என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-27 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி இரவு 7.05 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: மூலம் இரவு 6.31 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை சொக்கநாதப் பெருமான் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல். சுவாமி தங்கக் குதிரையில் புறப்பாடு. தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் தெப்ப உற்சவம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், குங்குலியக்கலய நாயனார் குருபூஜை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாசம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-பரிசு

    கடகம்-வரவு

    சிம்மம்-செலவு

    கன்னி-ஆதாயம்

    துலாம்- சலனம்

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- விருப்பம்

    மகரம்-நிறைவு

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பொறுமை

    • மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.
    • மனித பிறவியில் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு பிறவிகள் தரப்படுகிறது.

    'போன ஜென்மத்தில் என்னதான் பாவம் செய்தேனோ? இந்த பிறவியில் மனிதனாக பிறந்து இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றேன்!' இதை கூறாத மனிதர்களே கிடையாது.

    ஆனால் மனிதப் பிறவி எடுப்பது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. முதலில் தாவரமாக பிறந்து, இரண்டாவதாக நீர்வாழ் உயிரினமாக பிறவி எடுத்து, மூன்றாவதாக ஊர்வன இனத்தில் பிறந்து, நான்காவதாக பறவையாக பிறந்து, ஐந்தாவது ஜென்மத்தில் விலங்காக பிறந்து, இப்படி ஐந்து பிறவிகளை எடுத்து பிறருக்கு உதவி செய்ததன் மூலம் தான் நம்மால் மனிதப் பிறவியை எடுக்க முடியும்.

    மனித பிறவி எடுப்பது எவ்வளவு கஷ்டங்கள் இருக்கின்றது என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்பேர்ப்பட்ட பிறவிதான் மனிதப்பிறவி.

    மனிதப் பிறவியில் நாம் செய்யும் பாவங்கள் கணக்கிடப்பட்டு தான், அடுத்த பிறவியானது நமக்கு தரப்படுகிறது என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பிறவியில் என்னென்ன பாவங்கள் செய்தால், அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    * புழுக்கள் நெளியும் அசுத்தமான இடங்களில் வசிப்பவர்கள், போன ஜென்மத்தில் அடுத்தவர்கள் பொருளை திருடியவர்களாக இருந்திருப்பார்கள்.

    * துர்நாற்றம் வீசும் வாய் உடையவர்கள், வாயில் புழுக்கள் உருவாகும் பிரச்சனைகளை கொண்டவர்கள், போன ஜென்மத்தில் மதுபானம் விற்றவர்கள், குடி போதைக்கு அடிமையாக இருந்தவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

    * போன ஜென்மத்தில் கொலை செய்தவன், இந்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறந்திருப்பான். அது மட்டுமல்லாமல் உடலில் கெட்ட நீர் சேர்ந்து துர்நாற்றம் வீசும்.

    * இந்த ஜென்மத்தில், கொலை செய்தால் அடுத்த ஜென்மத்தில் குஷ்டரோகியாக பிறப்பது கட்டாயம் நடக்கும்.

    * பசுவை கஷ்டப்படுத்தியவர்கள், பிறர் வீட்டிற்கு தீ வைத்தவர்கள் இந்த ஜென்மத்தில் ஊமையாகவும், குஷ்டரோகியாகவும் பிறந்திருப்பார்கள்.

    * போன ஜென்மத்தில் அதிகமாக பொய் பேசி அடுத்தவர்களை ஏமாற்றி இருந்தால், இந்த ஜென்மத்தில் ஊமையாக பிறந்து இருப்பார்கள்.

    * போன ஜென்மத்தில் குருவுக்கு துரோகம் செய்திருந்தால், இந்த ஜென்மத்தில் விகாரமான தோற்றத்தோடு பிறவி எடுத்திருப்பார்கள்.

    * ஒருமுறைகூட இறை வழிபாடு செய்யாதவர்கள், புனித தீர்த்தத்தில் நீராடமல் இருப்பவர், இப்படிப்பட்டவர்கள் ஆளில்லா காட்டில் குரங்காக பிறவி எடுப்பார்கள்.

    * பல புரோகிதர்கள் ஒன்றாக இருக்கும் இடத்தில், ஒரு புரோகிதர் மட்டும் தவறு செய்தால் அந்த பாவம் அவரை மட்டும் போய் சேராது. அந்த இடத்தில் இருக்கும் அனைத்து புரோகிதர்களும் அடுத்த ஜென்மத்தில் கழுதையாக பிறவி எடுப்பார்கள்.

