என் மலர்
வழிபாடு
- கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனும் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக நடந்தது.
கோவில் உள் பிரகாரம் 10 டன் மலர்களாலும், கோவில் முழுவதும் மனம் வீசக்கூடிய 50 ஆயிரம் வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ரதசப்தமி முன்னிட்டு இன்று ஏழுமலையான் ஒரே நாளில் 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இன்று அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.
9 முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை தங்க கருட வாகனத்திலும், 1 முதல் 2 மணிவரை அனுமந்த வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்தார்.
மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் விண்ணதிர கோஷம் எழுப்பினர். கற்பூரத்தை ஏற்றி தீபாரதனை செய்தனர்.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடக்கிறது. தீர்த்த வாரிக்குப் பிறகு பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவர்.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ரத சப்தமி விழாவை காண நேற்று முதல் பக்தர்கள் திருப்பதி மலைக்கு வர தொடங்கினர். இதனால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் நிரம்பியது. அதற்கு வெளியே 5 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்களுக்கு திருப்பதி மலையில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு 4 லட்சம் லட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் கூடுதலாக 5 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி விழாவை முன்னிட்டு நேர ஒதுக்கீட்டு தரிசனம் மற்றும் வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதியில் நேற்று 76, 654 பேர் தரிசனம் செய்தனர். 34. 080 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.81 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மிதுனம் காரிய சித்தி உண்டாகும் வாரம்.
- சிம்மம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம்.
மேஷம்
தொழில் மாற்ற சிந்தனை ஏற்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இழுபறியாக இருந்த முயற்சிகள் இப்பொழுது நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும். உடலும், மனமும் பொலிவு பெறும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவர் அவரின் வயதிற்கும், தேவைக்கும் ஏற்ற மாற்றம் உண்டாகும்.
தொழிலை மேம்படுத்த அல்லது தொழில் மாற்றம் செய்ய வங்கிக் கடன் கிடைக்கும். ஏழரைச் சனி உள்ளதால் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது. உத்தியோகம் சம்பந்தமான பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் பாவங்கள் விலகும்.
ரிஷபம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதுவரை சந்தித்த அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் விலகும். புதிய முயற்சிகளில் முழுமையான வெற்றிகள் உண்டாகும். கொடுத்த வாக்கையும் நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகும். பணியில் கவுரவம் நிலைத்திருக்கும். அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும்.
வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த பெற்றோர்கள் மீண்டும் சேருவார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தால் குடும்பத்துடன் இணைந்து வாழ்வார்கள். சகோதர, சகோதரிகள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகள் சித்திக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தில் சீராகும். உயர் கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்கலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்
காரிய சித்தி உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். மறைந்த புதன் நிறைந்த பலனை வழங்குவார். வாக்கு உண்மை உண்டாகும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். பற்றாக்குறை வருமானத்தால் கவலை அடைந்தவர்களுக்கு உபரி வருமானம் கிடைக்கும். உங்கள் செயல்பாட்டில் மற்றவர்களின் குறுக்கீடு இருக்காது. குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
பணிபுரியும் இடத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும். தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். கடன் சுமை குறையும்.பொருளாதார நிலை உயரும். முன்னோர்களின் சொத்து பாகப் பிரிவினையில் முறையான பங்கீடு கிடைக்கும். முன்னோர்கள் வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்கும் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடைபெறும். எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் கைகூடும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் கடன், நோய், எதிரி சார்ந்த பாதிப்புகள் அகலும்.
கடகம்
முட்டுக்கட்டைகள் அகலும் வாரம். ராசிக்கு சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் பார்வை உள்ளது. ஆன்ம பலம் உண்டாகும். மனப் போராட்டம் அகலும். உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள்.நினைத்ததை நினைத்தபடியே முடிப்பீர்கள். பல நல்ல மாற்றங்கள் வரலாம். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தன வரவு தாராளமாக வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சீராகும். உறவுகளின் பகை மறையும். சிலர் பார்க்கும் வேலையில் நிலவும் அசவுகரியத்தால் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். சுப காரியங்கள் கைகூடும். வாழ்க்கை துணைக்கு தாய் வீட்டுச் சீதனமாக மதிப்பான சொத்துக்கள் கிடைக்கும். கை கால் மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் குறைய துவங்கும். பெண்களின் முயற்சிக்கு கணவரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் மனக்குறைகள் அகலும்.
