என் மலர்
வழிபாடு
- விநாயகப்பெருமானுக்கு 32 வடிவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
- ஷோடச விநாயகர் என்றால் 16 விநாயகர்.
விநாயகப்பெருமானுக்கு 32 வடிவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஷோடச விநாயகர் (16 விநாயகர்) வழிபாடு என்பது முக்கியமானது. இந்த விநாயகர்களை பற்றியும், அவர்களை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.

பாலகணபதி
மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி இருக்கும் இவர், சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனின் தோற்றம் கொண்டவர். இவரை வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.

தருண கணபதி
பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறிந்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக் கரங்களில் ஏந்தியிருப்பவர் இவர். சூரியன் உதிக்கும்போது இருக்கும் செவ்வானத்தின் நிறத்தைக் கொண்டு இளைஞராக அருள்பவர் இவர். இவரை வழிபட்டால் முகக் கலை உண்டாகும்.

பக்த கணபதி
தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லம் கொண்டு செய்யப்பட்ட பாயசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை, தம் நான்கு கரங்களில் ஏந்தியவர் இந்த விநாயகர். இவர் நிலவின் ஒளியைப் போன்ற வெண்ணெய் நிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நல்லவிதமாக அமையும்.

வீர கணபதி
பதினாறு கரங்களைக் கொண்டவர் இவர். அவற்றில் ஒரு கரத்தில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களையும் ஏந்தி செந்நிற மேனியுடன் ரவுத்ரமாக வீராவேசத்துடன் காணப்படுபவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.

சக்தி கணபதி
பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர் இந்த விநாயகர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் சீராகும்.

துவிஜ கணபதி
இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியிருப்பார். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.

சித்தி கணபதி
பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தியிருப்பார். ஆற்றலைக் குறிக்கும் சித்தி தேவியை உடன் இருத்தியபடி, பொன்னிற மேனியைக் கொண்டவராக அருள்பவர். இவருக்கு 'பிங்கள கணபதி' என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் சகல காரியமும் சித்தியாகும்.

உச்சிஷ்ட கணபதி
வீணை, அட்சரமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீலவண்ண மேனியுடைய இவர் தன்னுடைய தேவியை அணைத்தபடி இருப்பவர். இவரை வழிபடுவதால் வாழ்க்கையில் உயர்வும், உயர் பதவிகளும் பெறலாம்.

விக்னராஜ கணபதி
சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி, பொன்னிற மேனியுடன் பிரகாசிப்பவர். இவரை வழிபடுவதால் விவசாயம் செழிக்கும்.

சுப்ர கணபதி
கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும், ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்தியிருப்பார். செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர், விரைந்து அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.

ஹேரம்ப கணபதி
அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சரமாலை, கோடரி, சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ் பெறலாம்.

லட்சுமி கணபதி
பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.

மகா கணபதி
பிறை சூடி, மூன்று கண்களுடன் தன் சக்தியான வல்லபையை அணைத்த வண்ணம், கைகளில் மாதுளம்பழம், கதை, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.
புவனேச கணபதி
விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால், கஜமுகாசூரன் தன் சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்டவர் இந்த கணபதி. இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வழக்குகள் வெற்றியாகும்.
நிருத்த கணபதி
மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
ஊர்த்துவ கணபதி
பொன்னிற மேனியுடைய இவர், எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
- திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்டச்சேவை.
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-14 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: துவாதசி மறுநாள் விடியற்காலை 4.42 மணி வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 9.09 மணி வரை. பிறகு பூசம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உருகு சட்டச்சேவை, விளாமிச்சவேர் சப்பரத்தில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வாழ்வு
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-மாற்றம்
கடகம்-பக்தி
சிம்மம்-அன்பு
கன்னி-உறுதி
துலாம்- முயற்சி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- பயிற்சி
மகரம்-வெற்றி
கும்பம்-தெளிவு
மீனம்-வரவு
- உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.
- திரிவிக்ரம அவதார வடிவில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.
இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். அந்த பிரகலாதன் வழியில் வந்த மகாபலி சக்ரவர்த்தி அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்தமையால் அவனை அழிக்க மகாவிஷ்ணு மேற்கொண்ட திரு அவதாரம் திரிவிக்ரம அவதாரம்.
மகாவிஷ்ணு வாமனனாக வடுரூபத்தில் வந்து மகாபலியிடம் தான் தவம் செய்ய விரும்புவதால் தனக்கென தன் காலால் 3 அடி இடம்கேட்க, மகாபர்யும் கொடுக்க நீரேற்று (தாரைவார்த்து) தானம் பெற்ற மூவடியை தன் சேவடி கொண்டு அளக்க திரிவிக்ரமனாய் விண் முட்ட எழுந்தார்.