    * ஒழுக்கம் இல்லாதவன், வேத சாஸ்திரத்தை நன்கு அறிந்து, புரோகிதராக இருந்தால் அடுத்த ஜென்மத்தில் அவர் கட்டாயம் பன்றி பிறவி எடுப்பார்.

    * இந்த பிறவியில் தரித்திர நிலைமையோடு வாழும் ஒருவர், போன ஜென்மத்தில் கஞ்சனாக இருந்திருப்பார்.

    * தங்கத்தை திருடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் புழுக்கள் நிறைந்த நரகத்தில் வேலை செய்வான்.

    * பிறன் மனைவியின் மீது ஆசைப்படுபவன் அடுத்த ஜென்மத்தில் சண்டாளனாக பிறவி எடுப்பான்.

    * பசி என்று வந்தவருக்கு சாப்பாடு இல்லை என்று சொல்லி துரத்தி அடித்தால் அடுத்த ஜென்மத்தில் அவருக்கு புத்திரபாக்கியம் கிடைக்காது.

    * கோவில் சொத்தை அபகரித்நவர்கள், பொய்க்கணக்கு எழுதுபவர்கள் எல்லாம் செவிட்டு மாடாகவும், குருட்டு மாடாகவும் பிறவி எடுப்பார்கள்.

    * அடுத்தவர்களை துன்புறுத்தி பணம் சேர்ப்பவன், அடுத்த பிறவியில் பூனையாக பிறப்பான்.

    * பசுமையாக இருக்கும் மரம், செடி, கொடிகளை வீழ்த்தி எரித்தவன் அடுத்த ஜென்மத்தில் மின்மினிப்பூச்சியாக பிறவி எடுப்பான்.

    * வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளியை இழிவாக நடத்தி பழைய சாப்பாடு போட்டு அவமதிப்பவர்கள் அடுத்த ஜென்மத்தில் கருங்குரங்காக பிறவி எடுப்பான்.

    * அடுத்தவர்களுக்கு பயன்தரக்கூடிய பூ காய் கனி பழம் நிறைந்த மரத்தை எவனொருவன் வெட்டுகின்றானோ, அவன் அடுத்த ஜென்மத்தில் எதற்கும் உபயோகம் இல்லாதவனாக பிறவி எடுப்பான்.

    * நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்பவன், தவறாக தீர்ப்பு சொல்பவன் அடுத்த ஜென்மத்தில் கோட்டான் பிறவி எடுப்பான். கோள் சொல்லுபவர்கள் பல்லியாகவும், தவளையாகவும் பிறவி எடுக்கிறார்கள்.

    * உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்காத முதலாளிகள், அட்டைபூச்சி ஆக அடுத்த ஜென்மத்தில் பிறப்பார்கள்.

    * அதிகப்படியான லஞ்சத்தை வாங்கிக்கொண்டு, அநியாயத்திற்கு துணை போகும் நபர்கள் அடுத்த ஜென்மத்தில் ஈ கொசு மூட்டைப்பூச்சி ஆக பிறவி எடுப்பார்கள். இவையெல்லாம் தவறு செய்பவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகள் தான்.

    மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நாராயணன், கருடனுக்கு கூறியதாக கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த ஜென்மத்தில் இந்த தவறை செய்தால், அடுத்த ஜென்மத்தில் மேல் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் கட்டாயம் நமக்கு கிடைக்கும்.

    இந்த ஜென்மத்தில் கொசு, புழு, பூச்சி, பல்லி, குரங்கு, முதலை, பன்றி இப்படியாக பிறந்திருக்கும் ஒவ்வொரு உயிரினமும் போன ஜென்ம மனிதப் பிறவியில் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்தவர்கள்தான் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

    இதையெல்லாம் படிக்கும்போது முடிந்தவரை தவறுகள் செய்யாமல் இருப்பது தான் நமக்கு நல்லது. நீங்கள் அறிந்தும், அறியாமலும் தவறுகள் செய்திருந்தால் கூட அதற்கான பிராயச்சித்தத்தை உடனே தேடிக் கொள்ளுங்கள். சில தவறுகளுக்கு பிராயச்சித்தம் கூட தேட முடியாது. தவறு செய்யாமல் வாழ்வதே உத்தமம்.

