search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயத்தில் குடிநீா் கட்டணத்தை குறைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    காங்கயத்தில் குடிநீா் கட்டணத்தை குறைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    • காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில்மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.இதில் காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு குடிநீா்க் கட்டணமாக ரூ.100 மட்டுமே நிா்ணயிக்க வேண்டும். வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். நகரில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.

    பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் உறுதியளித்தாா்.கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா் எம்.மகேந்திரகுமாா், நகா்மன்ற நோ்முக உதவியாளா்சுப்பிரமணி மற்றும் நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×