என் மலர்
வழிபாடு
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-23 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: அஷ்டமி நண்பகல் 2.03 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: மிருகசீர்ஷம் பின்னிரவு 3.38 மணி வரை பிறகு திருவாதிரை.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் தெய்வானையுடன் திருமணக் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிம்ம வாகனத்தில் பவனி. குடந்தை ஸ்ரீ சக்கரபாணிப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பால் காவடி உற்சவம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதியுலா. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதிவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-ஆதரவு
கடகம்-ஆக்கம்
சிம்மம்-வரவு
கன்னி-போட்டி
துலாம்- தாமதம்
விருச்சிகம்-மேன்மை
தனுசு- உறுதி
மகரம்-வரவு
கும்பம்-செலவு
மீனம்-வாழ்வு
- தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
- நாளை மறுநாள் அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கடைவீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
18-ந் தேதி கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு, அதில் பெண்கள் மஞ்சள் நீர் ஊற்றினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 3 நாள் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி காலை பக்தர்கள் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து வந்தனர்.
10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து 21 அடி உயர வெள்ளித் தேரில் மாரியம்மனும், 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.
இரவு 9 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் தொடங்கியது. அப்போது பக்தர்கள் பொள்ளாச்சி மாரியம்மா தாயே.. காவல் தெய்வமே... என பக்தி கோஷம் எழுப்பினர்.
கோவில் வளாகத்தில் தொடங்கிய தேரோட்ட மானது, மார்க்கெட் ரோடு வழியாக வந்து வெங்கட்ராமணன் வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு உதவி போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று இரவு 2-வது நாள் தேரோட்டம் நடக்க உள்ளது. இமான்கான் வீதியில் நிறுத்தப்பட்டுள்ள தேர் இரவு 7 மணிக்கு வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
தேர் உடுமலை ரோடு வழியாக வந்து சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) 3-வது நாளாக தேரோட்டம் நடக்க உள்ளது. தேர் புறப்பட்டு, நிலைக்கு வருதல், அதனை தொடர்ந்து பரிவேட்டை, தெப்பத்தேர் விழா நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு கம்பம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10-ந் தேதி இரவு 8 மணிக்கு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- சந்திரனுக்கு 'சோமன்' என்ற பெயருண்டு.
- சந்திராஷ்டமம் அன்று வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கும்.
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கான தலமாக விளங்குகிறது, காமாட்சியம்மன் உடனாகிய சந்திரேஸ்வரர் ஆலயம். 'சந்திரேசம்' என்று அறியப்படும் இத்தலம், காஞ்சி புராணத்தில் சோமேச்சுரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரனுக்கு 'சோமன்' என்ற பெயருண்டு. எனவே இத்தல சிவபெருமான், 'சோமசுந்தரன்' என்றும் அழைக்கப்படுகிறார். சர்வ தீர்த்தத்தின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
'நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகரம்' என்று மகாகவி காளிதாசர் போற்றுகிறார். பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சர்வ தீர்த்தக் கரையின் தெற்கில், வெண்தாமரை மலர்கள் நிறைந்த குளத்தை சந்திரன் உருவாக்கினான்.
பின்னர் அதன் கரையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அனுதினமும் வெண் தாமரையும், குளத்து நீரும் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்து பூஜித்து வந்தான். அதன் காரணமாக நவக்கிரகங்களுள் ஒன்றாக மாறும் பேறு. பெற்றான் என்று காஞ்சி புராணத்தில் மாத சிவஞான முனிவர் அருளியுள்ளார்.

புண்ணியம் நிறைந்த வெண் தாமரைக்குளம் அருகில், தற்காலத்தில் வெள்ளைக்குளம் என்று அழைக்கப்படுவதுமான பகுதியில் சந்திரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் சிவபெருமானை, வெண் தாமரை கொண்டு வழிபட்ட சந்திரனுக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இவ்வால யத்தின் தீர்த்தமாக வெள்ளைக்குளம் என்று அழைக் கப்படும் சந்திர தீர்த்தம் திகழ்கிறது.
