என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.
    • ஈசன் தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார்.

    வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் ஆகிய அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் சிவபெருமான் அழிக்கப் புறப்பட்டார். அப்போது, அவருடைய தேர் அச்சு முறிந்து தடை ஏற்பட்டது.

    விநாயகரை வணங்காமல் சென்றதால் தான் இந்தத் தடை என்பதை உணர்ந்த சிவபெருமான், உடனே பிள்ளையாரை நினைத்து வணங்கினார். மறுகணம் அங்கு தோன்றிய கணபதிக்கு, உகந்த காணிக்கையைத் தருவதாகச் சொன்னார் சிவனார். அப்போது, 'முக்கண்ணனையே தனக்கு காணிக்கையாகத் தர வேண்டும்' என்றார் கணபதி.

    எனவே ஈசன், தன்னைப் போல் மூன்று கண்களும், சடையும் உடைய தேங்காயை கணபதிக்கு படைத்து அருளினார். அன்று முதல், தடைகள் நீங்கிட விநாயகருக்குத் தேங்காய் உடைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

    • மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
    • உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    விக்கிரகங்களாக மட்டும்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்பதில்லை.

    * மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.

    * புற்று மண்ணில் செய்த விநாயகரை வழிபட்டால் லாபம் பெருகும்.

    * வெல்லத்தால் செய்த விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    * உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    * வெள்ளெருக்கு விநாயகரை வழிபட செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.

    * கல் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும்.

    * மாவினால் செய்த விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி வந்துசேரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.
    • மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.

    பொதுவாக விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.அதே நேரம் சித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது, விநாயக புராணம்.

    புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.இவர்கள் மட்டுமல்லாமல் மோதை, பிரபோதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயக ரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.

    • சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார்.
    • ஒவ்வொரு படைப்பும் பூரணத்தை போல இனிமையானதாக கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும்.

    பிள்ளையாருக்கு முதன்முதலில் மோதகம் படைத்தது, வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி என்று கூறப்படுகிறது.

    சர்வ ரட்சகரான விநாயகர் அண்டத்தின் உள்ளே எங்கும் பூரணமாய் நிறைந்துள்ளார். அருந்ததி அண்டத்தை உணர்த்த, மாவினால் 'செப்பு' என்ற மேல் பகுதியைச் செய்தாள். அண்டத்தின் உள்ளே பூரணமாய் நிறைந்திருக்கும் பிள்ளையாரைக் குறிக்கும் வகையில் இனிப்பான பூரணத்தை, மாவுக்குள் வைத்தாள். அதுவே, மோதகம் என்னும் கொழுக்கட்டை.

    இது தவிர உலகமே மோதகமாகவும், இங்குள்ள ஒவ்வொரு படைப்பும் பூரணத்தைப் போல இனிமையானதாகவும் கருதி, நாம் இனிய செயல்களை செய்ய வேண்டும் என்பதை இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது.
    • விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர்.

    விநாயகரே முழு முதல் கடவுள் என்பதாலும், அவரே கணங்களின் அதிபதி கொண்டாடப்படுகிறது.

    'கணபதி' என்ற சொல்லுக்கு 'தேவகணங்களின் தலைவன்' என்று பொருள். 'க' என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், 'ண' என்பது மோட்சம் பெறுவதையும், 'பதி' என்பது ஞான நெறியில் திளைத்து பரம்பொருளை அடைதலையும் குறிக்கும்.

    மேலும் 'மனோவாக்கினை கடந்த தலைவன்' என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். 'தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்' என்பதே விநாயகர் என்ற பெயருக்கு பொருள். விக்கினங்களை அகற்றுவதால் 'விக்னேஸ்வரர்' என்று பெயர். இப்படி விநாயகருக்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன.

    • விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம்.
    • பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை நண்பகல் 1.47 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: அஸ்தம் காலை 9.18 மணி வரை பிறகு சித்திரை

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா. மதுரை ஸ்ரீ நவநீதிகிருஷ்ண சுவாமி மச்சாவாதாரம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான், பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் தேரோட்டம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. மதுரை ஸ்ரீ சோமசுந்தரம் பெருமான் நாரைக்கு முக்தியருளிய காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-வரவு

    கடகம்-கடமை

    சிம்மம்-கவனம்

    கன்னி-முயற்சி

    துலாம்- பயிற்சி

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- அனுகூலம்

    மகரம்-பயணம்

    கும்பம்-பரிவு

    மீனம்-பரிசு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் மகிமை அதிகம்.
    • விநாயகர்' என்றால் 'மேலான தலைவர்' என்று அர்த்தம்.

    ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்கு காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

    அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.


    அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.

    தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொண்டு வருமாறு பணித்தார்.

    அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையை கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் உடலில் பொருத்தி வைத்து உயிரூட்டி விட்டார்.

    இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் மகிழ்ச்சி அடைந்து பிள்ளை யாரைக் கட்டி அணைத்துக் கொண்டார். சிவபிரான் அந்த குழந்தைக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம்.

    இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்றில் இருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    விநாயகரை எந்த பொருள் மூலமாகவும் வடிவமைத்து வழிபடலாம். ஆனால் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் மகிமை அதிகம் என்கிறார்கள். பார்வதி முதலில் விநாயகரை படைத்த போது மஞ்சளைப் பிடித்து உருவாக்கியதுதான் அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    'விநாயகர்' என்றால் 'மேலான தலைவர்' என்று அர்த்தம். 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும் 'ஐங்கரன்' என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.

    'கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி' என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்த பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    • விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
    • விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும்.

    விநாயகர் சதுர்த்தி நாளை மறுதினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கொழுக்கட்டை மாவு உள்ளிட்டவற்றை வாங்குவதுடன் களிமண்ணால் செய்த விநாயகர் சிலை, பூ போன்ற பொருட்களை வாங்கி வந்து பூஜை செய்வது வழக்கம்.

    பூஜை முடிந்ததும் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கொண்டு கரைப்பதும் உண்டு. ஆனால் தற்போது சற்று வித்தியாசமான முறையில் பசும் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை விற்பனைக்கு வந்து உள்ளது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து பசும் சாணத்தால் விநாயகர் சிலை செய்து வரும் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் பிரிதா மணிகண்டன் கூறியதாவது:-

    நாட்டு மாடுகளை காப்பதற்காக ஆதம்பாக்கம், பள்ளிக்கரணையில் 120 மாடுகளுடன் கோசாலை ஒன்றை நடத்தி வருகிறோம். இதில் சிவகங்கை குட்டை, தஞ்சாவூர் குட்டை, காஞ்சி குட்டை, துரிஞ்சல் உள்ளிட்ட 20 வகையான நாட்டு மாடுகள் எங்களிடம் வாழ்ந்து வருகின்றன.

    இவற்றின் மூலம் எதிர்பார்த்த அளவு பால் உற்பத்தி இல்லாததால் விவசாயிகளிடம் நாட்டு மாடுகளுக்கு நல்ல வரவேற்பு இல்லாத நிலை உள்ளது.

    இதனால் இந்த வகை மாடுகள் அழிந்துவிடும் நிலை இருப்பதால் இதுகுறித்து பலருக்கும் விழிப்புணர்வு அளிப்பதுடன், இவற்றை பாதுகாத்தும் வருகிறோம்.

    பசுக்களில் இருந்து பால் மட்டுமே வருமானம் என்று பார்க்காமல், சாணத்தில் இருந்து பொருட்களை தயாரித்து வருமானம் பார்க்க முடியும்.

    குறிப்பாக இயற்கை உரம், கம்யூட்டர் சாம்பிராணி, சோப்பு போன்ற பூஜை பொருட்கள், பாத்திரம் பூசும் பொடி, கொசுவிரட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், சோப்பு, முகத்தில் தடவும் கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், கண், மூக்குகளில் விடப்படும் நெய் உள்ளிட்ட பஞ்ச கவ்ய மருந்துகள் போன்றவை சாணம் மூலம் தயாரித்து வருகிறோம்.

    தற்போது விநாயகர் சதுர்த்தி சீசன் என்பதால் பசு மாட்டு சாணத்தால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எந்தவித ரசாயன பொருட்களும் சேர்க்காமல் சுத்த சாணத்தால் பின்விளைவு இல்லாத வகையில் தயாரித்து வருகிறோம்.

    சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள் களிமண் பிள்ளையார் வைத்து பூஜித்து விட்டு நீரில் கரைப்பதற்கு நீர் நிலைகளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    ஆனால் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும். இதுபோன்ற பல சிறப்புகளை கொண்டது சாணப்பிள்ளையார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பசும் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சிறியது (5 செ.மீ) ரூ.90, சற்று பெரியது (12 செ.மீ) ரூ.220, அதைவிட சற்று பெரியது (17 செ.மீ) ரூ.350, பெரியது (27செ.மீ) ரூ.450 என 4 வகையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் ரசாயன பொருட்கள் கலக்காத சுத்தமான முறையில் இயற்கையிலேயே தயாரிக்கப்பட்ட மங்களகரமான நிறம் சேர்ப்பதற்கு கூடுதலாக ரூ.10 அதிகம் வசூலிக்கப்படுகிறது.