பேருரு கண்டு பிரமிப்படைந்த மகாபலி அரசனின் முன்பாக ஒரடியால் உலகையளந்து, மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து 3-வது அடிக்கு இடம் கேட்க அரசன் குனிந்து தலையைக் காட்ட, தம் திருவடியால் தலையை பாதாளத்தில் அழுத்தினார். மேற்கண்ட திருக்கோலத்தில் உலகளந்த பெருமாளாக இறைவன் இங்கே சேவை சாதிக்கிறார்.
பெருமாள் மேற்கே திருமுக மண்டலத்துடன் திரிவிக்ரம அவதார வடிவத்தில் நின்ற திருக்கோலத்தில் தோற்றமளிக்கிறார்.

தனது இடது கரத்தினை நீட்டி அதில் இரண்டு விரல்களைக் காட்டி, தனது இரண்டு அடிகளால் மண்ணையும், விண்ணையும் அளந்து முடித்ததை உணர்த்தி, வலது கரத்தில் மீதம் உள்ள ஓரடிக்கு இடம் எங்கே என்று கேட்பது போல ஒரு விரலைக் காட்டியும் மகாபலியின் திருமுடிமீது வலத் திருவடியை சாத்தியும், இடத் திருவடியை ஆகாயத்திற்கும் பூமிக்கு மாய் அளந்து விட்டது கோல் உயர்த்தியும் பெருமாள் கம்பீரமாக, உலகளந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.
இத்திருக்கோவிலில் உள்ள உலகளந்த பெருமாளின் பேருருவை கொண்டு திரிவிக்கிரம அவதார உலகளந்த பெருமாளின் திருமுக மண்டலம் சேவை செய்விக்கப்படுகிறது.
இத்திருக்கோவில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது.
திருமழிசையாழ்வார் அருளிச்செய்த திவ்ய பிரபந்தம்
நன்றிருந்து யோகந்தி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்றிருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்றிருந்த மாடநீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக் கிடந்து என்ன நீர்மையே?
நின்றதெந்தை யூரகத்து இருந்ததெந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என்னிலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்
நின்றதுமிருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.
- திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
- பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் விழா தொடக்கம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-13 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி மறுநாள் விடியற் காலை 4.38 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 8.38 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று ஏகாதசி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். மூஷிக வாகனத்தில் பவனி. தேரழுந்தூர், திண்டுக்கல், தேவக்கோட்டையில், மிலட்டூர், பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் விழா தொடக்கம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-சுகம்
கடகம்-லாபம்
சிம்மம்-மகிழ்ச்சி
கன்னி-வரவு
துலாம்- நட்பு
விருச்சிகம்-செலவு
தனுசு- நிறைவு
மகரம்-பக்தி
கும்பம்-பண்பு
மீனம்-மாற்றம்
- மஞ்சளும், குங்குமமும் அம்மன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
- மஞ்சள் - குங்குமம் இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
மஞ்சள் - குங்குமம் இந்த இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இயற்கையாகவே மஞ்சள் கிருமிநாசினி என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்கள், மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்கள் (மழை பூமியில் இருக்கிற வெப்பத்தை வெளிப்படுத்துவதால், அந்த வெப்பத்தினால் பல வியாதிகள் வருகிறது) இதற்கெல்லாம் மஞ்சள்தான் மாமருந்தாகிறது.

