search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "telephone"

    • அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலை பேசி எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது
    • பேரிடர் கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் வாட்ஸ்-அப் எண் 9384056231 ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்த புகார்கள், தொலைக்காட்சி செய்திகளில் வரப்பெற்ற புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து புகார்கள் குறித்தும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அலுவல்களுக்கு உடனுக்குடன் தெரிவித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மேலும் பேரிடர் தொடர் பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் தொலை பேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04329-228709 என்ற தொலை பேசி எண்களிலும், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 04329- 222058 , உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் 04331-245352, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் 04329-222062, ஜெய ங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் -04331-250220, செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் 04329-242320 மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் 04331-299800 என்ற தொலை பேசி எண்களிலும் 9384056231 என்ற வாட்ஸ்- அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
    • 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    மத்திய, மாநில அரசு திட்டம் வாயிலாக அரசு கேபிள் டி.வி., நிறுவனம் சார்பில், பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கேபிள் வாயிலாக இணையதள சேவை வழங்கும் திட்டத்தில் ஒரு இணைப்பு பெற்ற சந்தாதாரர், டி.வி., தொலைபேசி மற்றும் இணையதளம் என 3 சேவைகளையும் பெறலாம். இணையதள சேவை வேண்டாம் எனில் டி.வி., ஒளிபரப்பு சேவையை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.

    அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை உயர்த்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் கேபிள் தாசில்தார் ரவீந்திரன், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாக்களில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து கலந்தாய்வு நடத்தினார்.

    இது குறித்து தாசில்தார் கூறியதாவது:- நடைமுறையில் உள்ளதை காட்டிலும் 3 மடங்கு அதிக வேகத்துடன் பைபர் நெட் இணைப்பு வழங்கப்பட உள்ளது.புதிய பைபர் நெட் சேவையை பெற அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். பைபர் நெட் திட்டம் வந்த பிறகு அரசு கேபிள் இணைப்புகளை அதிகரிக்க சிரமம் ஏற்படும்.

    எனவே நெட் இணைப்பு சேவை வழங்க விரும்பும் கேபிள் ஆபரேட்டர்கள் முன்கூட்டியே அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று ஒளிபரப்பை துவக்க வேண்டும். பயன்படுத்தாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களையும், முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.அரசு கேபிள் சேவை கிடைக்காத பகுதியில் புதிய நெட் சேவை தேவைப்பட்டால் புதிய ஆபரேட்டரை உருவாக்கி சேவையை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    • விவசாயிகளுக்கான இலவச தொலைபேசி சேவை தொடக்கம்.
    • விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 2022-23-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் கீழ் இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவை மற்றும் புலனம் (வாட்ஸ்அப்) சேவை பெறப்பட்டுள்ளது.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் தொடர்பாக தங்களுக்கு எழும் சந்தேகங்கள், வினாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை 1800 425 1907 என்ற இலவச கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இந்த சேவையானது, விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மின்னனு தேசிய வேளாண் சந்தை, முதன்மை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு, சிறப்பு வணிக வளாகங்கள் தொடர்பான கேள்விகள், புகார்கள், கருத்துக்கள் ஆகியவற்றை 7200818155 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தகவல் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் புவனேசுவரம் விமான நிலையத்தில் இருந்தபடியே, செல்போன் மூலம் புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். #YogiAdityanath
    புவனேஸ்வரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் விமானம் மூலம் புவனேசுவரம் வந்தார்.

    பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அந்த ஊர்களுக்கு செல்வதாக இருந்தது. ஆனால் அதற்குள் இருட்டிவிட்டதால், ஹெலிகாப்டர் பறக்க விமானபோக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

    தொலை தூரத்தில் உள்ள அந்த ஊர்களுக்கு உடனடியாக செல்ல முடியாது என்பதால், யோகி ஆதித்யநாத் புவனேசுவரம் விமான நிலையத்தில் இருந்தபடியே, செல்போன் மூலம் புல்பானி, பெர்காம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசினார். #YogiAdityanath
    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. #BSNL
    சென்னை:

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

    ‘தனலட்சுமி’ என்ற இத்திட்டத்தின்படி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக் கான பில்களை கடைசி தேதிக்குள் செத்துபவர்களுக்கு சேவை வரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும்.

    வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கும் இந்த தள்ளுபடி உண்டு.

    பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம்.

    அவ்வாறு செலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில் தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் ஒரு சதவீதம் தள்ளுபடி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.


    இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி அடுத்து வரும் இரண்டாவது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

    இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பி.எஸ்.என்.எல். எண்டர்பிரைசஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் தலைமை பொது மேலாளர் வி.ராஜீ மற்றும் சென்னை டெலிகாம் துணை பொது மேலாளர் ஜி.விஜயா ஆகியோர் தெரிவித்துள்ளனர். #BSNL
    தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் சொல்லி பழகுங்கள் என்று குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #KumariAnanthan
    சென்னை:

    தமிழக கோவில்களில் தமிழில் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை பிரசாரம் மேற்கொண்டார்.

    திருச்செந்தூர் சென்றடைந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனால் தமிழ் வளர்ச்சி குறித்து கி.வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடந்த கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை.

    இருந்தபோதிலும் தனது கருத்தை நண்பர் ஒருவர் மூலம் தயார் செய்து அதை கூட்டத்தில் படிக்கச் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    உலகத்தில் தாய்மொழிகள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. உலக மொழிகள் எதையும் உலக மக்கள் கற்கலாம். ஆனால் ஒவ்வொரு குழந்தையும் தனது தாய் மொழியையும், உலக பொது மொழியையும் கட்டாய பாடமாக படிக்க வேண்டும்.

    உள்ளூரில் தனது தாய்மொழியை பேசும் ஒருவர் பொது மொழியை, தான் செல்லும் நாடுகளில் பேசலாம். நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழிலும் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றேன்.

    இதைத்தொடர்ந்து தமிழில் அஞ்சல் அட்டை, காசோலை, ரெயில் பயண முன்பதிவு படிவம், பண விடைத்தாள்(மணியார்டர்) ஆகியவை பெறப்பட்டன.

    நமது வீட்டில், பணிபுரியும் இடங்களில் தொலைபேசி ஒலித்தால் ‘ஹலோ’ என்று கூறாமல் வணக்கம் என்று கூறுவதை முதல் பழக்கமாக ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    காஷ்மீர் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தொலைபேசியில் பேசினார். #Kashmirpeopleattack #MehboobaMufti #ArvindKejriwal
    புதுடெல்லி: 

    புதுடெல்லியின் சன்லைட் காலனி என்ற பகுதியில் வசிக்கும் காஷ்மீரை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 5 பேர் மீது கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதி மக்கள் திடீரென தாக்கினர். 

    இதுதொடர்பாக தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் அச்சத்துடனேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி காஷ்மீர் பெண்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இதுதொடர்பாக டெல்லி முதல் மந்திரி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், முதல் மந்திரி கெஜ்ரிவாலிடம் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி முப்தி தொலைபேசியில் பேசினார். அப்போது, காஷ்மீர் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அவரிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். #Kashmirpeopleattack #MehboobaMufti #ArvindKejriwal
    ×