    சென்னையில் இந்த வகை விநாயகர் சிலைகள் ஆதம்பாக்கம் மற்றும் நங்கநல்லூரில் விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்று விற்பனையாளர்கள் கூறினர்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-20 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை காலை 11.48 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: உத்திரம் காலை 6.42 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சாம வேத உபாகர்மா. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழா தொடக்கம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கல்யாணம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆராய்ச்சி

    ரிஷபம்-அன்பு

    மிதுனம்-சிரத்தை

    கடகம்-பண்பு

    சிம்மம்-நன்மை

    கன்னி-உதவி

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-மகிழ்ச்சி

    தனுசு- வெற்றி

    மகரம்-மாற்றம்

    கும்பம்-செலவு

    மீனம்-வரவு

    • சிவாலயம் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தாலே போதும்.
    • சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால் பாவங்கள் விலகும்.

    ஆலயங்களைப் பற்றி, அகத்தியர் அருளிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    * தன் வாழ்நாளில் ஒரு சிவாலயத்தை கட்டுபவன், தினந்தோறும் சிவபெருமானை பூஜித்த பலனை பெறுவான். அதோடு அவன் குலத்தில் பிறந்த சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.

    * ஒருவன் சிவாலயம் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தாலே போதும். அவன் ஏழு ஜென் மங்களில் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவான். நினைத்ததுபோலவே சிவாலயம் கட்டி முடித்தால், சகலவிதமான போகங்களும் அவனை வந்தடையும்.

    * கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புபவர். ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு ஆயிரம் வருடம் என. சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.

    * ஒருவரைக் கொண்டு சிவலிங்கத்தை செய்விப்பவனுக்கு. சிவலோகத்தில் 60 ஆயிரம் வருடம் தங்கியிருக்கும் பாக்கியம் கிடைக்கும். அவனது வம்சத்தவர்களும் சிவலோகத்தை அடையும் புண்ணியம் பெறு வர்.

    * சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர், தன்னுடைய எட்டு தலைமுறை முன்னோர்களை, சிவலோகம் அடையச் செய்வார். அப்படி ஒருவரால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்வதைக் கண்டு, 'நாமும் இதுபோல் செய்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும். அவருக்கு முக்தி நிச்சயம்.

    * எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், ஈசனை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக் கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள். காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கி சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் எமதர்மன் நெருங்க மாட்டார்.


    * சிவாலயம் சென்று இறைவனுக்கு தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன். ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.

    * தேய்பிறை சதுர்த்தசியில் சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால், அதுவரை செய்த பாவங்கள் விலகும்.

    * பவுர்ணமி, அமாவாசை தினங்களில் சிவலிங்கத்துக்கு, அபிஷேகம் செய்து பூஜிப்பவன் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.

    • இன்று சந்திர தரிசனம்.
    • ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-19 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை காலை 9.49 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: உத்திரம் (முழுவதும்)

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சந்திர தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு. கண்டருளல். மதுரை ஸ்ரீ நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜமன்னார் திருக்கோலமாய் காட்சி, மாலை சேஷ வாகனத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் கள்ளர் திருக்கோலமாய் பவனி. மறைஞான சம்பந்தர் நாயனார் குருபூஜை. திண்டுக்கல் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆர்வம்

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-புகழ்

    கன்னி-அனுகூலம்

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-சிரத்தை

    தனுசு- ஊக்கம்

    மகரம்-மகிழ்ச்சி

    கும்பம்-சாதனை

    மீனம்-உண்மை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர, அழிந்து போகாது.
    • குடல் புண்களை ஆற்றும் சக்தி இந்த அருகம்புல்லுக்கு உண்டு.

    முன் காலத்தில் கவுண்டின்யர் என்ற முனிவர் இருந்தார். அவர் எப்போதும் விநாயகப்பெருமானுக்கு, அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்தார்.

    இதை பார்த்துக் கொண்டிருந்த முனிவரின் மனைவி, "எதற்காக விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குகிறீர்கள்? என்று கேட்டாள். உடனே கவுண்டின்யர், விநாயகருக்கு அருகம்புல் வழிபாடு வந்ததற்கான காரணத்தை தன்னுடைய மனைவிக்கு கூறினார்.