சிம்மம்
உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும் வாரம். லாப ஸ்தானத்தில் 5,8ம் அதிபதியான குரு சஞ்சரிப்பதால் திட்டமிட்ட காரியங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரியும் பெண்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு, கவுரவப் பதவிகள் தேடி வரும். நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசு உத்தியோகம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருப்தியான நல்ல வருமானம் கிடைக்கும்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்கும். ஒரு பெரும் பணம் சொத்து விற்பனையில் கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஆரோக்கிய தொல்லை அகன்று மருத்துவ செலவு குறையும். 25.1.2026 அன்று பகல் 1.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கிடைக்கிறது என்பதற்காக தொழிலில் அதிக முதலீடு செய்யக் கூடாது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலும் ஆன்மாவும் உள்ளமும் குளிரும்.
கன்னி
சுப விரயம் உண்டாகும் வாரம். ராசி அதிபதி புதன் விரயாதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். அதிக முதலீட்டுடன் புதிய தொழில் தொடங்குவதை தவிர்க்கவும். எந்த ஒரு செயலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். வீடு வாங்கும் முயற்சியில் இருந்த குழப்பங்கள் அகலும். சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு செய்து மகிழ்வீர்கள். வீடு வாகனத்தை புதுப்பிப்பீர்கள். சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும்.
அதிக சம்பளத்தில் வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆன்மீக தலங்களுக்குச் சென்று மன நிம்மதியை அதிகரிப்பீர்கள். மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமையும். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் உண்டாகும். 25.1.2026 அன்று பகல் 1.36 மணி முதல் 27.1.2026 அன்று மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர் விசயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். ரதசப்தமி அன்று சூரிய நமஸ்காரம் செய்வதால் மனமகிழ்ச்சி உண்டாகும்.
துலாம்
தடைகள் விலகும் வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. அனுபவ அறிவு வெளிப்படும். கடினமான வேலையும் எளிமையாக முடிக்கும் திறமை மேலோங்கும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பாக்கிய ஸ்தானமும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் பலம் பெறுகிறது. பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் ஆர்வம் அதிகரிக்கும். குல தெய்வ அருளால் பூர்வீகம் சம்பந்தமான விசயங்கள், வழக்குகள் முடிவிற்கு வரும்.
திருமணம் போன்ற சுபகாரியங்கள் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் நிலவிய சங்கடங்கள் மறையும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அதற்குத் தேவையான நிதி உதவி கிடைக்கும். 27.1.2026 அன்று மாலை 4.45 மணி முதல் 29.1.2026 அன்று மாலை 6.39 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல் மிகுதியாகும்.மனக் குழப்பங்கள் கூடும். விரயங்கள் அதிகமாக இருக்கும். தினமும் முறையாக சூரிய நமஸ்காரம் செய்தால் பித்ருக்கள் தோஷம் குறையும்.
விருச்சிகம்
மாற்றங்கள் நிறைந்த வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் தொழில் ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இதனால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தானாக வந்து சேரும். தாய், தந்தை வழி ஆதரவு உண்டு. பொருளாதாரம் உயரும். கடன்களை படிப்படியாக குறைப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும். உங்கள் பெயரில் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
அனைத்து விதமான எதிர்பார்ப்புகளும் ஈடேறும். உடல் நலன்களில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரால் ஏற்பட்ட மன சஞ்சலம் சீராகும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். புதுவிதமான பொருட்களை வாங்க வேண்டும் என்கின்ற ஆசை அதிகமாக உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். புத்திர பிராப்த்தம் கிடைக்கும். 29.1.2026 அன்று மாலை 6.39 மணி முதல் 31.1.2026 அன்று இரவு 8.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது பொறுமையும், நிதானமும் தேவை. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் தன்னம்பிக்கை கூடும்.
தனுசு
செயல்திறன் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு சனி மற்றும் குருவின் பார்வை உள்ளது. எதிர்பாராத நல்ல திருப்பங்கள் நல்ல சம்பவங்கள் நடப்பதற்கான அறிகுறி தென்படும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், களத்திரம் மூலம் சிறுசிறு பிரச்சினைகள் தலை தூக்கினாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு உருவாகலாம்.
பொருளாதாரம் மேம்படும். பற்றாக்குறை பட்ஜெட் என்ற பேச்சிற்கே இடமில்லை. அக்கம், பக்கம் உள்ளவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். பூர்வீகச் சொத்திற்கு நல்ல விலை கிடைக்கும். சுப விரயங்கள் உண்டாகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். குடும்பத்துடன் ஆடம்பர விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் துன்பங்கள் விட்டு விலகும்.