கிழக்கு திசை நோக்கி அமைந்த சிறிய திருக் கோவில் இது. முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் ஆலயம் திகழ்கிறது. சிவபெருமான் இத்தலத்தில் லிங்க ரூபத்தில் சந்திரேஸ் வரர் என்ற திருநாமம் தாங்கி, கிழக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மூலவர் சந்திரேஸ்வரருக்கு பின்புறத் தில் சிவபெருமான்-முருகன்-பார்வதி ஆகியோர் இணைந்து சோமாஸ்கந்த வடிவத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பு.
கருவறைக்கு வெளியே ஒரு புறத்தில் விநாய கப்பெருமானும், மற் றொரு புறத்தில் வள்ளி தெய்வானை பெருமானும் எழுந் தருளி அருள்பாலிக் கிறார்கள், சந்திரேஸ்வரரை தரிசித்த வாறு நந்திதேவர் அமர்ந்துள்ளார்.
நந்திதேவருக்குப் பின் பக்கத்தில் பலிபீடம் அமைந்துள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. விநாயகப் பெருமானின் இருபுறங்களிலும் நாக தெய்வங்களின் சிலைகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் ஒரு சிறு சன்னிதி யில் வீற்றிருக்கிறார்.
சப்தரிஷிகள் தவம் செய்து ஈசனை வணங்கி பேறு பெற்ற தலம் இது என்கிறார்கள், ஆகையால் இத்தலத் தின் விமானத்தில் சப்த ரிஷிகளான அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்டர், கவுதமர், காசியபர், ஆங்கிரஸர், அனுசூயா முதலானோர் கதைச் சிற்ப வடிவத்தில் காட்சி தருகிறார்கள். இது வேறெங்கும் காண இயலாத அரிதான அமைப்பாகும்.
இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை, சந்திரன் வழிபட்ட காரணத்தினால், பன்னிரண்டு ராசிக்காரர்களும் சந்திராஷ்டம தினத்தன்று வழிபட்டால் தங்களுடைய அனைத்து சங்கடங்களும் நீங்கப்பெற்று நன்னிலை பெறுவர் என்பது ஐதீகம்.
பவுர்ணமி தினத்தன்று இத்தலத்திற்கு வந்து ஈசனையும், சந்திரனை யும் வழிபடுவது சிறப்பாகும். மேலும் சந்திரனுக்குரிய நட்சத் திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய தினங்களிலும் வழிபடுவது சிறப்பு.

சந்திரன்
மாதப்பிரதோஷங்கள், மகாசிவராத்திரி முதலான உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. சோம வாரம் மற்றும் பிரதோஷம் இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், பிள்ளையார் பாளையம் உள்ளது. இங்கு வெள்ளைக்குளம் என்ற பகுதியில், சந்தவெளி அம்மன் கோவிலுக்குப் பின்புறத்தில் உள்ள தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.
- ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது.
- நாடியம்மாள் என்ற பெயர் பலருக்கும் வைக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. சோழர்களைத் தவிர வேறு சில வழியில் வந்த மன்னர்களும் பல்வேறு ஆலயங்களை அமைத்துள்ளனர்.

அந்த வழியில் வந்த மராட்டிய மன்னரான சரபோஜி மன்னரால் பட்டுக்கோட்டை நகராட்சியில் கட்டப்பட்டதுதான், பழமையான நாடியம்மன் கோவில். இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது.
இந்த ஆலயத்தில் அருளும் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை, பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். தன்னை நாடி வரு பவர்களுக்கு நல்லதை செய்வதால், இந்த அம்மனை அனைவரும் 'நாடியம்மன்' என்று அழைப்பதாக இவ்வூர் மக்கள் சொல்கின்றனர்.
ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்புவரை இந்த பகுதியில் நாடியம்மாள் என்ற பெயர் பலருக்கும் வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பெயரும் கூட, இந்த அம்மனின் வழியால் ஏற்பட்டதுதான் என்கிறார்கள்.

தல வரலாறு
இந்த நாடி அம்மன் கோவில் உருவானது பற்றிய வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதை இங்கே பார்க்கலாம். ஒரு முறை தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர், காட்டில் வேட்டையாட சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு மிருகத்தை துரத்திக் கொண்டு சென்றபோது, அது பிடிபடாமல் போக்கு காட்டியது.
மன்னனும் விடாமல் அதை நோக்கி ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு தாக்கிய நிலையில், அந்த மிருகம் அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் போய் ஒளிந்துகொண்டது.