    அது ஒரு புராணக் கதை யாகும். அதனை நாமும் தெரிந்து கொள்ளலாம். அது எமலோகம், எமன் வீற்றிருந்த சபையில் அனைவரும் இசை இசைத்துக் கொண்டிருந்தனர். பாடல்கள் பாடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகிய மூவரும் இசைக்கு ஏற்ப அற்புத நடனம் ஆடினர். அவர்களின் நடனத்தை அந்த சபையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களில் திலோத்தமையின் நடனம் எமனை கவர்ந்தது. அவளது அழகும் தான். அவனுக்கு காமம் தலைக்கேறியது.

    தன்னுடைய சபையில் பலரும் கூடியிருக்கிறார்கள் என்பதையும் மறந்து, ஓடிச் சென்று திலோத்தமையின் கரங்களை வலுவாக பற்றினான். எமதர்மன், தகாத இந்த செயலால் எந்த கேடு விளையப்போகிறதோ என்று, அங்கிருந்த அனைவரும் திகைத்தனர்.

    ரம்பையும், ஊர்வசியும் அங்கிருந்து ஒடி மறைந்தனர். அதையெல்லாம் காணும் நிலையில் எமன் இல்லை. தர்மத்தை நிலை நிறுத்தும் அவனுக்கு, இப்போது காமமே தலைதூக்கி நின்றது. அதனால் திலோத்தமையின் கரங்களை மேலும் வலுவாக பற்றினான்.

    அவனது காமம் திரண்டு, சுக்கிலமாக வெளியேறியது. அதன் மூலம் ஒரு அசுரன் தோன்றினான். அவன் வெப்பத்தால் தகித்தான். அவன் தொட்டதெல்லாம் நெருப்பில் பொசுங்கியது. அவன் வாயில் இருந்தும் நெருப்பு வெளிப்பட்டது. இதனால் அவன் 'அனலாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.

    தேவர்களையும், மக்களையும், முனிவர்களையும் தன்னுடைய வெப்பத்தால் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவர் தன் படையுடன் சென்று அனலாகானுடன் போரிட்டு, அவனை வீழ்த்தினார்.

    கீழே விழுந்த அவன் மீது, வருணன் கடும் மழை பொழிவித்தான். குளிர்ச்சியான சந்திரன், அனலாகரன் மீது தன்னுடைய குளிர் கதிர்களை பாய்ச்சினான்.

    இதையடுத்து விநாயகப்பெருமான், அனலாசுரன் அருகில் சென்றார். அவனை சிறிய உருவமாக மாற்றிய விநாயகர், அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

    அப்போது விநாயகரின் வயிற்றில் சூடான வெப்பம் ஏற்பட்டது. அது கடுமையான வெப்பத்தை உண்டாக்கி, விநாயகரை அவதிப்படுத்தியது. சிவபெருமான் தன்னுடைய குளிர்பாணங்களை விநாயகர் மீது எய்தார்.

    ஆனாலும் அவரது வெப்பம் தணியவில்லை. கங்கை தன்னுடைய குளிர்ச்சியான நீரால்,விநாய கரை நீராட்டினாள். அதுவும் பலன் அளிக்க வில்லை. இறுதியாக ஒரு முனிவர், அருகம்புல்லை விநாயகரின் மீது வைத்தார்.

    அதன் குளிர்ச்சியால், அவருக்குள் இருந்த வெப்பம் தணிந்தது. வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் நிறைந்த அந்த அருகம்புல், விநாயகரின் முக்கியமான வழிபாட்டுப் பொருளாக மாறிப்போனது.


    அருகம்புல் எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாமல் கடுமையான கோடை நிலவினாலும் கூட அருகம்புல் வளரும். கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர, அழிந்து போகாது. சிறிதளவு மழை பெய்தாலும் அருகம்புல் பசுமையாக துளிர்விட்டு வளர்ந்து விடும்.

    சாதாரண புல் போன்று காட்சி தரும் இந்த அருகம் புல், அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த அருகம்புல், உடல் சூட்டை அகற்றும், சிறுநீர் கடுத்தால் அதனை குணமாக்கும்.

    நாள்பட்ட குடல் புண்களை ஆற்றும் சக்தி இந்த அருகம்புல்லுக்கு உண்டு. இவற்றைப் பருகி வருபவர்களின் ரத்தத்தை தூய்மையாக்கும். கண்பார்வையை தெளிவாக்கும். இப்படி பல ஆற்றல்களை கொண்ட அருகம்புல்லைத் தான், விநாயகர் தன்னுடைய விருப்பமான அர்ச்சனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்.

    ×