மகரம்
லட்சியங்களும் கனவுகளும் நிறைவேறும் வாரம். ராசியில் ராசிக்கு 9ம் அதிபதியான புதனும் 10ம் அதிபதியான சுக்கிரனும் சேர்ந்து நிற்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். விலகிச் சென்ற உறவுகள் நட்பு பாராட்டுவார்கள். உறவினர் பகை அகலும். தைரியம், தெம்பு அதிகமாகும். பூர்வீகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகும். திருமணத் தடை அகலும். புத்திர பிராப்தம் உண்டாகும். உடல் நிலை தேறும்.
அரசாங்க ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடப்பெயர்ச்சி கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழில்களில் முன்னேற்றங்கள் அதிகமாக இருக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு வீடு மாற்றம் செய்வீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். பணத்திற்காக பிறரை அண்டிப் பிழைத்த நிலைமாறும். குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான சுற்றுப் பயணம் செய்வீர்கள். புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்
யோகமான பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி சனி தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். பங்குச் சந்தை ஆதாயம் அதிகரிக்கும். இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் நிலவிய கருத்து மோதல்கள் அகலும். பணிபுரியும் இடத்தில் முக்கியப் பொறுப்புகள் கொடுக்கப்படலாம். உங்கள் திறமையால் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளின் திருமண முயற்சி சாதகமாகும். பெண்களுக்கு உடன் பிறப்புகளின் உதவியும் தாய் வழி ஆதரவும் கிடைக்கும். வேறு வேறு ஊர்களில் பணிபுரிந்த தம்பதிகள் ஒரே இடத்தில் பணிபுரியும் வகையில் இடப்பெயர்ச்சி நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஆர்வத்தில் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் வெற்றி நிச்சயம் உண்டாகும்.
மீனம்
லாபகரமான வாரம். ஒரு ஜாதகத்திற்கு பலம் சேர்ப்பது லாப ஸ்தானமாகும். அந்த வகையில் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை உள்ளது. முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். இதுவரை எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். அடிப்படை வசதி பெருகும். மதிப்பும், மரியாதையும் உயரும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை குறையும். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும்.சொத்துப் பிரச்சினை சுமூகமாகும். உங்கள் குடும்ப விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள். இனிமை தரும் இடமாற்றங்கள் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிய சிலர் மீண்டும் சொந்த மண்ணில் குடியேறும் வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வதால் காரிய தடை அகலும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூரிய பிரபையிலும், ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-11 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சப்தமி இரவு 9.19 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : ரேவதி நண்பகல் 12.10 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், அம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்
இன்று ரத சப்தமி. ஸ்ரீ நமசிவாய மூர்த்தி நாயனார் குரு பூஜை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் சூரிய பிரபையிலும், ஸ்ரீ வேணு கோபாலன் திருக்கோலமாய் காட்சி. கோவை ஸ்ரீ பால தண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கானா முகத்தான் ஸ்ரீ சிவபெருமானுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நற்செய்தி
ரிஷபம்-பரிசு
மிதுனம்-ஆக்கம்
கடகம்-மேன்மை
சிம்மம்-இன்பம்
கன்னி-உழைப்பு
துலாம்- தனம்
விருச்சிகம்-வாழ்வு
தனுசு- பாசம்
மகரம்-பக்தி
கும்பம்-செலவு
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பணம் வந்து பையை நிரப்பும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.
ரிஷபம்
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மறைமுக எதிர்ப்பு உண்டு. விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் குணமறிந்து செயல்படுவது நல்லது.
மிதுனம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
கடகம்
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
சிம்மம்
விரோதங்கள் அகல விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். திட்டமிட்ட காரியத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.
கன்னி
இல்லம் தேடி நல்ல தகவல் கிடைக்கும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பிய நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழில் ரீதியான பயணம் வெற்றியை தரும்.
துலாம்
வெற்றி செய்திகள் வீடு தேடி வரும் நாள். மனக்குழப்பங்கள் அகலும். இடமாற்றம் இனிமை தரும். வரவு திருப்தி தரும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூடும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
தனுசு
கல்யாண முயற்சி கைகூடும் நாள். மனக்குழப்பம் அகலும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
மகரம்
யோகமான நாள். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். மதிப்பும், மரியாதையும் உயரும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு.