தாக்குதலுக்குள்ளான அந்த மிருகம், புதரை விட்டு தப்பிச் செல்ல வாய்ப்பில்லை என்று நினைத்த மன்னன், அந்த புதரை நீக்கினான். அப்போது அந்த புதருக்குள் ரத்தம் ஒழுக, அழகிய பிடாரி அம்மன் சிலை ஒன்று தென்பட்டது.
அந்த சிலையை எடுத்து வந்த சரபோஜி மன்னன், சிலையை சுத்தம் செய்து பட்டுக்கோட்டை பகுதியில் இருந்த சிவன் கோவில் பூசாரிகளை அழைத்து, பிடாரி அம்மனுக்கு என்று தனியாக ஒரு ஆலயத்தை அமைத்து அதில் சிலையை பிரதிஷ்டை செய்தான்.
அப்போது கோவில் அமைந்த இடம் வனமாக இருந்தது. அந்த வனத்தில் அமையப்பெற்ற பிடாரி அம்மனுக்கு, நித்திய படி பூஜைகளும், விழாக்களும் கொண்டாடும் பொறுப்பு மற்றும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளை அவ்வூரைச் சேர்ந்த சின்னான் செட்டியார் என்பவரிடம் சரபோஜி மன்னன் வழங்கினார்.
ஆரம்பத்தில் காட்டில் கண்டெடுத்த கருங்கல் பிடாரி அம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் சின்னான் செட்டியாரின் முயற்சியின் காரணமாக, பிடாரி அம்மனுக்கு ஐம்பொன் சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதை பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். இந்த அம்மனே, நாளடைவில் 'நாடியம்மன்' என்ற பெயர் பெற்றார் என்கிறது ஆலய வரலாறு.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி - சித்திரை மாதங்களில் இந்த அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா நடை பெறுகிறது. திருவிழா காலங்களில் இந்த அம்மன் தனது ஆலயத்தை விட்டு குடிபெயர்ந்து, பெரிய கடை தெருவின் நடுவில் இருக்கும் மண்டகப்படி நடைபெறும் மண்டபத்தில் வீற்றிருப்பாள்.
கொடியேறி திருவிழா முடிந்த பிறகுதான் மீண்டும் ஆலயம் திரும்புவாள் என்கிறார்கள். இந்த ஆலயத்தில் நடைபெறும் வரகரிசி மாலை, வெண்ணெய் தாழி போன்ற திருவிழாக்கள் சிறப்பானது.
இந்த நிகழ்வில், வெண்ணெய் பானையுடன் அம்மன் வீதி உலா வரும்போது, பக்தர்கள் பலரும் அம்மனுக்கு பட்டு உடையை சாத்துவார்கள்.

ஐம்பொன் சிலையானது, திருவிழா காலங்களில் மட்டும் மண்டபத்திற்கு கொண்டுவரப்படும். தவிர ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் மண்டகப்படி நடைபெறும். அனைவராலும் வணங்கப்படும் இந்த அம்மன், நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவளாக இருக்கிறாள்.
அமைவிடம்
தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராமபட்டினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலும், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 1½ கிலோமீட்டரிலும் நாடியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.
- புற்றுதான் அம்மனாக இருக்கிறது.
- சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் என்றால், ஆண்கள் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியர், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலை அய்யனை தரிசிக்க வரலாம் என்ற கட்டுப்பாடு உண்டு.
சபரிமலை ஐயப்பனை மாலை அணிந்து விரதம் இருந்து தரிசிக்கச் செல்பவர்கள், இருமுடி கட்டி மலை ஏறிச் சென்று ஐயப்பனை வணங்கி வருவார்கள்.
அதே போல் பெண்கள் மட்டுமே இருமுடி கட்டி விரதம் இருந்து செல்லும் ஆலயங்களில் ஒன்றுதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்.
புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவின்போது, பெண்கள் -அதுவும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் விரதம் இருந்து, தலையில் இருமுடி கட்டி வந்து, பொங்கல் வைத்து வழிபட்டுத் திரும்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், கேரளாவில் உள்ள ஐயப்பனை தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதுபோல, அங்குள்ள பெண்கள் பலரும் தமிழகத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்க, மாசி மாதம் இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது வருகை தருவார்கள்.
