search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5G"

    • போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.
    • குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்

    போக்கோ நிறுவனம் ஏர்டெல் உடன் கூட்டணி அமைத்து போக்கோ C51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இந்த கூட்டணியை நீட்டிக்கும் வகையில், ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதனை போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டான்டன் எக்ஸ் பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி ஏர்டெல் கூட்டணியில் உருவான புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ நியோ சீரிசில் இடம்பெற்று இருக்குமா அல்லது போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.



    அதில், இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனின் ஏர்டெல் வெர்ஷனாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். புதிய சாதனம் பற்றி வேறு எந்த தகவலும் குறிப்பிடாமல், அது இந்திய சந்தையில் அறிமுகமாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிவித்தார்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த சாதனம் போக்கோ C சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் சேவைகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் லாக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் தவிர போக்கோ இந்தியா நிறுவனம் தனது போக்கோ X6 நியோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் போக்கோ X6 மற்றும் போக்கோ X6 ப்ரோ மாடல்களுடன் இணையும். 

    • புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய 5ஜி போன் என்ட்ரி லெவல் மாடல் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பிராசஸர் அதிக செலவின்றி முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    முன்னதாக ஜியோ பிரான்டிங்கில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஸ்மார்ட்போன்களுக்கு இணையான திறன் கொண்டிருக்காத காரணத்தால், அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.

    இந்த போன்களில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த போதிலும், இதில் மற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. ஜியோ 5ஜி போன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மொபைல் போன் மட்டுமின்றி, ஜியோபுக், ஜியோ டைவ், ஜியோ வைபை மெஷ் எக்ஸ்டென்டர், ஜியோ ப்ளூடூத் கேம் கண்ட்ரோலர், ஜியோஃபை, ஜியோ எக்ஸ்டென்டர், யு.எஸ்.பி. கேமரா என பல்வேறு சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    • ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் உள்ளது.
    • ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் ரியல்மி 12 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி 12 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸரும், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் மாட்ல்களில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 ஒ.எஸ். மற்றும் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் கொண்ட மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

     

    ஐரோப்பாவுக்கான ரியல்மி தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ் வாங் இது தொடர்பான புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா பாகங்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

    இந்திய சந்தையில் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் நேவிகேட்டர் பெய்க், சப்மரைன் புளூ மற்றும் எக்ஸ்புளோரர் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கியது.
    • ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிப்பு.

    ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும், அறிமுகத்தின் போதே, புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கியது. இந்த வரிசையில், ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சப்மரைன் புளூ மற்றும் நேவிகேட்டர் பெய்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

     


    விலையை பொருத்தவரை ரியல்மி 12 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அறிமுக சலுகைகள்:

    ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வாங்குவோருக்கு 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக், எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகையும், 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

    • 7 வருடங்களுக்கு முன்பு ஒரு உறுதியளித்து அதனை செய்து காட்டினோம்
    • இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், தொழில்துறைக்கும் இது பயன்படும்

    இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவன குழுமம் ரிலையன்ஸ்.

    இந்நிறுவனத்தின் ஜியோ தொலைதொடர்பு நிறுவனம் 2016 செப்டம்பரில் தனது சந்தாதாரர்களுக்கு இலவசமாக 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணைய சேவை மற்றும் அழைப்பு வசதியை இலவசமாக கொடுத்தது. குறிப்பிட்ட காலம் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டாலும், பிறகு அதனை நீட்டித்து கொண்டே சென்றது.

    அதிரடியாக ஜியோவின் சேவை கட்டணங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்ததால், பல புதிய சந்தாதாரர்களும் இதில் இணைந்தனர். இதன் காரணமாக பிற தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவை கட்டணத்தை குறைத்து தர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

    இந்நிலையில், உலகெங்கும் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கிடைக்க வைக்கும் முயற்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். இது பற்றிய அறிவிப்பை ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது வருடாந்திர பொது கூட்டத்தில் அவர் வெளியிட்டார். அப்போது முகேஷ் அம்பானி கூறியதாவது..,

    "களைப்பே இல்லாத இந்தியாவின் சக்தியை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. முழுக்க முழுக்க தன்னம்பிக்கையால் தூண்டப்பட்ட ஒரு புதிய இந்தியா இது. புதுமைகளுக்கும், வளர்ச்சிக்கும், தேச முன்னேற்றத்திற்கும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட வேண்டும். உலகளாவிய போட்டி திறன் வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவு தவிர்க்க முடியாதது. இதனை இந்தியாவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்."

