என் மலர்
நீங்கள் தேடியது "ஜன நாயகன்"
- ‘ஜனநாயகன்’ படம் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
- பைசன், டியூட், ஆண்பாவம் பொல்லாதது போன்ற படங்களுக்கு பிறகு திரையரங்குகளில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜனநாயகன்' படம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
சர்வதேச அளவில் வெளியாக இருந்த 'ஜனநாயகன்' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது. இதை தொடர்ந்து படம் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளிவைப்பதாக அறிவித்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றும் படம் வெளியாவதில் இழுபறி நீடித்து வருகிறது.
'ஜனநாயகன்' படம் வெளியாகும் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
'ஜனநாயகன்' படம் வெளியிடுவது ஜாக்பாட் என காத்திருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இதனால் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. சமீபகாலமாக திரையரங்குகள் ஓ.டி.டி. பாதிப்பு மற்றும் பார்வையாளர்களின் வரத்து குறைவினால் நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் 'ஜனநாயகன்' படத்தினால் நிம்மதி பெருமூச்சு விடலாம் என ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் 'ஜனநாயகன்' படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை உருவாக்கி உள்ளது.
இது குறித்து திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறும் போது, 'தமிழக திரையரங்குகள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது. ஒற்றை திரையரங்குகள் பல மூடப்பட்டு வருகிறது. படங்களின் வெளியீட்டில் சரியான அட்டவணையை தயாரிப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தொழில்துறையில் உள்ள பிரச்சனைகளை ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும்.
பைசன், டியூட், ஆண்பாவம் பொல்லாதது போன்ற படங்களுக்கு பிறகு திரையரங்குகளில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. 'ஜனநாயகன்' படம் திரையரங்கத்தை மீண்டும் உயிர்பித்திருக்கும். பொங்கல் விடுமுறை 10 நாட்கள் இருந்தது. ஜனநாயகனுக்கு அது சரியான நேரமாக இருந்தது. ஆனால் 'ஜனநாயகன்' படத்தின் தாமதத்தால் தமிழக திரையரங்குகள் ரூ.100 கோடி வரை இழப்பை சந்தித்து உள்ளன என்றார்.
தமிழ்நாடு திரையரங்குகளை பொறுத்தவரை விஜய் நடித்த கடைசி படம் 'ஜனநாயகன்' என்பதால் வசூலை பொறுத்தவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கையுடன் திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை
- தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை
'ஜன நாயகன்' பட தணிக்கை சான்று விவகார வழக்கில் ஜன.27 அன்று, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி, இந்த வழக்கினை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கே அனுப்பி வைத்தது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது.
இதனிடையே சட்டப் போராட்டத்தைத் தொடர்வதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக தெரிகிறது.
- நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன்.
முரளி கிரிஷ்.எஸ் இயக்கத்தில் நாளை மறுநாள் (30-ந்தேதி) திரைக்கு வர இருக்கும் படம் 'கருப்பு பல்சர்'. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ் மதுனிகா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசினார். சமீப காலமாக விஜய்யை கடுமையாக எதிர்த்து கருத்துக்களை வெளியிட்டு வந்த மன்சூர்அலிகான் நேற்று நடந்த 'கருப்பு பல்சர்' பட விழாவில் 'ஜன நாயகன்' பட விவகாரம் குறித்து விஜய்க்கு ஆதரவாக பேசினார். படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர தாமதிப்பதாக கூறி தணிக்கை வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
படம் எடுப்பது என்பது படைப்பாளியின் சுதந்திரம். ஆனால் தற்போது அந்த சுதந்திரம் பறிபோய் கொண்டு இருக்கிறது. படைப்பாளிகள் நசுக்கப்பட்டு வருகிறார்கள். மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கையில் விஜய்யின் ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாமல் தணிக்கை வாரியம் செய்வது எந்த வகையில் நியாயம். மத்திய அரசு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அந்த படத்துக்கு முதலீடு செய்த தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஏன் தணிக்கை வாரியம் யோசிக்க மறுக்கிறது.
இந்த படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது. அவரது கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள் .ஆனால் பொங்கல் பண்டிகைக்கு அந்த படத்தை வரவிடாமல் செய்து விட்டார்கள். இப்போது அந்த படத்தை வெளியிடவே கூடாது என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள் .