இவ்வாலயத்தில் புற்று வடிவத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் அருள்பாலிக்கிறாள். நெடு நெடுவென வளர்ந்து நிற்கும் புற்றுதான் அம்மனாக இருக்கிறது. வெறும் புற்றை பகவதி அம்மனாக எல்லோராலும் மானசீகமாக முகத்திற்கு நேராக கொண்டு வந்து வணங்குதல் இயலாது என்பதால், அந்த புற்றின் மேல் பகுதியில் சந்தனத்தால் அழகான முகம் செய்யப்பட்டு அதுவே பகவதி அம்மனாக காட்சி தருகிறது.
அந்த முகத்துக்கு கீழே உள்ள பகுதி சிவப்பு ஆடையால் மறைக்கப்பட்டு அதற்கு முன்னதாக ராணி சேதுலட்சுமிபாய் கொடுத்த வெள்ளி அங்கி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் பிரமாண்டமாய் அம்மன் உருவம் தெரியும். அதற்கும் சற்று கீழே உற்சவ தேவி விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.

தலவரலாறு
முற்காலத்தில் இது ஆடு- மாடுகள் மேயும் மந்தையாக இருந்தது. காட்டுப்பகுதியாக இருந்ததால் 'மந்தைக்காடு' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி 'மண்டைக்காடு' என்றானதாக சொல்கிறார்கள்.
மண்டைக்காடு அருகே உள்ள சேரமங்கலத்தில் ஆதிசங்கரரின் சீடர் ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் ராஜராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் ஸ்ரீசக்கரத்தை கையில் வைத்திருப்பார். தினமும் இந்த இடத்திற்கு வந்து ஸ்ரீசக்கரத்தை கீழே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்துவிடுவார்.
மாலை வரை தியானத்தில் இருக்கும் அவர், எழுவதற்குள் அவர் மேல் புற்று பரவிவிடும். அப்பகுதியில் ஆடு- மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாலையானதும் புற்றை கலைத்து அவரை எழுப்பி விடுவார்கள். அவரும் ஸ்ரீசக்கரத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார். இது வாடிக்கை.
ஆனால் ஒருநாள் சீடரால் தரையில் வைத்த ஸ்ரீசக்கரத்தை எடுக்க முடியவில்லை. இவர் தியானத்தில் ஆழ்ந்து என்னவென்று ஆராய 'நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்' என்று அவருக்கு அம்மனிடம் இருந்து உத்தரவு வந்தது.
அதனால் அந்த சீடரும் இங்கேயே இருந்துவிட முடிவு செய்து தியானத்தில் ஈடுபட்டார். வழக்கமாக அவரை தியானத்தில் இருந்து எழுப்பும் சிறுவர்களை 'இனி எழுப்ப வேண்டாம்' என்று சொல்லிவிட்டு அப்படியே ஜீவ சமாதியாகி விட்டார்.
அவர் மேல் புற்றும் வளர்ந்தது. அதுதான் இன்றுவரை வளர்ந்து வளர்ந்து மேருவாக ஆகி இருக்கிறது. ஸ்ரீசக்கரத்தில் இருந்த அம்மன்தான் இங்கே இப்போது பகவதி அம்மனாக காட்சி தருகிறார்.
காலங்கள் சென்றபின்னர் அப்பகுதியில் ஆடு -மேய்க்கும் சிறுவர்கள், பனை மரத்தின் காயை வைத்து பந்தாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுவன் அடித்த பனங்காய் புற்றின்மேல் பட்டு புற்று சிறிது சேதமடைந்தது.
சிறுவர்கள் வந்து பார்த்தபோது புற்றின் சேதமான பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டவாறே இருந்தது. சிறுவர்கள் ஊருக்குள் ஓடிப்போய் பெரியவர்களை அழைத்து வந்தார்கள். அப்போது அருள் வந்து ஆடிய ஒருவர், "இந்த புற்றுதான் தேவி பகவதி. அவள் இங்கே வெகு காலமாக இருக்கிறாள். புற்றில் இருந்து வரும் ரத்தத்தை நிறுத்த அங்கே சந்தனத்தை அரைத்து பூசவேண்டும்" என்று அருள் வாக்கு கூறினார்.
