என் மலர்
வழிபாடு
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-17 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி காலை 11.22 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : அவிட்டம் காலை 7.11 மணி வரை பிறகு சதயம் நாளை விடியற்காலை 4.22 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : சித்த, மரணயோகம்
ராகு காலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சன சேவை, தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - உழைப்பு
ரிஷபம் - முயற்சி
மிதுனம் - பொருமை
கடகம் - சாந்தம்
சிம்மம் - நிறைவு
கன்னி - மேன்மை
துலாம் - யோகம்
விருச்சிகம் - உதவி
தனுசு - உழைப்பு
மகரம் - இரக்கம்
கும்பம் - நட்பு
மீனம் - பொறுப்பு
- வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.
- நாளை மறுநாள் வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் ஆண்டுதோறும் ஒரே இடத்தில் 25 பெருமாள்கள் எழுந்தருளி கருடசேவை வைபவம் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை வைபவம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தரிசன சபா ஆகியவை சார்பில் நடைபெறும் 90-வது ஆண்டு கருடசேவை விழாவானது நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகியது. வெண்ணாற்றங்கரை நரசிம்மப் பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் திவ்யதேச பெருமாள்களுடன் கருட வாகனத்தில் புறப்பட்டு 7 மணி முதல் 12 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் பெருமாள்கள் வீதிஉலா நடைபெற்றது.
இதில் நீலமேகப் பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்றப் பெருமாள், வேளூர் வரதராஜ பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்ம பெருமாள், கோதண்டராமர், கீழ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள் உள்பட 25 கோவில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்கள் எழுந்தருளி ஒரே நேரத்தில் வலம் வந்து ராஜவீதிகளை அழகூட்டியது. தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு 25 பெருமாள்களையும் ஒரு சேர கண்டு தரிசித்து பரவசம் அடைந்தனர்.
தொடர்ந்து, நாளை (வியாழக்கிழமை) காலை நவநீத சேவை நடைபெற உள்ளது. இதில் வெண்ணாற்றங்கரையில் காலை 6 மணியளவில் புறப்பட்டு காலை 7 மணி முதல் 10.30 மணி வரை கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய ராஜவீதிகளில் வீதிஉலா நடைபெறும். இதில் 16 கோவில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி ராஜவீதிகளில் ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்க உள்ளனர்.
தொடர்ந்து, நாளை மறுநாள் (31-ந்தேதி) வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் காலை 9 மணியளவில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இதனிடையே ராஜராஜ சமய சங்கத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு திருவாய்மொழி தொடங்கி, நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு சாற்று முறை நடைபெற உள்ளது. 25 கோவில்களில் இருந்து பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்ததால் தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
- திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
- புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.
புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.
புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.
சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.

புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.
புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத் !
எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள் என்கிறார் வைத்தியநாத குருக்கள்.
புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசியையும் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதத்தையும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்துகொண்டு, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.
இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
எனவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
- காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-16 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 1.26 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : திருவோணம் காலை 8.36 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : சித்த, மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் பூமிபாலகர், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-ஆரோக்கியம்
மிதுனம்-வரவு
கடகம்-செலவு
சிம்மம்-உதவி
கன்னி-பரிவு
துலாம்- பாசம்
விருச்சிகம்-பண்பு
தனுசு- உயர்வு
மகரம்-பாராட்டு
கும்பம்-பயணம்
மீனம்-இன்பம்
- அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும்.
- ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார்.
இஸ்லாம் மனித வாழ்க்கையை இரண்டாக குறிப்பிடுகிறது. ஒன்று இம்மை எனப்படும் இந்த உலக வாழ்க்கை. அடுத்தது
இறைவனின் நெருக்கத்தில் வாழும் மறுமை வாழ்க்கை. இந்த இரண்டில் மறுமை வாழ்க்கையே சிறந்தது என்று ஏக இறைவன் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான்.
இறையச்சத்துடன், நற்பண்புகளுடன், உயர்ந்த சிந்தனைகளுடன், பிறருக்கு உதவும் உள்ளத்துடன் ஒருவன் இம்மையில் வாழ்ந்தால் மறுமையில் அவனுக்கு சொர்க்கம் கிடைக்கும். ஒரு மனிதன் உயர்ந்த பண்புள்ளவராக வாழ 5 முக்கிய அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். இது குறித்த நபி மொழியை காண்போம்.
ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:
'நான் சில செய்திகளை கூறுகிறேன், அதை செயலாற்றுபவர் யார்?, அல்லது செயலாற்றும் நபருக்கு கற்றுக் கொடுப்பவர் எவரும் உண்டா?'.
நபிகளார் இவ்வாறு கூறிய தும் நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள், 'நானிருக்கிறேன் நாயகமே' என்றார். உடனே நபிகள் நாயகம் அவ ரது கையை பிடித்து 5 விஷயங்களை கூறினார்கள். அவை வருமாறு:-
1) இறைவன் எவற்றை தடை செய்துள்ளானோ அவற்றை விட்டு விலகி, பயந்து நடந்து கொண்டால் மிகப்பெரிய வணக்கம் புரிந்தவராகலாம்.
இறைவனுக்கு இணை வைத்தல், மது அருந்துவது. வட்டி வாங்கி சாப்பிடுவது. கொள்ளை அடிப்பது, விபச் சாரம் புரிவது, சூனியம் செய்வது, கொலை செய்வது போன்றவை பெரும்பாவங்கள் ஆகும். இவை அனைத் தும் இறைவனால் தடுக்கப்பட்டவை. இது போன்ற எந்தப் பெரும் பாவமும் செய்யாத போதிலும் தொழுகை, நோன்பு நோற்பது, ஜகாத், ஹஜ் போன்ற நல்ல காரியங்களை ஒருவர் செய்வதில்லை என்றால் அவர் குற்றவாளி தான்.
அதே போன்று இதற்கு மாற்றமாக எல்லா நல்ல காரியங்களையும் செய்கிறார், அதேபோல பாவங்களையும் செய்கிறார் என்றால் இவரும் குற்றவாளி தான். மனிதன் தான் செய்யும் நல்ல காரியங்கள் யாவும், பாவ மான காரியங்களை விட்டும் தடுப்பவையாக அமைய வேண்டும். இவ்விரண்டையும் ஒரு மனிதன் பேணி செயல்படும் போது அவர்தான் அதிக வணக்கமுடையவராக கருதப்படுகிறார்.
2) இறைவன் எதை பங்கிட்டு வழங்கியுள்ளானோ அதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்குமேயானால் அவர் தான் அதிகம் வசதி படைத்தவராவார்". இறைவன் ஒரு மனிதனுக்கு என்ன தேவை ஏற்படுமோ அதை அந்தந்த காலகட்டங்களில் வழங்கிக்
வழங்கிக் கொண்டுதான் இருக்கிறான். அதில் எவ்வித குறையும் செய்யமாட்டான்.
உயர்ந்த பண்புகள் முழுமையாக ஒரே நேரத்தில் வழங்குவதில்லை. உதாரணமாக, ஒரு மனிதன் 90 ஆண்டு வாழ்கிறான் என்றால், அவனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள உணவு, குடிநீர் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டால் சேமித்து வைத்து உண்ணாமல் குடிக்காமல் திகைத்து விடுவான். அதுமட்டுமல்லாமல் சோம்பேறியாகி உடல் நலமே கெட்டுவிடும். கல்லுக்குள் இருக்கும் ஜீவராசிக்கு உணவு வழங்கும் வன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டான் என்ற நம் பிக்கை வரவேண்டும். அதே சமயம் வீட்டில் முடங்கிக் கிடப்பதும் கூடாது. கொடுப்பவன் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுப்பான் என்று எண்ணக் கூடாது. நம்மிடமிருந்தும் உழைப்பு வேண்டும், அதன் மூலம் கிடைப்பதை ஏற்றுக் கொண்டு, போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற சொல்லுக்கேற்ப நடப் பது தான் பெரும் வசதி படைத்தவர் என்று எண்ணப்படும்.