கும்பம்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு, வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும்.
மீனம்
போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
- சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு.
- நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும்.
உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி.
சூரிய பகவான் தனது 7 குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி திருப்பிப் பயணத்தைத் தொடங்கும் புனித நாளே 'ரத சப்தமி'. தை மாத வளர்பிறை சப்தமி திதியில் கொண்டாடப்படும் இந்த நாள், சூரிய பகவானின் பிறந்த நாளாகவும் (சூரிய ஜெயந்தி) போற்றப்படுகிறது.
இந்த ஆண்டு ரத சப்தமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. சப்தமி திதி நாளை அதிகாலை 12:39 மணிக்கு தொடங்கி இரவு 11:10 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி அதிகாலை 4:56 முதல் 6:36-க்குள் புனித நீராடுவது நல்லது.
ரத சப்தமி அன்று மிக முக்கியமான வழிபாடு 'எருக்கன் இலை' வைத்து நீராடுவது ஆகும். ஆண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் விபூதி வைத்து நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கன் இலைகளுடன் அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்து நீராட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் கடந்த 7 ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும், தீராத நோய்கள் குணமாகி ஆரோக்கியம் மேம்படும் என்பதும் ஐதீகம். அர்க்கன் என்றால் சூரியன் என்று பொருள். அர்க்கன் இலை என்பதே மருவி எருக்கன் இலை என மாறிவிட்டது.
சூரிய கதிர்களை கிரகிக்கும் சக்தி எருக்கன் இலைக்கு உண்டு. சூரிய கதிர்களில் உள்ள நல்ல சக்திகளை உடலுக்குள் செலுத்தும். தீபாவளியன்று நீராடுவது எவ்வளவு விசேஷமானதாக கருதப்படுகிறதோ அதேபோல, ரத சப்தமி நீராடலும் முக்கியமானது.
ரத சப்தமி அன்று வாசலில் சூரிய ரதம் போன்ற கோலமிட்டு, அதன் நடுவில் சூரிய-சந்திரர்களை வரைய வேண்டும். சூரிய ஒளிபடும் இடத்தில் புதுப்பானையில் பால் பொங்க வைத்து, சர்க்கரைப் பொங்கல் மற்றும் உளுந்து வடை நிவேதனம் செய்வது சிறப்பு.
இந்த உலகில் தோன்றிய பழமையான வழிபாடுகளில் ஒன்று சூரிய வழிபாடு. கண்கண்ட கடவுளாக நாள்தோறும் தோன்றி மறைந்து உயிர் இயக்கத்துக்குத் தேவையான ஒளியையும் உணவையும் அருள்பவர் சூரியன்.
சிவனும் நாராயணனும் சூரிய வடிவிலே துதிக்கப்படுவது வழக்கம். தெய்வங்களில் நாராயணனைப் போன்று சங்கு சக்கரம் தரித்தவர் சூரியபகவான். 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அவர் வலம் வருவதாகப் புராணங்கள் சொல்கின்றன.
சூரியன் ஒளித் தேரில் பவனி வருகிறான். ஒளியின் 7 வண்ணங்களே 7 குதிரை களாகச் சொல்லப்படுகின்றன. ரத சப்தமி நாளில் புனித நீராடி சூரியனை வழிபட வேண்டும்.
சூரிய பகவான் நாராயணனின் அம்சமாகவும் இருப்பதால் விஷ்ணு சஹஸ்ரநாமப் பாராயணமும் செய்வது நன்மையைத் தரும். சூரியன் ஆரோக்கியத்துக்கு உரிய கிரகம். சூரியனை வழிபடுவதன்மூலம் அவரின் அருளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
ரத சப்தமி அன்று சூரியனுக்கு ஒரு எளிய பரிகாரத்தை செய்வதால் வாழ்க்கையில் அளவில்லாத மாற்றங்களை பெற முடியும். அதன்படி ரத சப்தமி அன்று ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீருடன் சிறிதளவு பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரை எடுத்துச் சென்று, வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும்.
"ஓம் ஸ்ரீசிவசூரிய நாராயண சுவாமியே நமஹ" என்ற மந்திரத்தை 3 முறை சொல்லி அந்த தண்ணீரை வெள்ளை எருக்கம் செடிக்கு ஊற்ற வேண்டும். மிக எளிமையான இந்த பரிகாரத்தை செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் பெரியவர்கள்.