புற்று இருந்த இடத்தின் உரிமையாளரும் அவ்வாறே செய்ய ரத்தம் நின்றுவிட்டது. அந்த இடத்தில் ஒரு ஓலைக்குடிசை போட்டு புற்றை அம்மனாக வழிபட ஆரம்பித்தார்கள். அம்மனை வந்து வழிபட்டவர்கள் நினைத்ததெல்லாம் நடக்க ஆரம்பிக்க பக்தர்கள் கூட்டம் பெருகியது.

கேரள வழக்கப்படி பெண் தெய்வம் என்றால் அது பகவதிதான். அப்படித்தான் மண்டைக்காடு பகவதியாக மக்கள் வழிபடத் தொடங் கினர்.
இவ்வாலயத்தின் கொடை விழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த விழா வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது. கொடை விழாவின் இறுதிநாளில் நடைபெறும் 'வலிய படுக்கை' என்னும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கூடை கூடையாய் பூக்கள், பழங்கள், பலகாரம், வடை, அப்பம், திரளி ஆகியவற்றை, பக்தர்கள் தங்களின் வாயை மூடியபடி ஊர்வலமாக பாத்திரங்களில் எடுத்து வந்து அம்மன் சன்னிதி முன்பாக படைத்து வழிபடுவார்கள்.
மேலும் இந்த படைப்புக்குரிய சாதம் ஒரே நாளில் தயாரிக்கப்பட்ட புழுங்கல் அரிசியில் சமைக்கப்படுவது என்பது கூடுதல் விசேஷம். வலிய படுக்கை என்ற ஒடுக்கு பூஜையின்போது கோவில் நிசப்தமாக இருக்கும்.
மாசி மாத திருவிழாவின்போது மட்டுமின்றி, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பவுர்ணமி நாட்களிலும் இவ்வாலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர் கோவிலில் இருந்து சுமார், 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, மண்டைக்காடு திருத்தலம்.
- இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று).
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-22 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சப்தமி பிற்பகல் 3.55 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: ரோகிணி மறுநாள் விடியற்காலை 4.37 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று வாஸ்து நாள் (நாளை காலை 10.32-க்கு மேல் 11.08-க்குள் வாஸ்து பூஜை செய்ய நன்று). மதுரை ஸ்ரீ கூடலழகர் கஜேந்திரமோட்சம், விருத்தாசலம், திருவெண்காடு, திருவொற்றியூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. கோவை ஸ்ரீ கோணியம்மன் பாரிவேட்டைக்கு எழுந்தருளல். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபக வான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக் கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத் துறை முருகப் பெருமான் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-உற்சாகம்
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-இன்சொல்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-செலவு
தனுசு- புகழ்
மகரம்-வரவு
கும்பம்-ஆர்வம்
மீனம்-பக்தி
- செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக செல்லியாண்டி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்ற நிலையில் சென்ற ஆண்டு கோவில் மாசி மாத திருவிழா நடைபெறவில்லை.
கோவில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் 48 நாட்கள் மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாசி மாத பொங்கல் மற்றும் தேர் திருவிழா பூச்சாட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை செல்லாண்டியம்மனுக்கு அபிஷேக விழா நடந்தது. இதில் பவானி, ஈரோடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கருவறைக்கு சென்று பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் தாங்களே அபிஷேகம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரான செல்லியாண்டியம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், திருமஞ்சனம் உட்பட பல்வேறு திரவிய ங்களால் மூலவருக்கு ஊற்றி விடிய விடிய சுமார் 15 மணி நேரத்தக்கும் மேலாக பக்தர்களே அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியான சக்தி அழைப்பு நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) காலை கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி காலை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எல்லை யம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரப்பட்டது.
மேளதாளங்கள் முழங்கள் குதிரைகளுடன் புதிய பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு உள்பட பல்வேறு ரோடுகள் வழியாக சக்தி அழைத்து வரப்பட்டது.
இதில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு காய்கறிகள், உப்பு, மிளகு, சில்லரை காசுகள் என பல்வேறு பொருட்களை வேண்டுதல்கள் நிறைவேற்றும் வகையில் சூறை வீசப்பட்டது. இதை பக்தர்கள் பலர் போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து பல்வேறு விதமான வேடங்கள் அணிந்தும், பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
சிறுவர்கள், சிறுமிகள் என பலரும் சேறு பூசிக் கொண்டு நோய் எதுவும் அண்டாமல் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
மேலும் இளைஞர்கள் பலர் அம்மன் உள்பட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு வந்தனர். பலர் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு தாயே செல்லாண்டியம்மா என பக்தி கோஷம் முழங்க மேளதாளங்களுக்கு ஏற்ற வகையில் ஆடிக் கொண்டே வந்தனர்.
