search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "24-ஆம் புலிகேசி"

    • மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதையொட்டி சிலர் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீஸ்சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

    இதில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைது செய்து, 221 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்தாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    • சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும்.
    • பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாநகரம் சர்வதேச பின்னலாடை சந்தைகளில், அசைக்க முடியாத முக்கிய இடத்தில் இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 21 மாநிலங்களை சேர்ந்த 2.20 லட்சம் பேர் தொழில் நிமித்தமாக வசிப்பது, கொரோனா கால கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

    தமிழகத்தின் 39 மாவட்டத்தை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர்.தமிழகத்தின் தூங்கா நகரமாக இருப்பது மதுரை. தென்மாவட்டங்களை மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய இடமாக இருப்பது மதுரை. பின்னலாடை ஏற்றுமதி வர்த்த்கமும், உள்நாட்டு பனியன் உற்பத்தியும் வேகமாக வளர்ச்சி பெற்ற போது திருப்பூர் நகரமும், தூங்கா நகரமாக மாறிக்கொண்டிருந்தது. ஊரடங்கு வந்த பிறகு, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

    சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும் என்பது போலீசாரின் உத்தரவு. அப்படியிருந்தும் 12 மணி வரை சில கடைகள் மறைமுகமாக இயங்கின. அதிகாலை, 4 மணிக்கு ஓட்டல், பேக்கரிகள் திறக்கப்படுகின்றன. இடையே நான்கு மணி நேரம் மட்டுமே மூடப்படுகிறது.திருப்பூரில் வசிக்கும் வெளி மாவட்ட தொழிலாளர், தற்காலிகமாக வாடகை அறையில் தங்கி, ஓட்டலில் சாப்பிடுகின்றனர்.

    பனியன் நிறுவனங்களில் 12 மணி வரை உற்பத்தி தொடர்ந்தால் அதுவரை பேக்கரி - டீ கடைகளின் தேவையும் இருக்கிறது. கடைகள் 11 மணிக்கு மூடப்படுவதால் பல வகையில் வெளிமாநில தொழிலாளர் பாதிக்கப்பட்டனர்.தமிழக அரசு மீண்டும் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தொழிலாளர் சமூக பாதுகாப்பு குறித்து தொழிலாளர் துறையும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு, தொழிலாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர். அனைத்து கடைகளும்24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும், ஓட்டல், சிற்றுண்டி விற்கும் தள்ளுவண்டிகள், நடமாடும் டீக்கடைகள், பேக்கரிகள் மட்டுமே அதிக அளவு திறந்திருக்க வாய்ப்புள்ளது.

    தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். பர்னிச்சர் கடைகளும் பரபரப்பாக காணப்படும். பூ மார்க்கெட், பழக்கடைகளும், பழமுதிர்நிலையங்களும் மூடப்படும் வரை கூட்டமாக இருக்கும். இனி இரவு முழுவதும் கடை இயங்கலாம் என்பதால், பண்டிகைகால நெருக்கடிகள் குறைய வாய்ப்புள்ளது.

    • கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
    • ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் போலீசார் வடக்கு பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வடக்கு பேட்டை மார்க்கெட் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடையாக சோதனை செய்தனர். அப்போது ஒரு மளிகை கடை அருகே சந்தேகப்படும்படியாக சிறிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அவர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது சத்தியமங்கலம் வடக்குப்பட்டி பகுதியை சேர்ந்த ஆசாராம் (32)என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    அவருக்கு உதவியாக கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் செயல்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கிலோ மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் அதே பகுதியில் உள்ள மற்றொரு கடைக்கு போலீசார் சென்றபோது கடையின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய வெள்ளை சாக்கு மூட்டையுடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். போலீசை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார்.

    அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி(48) என்பதும், பையை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 22 கிலோ ஹான்ஸ், புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இவருக்கு உதவியாக இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேட்டன் என்பவரையும் போலீசார் பிடித்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் படத்தின் அடுத்த பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று நம்புவதாக இயக்குநர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார்.
    வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

    இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் உருவாக இருந்த இந்த படத்திலும் நடிகர் வடிவேலுவே நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு வடிவேலு படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது.


    இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை.

    இதையடுத்து இயக்குநர் சிம்புதேவன் தனது அடுத்த படத்தை இயக்க சென்றுவிட்டார். ஷங்கரும் ரஜினியின் 2.0 படத்தில் பிசியாகிவிட்டார். இந்த நிலையில், சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது அடுத்த படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பு முதலில் இருந்து மீண்டும் துவங்கப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

    போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. #Chennai #Drought
    சென்னை:

    போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளன.

    அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

    அதுபோல மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகும் அறிவியல் சார்ந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
    `மிஸ்டர்.லோக்கல்' படத்தில் பிசியாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது எஸ்.கே.14 படக்குழுவில் மீண்டும் இணைந்திருக்கிறார்.

    ரவிக்குமார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ரவிக்குமார், ரகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    சிவகார்த்திகேயன் இதில் விவசாயியாக நடிக்கிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.


    ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh

    இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் வடிவேலு இன்னமும் பங்கேற்காத நிலையில், வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. #ImsaiArasan
    வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரித்தார். இதிலும் கதாநாயகனாக நடிக்க வடிவேலுவையே ஒப்பந்தம் செய்தனர். சிம்புதேவன் இயக்கினார்.

    இதன் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து தொடங்கினார்கள். சில நாட்கள் படத்தில் நடித்த வடிவேலு ஆடை வடிவமைப்பாளரை மாற்றியது உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இயக்குனருடன் தகராறு ஏற்பட்டு விலகினார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. அரங்கையும் பிரித்துவிட்டனர். இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. 

    இந்த பிரச்சினையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு போனார் இயக்குனர் ஷங்கர். வடிவேலுவிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது.



    இதைத்தொடர்ந்து படத்தில் மீண்டும் நடிக்க வடிவேலு சம்மதித்துவிட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை. இதனால் படக்குழுவினர் வடிவேலுக்கு பதிலாக யோகிபாபுவை இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்க ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது.

    யோகிபாபு முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கிறார். கடந்த வருடம் மட்டும் 10 படங்களில் நடித்து இருந்தார். தற்போது தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில் எமன் வேடத்தில் நடித்து வருகிறார். அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனாலும் யோகிபாபு நடிப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. வடிவேலுவை மீண்டும் நடிக்க வைப்பதில் படக்குழுவினர் உறுதியாக இருப்பதாகவும், அது நடக்கவில்லை என்றால் யோகிபாபு நடிப்பது பற்றி சிந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. #ImsaiArasan #IA24P #Vadivelu #YogiBabu
     
    ராஜேஷ் படத்தை தொடர்ந்து ரவிக்குமார் இயக்கும் அறிவியல் சார்ந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிப்பதாக இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்தார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar
    சிவகார்த்திகேயன் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஜேஷ் இயக்கும் படத்திற்கு மிஸ்டர்.லோக்கல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரவிக்குமார் இயக்கும் படம் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.

    படம்குறித்து இயக்குநர் ரவிக்குமார் பேசும் போது,

    ``இது, அறிவியல் சார்ந்த படம். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.

    அறிவியல் சார்ந்த படம் என்பதால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக உள்ளன. இதற்காக 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் இரவு பகலாக பணிபுரிந்து வருகிறார்கள்.



    ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட `அலெக்சா எல்.எப்.' என்ற கேமரா, இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதி நவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ் படம், இதுதான். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், அரக்குவேலி ஆகிய இடங்களில் நடந்தது.

