என் மலர்
வழிபாடு
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-24 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: நவமி பின்னிரவு 3.32 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூரட்டாதி நண்பகல் 1.09 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.
யோகம்: மரண, சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் மயில் வாகனத்தில் கொலு தர்பார் காட்சி. நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுக்குன்றம், திருக்கடையூர் தலங்களில் 1,008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீவண்ணநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-விருத்தி
ரிஷபம்-தனம்
மிதுனம்-போட்டி
கடகம்-நலம்
சிம்மம்-ஓய்வு
கன்னி-நன்மை
துலாம்- இன்பம்
விருச்சிகம்-நிம்மதி
தனுசு- முயற்சி
மகரம்-களிப்பு
கும்பம்-பாராட்டு
மீனம்-செலவு
- சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை உகந்த தினமாகும்.
- சோமவார விரதம் சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாளை (திங்கட்கிழமை) கார்த்திகை மாத 4-வது சோமவார விரத தினமாகும். சிவபெருமானை வழிபடுவதற்கு திங்கட்கிழமை மிக உகந்த தினமாகும். சந்திரனுக்கு சோமன் என்ற பெயரும் உள்ளதால் திங்கட்கிழமையை வடமொழியில் சோமவாரம் என்று அழைக்கப்பது உண்டு.
சோமவார விரதத்தை கடைபிடித்து தான், சிவபெருமானின் தலையில் நிரந்தரமாக இருக்கும் பாக்கியத்தை பெற்றார் சந்திர பகவான். சோமவார விரதத்தை சந்திர பகவானே முதன் முதலில் அனுஷ்டித்ததாகவும், அதனாலேயே இதற்கு சோமவார விரதம் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது சோமவார விரதம் எனப்படுகிறது. சிவபெருமானுக் குரிய விரதங்களில் சோமவார விரதம் மிக சிறப்புடையது.

இவ்விரதத்தை பெரும்பாலானோர் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் மட்டுமே கடை
பிடிக்கின்றனர். ஆனால் இவ்விரதத்தை எல்லா திங்கட்கிழமைகளிலும் கடைபிடிக்கலாம்.
திங்கட்கிழமையில் சிவபெருமானின் ஆயிரம் திருநாமங்களை சொல்லி, வில்க இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும். வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சோமன் என்பதற்கு பார்வதியோடு சேர்ந்திருக்கும் சிவபெருமான் என்ற பொருளும் உண்டு. எனவே, சோமவார விரதத்தை கடைபிடித்தால் திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள்.
கணவரின் ஆயுள் பலம் அதிகரிக்க இவ்விரதம் மிகச்சிறந்தது. திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும்.
மனக்குழப்பத்தால் துன்பப்படுபவர்கள் சோமவார விரதத்தை கடைபிடித்தால் மனத்தெளிவு உண்டாகும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். காரியத் தடைகள் நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கடன், வறுமை போன்றவை நீங்கி செல்வம் பெருகும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கு மிகவும் பிடிக்கும். இந்து மதத்தில், கார்த்திகை மாதத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது, ஏனெனில் இந்த மாதத்தில், மகாதேவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. சிவபெருமான் தன் பக்தர்களின் மீது ஒரு சிறப்புக் கண் வைத்திருக்கிறார்.
சிவபெருமான் மகிழ்ந்தால், பக்தர்களின் தொல்லைகள் அனைத்தும் தானாகவே நீங்கும். சிவபெருமான் பிரபஞ்சத்தின் அனைத்து தீமைகளையும் அழிக்கிறார். அம்மாதத்தில் தான் சோமவார விரதம் சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
சோமவார விரதம் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம் ஆகும். இந்த விரதம் கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் சிவ பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருப்பதன் பல நன்மைகள் உள்ளன.
திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் அல்லது திருமண தாமதம் உள்ளவர்கள் சோமவார விரதம் அனுஷ்டிக்கலாம். இந்த விரதத்தை பெண்கள் பெரும்பாலும் நல்ல கணவனைப் பெறுவதற்காக கடைபிடிக்கிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் வரும் 16 திங்கட்கிழமைகளில் விரதத்தைப் கடைப்பிடிப்பது சிவபெருமானுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும், அவர் தனது பக்தர்களுக்கு செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. அதுபோல் சிவனை திருமணம் செய்து கொள்வதற்காக பார்வதி சோமவர் விரதத்தை கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

சோமவார (திங்கட்கிழமை) என்பது சிவபெருமானின் ஆயிரம் பெயர்களில் ஒன்றான சோமேஸ்வரா என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றது. தட்சனின் சாபத்தில் இருந்து தப்பவும், சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெறவும், அவரது மெத்தை பூட்டுகளில் ஒரு இடத்தைப் பெறவும் சந்திரன் சோமவார விரதம் கடைப்பிடித்ததாக நம்பப்படுகிறது.
சூரிய உதயம் முதல் மறுநாள் காலை சூரிய உதயம் வரை விரதம் இருக்க வேண்டும்.
நீராடிவிட்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் சிவன் கோயிலுக்குச் செல்லலாம் அல்லது வீட்டில் பிரார்த்தனை செய்யலாம்.
அன்றைய தினம் 'ஓம் நம சிவாய' என்று ஜபிக்க முயற்சிக்கவும். நீங்கள் சுதந்திரமாக இருக்கும்போது நாள் முழுவதும் அதை உச்சரிக்கலாம்.
விரத உணவுகளை அன்றைய தினம் உண்ணலாம். பழங்கள் மற்றும் பழச்சாறுகளும் சாப்பிடலாம்.
பிரதோஷ காலத்தில் சிவனுக்கு மாலை பூஜை செய்ய வேண்டும். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்.
மறுநாள் காலை சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும். சோமவார விரதம் இருப்பதன் மூலம், ஜாதகத்தில் சந்திர கிரகத்தின் நிலை வலுப்பெறும். இதனால் பல நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
திருமணமாகாத பெண்கள் சோமவார விரதம் இருப்பதன் மூலம் பலன்கள் கிடைக்கும். 16 திங்கட்கிழமைகள் விரதம் இருப்பதன் மூலம் திருமணமாகாத பெண்களுக்கு சிறந்த வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சோமவார விரதம் இருப்பதன் மூலம், ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெறுகிறது, இது வேலை சிக்கல்களைத் தீர்க்கவும், வியாபாரத்தில் லாபம் பெறவும் உதவுகிறது.
புராணங்களின்படி, சோமவார விரதம் இருப்பதன் மூலம், ஒரு நபரின் அனைத்து பாவங்களும் அழிக்கப்பட்டு, வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபடுகிறது.
சோமவார விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் தாம்பத்திய வாழ்வு மகிழ்ச்சியடைவதோடு, எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடும். இந்த விரதத்தை ஆண் பெண் இருபாலரும் அனுஷ்டிக்கலாம்.

* சோமவார விரதத்தை கடைபிடிக்க நினைப்பவர்கள், திங்கட்கிழமைதோறும் அதிகாலையில் எழுந்து, வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி, சிவன் படத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை சிவனுக்கு நைவேத்தியமாக படைத்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தல் வேண்டும்.
* இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேளை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
* அன்றைய தினம் முழுவதும் காலை முதல் மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் சொல்லி வர வேண்டும்.
* மாலையில் கோவிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை நிறைவு வேண்டும்.
* தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம்.
சோமவார விரத திருநாளன்று சிவனும் பார்வதியும் இணைந்திருக்கும் உருவப் படத்திற்கு வில்வ இலைகளால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.
அதேபோல் லிங்கமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் சிவபெருமானுக்கு வில்வ இலையால் அபிஷேகம் செய்யலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் அவ்வப்போது நீராகாரத்தில் எடுத்துக் கொள்ளலாம் அல்லது பால், பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம். சிவபெருமானுக்குப் பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் பால், பழம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனமாகப் படைக்கலாம்.
இதேபோல் 16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து சோமவார விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்தால் நமது வேண்டுதலில் கட்டாயம் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.
- 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது.
- சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திரு விழா, கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாள் உற்சவம் இன்று விமரிசையாக நடந்தது. நாளை மறுநாள் 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. ஒரே நாளில் 5 தேர்கள் வலம் வரும்.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மலையில் ஏற்றப்படும் மகா தீபம்தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சியளிக்கும்.

அதையொட்டி, தொடர்ந்து 11 நாட்களும் மலையில் தீபம் ஏற்றப்படும். அதற்காக, 4,500 கிலோ தூய நெய் ஆவினிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 1,500 மீட்டர் திரியும் தயார் நிலையில் உள்ளது.
இதில், மகா தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மகா தீப கொப்பரை சீரமைக்கப்பட்டு, புதிய வண்ணம் தீட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
மேலும், தீப கொப்பரையில் உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மகா தீப கொப்பரைக்கு வருகிற 12-ந் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். மலையில் தற்போது பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால், தீப கொப்பரையை மலை உச்சிக்கு கொண்டு செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிட்டு வருகிறது.
தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
மாட வீதிகள், கிரிவலப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி உள்ளனர். நாளை மறுநாள் நடைபெறும் தேர் திருவிழாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் தங்குவதற்காக திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுமார் 40 லட்சம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைகளை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், ஆட்டோக்கள் கட்டணங்கள் குறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்தவும் ஆங்காங்கே பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், அடுத்தடுத்து பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, வருகிற 13-ந் தேதி நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தன்று மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மலை மீது பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக வல்லுனர் குழு நேரடி ஆய்வு நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி, சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர்கள் 8 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத் திற்கு வந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்டுள்ள மண் சரிவு தொடர்பாக வல்லுநர்குழு கள ஆய்வை தொடங்கினர்.
இந்த குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக போலீசார், பாம்புக்கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள், தூக்குப்படுக்கை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு, வனத்துறை குழு, தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் கொண்ட மீட்புக்குழுவும் உடன் சென்றனர்.
மலை அடிவாரத்தில் பாதுகாப்பு கருதி அவசரகால ஊர்தியுடன் கூடிய மருத்துவக்குழுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வல்லுநர் குழு இன்று மலைப்பகுதியில் ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.
பக்தர்கள் மலையேறினால் மண்சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்க உள்ளனர்.
அதன் அடிப்படையில், மலையேற பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பை 2 நாட்களில் அரசு அறிவிப்பு வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.
- மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா?
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் தொடர்ந்து பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு வ.உ.சி.நகரில் வசித்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி திருவண்ணாமலையில் கோலாகலமாக நடைபெற்று வரும் சூழலில் 7 பேர் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தை ஆழ்த்தியது.
தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ந் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
மலையில் ஏற்பட்ட மண் சரிவினால் மகாதீபத்தின்போது மலைக்கு செல்லும் 2,500 பக்தர்களுக்கு இந்தாண்டு அனுமதி அளிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் வனத்துறையினர் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபற்றி அவர்கள் கூறுகையில், மலையேறும் முக்கிய பாதைகளான கந்தாஸ்ரமம் பாதை, முலைப்பால் தீர்த்த பாதை, அரைமலை பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டு புதைக்குழி போல் காட்சி அளிக்கிறது.
மலையேறும் அனைத்துப் பாதைகளும் மண் சரிந்து உள்ளது. ஆபத்தான சூழலில் 200 மற்றும் 300 டன் எடை கொண்ட பாறைகள் ஆபத்தான நிலையில் நிற்கின்றன. குறிப்பாக மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லும் பாதைகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றும் சமயத்தில் மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று வனத்துறையினரின் கோரிக்கை வைத்துள்ளனர்.
புவியியல் வல்லுனர்கள் அண்ணாமலையார் மலையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்த பின்னர் கொடுக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் மலையேறுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.
