என் மலர்tooltip icon

    வழிபாடு

    சந்திராஷ்டம நாளில் வழிபட வேண்டிய சந்திரேஸ்வரர்
    X

    சந்திராஷ்டம நாளில் வழிபட வேண்டிய சந்திரேஸ்வரர்

    • சந்திரனுக்கு 'சோமன்' என்ற பெயருண்டு.
    • சந்திராஷ்டமம் அன்று வழிபட்டால் அனைத்து சங்கடங்களும் நீங்கும்.

    காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கான தலமாக விளங்குகிறது, காமாட்சியம்மன் உடனாகிய சந்திரேஸ்வரர் ஆலயம். 'சந்திரேசம்' என்று அறியப்படும் இத்தலம், காஞ்சி புராணத்தில் சோமேச்சுரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    சந்திரனுக்கு 'சோமன்' என்ற பெயருண்டு. எனவே இத்தல சிவபெருமான், 'சோமசுந்தரன்' என்றும் அழைக்கப்படுகிறார். சர்வ தீர்த்தத்தின் தென் கரையில் இத்தலம் அமைந்துள்ளது.

    'நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகரம்' என்று மகாகவி காளிதாசர் போற்றுகிறார். பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சர்வ தீர்த்தக் கரையின் தெற்கில், வெண்தாமரை மலர்கள் நிறைந்த குளத்தை சந்திரன் உருவாக்கினான்.

    பின்னர் அதன் கரையில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அனுதினமும் வெண் தாமரையும், குளத்து நீரும் கொண்டு அர்ச்சனை அபிஷேகம் செய்து பூஜித்து வந்தான். அதன் காரணமாக நவக்கிரகங்களுள் ஒன்றாக மாறும் பேறு. பெற்றான் என்று காஞ்சி புராணத்தில் மாத சிவஞான முனிவர் அருளியுள்ளார்.


    புண்ணியம் நிறைந்த வெண் தாமரைக்குளம் அருகில், தற்காலத்தில் வெள்ளைக்குளம் என்று அழைக்கப்படுவதுமான பகுதியில் சந்திரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    இத்திருத்தலத்தில் சிவபெருமானை, வெண் தாமரை கொண்டு வழிபட்ட சந்திரனுக்கும் தனி சன்னிதி இருக்கிறது. இவ்வால யத்தின் தீர்த்தமாக வெள்ளைக்குளம் என்று அழைக் கப்படும் சந்திர தீர்த்தம் திகழ்கிறது.

    கிழக்கு திசை நோக்கி அமைந்த சிறிய திருக் கோவில் இது. முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் ஆலயம் திகழ்கிறது. சிவபெருமான் இத்தலத்தில் லிங்க ரூபத்தில் சந்திரேஸ் வரர் என்ற திருநாமம் தாங்கி, கிழக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    மூலவர் சந்திரேஸ்வரருக்கு பின்புறத் தில் சிவபெருமான்-முருகன்-பார்வதி ஆகியோர் இணைந்து சோமாஸ்கந்த வடிவத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பு.

    கருவறைக்கு வெளியே ஒரு புறத்தில் விநாய கப்பெருமானும், மற் றொரு புறத்தில் வள்ளி தெய்வானை பெருமானும் எழுந் தருளி அருள்பாலிக் கிறார்கள், சந்திரேஸ்வரரை தரிசித்த வாறு நந்திதேவர் அமர்ந்துள்ளார்.

    நந்திதேவருக்குப் பின் பக்கத்தில் பலிபீடம் அமைந்துள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. விநாயகப் பெருமானின் இருபுறங்களிலும் நாக தெய்வங்களின் சிலைகள் உள்ளன. சண்டிகேஸ்வரர் ஒரு சிறு சன்னிதி யில் வீற்றிருக்கிறார்.

    சப்தரிஷிகள் தவம் செய்து ஈசனை வணங்கி பேறு பெற்ற தலம் இது என்கிறார்கள், ஆகையால் இத்தலத் தின் விமானத்தில் சப்த ரிஷிகளான அத்ரி, பிருகு, குத்ஸ, வசிஷ்டர், கவுதமர், காசியபர், ஆங்கிரஸர், அனுசூயா முதலானோர் கதைச் சிற்ப வடிவத்தில் காட்சி தருகிறார்கள். இது வேறெங்கும் காண இயலாத அரிதான அமைப்பாகும்.

    இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள ஈசனை, சந்திரன் வழிபட்ட காரணத்தினால், பன்னிரண்டு ராசிக்காரர்களும் சந்திராஷ்டம தினத்தன்று வழிபட்டால் தங்களுடைய அனைத்து சங்கடங்களும் நீங்கப்பெற்று நன்னிலை பெறுவர் என்பது ஐதீகம்.

    பவுர்ணமி தினத்தன்று இத்தலத்திற்கு வந்து ஈசனையும், சந்திரனை யும் வழிபடுவது சிறப்பாகும். மேலும் சந்திரனுக்குரிய நட்சத் திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய தினங்களிலும் வழிபடுவது சிறப்பு.


    சந்திரன்

    மாதப்பிரதோஷங்கள், மகாசிவராத்திரி முதலான உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. சோம வாரம் மற்றும் பிரதோஷம் இத்தலத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில், பிள்ளையார் பாளையம் உள்ளது. இங்கு வெள்ளைக்குளம் என்ற பகுதியில், சந்தவெளி அம்மன் கோவிலுக்குப் பின்புறத்தில் உள்ள தெருவில் இத்தலம் அமைந்துள்ளது.

    Next Story
    ×