நகரத்தில் இருப்பவர்கள் வெள்ளை எருக்கம் செடியை கண்டுபிடிக்க முடியாது. அதனால் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் சிறிதளவு பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு வெல்லம் கலந்து, மனிதர்கள் கால்படாத இடமாக பார்த்து தூவி விடலாம்.
நாம் அளிக்கும் பச்சரிசியை ஒரு எறும்பு சாப்பிட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும் என்பார்கள். அதனால் பாவங்கள் நீங்கி, புண்ணிய பலன்களையும், சூரிய பகவானின் அருளையும் பெறுவதற்கு எறும்புகளுக்கு பச்சரிசி மாவை சாப்பிட கொடுப்பது நல்லது.
ரத சப்தமியன்று துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதும், இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. ஜோதிட ரீதியாக தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். பிதுர் லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார்.
ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.
தலைமைப் பொறுப்புகளைப் பெற வேண்டி வழிபடக்கூடிய முக்கியமான கடவுள் சூரிய பகவான். அரசு வேலையில் உயர் பதவி வேண்டுவோர், பதவி தொடர்பாக தடைகள் உள்ளவர்கள், வழக்குகளில் வெற்றி வேண்டுபவர்கள் ரத சப்தமி விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுவது நன்மை தருவதாகும்.
கோவில்களில் நவகிரக சன்னதியில் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். ரத சப்தமி அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
- கோவில் நுழைவுவாசலில் கொடி மரம், மயில் வாகனம் ஆகியவை அமைந்திருக்கின்றன.
- பங்குனி உத்திரம் மற்றும் கந்தகஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.
சென்னை மடிப்பாக்கத்தில் கல்யாண கந்தசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். ஒரு சமயத்தில் இந்த பகுதியை சேர்ந்த முருக பக்தர்கள், அடிக்கடி கந்தகோட்டம், திருப்போரூருக்கு சென்று கந்தசுவாமியை தரிசித்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கந்தசுவாமியை இப்பகுதியிலேயே பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினர். அதன் அடிப்படையில் தான் இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. முதலில் இங்கு விநாயகர் மட்டுமே அருள்பாலித்து வந்தார். அதன்பிறகு, முருகப்பெருமானுக்கு சன்னிதி கட்டினர்.
கோவில் நுழைவுவாசலில் கொடி மரம், மயில் வாகனம் ஆகியவை அமைந்திருக்கின்றன. கருவறையில் வள்ளி-தெய்வானை சமேதராக அருள்பாலிக்கும் கல்யாண கந்தசுவாமியை தரிசிக்க ஆறு படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இந்த ஆறு படிகளும், 'சரவணபவ' எனும் முருகப்பெருமானின் சடாட்சர மந்திரத்தை நினைவுப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படிகளுக்கு படி பூஜையும் நடத்தப்படுகிறது.
கோவில் பிரகாரத்திற்கு தெற்கு பகுதியில் கருணை கணபதியும், வடக்கு பகுதியில் அங்காரகனும் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். கோஷ்டத்தில் குரு பகவானும், ஜெய துர்க்கையும் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள். ராமர், சீதா தேவி, லட்சுமணர், அபிதகுசலாம்பிகை சமேத அருணாச்சலேசுவரர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். கோவிலில் நவக்கிரகங்களுக்கும் தனிச் சன்னிதி உண்டு.
இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கு 'தில பத்ம தானம்' எனும் விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. 'தில' என்றால் எள் என்றும், 'பத்ம' என்றால் தாமரை என்றும் பொருள்படும். அதாவது செவ்வாய்க்கிழமை அன்று, இத்தல அங்காரகனுக்கு எள்ளையும், தாமரையும் சமர்ப்பித்து மனமுருக வழிபாடு செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
பங்குனி உத்திரம் மற்றும் கந்தகஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அப்போது, முருகப்பெருமான் அணிந்திருக்கும் மாலையை திருமணமாகாதவர்கள் வாங்கி அணிந்து கொண்டால் விரைவில் திருமணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே தான் இத்தல முருகன், 'கல்யாண கந்தசுவாமி' எனப் போற்றப்படுகிறார்.
- ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு.
- சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல்.
