என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
Byமாலை மலர்19 May 2018 4:43 PM GMT (Updated: 19 May 2018 4:43 PM GMT)
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். திராவிடமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை நீலகிரி மாவட்டம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டாடுவது, 3-ந் தேதி அன்று நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசளிப்பது, 95 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, ஜூன் 5-ந் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளைகளில் கொண்டாடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வரவேற்றார். திராவிடமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை நீலகிரி மாவட்டம் முழுவதும் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் தொடர்ந்து கொண்டாடுவது, 3-ந் தேதி அன்று நீலகிரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசளிப்பது, 95 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்குவது, ஜூன் 5-ந் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம், மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நகர, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கிளைகளில் கொண்டாடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X