    அடுத்த ஜென்மத்தில் மேற்குறிப்பிட்டுள்ள இப்படி ஒரு பிறவி எடுக்க யாரும் விரும்பமாட்டார்கள். சொர்க்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? அது உங்கள் கையில் தான் உள்ளது.

    • கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.
    • பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம், கருட பகவான் மனித பிறப்பு மற்றும் இறப்புகளைப் பற்றி கேட்டறிந்த விஷயங்கள் அடங்கிய தொகுப்பே 'கருடபுராணம்' என்று அழைக்கப்படுகிறது. அதில் இருந்து சில தகவல்கள் உங்களுக்காக...


    * அன்னதானம் செய்தால், விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் பருக்கைகளின் படி சுகித்திருப்பார்கள்.

    * கோ தானம் செய்தால் பசுக்களின் உலகமான கோலோகத்தில் கிருஷ்ணருடன் வாழ்வர்.

    * கன்றை ஈனும் சமயத்தில், பசுவை கோவிலுக்கு தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    * குடை தானம் செய்தவர், 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    * தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை போன்றவற்றில் எதை தானம் செய்தாலும், சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    * வஸ்திர தானம் கொடுத்தவருக்கு, வாயு லோகத்தில் வாழும் வாய்ப்பு கிடைக்கும்.

    * வஸ்திரத்தை கடவுளுக்கு சாற்றினால், எந்த கடவுளுக்கு சாற்றுகிறார்களோ, அவர்களின் உலகத்தில் வாழுவர்.

    * ரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவர்கள், அக்னி லோகத்தில் ஆனந்தமாக இருப்பார்கள்.

    * விஷ்ணு - சிவ ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர்கள், சொர்க்கத்தில் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்கள்.

    * குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு, 14 இந்திரர்களின் காலம் வரை வருண லோகத்தில் வாழும் வாய்ப்பு அமையும்.

    * ஆலயங்களில் நந்தவனங்களை அமைத்துக் கொடுப்பவர், வாயு லோகத்தில் ஒரு மன்வந்த்ர காலம் வாழ்வர்.

    * தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் செய்தவர், மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    * பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாய் அமைவதோடு, அவருக்கு மீண்டும் பிறவிகள் இருக்காது.

    * நற்செயலை விரும்பி செய்கிறவர்கள், சூரியலோகம் செல்வார்கள்.

    * தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு, சத்தியலோகத்தில் இருக்கும் வாய்ப்பு கிட்டும்.

    * ஒரு பெண்ணை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுத்தவருக்கு, 14 இந்திரனின் ஆயுட்காலம் வரை அமராவதியில் இன்பமாய் இருக்கும் வாய்ப்பு அமையும்.

    * நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும், ஜனலோகத்தில் நீண்டகாலம் வாழ்வார்கள்.

    * பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர், தபோ லோகத்தை அடைவர்.

    * தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர், 10 ஆயிரம் ஆண்டுகள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பர்.

    * சுவையான பழங்களை தானம் கொடுத்தவருக்கு, ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

    * ஒரு சொம்பு நல்ல நீரை தானம் செய்தவர்களுக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

    * கல்விதானம் மற்றும் கல்விக்காக உதவியவர்கள், பிரம்மலோகத்தில் வாழ்வர்.

    * பறவைகளை காப்பாற்றியவர்கள், கருடனின் ஆசிபெற்று வைகுண்டம் சென்றடைவர்.

    * விலங்குகளை காப்பாற்றியவர்கள், நந்திதேவரின் ஆசி பெற்று சிவலோகம் அடைவர்.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 26 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : அஷ்டமி இரவு 7.22 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : கேட்டை இரவு 6.07 மணி வரை. பிறகு மூலம்.

    யோகம் : சித்த/மரண யோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை

    இன்று ஜேஷ்டாஷ்டமி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். விருதுநகர் ஸ்ரீசுவாமி ஸ்ரீஅம்பாள் விருஷபாருட தரிசனம். மதுரை ஸ்ரீசோமசுந்தரப் பெருமாள் வளையல் விற்றருளிய காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசி பலன்

    மேஷம் - நம்பிக்கை

    ரிஷபம் - பரிசு

    மிதுனம் - உதவி

    கடகம் - புகழ்

    சிம்மம் - நலம்

    கன்னி - நன்மை

    துலாம் - லாபம்

    விருச்சிகம் - யோகம்

    தனுசு - கீர்த்தி

    மகரம் - வெற்றி

    கும்பம் - இன்பம்

    மீனம் - சலனம்

    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாக கூறுவர்.
    • மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம் எய்தும் புகலூரே.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கிறோம்.

    இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

    இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

    பாடல்:-

    செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

    செப்பில்பொருள் அல்லாக்

    கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்

    கடவுள்ளிடம் போலும்

    கொய்துபத்தர்மல ரும்புனலும்கொடு

    தூவித்துதி செய்து

    மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம்

    எய்தும் புகலூரே.

    - திருஞானசம்பந்தர்

    விளக்கம்:-

    சாக்கியர், சமணர் ஆகியோர்களின் உண்மையில்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளை கேளாதவராய், மிகுதியான தவத்தை செய்யும் அடியார்களின் தலைவராகிய சிவபெருமானுக்கு உகந்த இடமானது, அடியார்கள் மலர் கொய்து வந்து துதிப்பாடி, தவநெறியில் முயன்று உயர் வானகத்தை அடைவதற்குரிய வழிபாடுகளை செய்யும் புகலூர் ஆகும்.

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    10-ந்தேதி (செவ்வாய்)

    • விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    • சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட பூமாலை சூடியருளல்.

    • திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    • சமநோக்கு நாள்.

    11-ந்தேதி (புதன்)

    • மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி, இரவு சுவாமி பட்டாபிஷேகம்.

    • அகோபிலமடம் திருமத் 2-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம ருக்கு திருமஞ்சனம்.

    • சமநோக்கு நாள்.

    12-ந்தேதி (வியாழன்)

    • திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூல தீர்த்தம்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    • திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    • கீழ்நோக்கு நாள்.

    13-ந்தேதி (வெள்ளி)

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.

    • ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.

    • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    • கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (சனி)

    • சர்வ ஏகாதசி.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    • திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்

    • திருமாலிருஞ்சோலை கள்ளழகர், மதுரை கூடலழகர் தலங்களில் சுவாமி புறப்பாடு.

    • மேல்நோக்கு நாள்.

    15-ந்தேதி (ஞாயிறு)

    • முகூர்த்த நாள்.

    • ஓணம் பண்டிகை.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்ட தேரில் பவனி, இரவு சப்தாவர்ணம்.

    • சாத்தூர் வேங்கடேச பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

    • மேல்நோக்கு நாள்.

    16-ந்தேதி (திங்கள்)

    • முகூர்த்த நாள்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    • திருத்தணி முருகனுக்கு பால் அபிஷேகம்.

    • மேல்நோக்கு நாள்.

    • விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை.

    திதி : சப்தமி இரவு 7.10 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம் : அனுஷம் மாலை 5.13 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. விருதுநகர் ஸ்ரீசுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீஅம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. குலைச் சிறைநாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - லாபம்

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - செலவு

    கடகம் - உதவி

    சிம்மம் - வரவு

    கன்னி - இன்பம்

    துலாம் - முயற்சி

    விருச்சிகம் - உற்சாகம்

    தனுசு - தனம்

    மகரம் - சிந்தனை

    கும்பம் - பாராட்டு

    மீனம் - நம்பிக்கை

    • இன்று சஷ்டி விரதம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி - 24 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சஷ்டி இரவு 6.26 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : விசாகம் பிற்பகல் 3.49 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    இன்று சஷ்டி விரதம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    மதுரை ஸ்ரீ சோமசுந்தரப் பெருமான் உலவாய்க் கோட்டையருளிய திருவிளையாடல் நந்தீஸ்வரர்யாளளி வாகனத்தில் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - உழைப்பு

    ரிஷபம் - மகிழ்ச்சி

    மிதுனம் - சாந்தம்

    கடகம் - சிந்தனை

    சிம்மம் - மேன்மை

    கன்னி - லாபம்

    துலாம் - இன்பம்

    விருச்சிகம் - பயிற்சி

    தனுசு - லாபம்

    மகரம் - உவகை

    கும்பம் - சிறப்பு

    மீனம் - ஓய்வு

    • திருவண்ணாமலை விநாயகரை வழிபட துன்பங்கள் தீரும்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    தம்பியாகிய முருகப் பெருமானுக்கு இருப்பதுபோல, அவரது அண்ணன் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?

    திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடவூர், மதுரை, பிள்ளையார்பட்டி மற்றும் திருநாரையூர் ஆகியவையே விநாயகருக்கான அறுபடை வீடுகள் ஆகும்.

    விநாயகரின் அறுபடை வீடுகளை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

    முதல் படைவீடு-திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

    இரண்டாம் படைவீடு-விருத்தாசலம்:

    இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

    மூன்றாம் படைவீடு-திருக்கடவூர்:

    எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

    நான்காம் படைவீடு-மதுரை:

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன் சித்தி விநாயகரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகிற காரியங்களை நிறைவேற்றித் தருபவராக உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

    ஐந்தாம் படைவீடு-பிள்ளையார்பட்டி:

    அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

    ஆறாம் படைவீடு-திருநாரையூர்:

    திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாராக அருள்பாலிக்கிறார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

    • விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருந்தாலும், அவர் 12 அவதாரங்களை எடுத்ததாக விநாயக புராணம் தெரிவிக்கிறது.
    • முந்திய மயூரேச விநாயகர், பிந்திய மயூரேச விநாயகர்

    விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருந்தாலும், அவர் 12 அவதாரங்களை எடுத்ததாக விநாயக புராணம் தெரிவிக்கிறது.

    அந்த அவதாரங்கள் இங்கே...

    1. வக்ரதுண்ட விநாயகர்

    2. சிந்தாமணி விநாயகர்

    3. கஜானனர்

    4. விக்நராஜர்

    5. முந்திய மயூரேச விநாயகர்

    6. பிந்திய மயூரேச விநாயகர்

    7. தூமகேது

    8. கணேசர்

    9. கணபதி

    10. மஹோத்கடர்

    11. டுண்டி விநாயகர்

    12. வல்லப விநாயகர்

    • வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும்.
    • பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள்

    முழு முதல் கடவுளாக கொண்டாடப்படக்கூடியவர் விநாயகப்பெருமான். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும், விரதமாக இருந்தாலும், யாகமாக இருந்தாலும், விநாயகரை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும் என்பது ஐதீகம். விஷ்ணு பகவானை வழிபடுவதை வைணவம்' என்றும், சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும் சொல்வது போல, விநாயகரை பிரதான தெய்வமாக வழிபாடு செய்வதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள். ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதியும் திருக்கயிலாயத்தில் வீற்றிருந்தனர். அப்போது அங்கு பிரணவ வடிவிலான ஒரு உருவத்தை பார்வதியும், பரமேஸ்வரனும் நோக்க, அதில் இருந்து தோன்றியவர் விநாயகர் என்று சொல்லப்படுகிறது.

    ஒரு முறை பார்வதி நீராடச் செல்லும் பொழுது, தன் உடலில் இருந்து பரிமளங்களை (வாசனை துகள்கள்) உருட்டி வைத்ததாகவும், அதில் இருந்து தோன்றியவரே விநாயகர் என்றும் சொல்கிறார்கள். அப்படி உருவான விநாயகரை பார்வதி தனக்கு காவலாக வைத்து விட்டு நீராடச் சென்றார். அந்த நேரம் பார்த்து கயிலாயத்திற்குள் நுழைந்த சிவபெருமானை, விநாயகர் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவனுக்கும் விநாயகருக்கும் சண்டை உருவானது. இதில் தன் சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார், சிவபெருமான். அப்போது நீராடிவிட்டு வந்த பார்வதி, நடந்ததை புரிந்து கொண்டு, விநாயகரைப் பற்றி சிவபெருமானிடம் கூறினாள். இதையடுத்து வடதிசையில் தலைவைத்து படுத்திருந்த வெள்ளை யானையின் தலையை எடுத்து வந்து விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு ஈசன் உயிர் கொடுத்தார் என்றும் கூறுவாார்கள்.

