என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்று சங்கடஹர சதுர்த்தி.
    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-4 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 10 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 7.15 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் கணபதி ஹோமம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமாள் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புத்துணர்ச்சி

    ரிஷபம்-ஆரோக்கியம்

    மிதுனம்-சுகம்

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-செலவு

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- புகழ்

    மகரம்-நலம்

    கும்பம்-உற்சாகம்

    மீனம்-நட்பு

    • பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.

    சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம்.
    • சிவன் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-3 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 10.49 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 7.56 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ண நாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நற்பலன்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-வரவு

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- வியப்பு

    மகரம்-பெருமை

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பயணம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
    • சபரிமலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பு.

    1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.

    2. அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


    3. ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன. அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

    4. ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோகபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து, நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம், தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும், கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும், குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும் அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும் வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.

    5. ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து, பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.

    அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் நான் இனி வனத்தில் வாசம் செய்வேன். என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும். வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான் என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.

    தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார். அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.


    வழிநடை சரணங்கள்

    சுவாமியே ஐயப்போ- ஐயப்போ சுவாமியே

    பகவானே பகவதியே- பகவதியே பகவானே

    தேவனே தேவியே- தேவியே தேவனே

    வில்லாளி வீரனே- வீரமணிகண்டனே

    வீரமணிகண்டனே- வில்லாளி வீரனே

    பகவான் சரணம்- பகவதி சரணம்

    பகவதி சரணம்- பகவான் சரணம்

    தேவன் சரணம்- தேவி சரணம்

    தேவி சரணம்- தேவன் சரணம்

    பள்ளிக்கட்டு சபரிமலைக்கு- சபரிமலைக்கு பள்ளிக்கட்டு

    பாத பலம்தா- தேக பலம்தா

    தேக பலம்தா- பாத பலம்தா

    கல்லும் முள்ளும்- காலுக்கு மெத்தை

    காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்

    குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்

    கண்ணுக்கு வெளிச்சம்- குண்டும் குழியும்

    தாங்கி விடப்பா- ஏந்தி விடப்பா

    ஏந்தி விடப்பா- தாங்கி விடப்பா

    தூக்கி விடப்பா- ஏற்றம் கடினம்

    ஏற்றம் கடினம்- தூக்கி விடப்பா

    சாமி பாதம் ஐயன் பாதம்- ஐயன் பாதம் சாமி பாதம்

    யாரைக்காண- சாமியை காண

    சாமியை கண்டால்- மோட்சம் கிட்டும்

    கற்பூர ஜோதி- சுவாமிக்கே

    நெய் அபிஷேகம்- சுவாமிக்கே

    பன்னீர் அபிஷேகம்- சுவாமிக்கே

    முத்திரைத் தேங்காய்- சுவாமிக்கே

    காணிப்பொன்னும் சாமிக்கே- வெற்றிலை அடக்கம் சாமிக்கே

    கதலிப்பழம் சாமிக்கே- விபூதி அபிஷேகம் சாமிக்கே

    கட்டுக்கட்டு- இருமுடிக்கட்டு

    யாரோட கட்டு- சாமியோட கட்டு

    சாமிமாரே- ஐயப்பமாரே

    ஐயப்பமாரே- சாமிமாரே

    பம்பா வாசா- பந்தள ராஜா

    பந்தள ராஜா- பம்பா வாசா

    சாமி அப்பா ஐயப்பா- சரணம் அப்பா ஐயப்பா

    வாரோம் அப்பா ஐயப்பா- வந்தோம் அப்பா ஐயப்பா

    பந்தள ராஜா ஐயப்பா- பம்பா வாசா ஐயப்பா

    கரிமலை வாசா ஐயப்பா- கலியுக வரதா ஐயப்பா

    • எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும்.
    • போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும்படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.


    2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும்.

    ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்தில் இருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5. மலைக்குச் செல்ல கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழு பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.


    8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

    9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10. எண்ணெய் தேய்த்து குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

    11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, 'சாமி சரணம்' எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் 'சாமிசரணம்' எனச் சொல்ல வேண்டும்.

    12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

    13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் 'நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்' என்று சொல்லக்கூடாது.

    பயணம் புறப்படும் பொழுது 'போய் வருகிறேன்' என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

    16. மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.


    17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக்காவது அன்னமிடுதல் மிக்க அருள் பாலிக்கும்.

