என் மலர்
நீங்கள் தேடியது "ரீ ரிலீஸ்"
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 3. 2012ம் ஆண்டில் தமிழில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் மொழி மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது.
தமிழை போலவே, 3 திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.
இது ஒரு காதல் உளவியல் த்ரில்லர் திரைப்படம், இதில் தனுஷ் இருமுனை கோளாறால் (bipolar disorder) பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார். அனிருத் இசையில், பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது.
'3' திரைப்படம் ஏற்கனவே 2022 (தெலுங்கு மாநிலங்களில்) மற்றும் செப்டம்பர் 2024 (தமிழகத்தில்) ஆகிய ஆண்டுகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
பொதுவாக ஒரு படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 1-2 ஆண்டுகளுக்குள் மீண்டும் பெரிய அளவில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது அரிது. இந்நிலையில், 3 திரைப்படம் தெலுங்கு மொழியில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
அதன்படி, பிப்ரவரி 6ம் தேதி அன்று உலகம் முழுவதும் தெலுங்கு மொழியில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இன்னும் 50 நாட்களில் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று படையப்பா ரீரிலீஸ் ஆகவுள்ளது.
- ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதன்படி, ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4K தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், படையப்பா ரீ ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோவின் ப்ரோமோவை சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முழு வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. 75வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவரது இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, ரஜினியின் பிறந்தநாள் அன்று படையப்பா ரீ ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, ரஜினியின் பிறந்தநாளான வரும் 12ம் தேதி அன்று சூப்பர் ஹிட் திரைப்படமான படையப்பா 4K தரத்தில் வெளியாக இருப்பதாக சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல.. நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாகவும் படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனால், படையப்பாவின் ரீ ரிலீஸ்க்காக ரசிகர்கள்கள் ஆவலுடன் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
அதன்படி, தமிழில் நாளை (நவ. 14) ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.
காந்தா:
துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கும்கி 2:
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதராஸ் மாஃபியா கம்பெனி:
அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.
படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிணறு:
இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிணறு'. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.
தாவூத்:
இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாய்: ஸ்லீப்பர் செல்:
கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
சூதாட்டம்:
இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆட்டோகிராஃப்:
கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.
- ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
- மனிதன் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டு எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்துள்ளார். இப்படத்தில் சோ, வினு சக்கரவர்த்தி, ரகுவரன், செந்தில், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். மனிதன் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகின.
இந்நிலையில், ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை கொண்டாடும் வகையில் மனிதன் படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி ரீ ரிலீஸ் செய்யவுள்ளனர்.
மனிதன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆவதால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- சுந்தரா டிராவல்ஸ் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது
- இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது
இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.
முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் 'சுந்தரா டிராவல்ஸ்' திரைப்படம் வரும் 8ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மே மாதம் இப்படம் ரீ-ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால இப்படம் அப்போது வெளியாகவில்லை. இப்போது புதுப்பொலிவுடன் இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.
ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ராஞ்சனா படம் மூலமாக தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
- ராஞ்சனா படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது
2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ராஞ்சனா (அம்பிகாபதி) திரைப்படம் வெளியானது. இப்படமே தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அண்மையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இந்த புதிய கிளைமேக்ஸ் அப்படத்தின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன்னுடைய கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸ்காட்சியை மாற்றி படத்தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளதாகவும் இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அம்பிகாபதி படத்தின் கிளைமேக்ஸை ஏஐ மூலம் மாற்றி ரீரிலீஸ் செய்ததற்கு நடிகர் தனுஷ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஏஐ மூலம் மாற்றியமைக்கப்பட கிளைமேக்ஸை உடன் வந்துள்ள அம்பிகாபதி படம், என்னை முழுமையாக தொந்தரவு செய்துவிட்டது. என் கருத்தை மீறி இதை வெளியிட்டுள்ளனர். 12 வருடங்களுக்கு முன் நான் ஓகே சொன்ன படம் இது இல்லை
ஏஐ மூலம் செய்யப்படும் இவ்வகை மாற்றங்கள், சினிமாவை அச்சுறுத்துகிறது. வருங்காலத்தில் இவ்விஷயத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் தேவை" என்று தெரிவித்தார்.