இதையடுத்து செல்லாண்டியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று மதியம் பக்தர்கள் ஏராளமானோர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று மாலை பக்தர்கள் அலகு குத்தி கொண்டு, அக்னி சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இதனால் பவானி நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்படு கிறது. இதனால் நகரமே விழா கோலம் பூண்டு உள்ளது.
தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.
- இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-21 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சஷ்டி மாலை 5.47 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பரணி காலை 7.10 மணி வரை பிறகு கார்த்திகை மறுநாள் விடியற்காலை 4.54 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று கார்த்திகை விரதம், சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர சகலசாபிஷேகம், கோவை ஸ்ரீ கோணியம்மன் ரதோற்சவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-பயணம்
கடகம்-பக்தி
சிம்மம்-வெற்றி
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- புகழ்
விருச்சிகம்-அமைதி
தனுசு- நன்மை
மகரம்-ஓய்வு
கும்பம்-சலனம்
மீனம்-குழப்பம்
- அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று.
- ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர்.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நேற்று அய்யா வைகுண்டர் விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் உள்ள பதியில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பேரணியானது நேற்று இரவு நாகராஜா திடலை வந்தடைந்தது.
இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வாகன பேரணியும் நேற்று இரவு நாகராஜா திடலை வந்தது. இதைத்தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டரின் அவதார தின ஊர்வலம் நாகராஜா திடலில் இருந்து இன்று காலை 5.10 மணிக்கு புறப்பட்டது. ஊர்வலத்திற்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.
ஊர்வலத்திற்கு ராஜ வேல், பாலஜனாதிபதி, பையன் கிருஷ்ண நாம் மணி, பையன் அம்ரிஷ் செல்லா, பையன் கவுதம் ராஜா, பையன் கிருஷ்ண ராஜ், பையன் செல்லவடிவு, பையன் நேம்ரிஷ் செல்லா, விஸ்வநாத் பையன், பால. கிருஷ், வைபவ், யுகஜன நேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் செண்டை மேளம் முழங்க மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகிலத்திரட்டு ஏந்திய அய்யாவின் வாகனம் முன் சென்றது. அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்றார்கள்.
அப்போது காவி உடை அணிந்தும், கையில் காவிக்கொடிகளை ஏந்தியபடி பக்தர்கள் "அய்யா சிவ சிவ.. அரகர அரகரா.."என்ற பக்தி கோஷத்தை எழுப்பினர். மேலும் பல பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் சுமந்து சென்றனர்.
ஊர்வலத்தில் ராபர்ட்புரூஸ் எம்.பி. மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் மணிமேடை சந்திப்பு வழியாக சவேரியார் கோவில் சந்திப்பு பகுதிக்கு வந்தது. அங்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்கு தாமரைகுளம் வழியாக முத்திரி கிணற்றங்கரையை சுற்றி வந்த ஊர்வலம் மதியம் தலைமை பதியை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஊர்வலத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மோர், தண்ணீர், பானகாரம் தர்மங்கள் வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அவதார தினத்தை யொட்டி சாமிதோப்பு தலைமை பதிக்கு நேற்று இரவு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. சாமிதோப்பு ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் முத்திரி கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்தோடு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். சாமிதோப்பு பதியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அய்யாவை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் அய்யாவிற்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றை சுருளாக வைத்தனர்.
அய்யா வைகுண்டர் அவதார தின ஊர்வலத்தையொட்டி சாமிதோப்பிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அய்யா வைகுண்டர் பதியை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளையும், இரு சக்கர வாகனங்களும் மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் நுழைய தடை செய்யப்பட்டது.
இதையடுத்து ஆங்காங்கே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டனர். இதனால் சாலையோரங்களிலும் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளிலும் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் நிறுத்தி சென்று இருந்தனர்.
- தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும்.
- 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னை:
கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடை பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவது உண்டு.
பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் நம்மை சீரமைத்து கொள்ளக் கூடிய காலமாக இந்த தவக்காலம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) சாம்பல் புதனை யொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நாளையில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து எளிய முறையில் ஆலய வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.