    "இதன்படி, 2 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு திறனுள்ள செயற்கை நுண்ணறிவுக்கான கணினி திட்டங்களை ரிலையன்ஸ் செயல்படுத்தும். 7 வருடங்களுக்கு முன்பு, அனைவருக்கும் இணைய சேவை தருகிறோம் என நாங்கள் வாக்களித்தோம். அதனை நிறைவேற்றியும் காட்டி இருக்கிறோம். இன்று உங்களுக்கு மீண்டும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறோம். எல்லோருக்கும், எங்கேயும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கிடைக்க செய்வோம் என உறுதியளிக்கிறோம். இந்தியாவிற்கு ஏற்ற செயல் வடிவங்களில் செயற்கை நுண்ணறிவு கட்டமைக்கப்படும்."

    "இது இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும், வர்த்தகங்களுக்கும், தொழில்துறைக்கும் பயன்படும் வகையில் அமையும். இதற்கான எல்லா தகவல்களும், தரவுகளும், திறனும், திறமை வாய்ந்த வல்லுனர்களுக்கும் இந்தியாவில் பஞ்சமில்லை," என்று அவர் தெரிவித்தார்.

    4ஜி சேவையில் புரட்சி செய்தது போல், செயற்கை நுண்ணறிவிலும் ஜியோ கால்பதிக்க போவதால் சந்தாதாரர்கள் மட்டுமின்றி அனைவரும் உற்சாகத்துடன் ரிலையன்ஸ்-இன் அடுத்தக் கட்ட நகர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

    • ஏர்டெல் நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • பயனர்களுக்கு வழங்கி வரும் சலுகை பலன்களை ஏர்டெல் அடிக்கடி மாற்றியமைத்து வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவச 5ஜி டேட்டாவை அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் ஏர்டெல் 5ஜி பிளஸ் நெட்வொர்க் அனுபவிப்பதை ஊக்குவிக்க முடியும் என ஏர்டெல் தெரிவித்து உள்ளது.

    இலவச அன்லிமிடெட் 5ஜி டேட்டா பெறுவது எப்படி?

    ரூ. 239 மற்றும் இதை விட அதிக தொகை கொண்ட பிரீபெயிட் சலுகை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து போஸ்ட்பெயிட் பயனர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தகுதியுடைய பயனர்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் (Airtel Thanks App) சென்று இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.

    பயனர்கள் இனி அதிவேக, பாதுகாப்பு நிறைந்த 5ஜி பிளஸ் சேவையை அனுபவிக்க முடியும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. அனைத்து சலுகைகளிலும் டேட்டா கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டதால், பயனர்கள் டேட்டா தீர்ந்துவிடுமோ என்ற அச்சம் இன்றி பயன்படுத்தலாம்.

    • ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளின் எல்டிஇ வேகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
    • மீடியா டவுன்லோட் வேகம் 13.87Mbps-இல் இருந்து 29.85Mbps ஆக அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் மீடியன் மொபைல் டவுன்லோட் வேகம் 115 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் வெளியீட்டை தொடர்ந்து மொபைல் டவுன்லோட் வேகம் திடீரென அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல் டவுன்லோட் வேகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29.85Mbps ஆக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் பற்றிய தகவல்களை ஊக்லா ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நெட்வொர்க் இண்டெலிஜன்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி பற்றி அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.

    இதன் காரணமாக சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியா 49 இடங்கள் முன்னேறி தற்போது 69 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 118 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 69 ஆவது இடத்திற்கு முன்னேரி இருக்கிறது. சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியாவின் வளர்ச்சி சில ஜி20 நாடுகளான மெக்சிகோ, ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினாவை விட அதிகரித்து இருக்கிறது.