மஞ்சள் சுமங்கலிப் பெண்களுக்கு கொடுத்தால் பல ஜென்மங்களில் செய்த முன் வினைகள் தீரும். சவுபாக்கியங்களும் கிட்டும். சந்தோஷம் அதிகரிக்கும் என்று மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பல புராணங்களில் விரதங்களின் போது கடைபிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற இடங்களில், மஞ்சளின் மகிமையும் சொல்லப்பட்டிருக்கிறது.
அம்பிகைக்கு விரதம் இருக்கிறவர்கள், மஞ்சளாடை அணிவதும், அம்மனுக்கே மஞ்சள் அபிஷேகம் செய்வதும் இதனாலெல்லாம் ஆரோக்கியமும் ஆனந்த வாழ்வும் சேரும்.

பொதுவாக பெண்களின் புருவ மத்தியில் அஷ்டலட்சுமியின் ஓர் அம்சம் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உண்டு. அந்த அஷ்டலட்சுமி குறிப்பாக சுமங்கலிப் பெண்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்துவாளாம். அதாவது கணவரோடு உடல் நலத்தை பாதிக்கச் செய்வாளாம். அவளின் பார்வை நேரடியாக கணவர் மேல் படக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் குங்குமப்பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இது மட்டுமில்லாமல் பெண்களின் தலை வகிட்டின் ஆரம்பத்தில் (அந்த இடத்தை சீமந்தம் என்று சொல்வார்கள்) ஸ்ரீ தேவி வாசம் செய்வதாகக் கூறுவர். பார்வதி தேவி தன் சீமந்தத்தில் (உச்சி வகிட்டில்) இட்டுக் கொள்கிற குங்குமத்தின் பாக்கியம் தான்.

சிவனை ஆதி முதல்வனாகவும், ஊழிக்கு அப்புறம் உலகையே படைக்க கூடிய வல்லமை உள்ளவராகவும், எல்லா செல்வங்களுக்கும் காரணமாகவும் நிலைத்திருக்க வைத்திருக்கிறது என்று ஆதி சங்கர மகான் தன்னுடைய சவுந்தர்யலக்ரியில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட உயர்வான மஞ்சளும், குங்குமமும் அம்மன் கோவில் பிரசாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.
- தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
- ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.
தேனி அருகே பச்சை பசேலென போர்வை விரித்தாற்போல பசுமையாக காட்சி அளிக்கும் உத்தமபாளையம் உள்ளது. முல்லை பெரியாறு ஆண்டு முழுவதும் ஓடுவதால் இந்த பகுதி குளுமையாக இருக்கும்.
ராணிமங்கம்மாள் ஆட்சி காலத்தில் இங்கு வசித்த சிவ பக்தர் ஒருவர் அவரது படையின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்தார். காளாத்தீஸ்வரர் பக்தரான அவர் திருப்பதி அருகில் உள்ள காளகஸ்தி சென்று தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
வயதானதும் அவரால் அங்கு செல்ல இயலவில்லை. இதனை நினைத்து வருந்திய அவர் சுவாமியை மானசீகமாக வழிபட்டார். அவருக்கு காளாத்தீஸ்வரர் இங்கேயே காட்சி கொடுத்தார். மகிழ்ந்த பக்தர் அவருக்கு கோவில் எழுப்பி காளாத்தீஸ்வரர் என்று பெயர் சூட்டினார். இதனால் இக்கோவில் தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

காளாத்தீஸ்வரருக்கு கோவில் அமைந்த பின்பு அம்பாளுக்கு சிலை செய்தனர். ஆனால் எவ்வளவு முயன்றும் சிலை சரியாக அமையவில்லை. இதனால் பல காலம் அம்பிகைக்கு சன்னதி அமைக்கப் படவில்லை.
ஒரு சமயம் உத்தம பாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தில் முல்லை பெரியாற்றில் மிதந்துவந்த ஒரு கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. இதனைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் அதை இங்கே பிரதிஷ்டை செய்தனர்.
காளகஸ்தியில் உள்ள அம்பிகைக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். அம்பிகையே இங்கு பிரசித்தி பெற்றவள் என்பதால் இவரது பெயரில் ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.
கோகிலாபுரத்தை அம்பிகையின் பிறந்த வீடாக கருதி திருக்கல்யாண விழாவின் போது ஊர் மக்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டு சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர்.
சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்துபகவான் பத்மாசனத்தில் அமர்ந்து ஜடாமுடியுடன் காட்சிதருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை, இருவரும் சிவபூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.