கத்தோலிக்க திருச்சபையில் நாளை நடைபெறும் சாம்பல் புதன் ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பூசி வழிபாடுவார்கள். இந்த சிறப்பு ஆராதனை நாளை காலையில் நடைபெறும்.
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பெந்தேகோஸ்து, இ.சி.ஐ., லுத்தரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சாம்பல் புதன் ஆராதனை நாளை மாலை நடைபெறும்.
தவக்காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்ப்பார்கள். அசைவ உணவு உள்ளிட்ட ஆடம்பர செலவினங்களை தவிர்த்து அவற்றை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் காணிக்கையாக ஆலயத்திற்கு செலுத்துவார்கள்.
தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும். ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து திருச்சபைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை இந்த வழிபாடு நடைபெறும். இதில் குடும்பத்துடன் கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 13-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, 18-ந்தேதி பெரிய வெள்ளி, 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும்.
- கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும்
அகிலத்திரட்டில் 16-வது நாள் திரு ஏடு வாசிப்பில், பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் கலி அழிவது எப்போது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதன்படி, கலியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன், சிவனிடம் கேட்டான். "ஈஸ்வரரே, இந்த கலியன் இத்தனை வரம் பெற்று செல்கிறானே, எப்போது இவன் முடிவாகுவான்" என்று, அதற்கு சிவன் அளித்த பதிலை, மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதி அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.
அதில், கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும், சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது, கொலை, களவு , கோள்கள் மிகுந்திருக்கும், தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர், நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும், போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார்.
அதாவது நிதானம் இருக்காது, கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும், மழை மறையும், காற்றானது நோய் காற்றாக வீசும், கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம் கொண்டவர்களை வேலை கொள்வர், மனு நீதம் குன்றும், நியம் தப்பி நாட்டை அரசாள்வார்கள், பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள். அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று போதிக்கிறது.
- மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ ரகசிய நூல்.
''ஒப்பரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பாநாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டம் மானையிதே''
அய்யா வைகுண்டசாமியின் தனது 5-வது சீடராகிய சகாதேவன் சீடர் என்றழைக்கப்படும் அரிகோபால சீடர் மூலமாக அருளப்பட்டது தான் அய்யா வழி மக்களால் தங்களுடைய வேத ஆகமம் என்று போற்றப்படும் அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.
இதற்கு முந்தைய 6 யுகங்களில் நடந்தது என்ன? தற்போதைய கலியுகத்தில் என்னென்ன நடக்கும்? அடுத்து வருகின்ற தர்மயுகத்தில் நல்வாழ்வு எப்படி இருக்கும் என்று 3 காலங்களையும் கூறுவதால் உலக ஜாதகம் என்றும் போற்றப்படுகிறது.
அகிலத்திரட்டு அம்மானையானது சமயங்களையும், மொழிகளையும், இனங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று மனுதர்மத்தை போதிக்கின்றது.
நீ பெரிது, நான் பெரிது என்று தலைகணம் பிடித்து ஆடுகின்ற உலகிலே உனக்கும் மேலே பெரியவன் நான் (இறைசக்தி) இருக்கிறேன் என்று கூறுவது மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ (தெய்வ) ரகசிய நூலாக கருதப்படுகிறது.
படித்தால் வாசிக்க கேட்டால், மனிதனுடைய பூர்வஜென்ம கர்மவினைகளையும் தீர்க்கக்கூடிய இம்மையிலும், மறுமையிலும் எண்ணங்களற்ற (கவலையற்ற) நல்வாழ்வு அருளக்கூடிய புனித நூலாக கருதப்படுகிறது.
கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு தென்தாமரைக்குளத்தில் அரிக்கோபாலன் சீடர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அய்யா வைகுண்டர் அவர் அருகிலே சென்று எழுப்பி (பெரியபுராணத்தை எழுதுவதற்கு சேக்கிழாருக்கு சிவபெருமான் அடியெடுத்து கொடுத்தது போல) ஏரனியும் என்கின்ற முதல் வார்த்தையை அடியெடுத்து கொடுத்து, அகிலத்திரட்டம்மானை எழுத அருள்பாலித்தார்.