3) 'பக்கத்து வீட்டினரிடம் உபகாரமுடன் நடந்து கொள்ள வேண்டும்'. அப்படி நடந்தால் தான் உண்மையான முறையில் விசுவாசங்கொண்டவராக முடியும். அண்டை வீட்டாரிடம் எந்த அளவுக்கு உபகாரமுடன் நடக்க வேண்டும் என்றால், சொந்தங்களிடம் நடப்பதைப் போல் நடக்க வேண்டும் என்று இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4) தனக்கு எதை விரும்புவாரோ அதையே பிறருக்கும் விரும்பவேண்டும். அப்பொழு துதான் முழுமையாக வழிபட்டவராக முடியும். மனிதனின் இயல்பு தனக்கு பிடிக்காத பொருளை அடுத்தவருக்கு பிடிக்கும் என்று வழங்குவதுதான். ஆனால், நபிகள் (ஸல்) அப்படிக் கூறவில்லை. மாறாக தனக்கு விருப்பமான பொருளைத்தான் அடுத்தவருக்கும் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் நன்மை உண்டு. கெட்டுப்போன உணவுகளைக் கூட மற்ற உயிரினங்களுக்கு போடக்கூடாது என்பது ஷரீஅத் சட்டமாகும்.
5) அதிகமாக சிரிப்பது கூடாது'. அப்படி சிரித்தால் உள்ளம் மரணித்துவிடும். அதாவது சந்தோஷமான நேரத்திலும் கூட நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும். அதிகம் சிரித்தால் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்வதை விட்டும் உள்ளம் மரணித்துவிடும். அதிகமாக சிரிப்பதால் ஆபத்துக்கள் கூட ஏற்படலாம்.
இந்த ஐந்து விஷயங்களை ஒவ்வொரு மனிதரும் பேணி நடந்தால் அவர்தான் உண்மையிலே உயர்ந்த பண்புள்ளவராவார். நாமும் முயற்சி செய்வோம், முன்னேற்றப் பாதையில் வெற்றி காண்போம்.
- நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர், எங்கிருந்து வருகிறது என்பது இதுவரை யாரும் கண்டறியாத ஒன்றாக இருக்கிறது.
- ஒரு குளத்தைச் சுற்றிய நிலையில் இந்த ஆலயம் முழுமை அடைந்து விடும்.
இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள ஒரு நந்தி கோயிலில், நந்தியின் வாயிலிருந்து தொடர்ச்சியாக நீர் வடியும் அதிசயம் நிகழ்ந்து வருகின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயில்.
இந்த கோயிலின் சிறப்பே அங்கு அமைந்துள்ள நந்தியின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான். அதே போல் எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருப்பார். ஆனால் இந்த ஸ்ரீ தக்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

அதோடு அந்த நந்தியிலிருந்து வடியும் தீர்த்தம், சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிவனை அபிஷேகம் செய்வது போன்று அந்த தீர்த்தம் விழுந்து பின்னர் அந்த நீர், அங்குள்ள தெப்பக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நதியின் வாயில் எப்படி நீர் ஊறுகின்றது என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. சேற்றில் புதைந்து கிடந்துள்ளது. அதனை, சில தன்னார்வலர்கள் 1997ம் ஆண்டு கண்டுபிடித்து கோயிலை மீட்டெடுத்துள்ளனர்.

இந்த கோயில் அமைந்துள்ள இடம் அப்பகுதியிலேயே மிக தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் நீரூற்று, நந்தி வாயின் வழியே வெளியேறும் வண்ணம் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த நீர் கீழே உள்ள லிங்கத்தின் மீது விழுந்து, பின்னர் குளத்தில் கலப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசயம் நிகழ்வாதாக கூறுகின்றனர்.
நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு.
- 150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.
- ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது.
அன்பானவர்களோ ஜவேதாகமதியா கோரேஸ் 1 (சைரஸ்) என்ற ராஜாவைப் பற்றி ஏசாயா என்னும் தீர்க்கதரிசி கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வாறு நிறைவேறியது என்பது பற்றி பார்ப்போம்.
பெர்சியப் பேரரசின் முக்கியமான ராஜாவான சைரஸ் கி.மு.539-ல் உலக சரித்திரத்தில் தன் முத்திரையைப் பதித்தார் என்று வரலாற்றின் மூலம் அறியலாம். ஏனெனில் கி.மு.539-ல் தான் மகா பாபிலோனிய அரசை கோரேஸ் (சைரஸ்) வீழ்த்தி, அதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த பாபிலோனிய அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் இப்படி ஒரு ராஜா வரப் போகிறார் என்றும், அவர் பாபிலோனிய அரசை வீழ்த்துவார் என்றும், இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருப்பார் என்றும் முன்னறிவித்தது யார் தெரியும்?