இந்த மூவரையும் ஒரு நாகம் சுற்றி உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி இருக்கின்றனர்.
வாஸ்து பகவானை சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது.
நடுவில் சூரியனும் சுற்றிலும் 12 ராசிகளும் உள்ளன. நிலம் பூமி, தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இந்த சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்து செல்கிறார்கள்.
காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை சன்னதிக்கு இடையில் சண்முகர் சன்னதி இருக்கிறது. அம்பாள் முருகன் இருவரையும், ஒரே சமயத்தில் தரிசிக்கும் வகையில் சன்னதிகளின் அமைப்பு இருக்கிறது.
அம் பாள் சன்னதி எதிரில் உள்ள 9 துளைகளுடன் கூடிய பலகணி (கல் ஜன்னல்) வழியாக இந்த தரிசனத்தை காணலாம். தாயார் நோய் வாய்ப்பட்டால் பிள்ளைகள் அவருக்கு நிவாரணம் வேண்டி இங்கு பூஜை செய்கிறார்கள். மகனை பிரிந்திருக்கும் பெற்றோரும் இங்கு அர்ச்சனை செய்ய வருகின்றனர்.
கோவில்களில் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா தேவி, ஆகிய சப்த மாதர்களை தரிசித்து இருப்பீர்கள். ஆனால் இங்கு அஷ்டமாதர்களை தரிசிக்கலாம்.
ஆதி சக்தியில் இருந்து 7 அம்சங்களாக 7 தேவியர் தோன்றினர் என்றும் அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவி, சப்த மாதர்களுடன் சேர்ந்து எட்டாவதாக காட்சி தருகிறார்.
அஷ்டகாளி என்றும் இந்த அமைப்பை சொல்லுவர். இது மிகவும் அபூர்வமான தரிசனம்.
இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக உள்ளார். எனவே இவருக்கும் வாயு லிங்கேஸ்வரர் என்ற பெருமை உண்டு. கண்ணப்பருக்கு காளகஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தார்.
இந்நிகழ்வின் அடிப்படையில் கண்ணப்பருக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று இரவிலும், கண்ணப்பர் குருபூஜை, காளாத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் விசேஷ பூஜை (பிப்ரவரி 5), நடக்கும். கண்நோய் உள்ளவர்கள் இந்தநாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
மனைவி சிம்ஹிகையுடன் ராகு மற்றும் சித்திரலேகாவுடன் கேதுவிற்கு பின்பு சன்னதி இருக்கிறது.
ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை), இவர்கள் சன்னதியில் சர்ப்ப தோஷ பரிகார ஹோமம் நடக்கிறது. நாக தோஷத்தால் திருமணம், மற்றும் பல்வேறு தடைகளை சந்திப்பவர்கள் இதில் தரிசிக்கின்றனர்.
ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் ராகு-கேது பெயர்ச்சியின் போது இவர்களது சன்னதியில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இச்சன்னதியில் 7 நாகதேவதையர், சிலை சிற்பமாகவும் காட்சிதருகின்றனர்.
குபேரர் சன்னதி பிரகாரத்தில் ஐஸ்வர்ய லட்சுமியுடன் குபேரர் காட்சிதருகிறார். இவருக்கு பின்புறம் மகாலட்சுமி இருக்கிறார். அட்சயதிரிதியை தினத்தில் இந்த சன்னதியில் விசேஷ பூஜை நடக்கும்.
கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு கருப்பு நிறம், கல்விக்கு அதிபதியான புதனுக்கு பச்சை நிறம் உகந்தது. ஆனால் இங்கு சனீஸ்வரருக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவிக்கிறார்கள். கல்வியில் சிறப்பிடம் பெற பக்தர்கள் வஸ்திரம் அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-12 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி காலை 6.10 மணி வரை பிறகு தசமி மறுநாள் விடியற்காலை 4.59 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8.33 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், இரவு அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் திருவீதியுலா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உதவி
ரிஷபம்-இரக்கம்
மிதுனம்-இன்பம்
கடகம்-முயற்சி
சிம்மம்-கடமை
கன்னி-பயிற்சி
துலாம்- சலனம்
விருச்சிகம்-பெருமை
தனுசு- தேர்ச்சி
மகரம்-பாசம்
கும்பம்-அனுகூலம்
மீனம்-பரிசு
- சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் ராமபிரான் சேவை சாதிக்கிறார்.
- ராம பிரானின் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன.
கருப்பூர் என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய ஊர்கள் உள்ளன. அந்த வகையில், பக்கத்து ஊரான கோடாலியை தன்னுடன் இணைத்துக் கொண்டு கோடாலி கருப்பூர் என அழைக்கப்படும் தலம் ஒன்று, கும்பகோணம் அருகே உள்ளது. இத்தலத்தில் தன் தேவியோடும் இளவலோடும் ராமபிரான் சேவை சாதிக்கும் கோவில் ஒன்று இருக்கிறது.