    விநாயகப் பெருமான் வழிபாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, விநாயகர் சதுரவர்த்தி தர்ப்பணம், அஷ்ட திரவிய ஹோமம், வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் ஆகியவை. விநாயகர் விரதங்களில், சங்கடகர சதுர்த்தி பிரதானமாகத் திகழ்கிறது. அஷ்ட திரவியங்கள் என்பது கரும்பு, அவல், கொழுக்கட்டை, தேங்காய், எள், நெல்பொரி, சத்து மாவு, வாழைப்பழம் ஆகியவையாகும். அஷ்ட திரவிய ஹோமத்தில் கொழுக்கட்டையை முழுவதாகவும், அவல், பொரி, மாவு ஆகியவற்றை கைப்பிடி அளவிலும், கரும்பை கணு அளவிலும், தேங்காயை பிறை வடிவாகவும், எள்ளை உள்ளங்கை சுருங்கிய அளவும் எடுத்துக்கொண்டு, வாழைப்பழத்தை சிறியதாக இருந்தால் முழு அளவிலும், பெரியதாக இருந்தால் துண்டாக நறுக்கியும் சேர்க்கலாம். இந்த பொருட்களை எல்லாம் தேன், பால், நெய் ஆகியவற்றுடன் கலந்து, தனித்தனியாக ஹோமம் செய்வது விசேஷமானதாகும்.

    வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும். இந்த ஹோமமானது, நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாக கூறுவார்கள். ஆனால் ஸ்ரீவித்யா மந்திர உபதேசம், கணபதி மந்திர ஜப சித்தி இல்லாமல் செய்வது பிரயோஜனம் இல்லை. குரு முகமாக கட்டாயம் இந்த மந்திரங்களை உபதேசமாக பெற வேண்டும். புரட்டாசி, ஐப்பசி மாத சுக்லபட்ச நவமி அன்று, ஜபத் துடன் கூடிய ஹோமத்தை செய்வது மிக விசேஷமானதாகும். இதை பாராயணம் செய்வது லட்சுமி குபேர அருளைக் கொடுக்கும். ஐந்து முறை பாராய ணம் செய்தால் உலகம் வசமாகும். 10 முறை பாராயணம் செய்தால் சர்வலோக வசீகரம் உண்டாகும். ஆனால் மந்திர சித்தி என்பது இதில் முக்கியமானதாக கூறப்படுகிறது.

    பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள். அன்னத்தால் ஆகுதி கொடுக்க அன்ன விருத்தியும், தேனால் ஆகுதி கொடுக்க தங்கமும் சேரும். பசும்பாலால் ஆகுதி கொடுக்க பசுக்கள் விருத்தி அடையும். பசுந்தயிரால் ஆகுதி கொடுக்க எல்லா பாக்கியங்களும் தேடி வரும். எள் கலந்த அரிசியால் ஹோமம் செய்ய வறுமை நீங்கும், கடன் தொல்லை விலகும். தாமரை பூவும், பசு நெய்யும் கொண்டு ஹோமம் செய்ய அசையாச் சொத்துக்கள் தேடி வரும். அரசு சமித்து கொண்டு ஹோமம் செய்ய ஜன வசீகரம் உண்டாகும். நொச்சி சமித்தால் ஹோமம் செய்ய வறட்சி விலகும். அருகம்புல்லால் ஹோமம் செய்ய எல்லாவித வியாதிகளும் விலகிச் செல்லும். நாயுருவியால் ஹோமம் செய்ய நவக்கிரகங்களும் வசமாகும். வெல்லம், வாழைப்பழம் மற்றும் பாயசத்தால் ஹோமம் செய்ய நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய செல்வங்கள் தேடி வரும்.

    முக்கனியில் தேன் சேர்த்து ஹோமம் செய்ய சகலமும் வசீகரமாகும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும். தேவ தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம் போல் மகா கணபதியின் சதுரவர்த்தி தர்ப்பணம் மிக விசேஷமானதாகும். கணபதி மூல மந்திரத்தை கொண்டும் விசேஷ மந்திரங்களாலும் 444 முறை நீர் விடுதல் விசேஷமானதாகும்.