ரத சப்தமி என்பது இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாளாகும். அமாவாசைக்குப் பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். தை அமாவாசைக்குப் பிறகு வரும் சப்தமி திதி 'ரத சப்தமி' என்று அழைக்கப்படுகிறது. இது சூரியன் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. எனவே இந்த நாளை 'சூரிய ஜெயந்தி' என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சூரிய பகவானை வழிபட்டால் பலவிதமான நன்மைகளை பெறலாம்.
காஷ்யப முனிவரின் மனைவியர்களில் ஒருவர் அதிதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சமயத்தில், கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டின் வெளியே ஒரு அந்தணர், "மிகவும் பசியாக இருக்கிறது. உணவு இருந்தால் கொடுங்கள்" என்று யாசகம் கேட்டு நின்றார். நிறைமாத கர்ப்பிணி என்பதால் கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு, மெதுவாக உணவு எடுத்து வந்து யாசகரிடம் கொடுத்தார்.
அப்போது கோபம் அடைந்த யாசகர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? என்னை அவமானம் செய்துவிட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபமிட்டார். இதனால் பயந்து போன அதிதி, இது பற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். அவரோ, "கவலைப்படாதே, நமக்கு தேவலோகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் கிடைப்பான்" என்று கூறினார். அதன்படி, அதிதிக்கு மகனாக பிரகாசமான ஒளியுடன் சூரியன் பிறந்தார். இந்த தினமே 'ரத சப்தமி' ஆகும்.
இந்த ஆண்டு ரத சப்தமி மார்கழி மாதம் 11-ம் நாள் (25-1-2026) நாளை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருபவர், சூரிய பகவான். ரத சப்தமி அன்று சூரிய பகவானை வழிபாடு செய்வதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். சூரியனுக்கு உகந்ததாக எருக்கம் இலை உள்ளது. ரத சப்தமி அன்று, ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராட வேண்டும். இதனால் ஆரோக்கியமும், செல்வ வளமும் உண்டாகும் என்கிறார்கள்.

ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் இருந்தால் அடுத்து வரும் பிறவிகளில் முன்னேற்றங்கள் கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த நாளில் தியானம், யோகா செய்வது சிறந்தது.
ரத சப்தமியில் சூரிய உதயத்தின்போது குளித்து விரதம் இருந்தால் செல்வந்தராக உயர்வார்கள் என்கின்றது புராணம். அன்றைய தினம் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. சூரியனாருக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது சிறப்பு.

அன்றைய தினம் குளித்து முடித்தபின் சூரியனை வணங்க வேண்டும். அதன்பின் சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும். சூரியனுக்கு உகந்த நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல். எனவே சூரிய பகவானுக்கு பொங்கல் நைவேத்தியம் படைத்து, பின்பு அதை பிறருக்கு கொடுப்பது சிறப்பான பலன் தரும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலம் போடுவது வழக்கம்.
திருமாலின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பெருமான் எழுந்தருள்வார். அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளையும், குறையாத ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.
சூரிய பகவானை ரத சப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, 'ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா!' என்று சொல்லி வணங்கலாம். சூரியனை பொங்கல் அன்றும், ரத சப்தமி நாளிலும் மட்டும் வணங்காமல் தினமும் வழிபட்டு வாழ்வில் தீவினை என்னும் இருள் விலகி, நன்மை என்னும் ஒளி பரவ செய்வோம்.
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் அதிகரித்து காணப்பட்டது. 3 நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் நாளை நடைபெறும் மினி பிரமோற்சவம் எனும் ரத சப்தமியில் தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இதனால் பக்தர்களை தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.
காத்திருப்பு அறைகளை தாண்டி பக்தர்கள் தரிசனத்திற்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை வரிசையில் காத்திருக்கின்றனர்.
திருப்பதியில் கடும் குளிர் வீசுவதால் வரிசையில் தரிசனத்திற்கு காத்திருக்கும் முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் குளிரில் நடுங்கியபடி அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு டீ, காபி, பால், குடிநீர், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 69,726 பேர் தரிசனம் செய்தனர். 27,832 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மூங்கில் செடிகளை குளியலறை அல்லது கழிப்பறைக்கு அருகில் வைக்கக்கூடாது.
- மூங்கில் செடி நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைப்பதற்கு மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படும் பல செடி மற்றும் மரங்கள் உள்ளன. இவைகள் வைத்தால் நேர்மறை ஆற்றல் பரவும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், பலர் தங்கள் வீடுகளிலும் மூங்கில் செடிகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் மூங்கில் செடிகளை வீட்டில் வைக்கலாமா, இல்லையா? அப்படி வைத்தால் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்...