ராமநாராயணப் பெருமாள் ஆலயம் என்றழைக்கப்படும் அக்கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தர, உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரத்தின் நடுவே பீடம், அதை அடுத்து கொடிமரம், கருடாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.
அதைத் தொடர்ந்து சிறப்பு மண்டபமும், மகா மண்டபமும் உள்ளது. மகாமண்டபத்தின் வலதுபுறம் ஆழ்வார்களின் திருமேனிகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தை தொடர்ந்துள்ள கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் ராமபிரான் சேவை சாதிக்கிறார். புன்னகை தவழும் திருமுகத்துடன் விளங்கும் ராம பிரானின் கரங்களில் உயரமான வில் மற்றும் அம்புகள் உள்ளன. மேற்கு பிரகாரத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் தனி சன்னதியில் சேவை சாதிக்கிறார்.
இங்கு புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி ஆகிய நாட்களில் மூலவருக்கும், தேவியர்களுக்கும், வரதராஜப் பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தினசரி இரண்டு கால பூஜை உண்டு. தடையை விலக்கி விரைந்து திருமணம் நடைபெற அருள்புரிவதில் இங்குள்ள ஆஞ்சநேயர் வல்லவர் என பக்தர்கள் கூறுகின்றனர்.

ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அவருக்கு வடைமாலை சாத்தி, தயிர்சாத பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்து மகிழ்கின்றனர்.
மனவேறுபாடுகளால் கவலைப்படும் தம்பதியர் இங்கு வந்து ராமபிரானையும், சீதாதேவியையும் வேண்டிக் கொள்கின்றனர். சில தினங்களிலேயே அவர்களிடையே உள்ள பிணக்கு மறைந்து மனம் மகிழும் தம்பதிகளாய் வாழத் தொடங்குகிறார்கள்.
பின்னர் அவர்கள் இங்கு வந்து ராமபிரானுக்கும் சீதாதேவிக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்கள்.
சொத்துப் பிரச்சனையால் தனித்து நிற்கும் சகோதரர்களில் யாராவது ஒருவர் இங்கு வந்து ராமபிரான், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரை வணங்கினால் சகோதரர்களின் பிணக்கு தீர்ந்து இருவரும் ஒரு சுமூக முடிவுக்கு வருவது ராமபிரானின் அருளால்தான் என்று பலனடைந்த பக்தர்கள் சிலிர்ப்போடு விவரிக்கின்றனர்.
- 31-ந்தேதி சனிப்பிரதோஷம்.
- 2-ந்தேதி அமாவாசை.
27-ந்தேதி (செவ்வாய்)
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாடவீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (புதன்)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் பவனி.
* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி சேச வாகனத்தில் பவனி.
* பெருவயல் முருகப் பெருமான் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
29-ந்தேதி (வியாழன்)
* சுமார்த்த ஏகாதசி.
* உப்பூர் விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம், மூசிக வாகனத்தில் உலா.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி, அம்பாள் வெள்ளி இந்திர விமானத்தில் உலா.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
31-ந்தேதி (சனி)
* சனிப்பிரதோஷம்
* திருநெல்வேலி சந்தி விநாயகர் திருக்கோவில் வருசாபிஷேகம்.
* தேவகோட்டை, திண்டுக்கல், திருவலஞ்சுழி தலங்களில் விநாயகப் பெருமான் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
1-ந்தேதி (ஞாயிறு)
* திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க கைலாச பர்வத வாகனத்தில் பவனி, இரவு கமல வாகனத்தில் புறப்பாடு.
* உப்பூர் விநாயகப் பெருமான் மயில் வாகனத்தில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (திங்கள்)
* அமாவாசை
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, பெருவயல் ஆண்டவர் தலங்களில் ரத உற்சவம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
- மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகும்.
- ஜாவானியர்களின் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தோனேசிய நாட்டின் மத்திய ஜாவாவில் உள்ள மகேலாங் ரீஜென்சி பகுதியில் போரோபுதூர் என்ற இடம் உள்ளது. இங்கே கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மகாயான புத்தர் கோவில் உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய புத்தர் கோவிலாகும்.
மேலும் மிகப்பெரிய புத்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது. சைலேந்திர வம்சத்தினரின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 9-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த புத்தர் கோவில் எழுப்பப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் சாவகத் தீவில் அமைந்துள்ள, யோக்யகர்த்தா நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடமேற்கில் இருக்கிறது போரோபுதூர் என்ற பகுதி.
இங்கே சுண்டோரோ-சம்பிங் மற்றும் மெர்பாபு-மெராபி என்ற இரட்டை எரிமலைகள், புரோகோ மற்றும் எலோ ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் ஒரு உயரமான பகுதியில் புத்தர் கோவில் அமைந்திருக்கிறது.
உள்ளூர் புராணங்களின் படி ஜாவானியர்களின் புனித இடமாக கருதப்படும் இது, 'ஜாவானின் தோட்டம்' என்று அழைக்கப்படுகிறது.
சாம்பல் நிற ஆண்டிசைட் போன்ற கற்களால் கட்டப்பட்ட இந்த புத்தக் கோவிலானது, அடுக்கடுக்காக ஒன்பது தளங்களைக் கொண்டு அமைந்துள்ளது.