150 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஏசாயா என்னும் தீர்க்கதரிசி தான்.
இப்படி இந்த ராஜாவினுடைய பெயரை 150 ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்டது மட்டுமல்ல, அவர் செய்யப் போகிற ஒவ்வொரு காரியங்களைப் பற்றியும் முன்னறிவிக்கிறார் ஏசாயா.

கிமு 558-ல் பெர்சியா எனப்பட்ட இன்றைய ஈரானை ஆண்ட பேரரசரான சைரஸ் (கி.மு.590-529) இஸ்ரவேல் மக்களுக்கு ஆதரவாக இருந்தார். மேதிய பெர்சிய ராஜியம் எனப்படும் பாரசீகப் பேரரசை நிறுவிய இவர், பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவும், எருசலேமில் தேவாலயத்தை மீண்டும் கட்டவும் இவர் கொடுத்த ஆதரவு இஸ்ரவேல் வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.
ஏசாயா தீர்க்கதரிசியின் காலம் கி.மு.740 முதல் 680 வரை எனப்படுகிறது. இந்த நாட்களில் பாபிலோனிய பேரரசே உருவாகவில்லை. ஏசாயாவின் காலத்திற்கு பின்பு தான், அது ஆரம்பிக்கிறது (கி.மு.645 முதல் 539). ஆனால் அதற்கு முன்பாகவே அந்த பாபிலோனிய பேரரசை வீழ்த்துகிற கோரேஸ் (சைரஸ்) பற்றின துல்லியமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளது எத்தனை ஆச்சரியம் பாருங்கள்.
நேபுகாத்நேச்சாரின் காலத்தைபாபிலோனிய பேரரசின் உன்னதமான காலங்கள் ஆரம்பிக்கிற வருஷங்களாக எடுத்துக் கொண்டால் பாபிலோனின் சிறப்பான காலம் என்பது கி.மு.624-ல் இருந்து ஆரம்பிக்கிறது.
நேபுகாத்நேச்சாரின் காலத்தை பாபிலோனிய பேரரசின் உன்னதமான காலம் எனலாம். அதன் வல்லமை, பராக்கிரமம், அதிகரித்துக் கொண்டே போன காலம். பல வகைகளிலும் பாபிலோன் புகழ் பெற்றது. குறிப்பாக ராணுவ பலம், அதன் தலைநகர், முக்கிய நதியான யூப்பி ரட்டீஸ் நதியோரம் அமைந்திருந்ததால் செழிப்பான நகரமாக இருந்தது. சைரசின் ஆட்சிக்காலத்தில் அவர் பல வெற்றிவாகைகளை சூடிக்கொண்டிருந்தபோது கி.மு. 539-ம் ஆண்டில் பாபிலோன் அரசு அவர் போரிடாமலேயே சைரஸ் பேரரசரிடம் சரணடைந்தது.
ஏசாயா தனக்கு பின் தோன்றுகிற கோரேஸ் (சைரஸ்) மகாராஜாவைப் பற்றி கூறுகிறார்:
'கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும். அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்து வைக்கும் படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலது கையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலான வைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர் சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவ னாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள் களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல் களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபி , நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித் னிமித்தமும் தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை என்று அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்' கூறுகிறார்.
வரலாற்றில் நீங்கள் முதலாம் சைரசை பற்றி படித்து பாருங்கள். இவர் சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்று சிறந்த பராக்கிரமம் நிறைந்த ராஜாவாக இருந்தார்.
பிரியமானவர்களே, இன்றைக்கு உங்களைப் பார்த்து கர்த்தர் சொல்லுகிறார். நான் உனக்கு முன்னே போய் கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்".

ஆம் அன்பானவர்களே, எந்த காரியங்கள் உங்களுக்கு தடையாக இருக்கிறதோ, அந்த காரியங்களில் நிச்சயமாக ஜெயம் பெறுவீர்கள். தடைகளை மாற்றுகிற தேவன் உங் களுக்கு முன்னே சென்று, தடைகளை மாற்றுவார். நீங்கள் எதிர்பார்க்கும் விஷயத்தில் வெற்றியைத் தருவார்.