ஆண்டிற்கு ஒருமுறை மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தின்போது மலைஏற அனுமதிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம்.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சேஷ வாகனத்தில் திருவீதியுலா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-23 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி காலை 7.52 மணி வரை பிறகு அஷ்டமி நாளை விடியற்காலை 4.16 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: சதயம் பிற்பகல் 2.37 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரைமாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம். பழனி ஸ்ரீ முருகப்பெருமான் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் ஆட்டுக் கிடா வாகனத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் சேஷ வாகனத்தில் திருவீதியுலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி யம்மன் ஊஞ்சலில் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக் கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-நன்மை
மிதுனம்-விவேகம்
கடகம்-ஆதரவு
சிம்மம்-போட்டி
கன்னி-பணிவு
துலாம்- நற்சொல்
விருச்சிகம்-கடமை
தனுசு- மேன்மை
மகரம்-வரவு
கும்பம்-சுகம்
மீனம்-போட்டி
- வருகிற 12ந் தேதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.
- திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ந் தேதி நடைபெறுகிறது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
இன்று மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பிறகு மூலவருக்கும், சண்முகருக்கும் காப்பு கட்டப்படும். தொடர்ந்து துவார பாலகர்கள், நவவீரர்கள், மயில், தீபக்கம்பம் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்படும். அதன்பின் மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், சண்முகர்தீபாராதனையும் நடைபெறும்.
இரவு 7 மணிக்கு தங்க ரத புறப்பாடு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து 6 நாட்களும் பூஜைகள் நடைபெறும். வருகிற 12ந் தேதி முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும்.
திருக்கார்த்திகை தீபம், சொக்கபனை ஏற்றும் நிகழ்வுகள் மறுநாள் 13ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஷ்வரூப தரிசனம் நடைபெறும். மாலை 4.45 மணிக்கு மேல் சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோவிலில் 4 திசைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கபனை கொளுத்தப்படும். அதனைத் தொடர்ந்து திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோவில் ஆகிய கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு வருகிற 13ந் தேதி பாதுகாப்பு கருதி பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது. அதாவது கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் யானைப்பாதை வழியாகவும், இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மதியம் 2 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 6 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் செல்லலாம். கார்த்திகை தீபத்திருநாளன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
- மண்டல பூஜையின் முன்னோடியாக 25-ந்தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
- மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலையில் நடை திறக்கப்படும்.
சபரிமலை:
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது. கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக 25-ந்தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து 22-ந்தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது. 26-ந்தேதி மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலையில் நடை திறக்கப்படும்.
இந்தநிலையில் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும், உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 16.25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகமாகும். இதனிடையே நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மழை காரணமாக ஏராளமான ரெயில்கள் ரத்தானது. இதனால் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை பயணமும் எதிர்பாராதவிதமாக ரத்துசெய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரெயில் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் தென் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கூட்ட நெருக்கடி காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-22 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி காலை 9.42 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.52 மணி வரை பிறகு சதயம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பூத வாகனத்தில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரங்கராஜ பெருமாள், திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் காலை சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-சுகம்
கடகம்-வரவு
சிம்மம்-முயற்சி
கன்னி-மாற்றம்
துலாம்- ஆதரவு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- உதவி
மகரம்-இனிமை
கும்பம்-நட்பு
மீனம்-பரிவு
- வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் வருபவர் மகேசர் ஒருவரே.
- விருத்தாச்சலம் அடுத்த இறையூரில் உள்ள தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்.
கோவில் தோற்றம்

வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் வருபவர் மகேசர் ஒருவரே. மன உளைச்சலால் வாடுபவர்கள், ஒரு நொடி ஈசனை நினைத்தால் போதும். அவர்களுக்கு சிறந்த உபாயம் கிடைத்திடும். அப்படி ஒரு சிவாலயம்தான், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த இறையூரில் உள்ள தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில்.
சமயக் குரவர்கள் நால்வருள் முதன்மையானவரான திருஞானசம்பந்தர், சிதம்பரம், எருக்கத்தம்புலியூர், விருதாச்சலம், பெண்ணாகடம் ஆகிய திருத்தலங்களைத் தொழுது வணங்கி, பாடல் பாடியிருந்தார்.
இதன்பிறகு திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை திருத்தலத்தை தரிசிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் கொண்டார்.