கீழ் இருந்து முதல் ஆறு அடுக்குகள் சதுர வடிவத்திலும், மேலே உள்ள மூன்று அடுக்குகள் வட்டமாகவும், அதன் மேல் பகுதியில் மையக் குவிமாடமும் இருக்கிறது.
இந்த கோவிலானது சுமார் 2 மில்லியன் கன அடி கற்களைக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஒன்பது தளங்களின் வழியாகவும் சென்று மேல் பகுதியைக் கண்டுகளிக்க, சுமார் 4 கிலோமீட்டர் வரை நாம் நடக்க வேண்டியதிருக்கும்.

இந்த கோவிலில் சுமார் 2 ஆயிரத்து 700 புடைப்புச் சிற்பங்களும், 504 புத்தர் சிலைகளும் இருக்கின்றன.
1975 முதல் 1982-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தோனேசிய அரசும், யுனெஸ்கோவும் இந்த புத்த நினைவுச் சின்னத்தை ஆய்வு செய்து, இதனை உலக பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளன.
மறுசீரமைப்பு பணியின் போது, இந்த பகுதியில் உள்ள மூன்று புத்தக்கோவில்கள், அதாவது போரோபுதூர், பாவோன் மற்றும் மெண்டுட் ஆகியவை நேர்கோட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதோடு அந்த காலத்தில் போரோபுதூரில் இருந்து மெண்டுட் வரை இரு புறமும் சுவர்கள் கொண்ட செங்கல் சாலை இருந்துள்ளது. மூன்று கோவில்களும் ஒரே மாதிரியான கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன.
- இன்று பாஞ்சராத்திர ஸ்ரீ ஜெயந்தி.
- மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-11 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி காலை 7.30 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.54 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பாஞ்சராத்திர ஸ்ரீ ஜெயந்தி (விஷ்ணு ஆலயங்களில் ஸ்ரீ கண்ணன் ஜெயந்தி விழா). சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம். திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நலம்
மிதுனம்-பண்பு
கடகம்-வெற்றி
சிம்மம்-வரவு
கன்னி-சாந்தம்
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-ஊக்கம்
தனுசு- ஆதரவு
மகரம்-அன்பு
கும்பம்-ஆக்கம்
மீனம்-அமைதி
- பொதுவாக மாலை நேரத்தில் கொண்டாடப்படுகிறது.
- விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகவும் கருதப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டு தோறும் தமிழ் ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழா ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி என்று பல்வேறு பெயர்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. இது விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகவும் கருதப்படுகிறது.