    18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்ப மார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

    19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்த பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.


    20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

    22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்தில் இருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையில் இருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.


    25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பில் இருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக்கொள்ள வேண்டும்.

    29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள்.

    என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டுகளிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

    31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

    32. யாத்திரை இனிது நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

    • திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-2 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.33 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. மன்னார்குடி, ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-உண்மை

    கடகம்-அன்பு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- புகழ்

    மகரம்-இன்பம்

    கும்பம்-பயணம்

    மீனம்-பணிவு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
    • மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    பக்தி மணம் வீசும் மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. அதுவும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் கார்த்திகை பிறந்ததால் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. இனி 60 நாட்கள் தமிழகத்தில் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஒலிக்க உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக மாலை அணிந்து செல்கிறார்கள். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் இன்று முதல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளர். தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர்.

    மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள். முதல் முறையாக சபரிமலைக்கு செல்பவர்கள் கன்னி சாமியாக கருதப்படுவார்கள். கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமானவர்கள் முதல் முறையாக மாலை அணிந்தனர்.

    மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கும், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி, மாலை அணிந்து செல்வதற்கு ஐயப்பன் கோவில்களில் தனி வரிசைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர், மாதவரம், மூலக்கடை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அதனைத்தொடர்ந்து கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதம் முழுவதும் பஜனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, விரதத்துக்கான பூஜை பொருட்கள் விற்பனை சென்னையில் நேற்று களைகட்டியது. துளசி, சந்தன, மணி மாலைகளை ஐயப்ப பக்தர்கள் வாங்கி சென்றனர். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் மற்றும் இருமுடிக்கான பை விற்பனையும் அமோகமாக இருந்தது.

    ஐயப்பன் உருவம் பொறித்த டாலர்கள், சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, நீலம், காவி போன்ற வண்ண வேட்டிகளின் விற்பனையும் களைகட்டியது. சென்னை மயிலாப்பூர், புரசைவாக்கம், தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் ஏராளமானவர்கள் பூஜைக்குரிய பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

    • இன்று கார்த்திகை விரதம்.
    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-1 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை நள்ளிரவு 1.38 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 9.30 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா. மாயவரம் முடவன் முழுக்கு, குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மூலவர் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்க டேசப் பெருமாள், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவில்களில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-அமைதி

    சிம்மம்-சுகம்

    கன்னி-நட்பு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- ஆதரவு

    மகரம்-வெற்றி

    கும்பம்-நிறைவு

    மீனம்-செலவு

    • மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
    • அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.

    ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.

    இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.

    இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.

    • இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது.
    • இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜை காலங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நாளை (16-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் மேல் சாந்தி மகேஷ் கோவில் நடையை திறக்கிறார்.

    பின்பு இரவு 7 மணிக்கு சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களின் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கிறார்கள்.


    சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரியும், மாளிகை புரம் கோவில் மேல் சாந்தி யாக வாசுதேவன் நம்பூதிரியும் பதவி ஏற்கிறார்கள். இன்று மாலை வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    அதன் பிறகு நாளை (16-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ப தத்தன் ஆகியோர் முன்னிலையில் புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.

    கோவிலின் நடை திறக்கப்பட்டதும் நிர்மால்ய தரிசனமும், அதிகாலை 3:30 மணிக்கு கணபதி ஹோமமும் நடைபெறும்.

    அவை முடிந்ததும் அதிகாலை 3:30 மணிக்கு நெய் அபிஷேகம் தொடங்குகிறது. தொடர்ந்து காலை 7 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.

    பின்னர் காலை 7:30 மணிக்கு உஷ பூஜை நடைபெறுகிறது. அது முடிந்ததும் காலை 8:30 மணி முதல் 11 மணி வரை மீண்டும் நெய் அபிஷேகம் நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து காலை 11 மணி முதல் 11:30 மணி வரை அஷ்டாபி ஷேகமும், பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜையும் நடைபெறும். அதன் பிறகு பிற்பகல் ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படும்.

    மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாரா தனையும், இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை புஷ்பாபி ஷேகமும், இரவு 9:30 மணி முதல் அத்தாள பூஜையும் நடைபெறும். பின்பு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.

    மண்டல பூஜை காலத்தில் இந்த பூஜைகள் அனைத்தும் தினமும் நடைபெறும். அதிகாலை 3 மணி முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை என தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க பல்வேறு புதிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பேர் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலமாக 10 ஆயிரம் பேர் என தினமும் மொத்தம் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக் கப்படுகின்றனர்.