எழுத படிக்க தெரியாத அகிகோபால சீடரால் பின்னை கட்டி ஓலைச்சுவடியில் 14 நாட்களுக்குள் எழுதி முடிக்கப்பட்டது. தினமும் இரவு தென்தாமரைக்குளத்தில் அரிகோபால சீடரால் எழுதப்படும் ஏடு, மறுநாள் மாலை பொழுதில் சாமிதோப்பு திருத்தலத்தின் (தற்போது வடக்கு வாசல் எனப்படும்) தவத்தலத்தில் அய்யாவின் முன்பு அரிக்கோபால சீடரால் வாசிக்கப்பட்டது.
இவ்வாறாக தினமும் வாசிக்கப்பட்டபோது, ஒருநாள் அரிக்கோல சீடரால் வாசிக்க இயலாமல் தேம்பி அழ ஆரம்பித்தார். இதனை பார்த்த மற்ற சீடர்கள் அரிகோபால சீடர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தார்கள்.
அப்போது அரிகோபாலன் சீடர் அய்யா நம்மை விட்டு வைகுண்டம் சென்று விடுவாராம் என்று கூறினார். அதை கேட்ட மற்ற சீடர்கள் அய்யாவிடம் என்னய்யா இது நீங்கள் எங்களை விட்டுவிட்டு வைகுண்டம் செல்வீர்களா? என்று வேதனையுடன் கேட்டார்கள்.
அப்போது அய்யா அரிக்கோபாலனை பார்த்து கோபமுற்று பிரம்பால் அடித்து உன்னை ஏட்டினை வாசிக்கத்தானே சொன்னேன். உன்னை யார் பொருள் கூற கொன்னது என்றார்.
இதனால் மிகவும் மனது நொந்த அரிக்கோபாலன் சீடர் உள்ளதை சொன்னால் ஊருக்கு ஆகாது என்று புலம்பியபடி எங்கே செல்வது என்று தெரியாமல் அய்யாவால் அவருடைய தாயார் என்று அடையாளம் காட்டப்பட்ட ஸப்த மாதர்களில் ஒருவரான அரிமடவை பிறந்த ஊராகிய பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள கச்சேரி தளவாய்புரத்துக்கு கால்நடையாகவே வந்து சேர்ந்து ஒரு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்தார்.
அதிகாலை பொழுதிலே காட்டுக்கு வெளிப்புறம் செல்வதற்காக சென்ற 2 பேர் இவரை பார்த்து யாரப்பா இங்கே முக்காடு போட்டு அமர்ந்திருப்பது? என்று வினவினார்.
இவருடைய முகத்தை பார்த்ததும் அளவற்ற ஆனந்தம் கொண்டு சாமிதோப்பிலே இருந்து சீடர் அய்யா வந்திருக்கிறார்கள் என்று அவரை உபசரித்து தற்போது கச்சேரி தளவாய்புரம் பாஞ்சாலங்குறிச்சி பதி அமைந்திருக்கின்ற இடத்திலே அந்த காலத்தில் மாட்டு தொழுவம் இருந்தது.
அதற்கு அருகிலே சீடர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் அவ்வூர் மக்கள். அங்கே இருந்த போது அரிகோபாலன் சீடர் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.
அவ்வாறு எழுதியதை பாஞ்சாலங்குறிச்சி அரசவையில் கச்சேரி செய்பவர்களிடம் வாசித்து காண்பித்தார். அவர்கள் ஒன்றுமே புரியவில்லை என்றதால் அய்யாவின் அருளால் மீண்டும் ஓலைச்சுவடியில் முதலில் இருந்து அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார்.
(இதில் திரேதாயுகம், கிரேதாயும் யுகம், பத்திரமாகாளி சான்றோர்களை வளர்ப்பது ஆகியவை விரிவாக கூறப்பட்டுள்ளது.) இதன் பிரதியே சாமிதோப்பில் 1965-ம்ஆண்டு பூஜிதகுரு சென்திசை வென்ற பெருமாளால் வெளியிடப்பட்டது.
இதன் பிரதியே 2010-ம்ஆண்டு கொட்டங்காடு ஏடு என்று வெளியிடப்பட்டது. இவ்வாறாக அய்யா தந்த ஏடு இரண்டு, ஒன்று தென்தாமரைகுளம் ஏடு இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சி ஏடு ஆகும்.