இந்த விழா பொதுவாக மாலை நேரத்தில் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால், பூஜைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன.
கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூஜையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.
மேலும் கிருஷ்ண ஜெயந்தி என்றாலே உறியடி விழா என்பது நினைவிற்கு வரும். இந்த விழாவிலே ஒரு உயரமான இடத்தில் பானையில் பல பரிசுப் பொருட்களை போட்டு கட்டி விடுவார்கள். இங்கு பானை என்பது பரம்பொருள்.
அது நமக்கு எட்ட முடியாத இடத்தில் இருக்கிறது. பரம்பொருளை நாடி அவருள் ஐக்கியமாகி முக்தி அடைய வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ஆத்மாவின் எண்ணமாக இருக்கும்.
ஆனால் பரம்பொருள் காலடியை சென்று சேருவது என்பது அவ்வளவு எளிதான விஷயமா? எத்தனை, எத்தனை அலைக்கழிப்புகளில் சிக்கி அல்லாட வேண்டியதிருக்கிறது. என்பதைக் குறிக்கும் வகையில் அந்த பானையை உடைத்து எடுப்பவரின் கண்களை கட்டி அவர் மேல் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பார்கள்.
இந்த தடைகளை எல்லாம் கடந்தால் தான் அந்தப் பரிசுப் பொருளைப் பெற முடியும். அது போல நாம் நமது வாழ்க்கையில் சந்திக்கும்பலவேறு தடைகளைக் கடந்து சென்றால் தான் பகவானின் திருப் பாதங்களில் தஞ்சம் அடைய முடியும்.

வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டங்கள்
* வீடுகள் மற்றும் கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு மலர்கள், மாலைகள் மற்றும் அழகான ரங்கோலிகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
* வண்ணமயமான ஆடைகள் மற்றும் நகைகளால் அழகாக அலங்கரிக்கப்பட்ட குழந்தை கிருஷ்ணரின் சிலைகள் அல்லது உருவங்களுடன் சிறப்பு பீடங்கள் அமைக்கப்படுகின்றன.
* வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணரின் கால் தடங்களை அரிசி மாவில் இடுவார்கள். இது குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்கு வருவதாக ஐதீகம்.
* புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய், அவல் மற்றும் முறுக்கு சீடை போன்ற பலகாரங்களை செய்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
* பக்திப் பாடல்களைப் பாடுவது, பகவத் கீதையைப் படிப்பது மற்றும் கிருஷ்ணரின் குழந்தைப் பருவக் கதைகளைப் பாராயணம் செய்வது போன்றவை கடைபிடிக்கப்படுகிறது.

* வட இந்தியாவில், அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரம் முடியும் வரை பக்தர்கள் நிர்ஜல (நீர் கூட குடிக்காமல் இருத்தல்) விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள், சிலர் பழங்கள் மற்றும் சாத்வீக உணவுகளுடன் விரதத்தைத் தேர்வு செய்கிறார்கள்.
* உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை சிறிய கிருஷ்ணராகவும் ராதையாகவும் அலங்காரம் செய்வது, பண்டிகை உற்சாகத்தை அதிகரிக்கும்.

அடுத்து, கிருஷ்ணரின் சிலை அல்லது விக்கிரகத்தை மலர்கள், விளக்குகள் மற்றும் தூபங்களால் அலங்கரித்து தெய்வீக சூழலை உருவாக்கி பூஜை அறையில் வைக்கவும்.
பாரம்பரிய இனிப்புகளான லட்டு, கேசரி மற்றும் பாயாசம் ஆகியவை பிரசாதமாக தயாரிக்கவும். வெண்ணெய் மற்றும் தயிர் சார்ந்த உணவுகள் போன்ற கிருஷ்ணருக்கு பிடித்த சில உணவுகளையும் படைக்கலாம்.
பகவான் கிருஷ்ணரை மந்திரங்கள் ஜெபித்து அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்திப் பாடல்களைப் பாடி வணங்குங்கள்.
நீங்கள் அனைவரும் இந்த மங்களகரமான விழாவைக் கொண்டாடி மகிழ எங்களின் அன்பான வாழ்த்துக்கள்.