வீட்டில் மூங்கில் நடுதல்
இந்து மதத்தில், மூங்கிலை குடும்ப வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. வேதங்கள் மூங்கிலை மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் அடையாளமாக விவரிக்கின்றன. வீட்டில் ஒரு மூங்கில் செடியை வைத்திருப்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. வாஸ்துவின் படி, இந்த செடியை வீட்டில் நடுவது சுற்றியுள்ள சூழலில் இருந்து எதிர்மறையை நீக்கி நேர்மறை ஆற்றலை வளர்க்கிறது.
சரியான திசையில்
ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, மூங்கில் செடியை சரியான திசையிலும் இடத்திலும் வைப்பது மிகவும் முக்கியம். தவறான இடத்தில் நடுவது நல்ல பலன்களை விட மோசமான பலன்களையே தரும்.

மூங்கில் எங்கே வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வரவேற்பறையிலோ அல்லது அறையிலோ ஒரு மூங்கில் செடியை வைக்கலாம். அவ்வாறு செய்வது குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு பரிமாறவும், வீட்டுப் பிரச்சனைகளைப் போக்கவும் உதவுகிறது.
நேர்மறை ஆற்றல்
நீங்கள் ஒரு மூங்கில் செடியை சரியான இடத்தில் வைத்தால், அது உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதோடு, உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரும்.
சிறந்த திசை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் கிழக்கு திசையில் மூங்கில் செடியை நடுவது சிறந்தது. அடுத்தபடியாக, வடக்கு திசையிலும் மூங்கில் செடியை நடலாம்.
தவறான திசை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, மூங்கில் செடிகளை குளியலறை அல்லது கழிப்பறைக்கு அருகில் வைக்கக்கூடாது. மேலும், சமையலறையிலும் வைக்கக்கூடாது.
நன்மைகள்
வீட்டில் மூங்கில் செடியை வைத்திருப்பது நிதி நிலைமையை வலுப்படுத்துவதோடு தேவையற்ற செலவுகளையும் குறைக்க உதவும். இந்த செடி குடும்ப உறுப்பினர்களின் மூடிய அதிர்ஷ்டங்களுக்கு கதவுகளைத் திறக்கும். இது வணிக வளர்ச்சிக்கான புதிய வழிகளையும் திறந்து வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுவருகிறது. மூங்கில் செடி நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
- வளர்பிறை சஷ்டி விரதம்.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-10 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி இரவு 11.14 மணி வரை பஞ்சமி
நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 1.19 மணி வரை பிறகு ரேவதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சஷ்டி விரதம், ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று வளர்பிறை சஷ்டி விரதம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கலிகம்ப நாயனார் குரு பூஜை. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சனம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பக்தி
மிதுனம்-பாராட்டு
கடகம்-கவனம்
சிம்மம்-நற்செயல்
கன்னி-லாபம்
துலாம்- தாமதம்
விருச்சிகம்-வரவு
தனுசு- ஆதாயம்
மகரம்-இரக்கம்
கும்பம்-நன்மை
மீனம்-பொறுமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். சேமிப்பை உயர்த்த முயற்சி எடுப்பீர்கள்.
கடகம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். சமூகத்தில் உங்கள் மதிப்பும். மரியாதையும் உயரும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும் சூழல் ஏற்படும்.
சிம்மம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். செயலில் வேகம் காட்ட வேண்டாம். வேலையாட்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வரவைவிட செலவு கூடும்.
கன்னி
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். வெளியூர்களில் இருந்து அலைபேசி வாயிலாக நல்ல செய்திகள் வந்துசேரும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.
துலாம்
தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். காரியத்தில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.
விருச்சிகம்
யோகமான நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை தருவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மகிழ்ச்சி தரும்
தனுசு
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடன் இருப்பவரிடம் கவனம் தேவை.
மகரம்
நீண்ட நாளைய கனவு நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும்.
கும்பம்
எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே என நினைப்பீர்கள்.
மீனம்
குடும்பச் சுமை கூடும் நாள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமான பற்றாக்குறை அகலும்.
- பிரம்மதேவர், “நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார்.
- சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இத்தல மூலவரான முருகப்பெருமான் காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞர் போலவும், மாலையில் முதியவர் போலவும், ஒரு நாளில் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி பாடியுள்ளார்.