    ஸ்பாட் புக்கிங் மூலம் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆதார் அட்டை அல்லது அதன் நகலை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போட்டும் அவர்கள் கொண்டுவரலாம்.

    ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்குவதற்காக பம்பையில் 7 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் எரிமேலி மற்றும் வண்டி பெரியாரிலும் ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் செயல்படுகின்றன.

    பக்தர்கள் வரக்கூடிய வாகனங்களை நிறுத்த நிலக்கல், பம்பை மலை உச்சி, சக்குபள்ளம் ஆகிய 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இந்த ஆண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

    பம்பையில் பக்தர்கள் வரக்கூடிய கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் வருவதற்காக நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சங்கிலி தொடர் போன்று பஸ்கள் தொடர்ச்சி யாக இயக்கப்படுகின்றன. மேலும் தமிழகத்தில் இயக்கப்படும் தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் பம்பை வரை சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கிறது.

    மேலும் பக்தர்கள் தங்கு வதற்காக பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் நடைப் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பம்பையில் 7 ஆயிரம் பேர் தங்கும் வகை யில் 9 நடை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சன்னிதானத் தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும், நிலக் கல்லில் 8 ஆயிரம் பேர் தங்கும் வகையிலும் நடை பந்தல்கள் அமைக்கப்பட்டு இருக்கின் றன.

    அது மட்டுமின்றி சபரி மலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்காக பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு யாத்திரை செல்லக்கூடிய பக்தர்களுக்கு வழங்கு வதற்காக 3 ஆயிரம் இரும்பு தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பக்தர்களுக்கு தண்ணீர் நிரப்பி விநியோகிக்கப்படும்.

    பத்தர்கள் மலையில் இருந்து இறங்கும்போது அந்த பாட்டிலை திருப்பி கொடுத்து விட வேண்டும். இதேபோல் பக்தர்களுக்கு சுக்கு தண்ணீர் வழங்குவ தற்காக சரங்குத்தி முதல் சன்னிதானம் வரை 60 கவுண்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன.

    மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்க பம்பையில் இருந்து சன்னிதானம் வரையிலான மலை பாதையில் பல இடங்களில் மருத்துவ சிகிச்சை மையங்கள் இருக் கின்றன. மேலும் பக்தர்கள் அமருவதற்காக ஆயிரத் துக்கும் மேற்பட்ட இரும்பு நாற்காலிகள் வைக்கப்பட் டுள்ளன.

    இந்தநிலையில் சாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முடிந்துவிட்டது. அடுத்த மாதத்திற்கு சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    ஆன்லைன் முன்பதிவு செய்த நாளில் வர முடியாத பக்தர்கள், தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யப்படும் முன்பதிவு டிக்கெட்டுகள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    மண்டல பூஜை நாளை தொடங்குவதை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் இன்றே வரத்தொடங்கினர். இதனால் எரிமேலி மற்றும் பம்பையில் பக்தர்கள் கூட்ட மாகவே காணப்பட்டது. மதியம் ஒரு மணி முதல் பம்பையில் இருந்து சன்னி தானத்துக்கு மலை யேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக் கப்பட்டார்கள்.

    பக்தர்களை ஒழுங்கு படுத்தி அனுப்புதல் மற்றும் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சபரிமலையில் பணியமர்த்தப்பட்டு உள்ள னர். மேலும் அதிவிரைவு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி கமாண்டோ வீரர்களும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன.
    • 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும்.

    கோவில் தோற்றம்

    ராமாயண காலத்தோடு தொடர்புடைய ஆலயங்கள் இங்கே உண்டு. ராமரால் பூஜிக்கப்பட்ட சிவ தலங்களும் உண்டு. அவற்றில் ராமேஸ்வரம் போன்ற புகழ்பெற்ற திருத்தலங்கள் நமக்குத் தெரியும்.

    ஆனால் குக்கிராமங்களிலும் ராமர் வழிபட்ட சிவாலயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம்.


    கடலூர் மாவட்டம் பின்னலூர் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் ராமலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை, ராமர் வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ராமர் சென்றபோது, பின்னலூர் என்ற கிராமத்தில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.

    குலோத்துங்கச் சோழன் தனது ஆட்சி காலத்தில் 72 மாடக் கோவில்கள் கட்டியதாகவும், அதில் ஒன்று இக்கோவில் என்றும் கூறப்படுகிறது.

