என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோகித் சர்மா"

    • சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர்.
    • விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 'ஏ+' (Grade A+) பிரிவில் இருந்த இவர்கள், தற்போது 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.

    கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே 'ஏ' பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர்.

    பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோகித் ஷர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யாகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    சி பிரிவில் அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ராணா, வருண் சகரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், 2025-26ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.

    2023-24 சீசனுக்கான மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன் , ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர்; ஆனால் ஷ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்தத்தில் சேர்த்த பிசிசிஐ, இஷான் கிஷனை இன்னும் இணைக்கவில்லை

    • நான்கு வீராங்கனைகளுக்கு A தர ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன
    • முகமது ஷமி இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை

    பிசிசிஐ-யின் 2025-26 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தப் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 'கிரேடு பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 'ஏ+' (Grade A+) பிரிவில் இருந்த இவர்கள், தற்போது 'பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக குறைய வாய்ப்புள்ளது.

    கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள் அவர்களின் ஆட்டம் மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் Grade A, B மற்றும் C என பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடும் வீரர்களுக்கே 'ஏ' பிரிவில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    அதன்படி சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவர் மட்டுமே தற்போது உயரிய 'ஏ'பிரிவில் உள்ளனர். மகளிர் அணியில் ஜெமிமா ரோட்ரிகஸ், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஏ பிரிவில் உள்ளனர். முன்னதாக தரவரிசையில் இருந்து 'A+' பிரிவு நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  


    • எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்.
    • உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம்.

    2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம்பெறுவார்களா என்பது தற்போது வரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

    ஆனால் விராட் கோலியின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. சமீபத்திய தொடர்களில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவை) சிறப்பாக விளையாடி உள்ளார். அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் போன்றவர்கள் அவரை 2027 திட்டத்தில் முக்கியமாகக் கருதுகின்றனர்.

    அதே சமயத்தில் ரோகித் சர்மா, சமீப தொடர்களில் சில சிறப்பான இன்னிங்ஸ் ஆடியுள்ளார், ஆனால் சில போட்டிகளில் சொதப்பியுள்ளார். இருப்பினும், அணி அவரை முக்கியமாகக் கருதுகிறது.

    இந்நிலையில் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களாக என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இது குறித்து தோனி கூறியதாவது:-

    அடுத்த உலகக் கோப்பையில் ஏன் விளையாடக் கூடாது? என்னைப் பொறுத்தவரை, உடற்தகுதியை வயது தீர்மானிக்காது. அவர்களது பெர்ஃபார்மன்ஸ், பிட்னஸ் தான் தீர்மானிக்கும்.

    உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம். அனுபவம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் ஏன் விளையாடக்கூடாது.

    ஆனால் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். நான் டெப்யூ செய்தபோது 24 வயது, யாரும் என்னிடம் வயது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதே போல், 1, 2, 5 அல்லது 10 வருடங்கள் விளையாடினாலும், வயது பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது.

    அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அணியில் இருப்பார்கள். சிறப்பாகச் செயல்படாவிட்டால், இருக்க மாட்டார்கள் என தோனி கூறினார்.

    • டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    துபாய்:

    அயர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    துபாயில் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.

    அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆடியதன் மூலம் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் புதிய சாதனை படைத்தார். இது அவருக்கு 160-வது ஆட்டமாகும்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சாதனையை இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் (159 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.

    • அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும்.
    • மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

    இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி தொடரந்து தொடர்களை கைப்பற்றி வருகிறார்.

    இவரது கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:-

    சூர்யகுமார யாதவ் மிகவும் அமைதியான தலைவர். இதை நாங்கள் களத்தில் பார்த்திருக்கிறோம். அவருக்கு ஆட்டத்தைப் பற்றி நன்கு தெரியும். மேலும் அவர் ஆட்டத்தை நன்றாகப் புரிந்துகொள்கிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    • பத்மஸ்ரீ விருதுக்கு ரோகித் சர்மா முழுத் தகுதியானவர்.
    • இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய வீரராக அவர் தனித்து நிற்கிறார்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ரோகித் அந்த விருதுக்கு முழுத் தகுதியானவர் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் KSCA தலைவருமான வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    பத்மஸ்ரீ விருது பெறுவது ஒரு மிகப்பெரிய சாதனை. மேலும் ரோகித் சர்மா அதற்கு முழுத் தகுதியானவர். அவர் பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் விளையாடி, ஒரு அசாதாரணமான சாதனைகளைப் படைத்துள்ளார். இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே இந்திய வீரராக அவர் தனித்து நிற்கிறார்.