வழக்கமாக தன் தந்தையார் சிவபாதஇருதயர் தோளில் அமர்ந்து திருத்தலங்களை தரிசிக்கச் செல்லும் ஐந்து வயதே ஆன திருஞானசம்பந்தர், திருவட்டத்துறை அரத்துறைநாதரை தரிசிக்க, சூரியன் கடுமையான வெப்பத்தைப் பொழியும் கோடை காலத்தில், அடியார் கூட்டத்தோடு நடந்தே சென்றார்.
நெடுந்தூரம் நடந்து வந்த காரணத்தால், குழந்தையான திருஞானசம்பந்தர் மிகவும் களைப்படைந்தார். இரவு நேரம் ஆனதால் இறையூர் என்னும் இந்த திருத்தலமான மாறன்பாடியில் தங்கினார். அவரோடு சிவனடியார்கள் பலரும் அங்கே தங்கினர்.
அப்போது பெருங்கருணைக்கு சொந்தக்காரரான சிவபெருமான், அந்த பகுதியில் ஒரு நீரூற்றை உருவாக்கி, திருஞானசம்பந்தரின் தாகத்தையும், அவரோடு வந்திருந்த அடியார்களின் தாகத்தையும் தீர்த்தார்.
அன்பிற்கினிய அன்னையான, அன்னபூரணியோ தனது செல்லப்பிள்ளைக்கு அன்னமிட்டு பசி நீக்கினாள். அடியார்களுக்கும் உணவளித்து, அவர்களின் அரும்பசியையும் போக்கினாள். தாகம் தீர்ந்து, பசியாறிய அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது திருஞானசம்பந்தரின் கனவில் தோன்றிய சிவபெருமான், அவரை திருவரத்துறைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அதோடு, முத்து (பல்லக்கு) சிவிகையும், முத்துக்குடையும், முத்துச்சின்னமும் அந்தணர்கள் மூலம் அளித்தருள்வதாக கூறி மறைந்தார்.
பொழுதும் விடிந்தது. கண் விழித்தார் திருஞானசம்பந்தர். திருவரத்துறையில் இருந்து முத்துச்சிவிகை (பல்லக்கு), முத்துக்குடை மற்றும் ரிஷப முத்திரை பதித்த முத்துச்சின்னம் ஆகியவற்றை அந்தணர்கள் மூலம் அனுப்பிவைத்தார் அரத்துறைநாதர்.
இதைக்கண்டு திருஞானசம்பந்தருடன் இருந்த அடியார்கள் அனைவரும் அகம் மகிழ்ந்தனர். குளிர்ச்சியான கடல் முத்துக்கள் பதித்த முத்துக் குடையை கையில் ஏந்திய திருஞான சம்பந்தர், முத்துப் பல்லக்கில் ஏறி அமர்ந்தார். அடியவர்கள் முத்துச் சின்னம் ஏந்தியபடி சம்பந்தரை சுமந்தபடி, சிவகோஷத்துடன் அரத்துறை நோக்கி புறப்பட்டனர்.
முருகப்பெருமானைப் பற்றி பல்வேறு பாடல்கள் இயற்றிய அருணகிரிநாதர், கந்தக்கடவுளே மீண்டும் சம்பந்தராய் அவதரித்ததாக பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளார். அப்படிப்பட்ட திருஞானசம்பந்தருக்கு, சீர்காழியில் அன்னை பார்வதி பாலூட்டினாள்.

ஈசனோ, அந்த பிஞ்சுக் குழந்தையின் பாதம் நோகாமல் இருக்க இறையூர் தலத்தில் முத்துக்களால் ஆன பொருட்களை அளித்து அருள்புரிந்தார்.
நடு நாட்டின் பாடல் பெற்ற தலமான பெண்ணாகடத்திற்கும், திருவட்டத்துறைக்கும் இடையே அமைந்துள்ளது, இந்த இறையூர் திருத்தலம். இந்த ஊரை பெரிய புராணத்தில் சேக்கிழார், 'மாறன்பாடி' என்று குறிப்பிடுகிறார்.