    குலோத்துங்கச் சோழன் ஆட்சி செய்த காலத்தில் மக்கள் விவசாய பணிக்காக பள்ளம் தோண்டும்போது, பூமிக்கு அடியில் இருந்து சிவலிங்கம் ஒன்றை வெளியே எடுத்தனர். இதுபற்றி மக்கள் அனைவரும் குலோத்துங்கனிடம் விபரத்தைக் கூறினர்.

    இதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற குலோத்துங்கச் சோழன், சிவபெருமானுக்கு அங்கே ஒரு ஆலயத்தை அமைக்க முடிவு செய்தார். அந்த ஆலயத்தை மாடக்கோவிலாக அமைத்ததாகக் கூறப்படுகிறது.

    வடலூர் அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரை நமக்குத் தெரியும். ஆனால் அவருக்கு அந்தப் பெயர் வந்ததற்கான காரணம், இந்த ராமலிங்கேஸ்வரர் ஆலயம் தான் என்று சொல்லப்படுகிறது.

    அருட்பிரகாச வள்ளலாரின் தந்தை ராமையாப்பிள்ளை, தில்லை நடராஜரை தரிசிக்க வடலூரில் இருந்து பின்னலூர் வழியாக செல்வது வழக்கம். அப்பொழுது தினமும் ஊரில் இருக்கும் ராமலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தரிசனம் செய்து தனக்கு புத்திர பாக்கியம் இல்லாத குறையை மகேசனிடம் மனதார வேண்டி இருக்கிறார்.

    அவர் வேண்டுதல் பலித்து ராமலிங்கேஸ்வரர் அருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. எனவே அந்த குழந்தைக்கு இக்கோவிலில் வைத்து, 'ராமலிங்கம்' என்று பெயர் சூட்டியதாக கூறுகிறார்கள். இப்படி பல சிறப்புகள் வாய்ந்தது இந்த ஆலயம்.


    இந்த கோவில் அமைப்பு படி முன் மண்டபத்தின் மேல் பகுதியில் நடுநாயகமாக சிவன்- பார்வதி ரிஷப வாகனத்தில் சுதைச் சிற்பகமாக வீற்றிருக்கின்றனர். அவர்களின் இருபுறமும் வள்ளி-தெய்வானை உடனாய சுப்பிரமணியர், விநாயகர், அனுமன், ராமர், சீதை, நந்தி ஆகியவை உள்ளன.

    அடுத்தது அலங்கார மண்டபம், அங்கே நந்தி, பலிபீடம், விநாயகர் மற்றும் நால்வர் சன்னிதி அமைந்துள்ளது. மகா மண்டபத்தில் பர்வதவர்த்தினி அம்பாள் தெற்கு நோக்கி அற்புதமாய் காட்சி தருகிறாள். அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

    கிழக்கு நோக்கிய கருவறையில் ராமலிங்கேஸ்வரர், வட்ட பீடத்தில் பாண லிங்கமாக காட்சி தருகிறார். அவரை வணங்கி விட்டு கோஷ்டத்திற்கு வந்தால், தெற்குமுகம் பார்த்து ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சிவ துர்க்கையை வணங்கலாம்.

    பிரகாரத்தில் விநாயகர், ஸ்ரீதேவி - பூ தேவி சமேதராக சீனிவாசப் பெருமாள், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய அனைவரும் தனித்தனி சன்னிதியில் அற்புமாக காட்சி தருகின்றனர்.

    இவ்வாலயத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புமிகு பிரார்த்தனைகள் பல இருக்கின்றன. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வது விசேஷமானதாகும். தொடர்ச்சியாக 11 பிரதோஷ தினங்கள் வந்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

    ஜாதகத்தில் கிரக தோஷங்களால் தள்ளிப் போகும் திருமணங்கள் நல்ல படியாக நடைபெற, மூலவர் ராமலிங்கேஸ்வரருக்கு வில்வ மாலை மற்றும் சரக்கொன்றை மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

    முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு தோஷ பூஜையை இங்கே செய்யலாம். அமாவாசை அன்று தர்ப்பணமும், மற்ற எல்லா நாட்களிலும் முன்னோர்கள் வழிபாடும் செய்யலாம். இதுவும் ஒரு நித்திய அமாவாசை ஷேத்திரம்.