அன்றைக்கு கோரேஸ் மகாராஜாவுக்கு (சைரஸ்) உலக சாம்ராஜ்யமாக திகழ்ந்த பாபிலோனை திறந்து கொடுத்த தேவன், இன்றைக்கு உங்கள் வாழ்க்கையிலும் எதைக் கண்டு நீங்கள் அஞ்சி பயப்படுகிறீர்களோ, அந்த காரி யத்தில் வெற்றி தர போதுமானவராய் இருக்கிறார். திறக் கப்படாத வாசல்கள் எல்லாம் உங்களுக்கு திறக்கும்.
நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு, உயிரோடு எழுந்த கர்த்தராகிய இயேசுவை நோக்கி பாருங்கள், அவர் உங்கள் காரியங்களில் ஜெயத்தை தருவார், பதிலைத் தருவார், தாமதித்தாலும் காத்திருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் நிச்சயமாக கைகூடும், ஆமேன்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
28-ந்தேதி (செவ்வாய்)
* காஞ்சிபுரம் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜர், மதுரை கூடலழகர் தலங்களில் விடையாற்று உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமா வாளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
29-ந் தேதி (புதன்)
* காஞ்சிபுரம் வரதராசர் பல்லக்கில் தீர்த்தவாரி.
* அகோபிலமடம் திருமத் 27-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
30-ந் தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ராத்திரி மூவர் உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
1-ந் தேதி (சனி)
* திருவரங்கம் நம்பெருமாள், மதுரை கூடலழ கர், திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலை யான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
2-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
3-ந் தேதி (திங்கள்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
- மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம்.
- முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 15 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : பஞ்சமி பிற்பகல் 3.25 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம் : உத்திராடம் காலை 9.46 மணி வரை. பிறகு திருவோணம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
நாளை அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி. திருவோண விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். காஞ்சிபுரம் ஸ்ரீவரதாஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு. மதுரை ஸ்ரீகூடலழகர் விடையாற்று உற்சவம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - ஆரோக்கியம்
மிதுனம் -வெற்றி
கடகம் - சாதனை
சிம்மம் - பாசம்
கன்னி - உதவி
துலாம் - நட்பு
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - போட்டி
மகரம் - ஆக்கம்
கும்பம் - பாராட்டு
மீனம் - பக்தி
- என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,' என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.
- சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமம் மேலப்புதுக்குடி. இங்கு பிறந்த குமாரசாமி நாடார் ஒரு நாள் தனது ஊருக்கு வந்த ஒரு முனிவரைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாத பூஜை செய்து, அருஞ்சுவை விருந்து அளித்தார். அப்போது அந்த முனிவர் ஒரு தெய்வீக ஏடு ஒன்றை குமாரசாமியிடம் கொடுத்தார்.
இந்த ஏட்டை தொடர்ந்து படித்து வந்ததன் பயனாக, மந்திரங்கள் சிலவற்றை கற்றுக்கொண்டு தினமும் தியானமும், பூஜையும் செய்து வந்தார். இதனால் பாம்பு, பூரான் போன்ற கொடிய விஷ ஜந்துகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களை இவர் வெறுமே பார்த்தாலே அந்த விஷம் இறங்கியது. ஏற்கெனவே விஷப்பூச்சிக் கடியல் சரும நோய் ஏற்பட்டவர்களும் இவர் பார்வை பட்டு குணமானார்கள். இதனால் மதுரைக்குத் தெற்கே இருந்து பலர் ஏரல் வந்து குமாரசாமி நாடாரின் பார்வை பெற்றுச் செல்வார்கள். இவருடைய புகழ் நாளுக்கு நாள் பரவியது. இவரது வழித்தோன்றலில் ஒருவர் ராமசாமி நாடார். மனைவி சிவனைந்தம்மாள். இவர்களுக்கு திருமணம் முடிந்து ஆண்டுகள் பல கழிந்த பின்னும் குழந்தைப் பேறு இல்லை.