    வாசனை கலந்த சுத்தமான தண்ணீரும், பஞ்சபாத்திரம் மற்றும் அரைத்த சந்தனம், நல்ல குங்குமம், ஒரு பித்தளை தாம்பாளம் போன்றவற்றை கொண்டு விநாயகப் பெருமானுக்கு இந்த தர்ப்பணத்தை செய்வார்கள். சிலர் கணபதி எந்திரத்தையும் சிலர், கணபதி விக்கிரகத்தையும் வைத்து செய்வதும் உண்டு. மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சம் அன்று, சங்கடஹர சதுர்த்தி விரதத்தை ஆரம்பிப்பார்கள்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவார்கள். இதில் ஆவணி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி அன்று தான் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கும் விநாயகர் விரதத்தால் (விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதால்), வருடம் முழுக்க விரதம் இருந்த பலனும், ஆயிரம் கணபதி ஹோமம் செய்த பலனும் கிடைக்கும். அன்றைய தினம் காலை எழுந்து களிமண்ணால் செய்த விநாயகரை பெரும்பாலும் பூஜிப்பார்கள். ஆனால் களிமண்ணால் செய்த விநாயகரை பூஜித்த மறுநாள், புனர் பூஜை செய்து விட்டு நீரில் கரைக்க வேண்டும்.

    -'ஜோதிட சிம்மம்'

    சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

    • ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)
    • ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    விநாயகர் சதுர்த்தி அன்று, 21 வகையான புஷ்பத்தினால் அல்லது அட்சதையால் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், நன்மைகள் பலவாக நமக்கும் கிடைக்கப்பெறும்.

    * ஓம் பஞ்சாஸ்ய கணபதயே நம: புந்நாக புஷ்பம் ஸமர்ப்ப யாமி (புன்னை மலர்)

    * ஓம் மஹாகணபதயே நம: மந்தார புஷ்பம் ஸமர்ப்பயாமி (மந்தாரை மலர்)

    * ஓம் தீரகணபதயே நம: தாடிமீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாதுளம் பூ)

    * ஓம் விஷ்வக் ஸேன கணபதயே நம: வகுளபுஷ்பம் ஸமர்ப்பயாமி (மகிழம் பூ)

    * ஓம் ஆமோத கணபதயே நம: அம்ருணாள புஷ் பம் ஸமர்ப்பயாமி (வெட்டிவேர்)

    * ஓம் ப்ரமத கணபதயே நம: பாடலீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (பாதிரி பூ)

    * ஓம் ருத்ரகணபதயே நம: த்ரோண புஷ்பம் ஸமர்ப்பயாமி (தும்பைப்பூ)

    * ஓம் வித்யா கணபதயே நம: துர்த்தூர புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஊமத்தம் பூ)

    * ஓம் விக்ன கணபதயே நம: சம்பக புஷ்பம் ஸமர்ப்பயாமி (செண்பகப்பூ)

    * ஓம் துரித கணபதயே நம: ரஸால புஷ்பம் ஸமர்ப்பயாமி (மாம்பூ)

    * ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம: கேதகீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (தாழம்பூ)

    * ஓம் ஸம்மோஹ கணபதயே நம: மாதவீ புஷ்பம் ஸமர்ப்ப யாமி (முல்லைப்பூ)

    * ஓம் விஷ்ணு கணபதயே நம: சம்யாக புஷ்பம் ஸமர்ப்பயாமி (கொன்றைப்பூ)

    * ஓம் ஈச'கணபதயே நம: அர்க்க புஷ்பம் ஸமர்ப்பயாமி (எருக்கம் பூ)

    * ஓம் கஜாஸ்ய கணபதயே நம: கல்ஹார புஷ்பம் ஸமர்ப் பயாமி (செங்கழுநீர் பூ)

    * ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம: ஸேவந்திகா புஷ்பம் ஸமர்ப்பயாமி (செவ்வந்திப்பூ)

    * ஓம் வீர கணபதயே நம: பில்வ புஷ்பம் ஸமர்ப்பயாமி (வில்வம்)

    * ஓம் கந்தர்ப்ப கணபதயே நம: கரவீர புஷ்பம் ஸமர்ப்பயாமி (அரளிப்பூ)

    * ஓம் உச்சிஷ்ட கணபதயே நம: குந்த புஷ்பம் ஸமர்ப்பயாமி (முல்லைப்பூ)

    * ஓம் ப்ரஹ்ம கணபதயே நம: பாரிஜாத புஷ்பம் ஸமர்ப்பயாமி (பவழமல்லிப்பூ)

    * ஓம் ஜ்ஞான கணபதயே நம: ஜாதீ புஷ்பம் ஸமர்ப்பயாமி (ஜாதிமல்லிப்பூ)

    ×