று காலையில் தாவரவியல் பூங்காவில் 00.73 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    இரவில் வெளியே நிறுத்திவைக்கப்படும் வாகனங்களில் விழும் பனிப்பொழிவு ஐஸ் கட்டியாக மாறிவிடுகிறது. புல்வெளியில் படர்ந்துள்ள பனிப்பொழிவு காலையில் வெகு நேரம் நீடிப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அவைகளும் சூரிய ஒளியில் நின்று தங்கள் உடலை சூடாக்கி கொள்கின்றது. சாலையோர வியாபாரிகள் கனமான கம்பளி ஆடைகளை அணிந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காலை வெகுநேரம் குளிர் வாட்டி வதைப்பதால் உள்ளூர் வாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிரால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகிறது.

    தொடர் பனிப்பொழிவு, கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளின் வரத்தும் குறைவாகவே காணப்படுகிறது.#tamilnews
    நீலகிரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், என மொத்தம் 107 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #swineflu
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் அப்துல் ரகுமான் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த1-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அவரை தொடர்ந்து கோத்தகிரியை சேர்ந்த ஒருவரும் கோவையில் உயிரிழந்தார். மேலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    30 மாணவர்கள்-10 ஆசிரியர்களுக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி

    இந்தநிலையில் ஊட்டியில் இயங்கி வரும் மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள சர்வதேச பள்ளியில் படிக்கும் 30 மாணவர்களுக்கும், 10 ஆசிரியர்களுக்கும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் கோவையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்படுவதாக தகவல் பரவியது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது

    அந்த பள்ளியில் படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், அந்த வகுப்பில் படிக்கும், விடுதியில் உள்ள 27 மாணவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. அந்த மாணவர் மட்டும் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    இது மற்ற மாணவர்களின் பெற்றோருக்கு பீதியை ஏற்படுத்தியது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பெற்றோர்களின் ஏற்பாட்டின் அடிப்படையில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 80 பேரும், ஆசிரியர்கள், விடுதி ஊழியர்கள் 27 பேரும் என மொத்தம் 107 பேர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சுகாதாரதுறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-

    மருத்துவ பரிசோதனைக்கான அவர்களது பெற்றோரின் விருப்பபடி மாணவர்கள் கோவைக்கு சென்றுள்ளனர். இது அவர்களது விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது என்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு குறித்து மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் இரியன் ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக 190 பேர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும் 28 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதால் அவர் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 4 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதால் அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். #swineflu
    நீலகிரி மாவட்ட வாகனங்களை அடையாளம் காண ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது.
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் கல்லட்டி மலைப்பாதை 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இந்த பாதையில் செல்லும் வெளியூர் வாகன ஓட்டிகளால் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரில் சென்ற 5 சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் சாலை பாதுகாப்பு கருதியும் விபத்துகளை குறைக்கவும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தினமும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை கல்லட்டி மலைப்பாதையில் எந்த வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ உதவி மற்றும் அவசர காலங்களில் போலீசாரின் அனுமதி பெற்று வாகனங்களை இயக்கி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்த வாகனங்களை அடையாளம் காணும் வகையில் போலீசார் சார்பில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியை ஊட்டி அருகே உள்ள தலைகுந்தாவில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறையின் ஆலோசனையின் பேரில் 2 ஆயிரம் ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்த வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். இதனால் டிரைவர்கள் பதிவு சான்று, ஓட்டுநர் உரிமம், இருப்பிட சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் ஊட்டியில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து போலீசாரின் ஆய்வுக்கு பிறகு சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும். தலைக்குந்தா மற்றும் கல்லட்டி பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, ஊட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு திருமேனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். திராவிடமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை நீலகிரி மாவட்டம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டாடுவது, 3-ந் தேதி அன்று நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசளிப்பது, 95 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, ஜூன் 5-ந் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளைகளில் கொண்டாடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 
    ×