ஒருநாள் தர்மம் கேட்டு, அவர்கள் இல்லம் வந்த ஒரு துறவி, "நீ செட்டியாபத்து சென்று அங்கு ஐந்து வீட்டு சாமியைத் தரிசனம் செய்து வா. உனக்கு ஆண் மகன் பிறப்பான்" என்று கூறினார். (ஏரலில் இருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டியாபத்து.) அதன்படி தம்பதிகள் செட்டியாபத்து கோயிலுக்குச் சென்று தரிசித்தனர். அன்றிரவு ராமசாமி கனவில் தர்மம் கேட்டுவந்த துறவி தோன்றி, 'உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், அதற்கு அருணாசலம் என்று பெயரிடு. அவன் தெய்வ நிலை கொண்டவனாக வளருவான்' என்று கூறினார். சில நாட்களில் சிவனைந்தம்மாள் கர்ப்பமுற்றாள். விக்கிரம ஆண்டு புரட்டாசி திங்கள் பதினெட்டாம் நாள் உத்திர நட்சத்திரத்தில், 2.10.1880 அன்று அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். குழந்தைக்கு அருணாசலம் என்று பெயரிட்டனர். உடனே ராமசாமி நாடார் வேண்டுதல் நிறைவேறிய சந்தோஷத்தில் செட்டியாபத்து கோயிலில் அழகிய மண்டபம் கட்டினார்.

அருணாசலம், மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தன. அருணாசலம், பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு அவர் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். வாலிப பருவம் அவரை நெருங்க, அவர் தனது எண்ணத்தை இறைத் தேடலில் செலுத்தி வந்தார். தனது வழி முன்னோடிகள் செய்து வந்த விஷக்கடி மருத்துவத்தினையும் தொடர்ந்து செய்து வந்தார். இதனால் இப்பகுதி மக்களிடம் பேராதரவு பெற்றார்.
இதற்கிடையில் இவரது அறிவாற்றலையும், ஆங்கிலப் புலமையையும் கண்ட அன்றைய ஆங்கில அரசு இவரை சிறுதொண்டநல்லூருக்கு முன்சீப்பாக (நிர்வாக அதிகாரி) நியமித்தார்கள். அந்தப் பொறுப்பை அருணாசலம் சிறப்பாக செய்து வந்தார். சிறுவயதாக இருந்தாலும் வரி வசூல் செய்வது, அந்தக் கிராமத்தில் ஏற்படும் சிறு சிறு சண்டைகளை பஞ்சாயத்து பேசி முடிப்பது என்று 8 ஆண்டுகளாக சிறந்து விளங்கினார். இதற்கிடையில் ஒருநாள் ஊழலுக்குத் துணைபோகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட, அக்கணமே அப்பதவியைத் துறந்தார். பிறகு ஆன்மீகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டார்.
அவருக்கு திருமணம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர். ஆனால், அவரோ '28 வயது ஆகட்டும். அப்ப பார்த்துக்கலாம்' என்று கூறிவிட்டார். அப்பழுக்கற்ற பிரம்மச்சாரியாக வாழ்ந்த இவரை கவனித்துவந்த அப்போதைய மாவட்ட கலெக்டர்கள் பிஷப்வெஸ்டன், பிஷப்ஸ்டோன் இருவரின் பரிந்துரைப்படி ஏரல் பஞ்சாயத்துக்கு சேர்மனாக (தலைவராக) அவரை நியமித்தார்கள். சேர்மன் அருணாசலம், ஏரலில் பள்ளிக்கூடங்களைத் தொடங்கினார்.
எண்ணெயால் எரியும் தெருவிளக்குகளை அமைத்தார். இரவு நேரங்களில் அணைந்து விடாமல் இருக்க பணியாளர்களை நியமித்தார். ஊருக்குள் கழிவு நீர் தங்காமல் இருக்க வடிகால் வசதி செய்தார். ஊராட்சி எல்லைக்குள் மரக்கன்றுகள் நட்டார். அனைத்து மக்களிடமும் அன்போடு பழகினார். அதிகம் பேசாமல் அமைதியுடன் திகழ்ந்த அருணாசலம், தனது ஆன்மிக சக்தியால், பின் நடப்பதை முன் அறியும் திறன் பெற்றார். ஒருநாள் அப்பகுதியைச் சேர்ந்த பால்நாடார் என்பவரை பாம்பு கடித்து விட்டது. அவரைக் கடித்த பாம்பையே திரும்ப வரவழைத்து அந்த விஷத்தினை உறியச் செய்தார்.