    மனதுக்குப் பிடித்த மணவாழ்க்கை அமைய, ஆடிப்பூரம் அன்று கன்னிப்பெண்கள் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு வளையல் அணிவித்து பிரார்த்தனை செய்தால் மனம் போல் வாழ்க்கை அமையும்.

    கடன் பிரச்சனை நீங்க, குடும்ப நிம்மதி கிடைக்க தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை வழிபடுகிறார்கள். அன்றைய தினம் 11 நெய் தீபம் ஏற்றி, 11 முறை வலம் வர வேண்டும்.

    இவ்வாலயத்தில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது, சிவராத்திரி. அன்றைய தினம் நான்கு கால பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். மேலும் அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை திறந்திருக்கும்.

    தில்லை நடராஜர் கோவிலில் நடைபெறுவதுபோல், இந்த ஆலயத்திலும் ஆண்டுக்கு 6 நடராஜர் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.

    விநாயகர் சதுர்த்தி அன்று இங்குள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்து பல விதமான மோதக கொழுக்கட்டைகள் பிரசாதமாக நைவேத்தியம் செய்யப்படும்.

    கந்த சஷ்டி ஆறு நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறும். பர்வதவர்த்தினி தாயாரிடம் முருகன் வேல் வாங்கி ஆலயத்தின் உள்ளே பிரகாரத்தில் சூரசம் ஹாரம் செய்யும் வைபவம் நடத்தப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய் வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பின்னலூர் ராமலிங்கேஸ்வரர் கோவில்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது.
    • எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் 'சின்' முத்திரை.

    சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனுக்கு கார்த்திகை மாதம் மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள்.

    சபரிமலையில் அருளும் ஐயப்பன், தனது மூன்று விரல்களை நீட்டி, ஆட்காட்டி விரலால் பெருவிரலை தொட்டுக்கொண்டு சின்முத்திரை காட்டுகிறார். 'சித்' என்றால் அறிவு எனப் பொருள். இந்த வார்த்தையே காலப்போக்கில் மருவி 'சின்' என மாறியது.


    எது உண்மையான அறிவு என்பதை விளக்குவதுதான் இந்த 'சின்' முத்திரையாகும். இந்த முத்திரையுடன் தியான கோலத்தில் உள்ள ஐயப்பனை கண்ணாரக் கண்டு தரிசிப்பதால், பிறவிப் பயனை அடைந்த மகிழ்ச்சி கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதமும் நடை அடைக்கப்படும் போதும், கிலோ கணக்கில் பசுமையான விபூதியை ஐயப்பன் மேல் சாற்றுவார்கள். அந்த விபூதி, 'தவக்கோல விபூதி' என்று அழைக்கப்படுகிறது.

    நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அந்த விபூதி பிரசாதத்தை நெற்றியில் தரித்து, சிறிது உட்கொண்டால் நோய் குணமடையும் என்பது நம்பிக்கை. அத்துடன் ஐயப்பனின் சின் முத்திரையின் மேல் ஒரு ருத்ராட்ச மாலையை போடுவார்கள். இதற்கு 'தவக்கோலம்' என்று பெயர்.

    அப்போது ஒரு விளக்கையும் ஏற்றி வைப்பார்கள். அந்த விளக்கானது மீண்டும் அடுத்த மாதம் நடை திறக்கப்படும் வரை எரிந்து கொண்டே இருக்குமாம்.

    மீண்டும் ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது, உலகத்தின் பார்வை அந்த கோவிலுக்குள் படும் வேளையில் ஐயப்பனின் தவக்கோலம் கலைவதாக நம்பிக்கை.

    அடுத்த நிமிடம் கோவிலில் ஏற்றிய விளக்கும் அணைந்துவிடும். மனித மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தான் ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள், எப்போதும் ஐயப்பனின் திருநாமங்களை சத்தம் போட்டு சரணகோஷமாக சொல்கிறார்கள்.

    இவ்வாறு ஐயப்பனின் திருநாமங்களை சொல்லும்போது கவனம் திசை திரும்பாது. அந்த ஒலி அலைகள் அந்த இடம் முழுக்க பரவி, பக்தி அதிர்வை ஏற்படுத்தும்.

    இது வீட்டில் இருப்பவர்கள் மற்ற சிந்தனைகளுடனோ அல்லது வேறு பேச்சுக்களிலோ இருந்தால்கூட அவர்களது கவனத்தையும் ஐயப்பனை நோக்கி திரும்ப வைக்கும்.

    ×