search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bill amount"

    • காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில்மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.இதில் காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு குடிநீா்க் கட்டணமாக ரூ.100 மட்டுமே நிா்ணயிக்க வேண்டும். வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். நகரில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.

    பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் உறுதியளித்தாா்.கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா் எம்.மகேந்திரகுமாா், நகா்மன்ற நோ்முக உதவியாளா்சுப்பிரமணி மற்றும் நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. #BSNL
    சென்னை:

    விழாக்கால சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பில் தொகையில் சிறப்பு தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது.

    ‘தனலட்சுமி’ என்ற இத்திட்டத்தின்படி ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைபேசி, மொபைல் மற்றும் இதர சேவைகளுக் கான பில்களை கடைசி தேதிக்குள் செத்துபவர்களுக்கு சேவை வரி நீங்கலாக உள்ள தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும்.

    வரும் மாதங்களுக்கான பில்களை முன்னதாக செலுத்துபவர்களுக்கும் இந்த தள்ளுபடி உண்டு.

    பில்லில் உள்ள தொகை முழுமையாக செலுத்தப்பட வேண்டும். வரும் மாதங்களுக்கான தொகையை முன்னதாக செலுத்துபவர்கள், பில் தொகைக்கு மேல் எந்த தொகையையும் செலுத்தலாம்.

    அவ்வாறு செலுத்துபவர்களுக்கு அடுத்த மாத பில் தொகையில், இந்தமாத பில் தொகைக்கும் அடுத்த மாத பில்லுக்கு முன்னதாக செலுத்திய தொகைக்கும் ஒரு சதவீதம் தள்ளுபடி கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.


    இந்த விழாகால நாட்களில் அடுத்த 5 மாதங்களுக்கான பில் தொகைகளை முன்னதாக செலுத்துபவர்களுக்கு 3 சதவீத தள்ளுபடி அடுத்து வரும் இரண்டாவது பில்லில் இருந்து தொடங்கி அந்தந்த பில்லில் வழங்கப்படும்.

    இந்த விழாக்கால நாட்களில் பில் தொகையை செலுத்தும் அனைத்து பி.எஸ்.என்.எல். எண்டர்பிரைசஸ் வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கும் அனைத்து பில்களிலும் 2 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

    பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் இந்த விழாக்கால தள்ளுபடி சலுகைகளை பயன்படுத்தி பயன் அடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் தலைமை பொது மேலாளர் வி.ராஜீ மற்றும் சென்னை டெலிகாம் துணை பொது மேலாளர் ஜி.விஜயா ஆகியோர் தெரிவித்துள்ளனர். #BSNL
    ×