- 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அம்பிகாபதி திரைப்படம் வெளியானது.
- தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.
2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அம்பிகாபதி திரைப்படம் வெளியானது. இப்படமே தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.
இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில். படத்தை மீண்டும் நேற்று ரீரிலீஸ் செய்தனர். ஆனால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.
இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. இதுக்குறித்த ஆனந்த் எல் ராய் கூறியதாவது " அம்பிகாபதி படத்தை என்னிடம் கூறாமலே தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளது . அந்த கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய ஒரு படைப்பை எடுத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த செயலை ஒரு துரோகமாக கருதிகிறேன்" என கூறியுள்ளார்.
- முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
- 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.
இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ்.
முரளி, வடிவேலு, ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படத்தின் காமெடி காட்சிகள் இப்போதும் தொலைக்காட்சிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. தஹா மலையாளத்தில் இயக்கி வெற்றி பெற்ற 'இ பறக்கும் தள்ளிகா' என்ற படத்தின் ரீமேக்காக சுந்தரா டிராவல்ஸ் உருவானது.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க நகைச்சுவை நிறைந்து இருக்கும் இப்படம் வடிவேலுவுக்கும் முரளிக்கும் திருப்புமுனயை ஏற்படுத்திய திரைப்படமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளார்கள். மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரீ-ரிலீஸ் படங்கள் அதிக வெற்றியை பெற்று வருவதால் சுந்தரா டிராவல்ஸ்-க்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பும் வசூலிலும் சாதனையும் பெறுகிறது.
அதேபோல் விஜய் சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, விஷால், சசிகுமார், சுந்தர் சி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களும் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண்குமார் உள்ளிட்டோரின் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ஓரளவு வசூல் தான் கிடைத்துள்ளது. இதனால் தமிழ் சினிமா மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், தற்போது மக்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான 'ஹிட்' படங்களை ரீ-ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அதனடிப்படையில் அண்ணாமலை, யாரடி நீ மோகினி, வாரணம் ஆயிரம், பில்லா, திருமலை, வாலி, பிரேமம், காதலுக்கு மரியாதை, சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய படங்களுக்கு வரவேற்பு இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக வாய்ப்பு.
- கில்லி படம் 20 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது.
தமிழ் திரைத்துறையில் கடந்த காலங்களில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படங்களை தற்போது ரீ- ரிலீஸ் செய்வது டிரெண்டாகி உள்ளது.
அவ்வாறு, சிவா மனசுல சக்தி, விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் விஜய் நடித்து வெளியான கில்லி படம் 20 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆனது. இதில், இதுவரை கில்லி 8 கோடிக்கும் மேல் வசூலாகியுள்ளது.
தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் நடித்து வெளியான மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளான மே 1ம் தேதி அன்று, அவர் நடித்து சூப்பர் ஹிட் ஆன பில்லா படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்- ஷாலினியின் இன்று 24வது திருமண நாளையொட்டி இந்த அறிவிப்பு வௌயிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்நிலையில் அஜித் பிறந்த நாள் மே 1- ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- அன்றைய தினம் ‘பில்லா’ படம் தியேட்டர்களில் 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' ,விஜய் நடித்த 'கில்லி' உள்ளிட்ட படங்கள் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடி வருகின்றன.
பிரபல நடிகர் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடித்த படம் பில்லா. இப்படத்தில் நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம் நடித்துள்ளனர். இயக்குனர் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கினார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் 2008 - ம் ஆண்டு 'பில்லா' படம் வெளியானது. இப்படம் 1980 -ல் ரஜினி நடித்த 'பில்லா' படத்தின் 'ரீமேக்' ஆகும்.
இந்நிலையில் அஜித் பிறந்த நாள் மே 1- ந் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு அன்றைய தினம் 'பில்லா' படம் தியேட்டர்களில் 'ரீ-ரிலீஸ்' செய்யப்படுகிறது.

ஜிபி என்டர்டெயின்மென்ட்டின் அரவிந்த் சுரேஷ் குமார் - டாக்டர் ஞானபாரதி ஆகியோர் மே 1- ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் 150 தியேட்டர்களில் இப் படத்தை வெளியிடுகிறார்கள். இப்படம் மீண்டும் வெளியாக உள்ளதை யொட்டி அஜீத் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