     

    ஆய்வு அறிக்கையின் படி 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் எல்டிஇ வேகம் வளர்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இரு நிறுவனங்கள் புதிய நெட்வொர்க் கட்டமைப்புக்கு மேற்கொண்டு இருக்கும் முதலீடுகள் தற்போது பலன் அளிக்க துவங்கி இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி முதன் முதலில் வெளியிடப்படும் போது, 5ஜி நெட்வொர்க் திறன் பற்றி பயனர்களுக்கு முரணான கருத்துக்கள் இருந்து வந்தது. மீடியன் 5ஜி டவுன்லோடே வேகங்கள் குஜராத்தில் 512.57Mbps ஆகவும், மேற்கு உத்திரபிரேதச மாநிலத்தில் 19.23Mbps ஆக இருந்தது. தற்போது. ஒன்பது டெலிகாம் வட்டாரங்கள்: ஆந்திர பிரதேசம், கொல்கத்தா, வடகிழக்கு, ஹரியானா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், கேரளா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் டெஸ்டிங் காரணமாக மீடியன் 5ஜி டவுன்லோட் வேகம் 100Mbps-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.

    நான்கு மாதங்களுக்கு பின், 5ஜி மீடியன் டவுன்லோட் வேகம் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அதிகரித்து இருக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் தவிர இதர பகுதிகலில் 200Mbps வேகம் சீராக கிடைக்கிறது. கொல்கத்தாவில் 500Mbps வரையிலான டேட்டா வேகம் கிடைக்கிறது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • ஜியோ தவிர ஏர்டெல் நிறுவனமும் நாடு முழுக்க தனது 5ஜி சேவைகளை தொடர்ச்சியாக பல நகரங்களில் வெளியிட்டு வருகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு 50 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது நாடு முழுக்க 184 நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நகரங்களில் வசிக்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் 5ஜி சேவைகளை தங்களின் சாதனங்களில் பயன்படுத்த அழைக்கப்படுவர். ஜியோ ட்ரூ 5ஜி 1Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம்.

    "17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 50 கூடுதல் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிடுவதில் நெகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகிலேயே 5ஜி சேவை வெளியீட்டில் இது மிகப்பெரியது ஆகும். ட்ரூ 5ஜி வெளியீட்டை வேகப்படுத்தி இருக்கிறோம். 2023 புத்தாண்டில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பலன்களை ஒவ்வொரு ஜியோ பயனரும் அனுபவிக்க வேண்டும். " என ஜியோ செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.

    "டிசம்பர் 2023 முதல் நாட்டில் உள்ள அனைத்து ஜியோ வாடிக்கையாளரும் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை அனுபவிக்க முடியும். ஆந்திர பிரதேசம், அசாம், சட்டீஸ்கர், கோவா, ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ் நாடு, தெலுங்கானா, உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு கடமைப்பட்டுள்ளோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஜியோ ட்ரூ 5ஜி சேவைகள் ஸ்டாண்ட்-அலோன் 5ஜி ஆர்கிடெக்ச்சரில் வேலை செய்யும். இது 5ஜி ஸ்பெக்ட்ரமை 700MHz, 3500MHz, 26GHz பேண்ட்களில் வழங்குகிறது. ஜியோ 5ஜி சேவைகள் 4ஜி நெட்வொர்க் சாராமல் இயங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    • கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு ஒருவழியாக 5ஜி அப்டேட் வெளியாக இருக்கிறது.
    • பிக்சல் ஸ்மார்ட்போன்களில் 5ஜி அப்டேட் முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு 5ஜி சப்போர்ட் வழங்க துவங்கி இருக்கிறது. இதற்கான QPR பீட்டா 2 அப்டேட் ஏர்டெல் மற்றும் ஜியோ பயனர்களுக்கு வெளியிடப்பட்டு வருகிறது. டிசம்பர் மாதம் வெளியான பிக்சல் ஃபீச்சர் டிராப்-இல் 5ஜி சப்போர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது இந்த அம்சம் பீட்டாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    முதற்கட்டமாக 5ஜி டெஸ்டிங் செய்யப்பட்டு, பயனர்களிடம் தரம், பயன்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கருத்து கேட்கப்படும் என கூகுள் அறிவித்து இருக்கிறது. டெஸ்டிங்கை தொடர்ந்து ஸ்டேபில் அப்டேட் 2023 முதல் காலாண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. பீட்டா அப்டேட் என்பதால், இதில் அதிக பிழைகள் நிறைந்திருக்கும்.