    மேலும் ரோகித்துக்கு 16 அல்லது 17 வயது இருந்தபோது, அவர் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணிக்காக விளையாடிய காலத்திலிருந்தே நான் அவரைப் பார்த்து வருகிறேன். அப்போதே, அவரிடம் இருந்த அபாரமான திறமையையும் ஆற்றலையும் காண முடிந்தது.

    ஆரம்பத்திலிருந்தே என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அவர் தனது ஷாட்களை ஆடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டார் என்பதுதான். இந்தியாவில் உருவான எந்தவொரு சிறந்த வீரருடனும் நீங்கள் ரோகித் சர்மாவை எளிதாக ஒப்பிடலாம். நாம் பேசிக்கொண்டிருப்பது அப்படிப்பட்ட ஒரு தரமான பேட்ஸ்மேனைப் பற்றித்தான்.

    என அவர் கூறினார்.

     


    • பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம்.
    • 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

    கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

    பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்பிரீத் கவுருக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    விளையாட்டுத் துறையில் தங்கள் சாதனைகளுக்காக பல்தேவ் சிங், பகவான் தாஸ் ரைக்வார் மற்றும் கே. பஜனிவேல் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்தியா 2011-ல் உலகக் கோப்பையை வென்றது.
    • ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.

    இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் ரோகித் சர்மா. இவரது தலைமையிலான இந்திய அணி 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதற்கு முன்னதாக இந்தியா எம்.எஸ். டோனி தலைமையில் 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிருந்தது. 13 வருடத்திற்குப் பிறகு இந்தியா உலகக் கோப்பை வென்றுள்ளது.

    இது தொடர்பாக ரோகித் சர்மா கூறியதாவது:-

    நம்முடைய நிலை கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, அது எப்போதுமே அவ்வாறு சென்று கொண்டிருக்காது என்று எப்போதுமே நான் நம்புவேன். ஒரு காலக்கட்டத்தில் பழைய நிலை திரும்பும். ஆனால், அதற்கு 13 வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என நான் நினைக்கவில்லை.

    2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றோம். அதன்பின் 2024-ல் மீண்டும் கோப்பையை கைப்பற்றினோம். அதற்கு 13 ஆண்டுகள் ஆகின. நாம் 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். சரியாக பார்த்தோம் என்றால் 11 வருடம் எடுத்துக் கொண்டது. எனினும், 11 வருடங்களும் மிக நீண்டு காலம்தான்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன்.
    • இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன்.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது. அத்துடன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் விரைவில் இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்க இருப்பது குறித்து 38 வயதான ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான், அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை பயணத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லை என்பதை உணர்வீர்கள்.

    இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன். அது முன்பிருந்தது போல் இருக்காது. ஆனால் நிச்சயம் இது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது. எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர் அறிவது முக்கியம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.
    • தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 352 ரன்கள் குவித்து அசத்திய நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் ஐசிசி பேட்டர்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் (845 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 2 ஆம் இடத்திற்கு சறுக்கியுள்ளார்.

    தரவரிசையில் 3 ஆம் இடத்தில இருந்த ரோகித் 1 இடம் சறுக்கி 4ஆம் இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 3-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், கே.எல்.ராகுல் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    • 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது.
    • ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.

    ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ, பி மற்றும் சி கிரேடுகளுக்கு முறையே ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1கோடி அளிக்கப்படுகிறது.

    டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.

    இந்த நிலையில் கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.

    கோலி, ரோகித்சர்மாவுடன் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோரும் 'ஏ' பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கோலி 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி 302 ரன்கள் குவித்தார்

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

    இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி (785 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்துள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

    முதலிடத்தில் இருந்து ரோகித் 2 இடங்கள் சறுக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார். நியூசில்ந்து வீரர் டேரில் மிட்செல் (784 புள்ளிகள்) 2 இடம் பிடித்துள்ளார். இப்ராஹிம் சத்ரன் 4-வது இடத்திலும் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    ×