திருஞானசம்பந்தர் வைப்புத் தலமாக பாடிய நான்கு 'பாடி'களில் ஒன்றாக திகழ்கிறது இறையூர் (மாறன்பாடி) திருத்தலம். எதிர்கொள்பாடி, திருமழப்பாடி, திருவாய்ப்பாடி ஆகியவை மற்ற மூன்று தலங்களாகும். இறையூர் திருத்தலமானது, வெள்ளாறு எனப்படும் நீவாநதியின் வடகரையில் அமைந்துள்ளது.
ஆலய அமைப்பு
கிழக்கு நோக்கிய இந்த ஆலயம் தோரண வாயிலுடன் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே கணபதி தனிச்சன்னிதி கொண்டுள்ளார். விதானத்தின் மேலே, சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, முத்துக்குடை மற்றும் முத்துச்சின்னம் ஆகியவற்றை சிவபெருமான் அருளிய சுதைச் சிற்பங்கள் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. எதிரே திருஞானசம்பந்தர் தனிச் சன்னிதியில் கையில் பொற்றாளத்துடன் கற்சிலையாக காட்சி தருகிறார்.
ஆலயத்தின் உள்ளே சென்றால் நேராக நந்தி, பலிபீடம் உள்ளன. அதைக் கடந்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் இருக்கின்றன. அடுத்ததாக அமைந்த கருவறையில், கருணைக் கடலான தாகம்தீர்த்தபுரீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையாரின் நடுவே பச்சைக் கல்லால் ஆன லிங்கத் திருமேனியராக காட்சி தருகிறார்.
இவரை மனமுருக வழிபட்ட பின்னர், மீண்டும் மகா மண்டபம் வந்தால், அங்கே தென்புறமாக அன்னபூரணி அம்மன் வீற்றிருக்கிறார். நான்கு கரங்களைக் கொண்ட இந்த அன்னை, தன் மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் ஏந்தியும், கீழ் இரு கரங்களை அபய- வரத ஹஸ்த முத்திரை காட்டியும் அருள்பாலிக்கிறார்.

ஒற்றை சுற்றுடைய சிறிய ஆலயமான இங்கே, தென்மேற்கில் கணபதி, மேற்கில் வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சன்னிதிகள் உள்ளன. திருமாலுக்கும், வாயு பாகத்தில் கஜலட்சுமிக்கும் சன்னிதி இருக்கிறது.
தென் சுற்றில் நால்வர்களை தரிசிக்கலாம். ஈசான திசையில் நவக்கிரகங்கள், சனி பகவான், பைரவர் வீற்றிருக்கிறார்கள். தல விருட்சமாக பலா மரம் உள்ளது. தல தீர்த்தமாக ஆலயத்தின் எதிரே, சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட தான்தோன்றி தீர்த்தம் காணப்படுகிறது.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மகம் அன்று, சம்பந்தருக்கு முத்துக்களால் ஆன பொருட்களை வழங்கி, அவருக்கு அபிஷேக- அலங்காரம் செய்து, பல்லக்கில் வைத்து திருவரத்துறைக்கு செல்லும் நிகழ்வு நடத்தப்படுகிறது.
அன்றைய தினம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வெகு விமரிசையாக நடந் தேறும். இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புதிய ஆடைகள் சாத்தி, வாசனை மலர்களாலும், வில்வத்தாலும் அர்ச்சனை செய்தால், மனத்துயரம் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி குடியேறும்.
இந்த ஆலயமானது, தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் சாலையில் சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இறையூர் திருத்தலம். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராமநத்தத்தில் இருந்து சுமார் 23 கிலோமீட்டரில் விருத்தாச்சலம் செல்லும் சாலையில் இவ்வூர் இருக்கிறது.
- திருக்கார்த்திகை தினம் அன்று மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும்.
- ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும்.
கார்த்திகை மாதம் முழுவதுமே வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதால் ஏராளமான பலன்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். இதனால் தெய்வ சக்தி அதிகரிப்பதுடன், அந்த மகாலட்சுமியே நம் வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது ஐதீகம்.

வெள்ளி, தங்கம், பஞ்சலோகம் என எந்த விளக்கையும் ஏற்றலாம். ஆனாலும், மண்ணில் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது கூடுதல் மகிமையாகும்.