இதைக்கண்ட அனைவரும் அவருக்குள் ஏதே ஒரு தெய்வ சக்தி இருப்பதை உணர்ந்தனர். இதற்குப் பிறகு அவரை சேர்மன் சாமி என்றே அழைத்தனர். ஒருநாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்து, 'காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடி மாதம் 13 ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன்.
நான் உயிர் நீத்தாலும் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வருபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்கான சடங்குகளை செய்யுங்கள். அப்போது வானத்தில் கருடன் ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல்மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,' என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார்.
அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை தினம். முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி 'வருகிறேன்' என்று கூடியிருந்த அனைவரையும் புன்னகை முகத்துடன் பார்த்துச் சொல்லி கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது.(பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டன. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது. சுவாமிகள் படித்த நூல்கள், பயன்படுத்திய விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமியை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள்.
சுவாமி தெய்வ நிலையடைந்த ஒருசில நாளில் அவரோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றபோது, பாம்புக் கூட்டம் படையெடுத்து வந்து அவர்களை விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார்.
அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தெய்வநிலை பெற்ற தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்டத் தீர்மானித்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். சுவாமிகள் உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர் ஆதிதிராவிடப் பெண்ணான சுடலைப் பேச்சி. அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி 'தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும்' என்று கூறினார். அதன்படி அவரது நோய் தீர்ந்தது.
கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்த மெக்வர், டேவிட்சன் இருவரும் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர் வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு வருமுன்பு குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன.
ஆகவே அவர்கள் குதிரையை விட்டு இறங்கி கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். அதைப் பார்த்த அவர்கள் பயந்து வெடவெடத்து, காலணிகளை கழற்றி விட்டு, தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்றதும் கலெக்டர், கோயில் அமைந்திருந்த இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது.
சேர்மன் அருணாசல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ பிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணி கரையில் கூடுகிறார்கள். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள்.
உடம்பிலும், கை, கால்களிலும் பூசிக்கொள்கின்றனர், அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார். மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது.
சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், தற்போதும் சுவாமிகள் பலவிதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார். திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்கள் தாமிரபரணியில் நீராடியபோது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ''சேர்மா! என் மகனை காப்பாற்று'' எனக் குரல் எழுப்பியுள்ளார்.
அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றினார். சற்குணம் மகனை அரவணைத்துக்கொண்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்டபோது அவரை காணவில்லை. மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அனைவரும் நம்பினர். ஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகிய பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனைச் சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள். இந்த மந்திர மையை இட்டுக்கொள்ளும் பக்தர்கள் திருஷ்டி, பேய், பிசாசுகள் விலகுவதாக அனுபவபூர்வமாக சொல்கிறார்கள்.

குலசேகரபட்டினம் அருணாசல பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவார். ஒருமுறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அரிசியை ஒரு நார்ப்பெட்டியில் வைத்துக்கொண்டு ஏரலுக்கு வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க, ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து 'இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா,' என்றார். பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. தன்னை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அவரும் அவர் அனுபவத்தைக் கேட்டவரும் கருதினர்.
இங்கு சித்திரைத் திருவிழா மற்றும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முக்கிய விழாக்களாகும். மாதம்தோறும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சுவாமி இங்கு ராஜகோலத்தில், நின்றபடி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜை நடக்கிறது. மனநோய், பேய்பிடி, விஷப்பூச்சிக்கடி, வீண்பயம், குடும்பப் பிரச்னை, மன அழுத்தம் என அனைத்தையும் போக்கும் பரிகாரத் தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர்.
திருநெல்வேலி-திருச்செந்தூர் பிரதான சாலையில் தென்திருப்பேரையிலிருந்து இடதுபுறம் திரும்பிச் சென்றால் ஏரல் தாமிரபரணிக்கரையில் சேர்மன் அருணாசல சுவாமிகள் அருளைப்பெறலாம்.
- நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
- காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.
உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டுருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
தாலி, குங்குமம், திருமண மோதிரம், மெட்டி, மாலை போன்றவை தவறி கீழே விழுந்தால் அது நம் அனைவரின் மனதிலும் கெட்ட செயலாக தான் தோன்றும். அந்த சமயத்தில் ஏதேனும் பதற்றங்கள் அதிகமாக ஏற்படும். நமக்கு கெட்ட செயல் நடக்கும்போது தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் நாம் கூப்பிடுவது வழக்கம். திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி கழன்று விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன், திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி விழுவது போன்று கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம்.

திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:
திருமணம் ஆன பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போல் கனவு வருவது இயல்பான ஒன்றுதான். தாலி அறுவது போன்று கனவு வந்தால் திருமணம் ஆன பெண்ணிற்கு அவருடைய கணவனின் மீது கோபம் கூட இருக்கலாம். அல்லது வீட்டில் கணவன்மார்கள் அந்த பெண்ணிடம் சண்டைகள் எதுவும் போட்டு இருக்கலாம்.
அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்து இருக்கும். இதில் எதுவும் இல்லையென்றால் கணவனிடம் அந்த பெண்ணிற்கு ஏதேனும் பிடிக்காமல் இருந்து இருக்கலாம். பெண்களுக்கு தாலி அறுந்து விழுவது போன்று கனவு வந்தால் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:
திருமணம் ஆகாத பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போன்று வந்தால் அது இயற்கைக்கு மாறான ஒரு விஷயமாகும். தாலி அறுவது போல் கனவு வந்தால் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு சிந்தனை செயல்களும் அவர்களிடத்தில் இருக்காது. பிறகு ஏன் இந்த கனவு வர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளதுதான்.
தாலி அறுவது போன்ற கனவு திருமணம் ஆகாத பெண்ணிற்கு வந்தால் அவர்களுக்கு திருமணம் பற்றிய பயமும், பதற்றமும் ஆழ்மனதில் அவர்களுக்கிடையில் அறியாமல் இருக்கும்.

திருமணம் செய்யும் நேரம்:
உதாரணத்திற்கு அந்த பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்த்து கொண்டிருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று கனவு வந்தால் நடக்கவிருக்கும் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து உள்ளது என்ற அறிகுறியாகும். உள்மனதில் அந்த பெண்ணிற்கு இப்போது திருமணம் நிச்சயிக்க வேண்டாம் என்று கூறுவதாகும்.
வர போகும் ஆபத்தில் இருந்து அந்த பெண்ணை பாதுகாப்படைய செய்கிறது. இது போன்று உள்ளவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்காமல் இருப்பது நல்லது. காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.
6 மாதம் பொருத்திருந்து அதன் பின்னர் தாலி அறுவது போன்று கனவு வருகிறதா என்று பார்த்து, கனவு வரவில்லை என்றால் அதன் பிறகு திருமண பேச்சை பற்றி யோசிக்கலாம். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று வருவதால் அந்த பெண்ணிற்கு திருமணத்தில் பிரச்சனை ஏற்படப்போகிறது என்று கனவு மூலம் இறைவன் காட்டுகிறார்.
அந்த பெண்ணிற்கு திருமணத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று அர்த்தமாகும். இது போன்ற சூழலில் யார் மீதும் காதல் கொள்வது, புதிதாக வரன்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். கனவுகளில் பல வகையான கனவுகள் உள்ளன. அவைகள் அனைத்திற்கும் அர்த்தம் இருக்கிறது என்று கூறமுடியாது. ஆனால் சில கனவுகளுக்கு அர்த்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, வைகாசி 14 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி மாலை 5.08 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: பூராடம் காலை 10.36 மணி வரை. பிறகு உத்திராடம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை; மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் விடையாற்று உற்சவம். மதுரை ஸ்ரீகூடலழகர் கருட வாகனத்தில் திருவீதியுலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-பரிவு
மிதுனம்-நன்மை
கடகம்- யோகம்
சிம்மம்-வரவு
கன்னி-நலம்
துலாம்-மேன்மை
விருச்சிகம்-சிந்தனை
தனுசு- உண்மை
மகரம்-கவனம்
கும்பம்-பெருமை
மீனம்-திறமை