தணிக்கை வாரியத்தின் இந்த செயல் அப்பட்டமான தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் போக்காக தெரிகிறது. மத்திய அரசும் அதற்கு துணை போகிறது. நாட்டில் எவ்வளவோ அத்துமீறல்கள் அடக்கு முறைகள் மக்கள் பிரச்சனைகள் இருக்கும் போது துளி கூட செவி சாய்க்காத மத்திய அரசு இது போன்ற பிரச்சனைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து முழுமூச்சாக இறங்குவது பயமாக இருக்கிறது. இப்படி சென்றால் படைப்பாளியின் சுதந்திரம் என்ன ஆவது. இதை நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. நான் என் மனதில் பட்டதை தைரியமாக சொல்வேன். எந்த இடத்திலும் பயம் இல்லாமல் பேசுவேன். எனக்கு யாரைப் பற்றியும் கவலை கிடையாது. திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும்.
இந்த போக்கு தொடர்ந்தால் படங்கள் இனி சுதந்திரமாக வெளிவர முடியாது. என்னை கேட்டால் தணிக்கை வாரியமே எதற்கு என்பேன். நல்ல படத்தை மக்கள் மதிப்பீடு செய்து சான்றிதழ் அளித்தால் போதும். எதற்கு தணிக்கை வாரியம்? என்று பேசினார்.
- ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.
- தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
இந்நிலையில், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்று, தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிவைசிங் கமிட்டியிடம் செல்வதா அல்லது வழக்கை தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவை பட தயாரிப்பு நிறுவனம் நாளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
- தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
- தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
- சென்சார் கிடைக்காததால் ஜன நாயகன் படம் இன்னும் வெளியாகவில்லை.
- இன்று செய்தியாளர்களை சந்தித்து லோகேஷ் கனகராஜ் பேசினார்
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாகவிருந்து. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் கிடைக்காததால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இப்படத்தில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், "வினோத் அண்ணாவும், விஜய் அண்ணாவும் ஜனநாயகனில் கேமியோ செய்ய அழைத்தார்கள்.. அவ்வளவுதான் என்னால் சொல்லமுடியும்" என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஜன நாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்ததை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.
- ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. முன்னதாக படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து ஜன.20 அன்று ஜன நாயகன் வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்று தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்களை முன்வைத்தன. நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை இருதரப்பினரிடமும் எழுப்பினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவானது.
இந்நிலையில் இந்த வழக்கில் வரும் ஜன.27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு ஜன நாயகன் தணிக்கை வழக்கை விசாரிக்கிறது.
- நீதிபதி பி.டி.ஆஷா ஜனநாயகன் படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- ஜனநாயகன் சென்சார் விவகாரம் தொடர்பாக மோகன் ஜி பேசினார்.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இதனையடுத்து ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு ஜனவரி 20 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், திரௌபதி 2 படம் தொடர்பாக பேட்டி அளித்த மோகன் ஜி, சென்சார் தொடர்பாக பேசினார்.
அந்த பேட்டியில், "சென்சார் போர்டுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நீதிமன்றத்துக்கு சென்றால் ஜெயிக்க முடியாது " என்று கூறி விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளார். .
- நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- சென்னை உயர்நீதிமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலை 11.30 முதல் நான்கு மணிவரை தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
- 500 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது
- படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும்
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மறு தணிக்கை தொடர்பாக ஜனவரி 5ஆம் தேதியே ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துவிட்டோம். ஜனவரி 6ம் தேதி தான் சான்றிதழ் கோரி பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மறுஆய்வு முடிவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரவில்லை. பதில் மனு தாக்கலுக்கு அவகாசம் தராமல், மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய உத்தரவு தனி நீதிபதியால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இதனையடுத்து மண்டல வாரியத்தில் யார் படத்தை பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்தது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மண்டல தணிக்கை வாரிய அதிகாரி ஜனநாயகன் படத்தைப் பார்த்தாரா? என நீதிபதி கேள்வி. அதற்கு அவர் படத்தைப் பார்க்கவில்லை, தணிக்கை குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது. தொடர்ந்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னது யார் என நீதிபதி வினவினார். அதற்கு, புகாரை அடுத்து சான்றிதழ் வழங்கும் முடிவை நிறுத்திவைத்தோம். தற்போதுவரை இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜன நாயகன் படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
- இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது
ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வு காலை 11.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது.
- 3 மாத்ததிற்கு பிறகு படத்தை பார்க்க மக்கள் தயாராக இருக்கமாட்டார்கள்
- ஜன.21 உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில், படத்திற்கும் போதுமான விளம்பரங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. 3 மாத்ததிற்கு பிறகு படத்தை பார்க்க மக்கள் தயாராக இருக்கமாட்டார்கள். எனவே இருநீதிபதிகள் தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதிகள் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதன்படி முன்பு உயர் நீதிமன்றம் குறிப்பிட்டவாரே ஜன.21 -ல் உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.