    இது, சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படமாக இருக்கும். படத்தில் அவர் விவசாயியாக நடிக்கிறார். ரகுல்பிரீத்சிங், வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார். கருணாகரன், யோகி பாபு நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார்கள்.'' இவ்வாறு அவர் கூறினார். #SK14 #Sivakarthikeyan #Ravikumar #RakulPreetSingh

    இம்சை அரசன் 24ஆம் புலிகேசி நடிக்க முடியாது என்று வடிவேலு பிடிவாதம் பிடித்து வந்த நிலையில், தற்போது சமரசம் ஏற்பட்டு படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #IA24P #Vadivelu
    இம்சை அரசன் படத்தில் நடிக்க மறுத்ததால் நடிகர் வடிவேலுவுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். 

    சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்தன. இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

    இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தை நாடினார். எனினும் தீர்வு எட்டவில்லை. இந்த நிலையில் தான் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக செய்திகள் பரவின. எனினும் வடிவேலு விடாப்பிடியாக இருந்தார்.



    இந்த நிலையில், இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு, படப்பிடிப்புக்காக சென்னை வர சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.

    முன்னதாக படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துணை நடிகர், நடிகைகளும் ஒப்பந்தமாகினர். வடிவேலுவின் விடாப்பிடியால் அனைவரும் தேதியை ஒதுக்கிட்டு தவித்தனர்.

    இந்த நிலையில், பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IA24P #Vadivelu

    ஈரான் ராணுவ அணிவகுப்பில் 24 பேரை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #Iran #MilitaryParade #TerroristAttack
    டெக்ரான்:

    ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், 1980-ம் ஆண்டு ஈரானை ஆக்கிரமித்ததால் இரு நாடுகளுக்கு இடையே நடந்த போரின் தொடக்கத்தை நினைவுகூர்ந்து ஈரானில் உள்ள அவாஸ் நகரில் கடந்த 22-ந் தேதி ராணுவ அணிவகுப்பு நடந்தது. அப்போது அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்துகொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் படுகாயம் அடைந்தனர்.



    துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேரில் 2 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஈரானை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை ஈரான் உளவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் கூறும்போது, “கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.இந்த தாக்குதலுக்கு அரபு பிரிவினைவாதிகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் போட்டி போட்டுக்கொண்டு பொறுப்பேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    டெக்ரான்:

    ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன், ஈரானை 1980-ம் ஆண்டு ஆக்கிரமித்தார். அதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் செப்டம்பர் 22-ந்தேதி இரு நாடுகள் இடையே போர் தொடங்கியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா. சபையின் முயற்சியால் போர் முடிவுக்கு வந்தாலும், இது 20-ம் நூற்றாண்டில் பேரழிவை சந்தித்த போர்களில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுகிறது.

    அந்தப் போர் தொடங்கியதை நினைவுகூர்ந்து ஈரானில் முக்கிய நகரங்களில் நேற்று ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    அங்குள்ள அவாஸ் நகரில் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு ராணுவ அணிவகுப்பு தொடங்கியது. அதை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் கூடி இருந்தனர்.



    இந்த நிலையில், அணிவகுப்பு மைதானம் அருகே உள்ள ஒரு பூங்காவில் இருந்து அணிவகுப்பில் கலந்து கொண்ட வீரர்களையும், பார்வையிட வந்திருந்த பொதுமக்களையும் குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்டது.

    ராணுவ சீருடை அணிந்த 4 பயங்கரவாதிகள் ஒன்று சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டால் ராணுவ அணிவகுப்பு சீர்குலைந்தது. பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பூங்காவுக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். அங்கே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்த பயங்கரவாதிகளை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பயங்கரவாதிகள் குண்டுபாய்ந்து பலியாகினர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    4 பயங்கரவாதிகளும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை, ஒரு பெண் உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  10 நிமிடங்களில் இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது.

    பலியான 24 பேரில் ஈரான் ராணுவ வீரர்கள்; பத்திரிகையாளர்; பொதுமக்களும் அடங்குவர் என தெரியவந்துள்ளது.

    பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு பற்றி ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் ரமேசான் ஷெரீப் நிருபர்களிடம் பேசுகையில், “துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதிகள் சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அல் அவாஸியா பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இப்படி ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவரை நடந்தது கிடையாது” என குறிப்பிட்டார்.

    பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இந்த அவாஸ் நகரில், வாழ்க்கைத்தரம் குறைந்து விட்டதாகக் கூறி அரசுக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

    பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷெரீப் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ ஒரு வெளிநாட்டு அரசால் பயங்கரவாதிகள் அமர்த்தப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, ஆயுதங்கள் தந்து, கூலி கொடுத்து அவாஸ் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.

    மேலும், “இந்த தாக்குதலுக்கு ஈரான் விரைவாகவும், உறுதியாகவும் பதிலடி கொடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். 
    இம்சை அரசன் பட விவகாரத்தில் வடிவேலு பிடிவாதமாக இருப்பதால் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், இதுகுறித்து வடிவேலு விளக்கம் அளித்துள்ளார். #ImsaiArasan #Vadivelu
    இயக்குனர் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’. இவர்கள் கூட்டணியில் 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இது.

    சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப் பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, படக்குழுவி னருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலுமே இல்லை. நீண்ட காலமாக இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சங்கம் விவாதித்து வந்தது .

    இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் தயாரிப்பாளர் ‌ஷங்கர் மற்றும் வடிவேலு தரப்பிலிருந்து அவருடைய மேலாளர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘வடிவேலு எந்தவித நிபந்தனையுமின்றி படப்பிடிப்பில் கலந்து கொண்டு முடித்து கொடுக்க வேண்டும் அல்லது இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை மற்றும் சம்பளத் தொகை அனைத்தும் சேர்த்து வட்டியுடன் அளிக்க வேண்டும்’ என்று முடிவெடுக்கப்பட்டது.



    இந்த முடிவால் வடி வேலு தரப்பினர் அதிர்ச் சியடைந்தனர். தன்னுடைய நிலை குறித்து தயாரிப்பாளர் சங்கத்துக்குக் வடிவேலு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    “இம்சை அரசன் 24 ம் புலிகேசியில் நடிக்க 2016-ம் ஆன்டு ஜூன் 1-ந்தேதியில் ஒப்புக் கொண்டேன். அதே ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்த படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங் களில் நடிப்பதை தவிர்த்தேன்.

    ஆனால், டிசம்பர் 2016 வரை படத்தைத்தொடங்காமலே காலம் தாழ்த்தினர். தயாரிப்பாளர் மற்றும் சினிமா தொழிலின் நலன் கருதி, அதன்பிறகும் பல்வேறு தேதிகளில் அந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தேன்.

    இந்நிலையில், என்னுடைய பிரத்யேக ஆடை வடிவமைப்பாளரை தயாரிப்பு நிறுவனம் நீக்கியது. அத்துடன், எனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கடிதத்தை கொடுத்து, ஏதோ எனக்கு இந்த ஒரு படத்தின் மூலம்தான் சினிமா உலகில் புகழ் ஏற்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

    நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016-க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்தக் காலம் முடிந்து ஒரு வருடத்திற்கு பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, 2016-2017ம் ஆண்டுகளில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந் தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.

    பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற் கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்”

    இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.



    ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப் பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

    இதனைத் தொடர்ந்து, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிரச்சினையை முடிக் கும்வரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப் பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று அறிவுறுத் தியுள்ளது.

    வடிவேலுவுக்கு தயாரிப் பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்ததாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன. இதுகுறித்து வடிவேலுவின் பதில் அறிய அவரை தொடர்புகொண்டபோது அவர் ‘அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வர வில்லை. யாரோ கிளப்பி விட்ட வதந்தி இதுதொடர்பாக எனக்கு இதுவரை எந்த நோட்டீசும் வரவில்லை’ என்றார். #ImsaiArasan #Vadivelu 

    ×