கார்த்திகை மாதத்தில், அகல் விளக்கேற்றி வழிபாடு செய்யும்போது, செல்வ வளம் பெருகும். ஏனெனில் இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும், நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்வதாக ஐதீகம்.
அதேபோல, தீபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் உறைந்துள்ளனர்.
தீபம் ஏற்றும்போது, சூரிய உதயத்திற்கு முன்பாகவே ஏற்றிவிட வேண்டும். குறிப்பாக, பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் விளக்கேற்றுவதால், புண்ணியம் சேரும்.
மாலை வேளைகளில் 6 மணிக்கு வீட்டின் வாசலில் 2 அகல் விளக்குகளை ஏற்றுவதால், குடும்பத்திற்கு புண்ணியம் கிடைக்கும். முன்வினைப் பாவங்களும் நீங்கும். திருமணத் தடைகளும் விலகிவிடும்.
கார்த்திகை மாதங்களில் தீபங்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக, கோலமிடப்பட்ட வாசலில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.

திண்ணையில் 4 அகல் விளக்குகளும், மாடங்களில் 2 அகல் விளக்குகளும், நிலைப்படியில் 2 அகல் விளக்குகளும், நடையில் 2, முற்றத்தில் 4 அகல் விளக்குகளும் ஏற்ற வேண்டும்.
தினமும் விளக்கேற்ற முடியாவிட்டாலும், துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய இந்த 3 தினங்களிலாவது கண்டிப்பாக தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
விளக்கேற்றும்போது, ஒரு முகம் ஏற்றினால், நினைத்த செயல்கள் நடக்கும் என்பார்கள். இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் சேரும். சர்வ பீடை நிவர்த்தி ஆகும். ஐந்து முகம் ஏற்றினால், சகல நன்மையும், ஐஸ்வரியமும் பெருகும். அதேபோல விளக்கின் திசையையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
குடும்பத்திலுள்ள துன்பங்கள், இன்னல்கள் நீங்க வேண்டுமானால் கிழக்கு திசை நோக்கி தீபம் ஏற்றலாம். கடன் தொல்லை தீர வேண்டுமானால், மேற்கு திசையிலும், திருமணத்தடை நீங்க வேண்டுமானால் வடக்கு திசையிலும் விளக்கேற்றலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
திருக்கார்த்திகை தினம் அன்று வீட்டு முற்றத்தில் 4, சமையலறையில் 1, நடையில் 2, பின்கட்டில் 4, திண்ணையில் 4, மாட குழியில் 2 , நிலைப்படியில் 2, சாமி படத்துக்கு கீழே 2, வெளியே யம தீபம் ஒன்று, கோலமிடும் இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றப்படவேண்டும். இந்த 27 விளக்குகள் என்பது நட்சத்திரங்களை குறிப்பதாகும்.
கார்த்திகை மாதத்தின் 30 நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.
- இன்று சஷ்டி விரதம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-21 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி காலை 11.14 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.50 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சஷ்டி விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-பணிவு
மிதுனம்-மேன்மை
கடகம்-தாமதம்
சிம்மம்-உதவி
கன்னி-ஆதரவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-பக்தி
தனுசு- நன்மை
மகரம்-அமைதி
கும்பம்-பரிசு
மீனம்-ஜெயம்
- விநாயகர் தடைகளை அகற்றுபவர்.
- பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் `உ' என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும்.
செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். இதன் காரணமாகவே எழுதத் தொடங்குவதற்கு முன்பாக 'உ' என்ற எழுத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர் என்பது அறிவுப்பூர்வமான கருத்து.
இதற்கு ஆன்மிகக் கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துகளில், 'உ'கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை 'பிள்ளையார் சுழி என்றும் சொல்வார்கள்.

விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக 'உ'என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு.
விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய 'உ' என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.
'உ' என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது.

வட்டத்தைத் தொடர்ந்து, வளைந்து பின் நேர் கோடு செல்லும். இதனை 'ஆர்ஜவம்' என்பார்கள். இதற்கு 'நேர்மை' என்று பொருள். 'வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே' என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.