    பீட்டா டெஸ்டிங்கில் பங்கேற்க பிக்சல் 6a, பிக்சல் 7 அல்லது பிக்சல் 7 ப்ரோ மாடல்களில் பீட்டா திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆண்ட்ராய்டு 13 பீட்டா திட்டத்தில் இருப்பவர்களுக்கு, சமீபத்திய QPR அப்டேட் கிடைத்திருக்கும்.

    • மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார்.
    • 5ஜி சேவை துவக்க நிகழ்வில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 5ஜி எப்போது வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

    இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை துவக்கி வைத்தார். தற்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் நாடு முழுக்க சுமார் 70-க்கும் அதிக நகரங்களில் 5ஜி சேவைகளை வெளியிட்டுள்ளன.

    ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவைகள் அடுத்த ஆண்டு வாக்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய டெலிகாம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் "பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் 2024 வாக்கில் துவங்கும்," என தெரிவித்து இருக்கிறார்.

    ஒடிசா மாநிலத்தில் 5ஜி சேவைகளை துவங்கி வைத்த மத்திய மந்திரி நாட்டில் பிஎஸ்என்எல் 5ஜி வெளியீடு பற்றிய கருத்துக்களை தெரிவித்தார். பிஎஸ்என்எல் தற்போது பயன்படுத்தி வரும் உள்கட்டமைப்புகளை கொண்டு 4ஜி-யில் இருந்து வேகமாக 5ஜி-க்கு அப்கிரேடு செய்து கொள்ள முடியும். மாநிலம் முழுக்க 4ஜி சேவைகளை வழங்குவதற்காக 100 டெலிகாம் டவர்கள் 100 கிராமங்களில் இன்ஸ்டால் செய்யப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த ஆண்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பிஎஸ்என்எல் 5ஜி சேவைகள் ஆகஸ்ட் 2023 வாக்கில் வெளியாகும் என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருந்தார். 2023 ஜனவரி மாதம் 4ஜி சேவைகள் வழங்கும் பணி துவங்கும். பின் ஆகஸ்ட் 2023 வாக்கில் 5ஜி வெளியீடு படிப்படியாக துவங்கும் என அவர் தெரிவித்து இருந்தார். தற்போதைய தகவல்களின் படி முந்தைய திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பாதக தெரியவந்துள்ளது.

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    • அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை பீட்டா டெஸ்டிங் செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃப்ரின் கீழ் இன்வைட் செய்யப்படும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிடும் பீட்டா டெஸ்டிங்கை ரிலையன்ஸ் ஜியோ துவங்கியது.

    ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் ஐஒஎஸ் 16.2 ஒஎஸ்-ஐ வெளியிட்டது. இந்த அப்டேட் ஐபோன் 12 சீரிஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. இதில் ஐபோன் SE 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது 5ஜி சப்போர்ட் கொண்ட ஐபோன் வைத்திருப்பவர்கள் ஜியோ வெல்கம் ஆஃபரில் இணைந்து கொண்டு இலவமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.

    இதற்கு பயனர்கள் முதலில் ஐபோனில் ஐஒஎஸ் 16.2 இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பின் ஐபோன் செட்டிங்ஸ்-இல் 5ஜி-யை தேர்வு செய்தால் 5ஜி நெட்வொர்க்-ஐ பயன்படுத்த முடியும்.

    ஐபோனின் செட்டிங்ஸ் -- மொபைல் டேட்டா -- வாய்ஸ் & டேட்டா ஆப்ஷன்களில் 5ஜி ஆட்டோ மற்றும் 5ஜி Standalone ON ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் செட்டிங்ஸ் -- பேட்டரி -- லோ பவர் மோட்-ஐ ஆஃப் செய்ய வேண்டும்.

    தற்போது குஜராத், பூனே, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்மை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ ஏற்கனவே அறிவித்து விட்டது.

    • 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன.
    • ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும்.

    மேலும், டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தலா ஒரு நகரத்தில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவை தொடங்கபட்டது. நவம்பர் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்குகின்றன. மேலும், விரைவில் பிஎஸ்என்எல்-லில் 5ஜி சேவை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×