தல வரலாறு
ஒரு முறை கயிலாயத்துக்கு வந்த பிரம்மதேவர், சிறுவனாக இருந்த முருகப்பெருமானை கவனிக்காமல் சென்றார். அப்போது பிரம்மாவை அழைத்த முருகப்பெருமான், "நீங்கள் யார்?" எனக் கேட்டார். அதற்கு பிரம்மதேவர், "நான் தான் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மா" என்றார். பிரம்மதேவரின் அகந்தையை அழிக்க நினைத்த முருகப்பெருமான், படைக்கும் தொழிலுக்கு ஆதாரமாக இருக்கும் பிரணவத்திற்கு பொருள் கேட்டார். பிரம்மதேவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழிக்க, முருகப்பெருமான் அவரை சிறை வைத்தார்.
பிரம்மதேவரிடம் கேள்வி கேட்டபோது, அதிகாரத் தோரணையில் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக்கொண்டிருக்கும் தோற்றத்தில் முருகப்பெருமான் காட்சி தந்தார். அதே அமைப்பில் இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
ஒரு சமயம் முருக பக்தர் ஒருவர் தல யாத்திரையாக இத்தலம் வந்தார். அவர் இங்கு தீர்த்த நீராட எண்ணி, இங்கிருந்த ஆண்டிகளிடம், "இங்கே நீராடும் இடம் எங்கே உள்ளது?" என்று கேட்டார்.
அதற்கு ஆண்டிகள், "அப்படி இந்த ஆலயத்தில் தீர்த்தம் எதுவும் கிடையாது" என்று பதிலளித்தனர்.
அப்போது அங்கு ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்த முருகப்பெருமான், தீர்த்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்வதாகக் கூறி ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார்.
பின்பு, குறிப்பிட்ட இடத்தில் தன்னிடம் இருந்த வேலால் குத்தினார், முருகப்பெருமான். உடனே, அந்த இடத்தில் இருந்து நீர் பெருக்கெடுத்து ஓடி குளமாக மாறியது. அதுவே இத்தலத்தில் 'வேலாயுத தீர்த்தம்' என்ற பெயரில் உள்ளது. அந்த பக்தர் ஆச்சரியத்தில் திகைத்தவாறே தீர்த்தத்தில் நீராடினார். பின்பு முருகப்பெருமான், பக்தருக்கு தன் சுயரூப காட்சியை கொடுத்து அருளினார். இவரே இத்தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமியாக அருள்பாலிக்கிறார்.
முருகப்பெருமான், ஆண்டி கோலத்தில் சிறுவனாக வந்து காட்சி தந்த தலம் என்பதால், இத்தலம் ஆண்டியார்குப்பம்' என்று அழைக்கப்பட்டது. பின்பு அதுவே மருவி, 'ஆண்டார்குப்பம்' என்றானது.
கோவில் அமைப்பு
கோவிலில் மூலவரான முருகப் பெருமான், தன்னுடைய கரங்களில் வேல், வஜ்ரம், சக்தி என எந்தவித ஆயுதமும் இன்றி, இடுப்பில் கரங் களை வைத்தபடி காட்சி தருகிறார். இறைவன் அதிகார தோரணையில் இருப்பதால் 'அதிகார முருகன்' என்றும் அழைக்கப்படுகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனங்கள் உள்ளன.
மூலவர் சன்னிதிக்கு எதிரில் பிரம்மதேவர், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். அவருக்கு உருவம் இல்லை. பிரம்மாவுக்கு உரிய தாமரை, கமண்டலம், அட்சர மாலை போன்றவை மட்டும் காணப்படுகிறது. கோவில் முன்மண்டபத்தில் காசி விசுவ நாதர், விசாலாட்சி, நடராஜர் சன்னிதிகளும் உள்ளன. இங் குள்ள விநாயகர், 'வரசித்தி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
வழிபாடு
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், பொறுப்பான பதவிகள் கிடைக்கவும், அதிகாரம் உள்ள பதவியில் இருப்பவர்களின் பணி சிறக்கவும், புத்திசாலித்தனமான பிள்ளைகள் பிறக்கவும் வழிபாடு செய்கிறார்கள்.
தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருமணமாகாதவர்கள் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமியை தொடர்ச்சியாக 6 வாரம் வணங்கினால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
அமைவிடம்
திருவள்ளூரில் இருந்து சுமார் 33 கி.மீ. தொலைவிலும், சென்னை எழும்பூரில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவிலும் ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.






